Wednesday, June 08, 2016

ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும். தொடர்

[06/06 10:21 pm]
 ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.

பகுதி 01

🔷மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால்
நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.🙌

🌹அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும்  அதன் கருத்து குர்ஆனுக்கு முரண்படலாம் என்பது இவர்களது எண்ணம். 🌹

🔷அறிவிப்பாளர் வரிசை தான் இந்த உம்மத்தின் பெரிய சொத்து. அதன்மூலம்  தான் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 🔷

 🍃குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று கூறுபவர்களிடம் சில கேள்விகள்.🌼

1.
குறித்த ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று தீர்மானிப்பது யார்?

2.
ஒருவர் முரணாக விளங்குவதை இன்னொருவர் முரணில்லாமல் விளங்கினால் அது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

3.
இந்தக் கொள்கையின் படி ஹதீஸ்களைத் தரம் பிரிக்க முடியுமென்றால் இப்படியொரு விதி இருக்குமானால் அறிவிப்பாளர் வரிசை எதற்கு?

அது பற்றிய ஆய்வுகள் ஏன்?

 ஸஹீஹான ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் என்று பிரிக்காமல் குர்ஆனுக்கு முரண்படும்  ஹதீஸ்கள்,  முரண்படாத ஹதீஸ்கள் என்று அறிஞர்கள் பிரித்திருக்கலாமே. ??

4
 முஃதஸிலாக்களும் ஷீயாக்களும் அறிமுகப் படுத்திய
இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கையை இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்துவது நியாயமானதா?

🚫சகோதரர்களே. இது ஒரு நவீன  வழிகெட்ட கொள்கை. 🚫

💡நமக்கு முன்வந்த அறிஞர்கள் மேலோட்டமாக முரண்பாடு போன்று விளங்கும் ஹதீஸ்களை தொகுத்து அதற்கு சரியான தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறார்கள். 💡

⭕உ+ம் இப்னு குதைபா, இமாம் ஷாபிஈ, இமாம் தஹாவி இமாம் இப்னு தைமிய்யா ஆகியோரின் கிதாபுகளைக் குறிப்பிடலாம். ⭕

🌼இது தொடர் ஒன்றுக்கான பதில்.
மூன்றாவது தொடருக்கான பதில் பகுதி 02 இல் எதிர் பாருங்கள்.🌼

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

 ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.

பகுதி 02

👉"என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால்,✔இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால்,✔இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் ✔அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.✅

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால்,❌ இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் ❌இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால்❌ உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்"🙌

📚(அஹ்மத்-15478)

🚥🚥🚥

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் ஒரு குறை இருக்கிறது.

🍃அதாவது இதை அறிவிக்கும் அப்துல் மலிக் என்பவர்  இதை நபியவர்கள் சொன்னதாகவும், உபை இப்னு கஃப் சொன்னதாகவும் மாறி மாறி அறிவித்துள்ளார். இவற்றில் இறுதியானதே சரியான அறிவிப்பு என்று இமாம் புகாரி கூறியுள்ளார். 🍃
📖التاريخ الكبير 1348

💡எனவே இது நபியவர்கள் சொன்ன ஹதீஸ் அல்ல. ஹதீஸ் மறுப்பக் கொள்கைக்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது💡

🌷ஒரு வாதத்திற்கு நபியவர்கள் சொன்னதாக வைத்துக் கொண்டாலும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையின் படி இதை நிராகரிக்க வேண்டும்.
ஏனென்றால் இதுவும் வெளிப்படையில் குர்ஆனுக்கு முரண்படுகிறது.🌷

1.
 நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்துத் தான் இவ்வாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது. நபிகளார் வஹியைத்தான் கூறுகிறார் என்று அல்குர்ஆன் கூறும் போது உங்கள் உள்ளங்கள் ஒத்துக் கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மறுத்து விடுங்கள் என்று எப்படி நபியவர்கள் கூறியிருக்க முடியும்.?

2.
இந்த செய்தியின் படி உள்ளச்சத்தை உண்டாக்கக் கூடியவாறு வரக்கூடிய இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் ஆதாரமாகக் கொள்வீர்களா?

குறித்த ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை பலமாக இருந்தாலும் உங்கள் உள்ளங்களுக்கு சரியென்று தென்படாத பட்சத்தில் அதை  நபியவர்கள் கூறியிருக்க வாய்ப்பில்லை என்ற ஹதீஸ் மறுப்புக் கொள்கையின் படி,

 அறிவிப்பாளர் வரிசை மிக பலவீனமானதாக இருந்து, அல்லது இட்டுக்கட்டப்பட்டதாக இருந்து அது உங்கள் உள்ளங்களுக்கு நல்லதென்று தென்பட்டால் அதை நபியவர்கள் கூறியிருக்க வாய்ப்புண்டு என்று கொள்வீர்களா? அவற்றை அமுல்படுத்துவீர்களா?


3.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் அதில் சுயவிருப்பம் கொள்ளக் கூடாது என்றும் குர்ஆன் (33/36) (4/65)  கூறுகிறது. இந்த செய்தி அந்த வசனங்களுக்கு  முரண்படுவதாகத் தென்படவில்லையா?

4.
தனக்குப் பிடிக்காதவற்றை மறுப்பவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது என்று அல்குர்ஆன்  ( 18/28 , 45/23 , 28/50) கூறுகின்றதே. இது முரண்பாடாகத் தென்படவில்லையா?

5.
இந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டால் இதற்குத் தகுதியானவர் யார்? இதை சரிகண்டவர்கள் கூட இந்த விடயம் ஸஹாபாக்களுக்கும் ஹதீஸ்கலை அறிஞர்களுக்குமே பொருந்தும் என்று கூறுகிறார்கள்.

இன்று ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் உள்ள யாருக்கு இந்த தகுதி இருக்கிறது?

6.
இறுதியாக

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அந்தக் கொள்கையே இந்த செய்தியை மறுக்கத் தூண்டுகிறது. யாரோ ஒரு நவீன அறிஞர் மறுக்கிறார் என்பதற்காக நாமும் மறுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மனிதன் என்ற வகையில் தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. 1400 வருடங்களாக யாருமே மறுக்காதவற்றை இப்போது ஒருவர், ஒரு குழு எப்படி மறுக்கத் துணிவது வேடிக்கையாக இல்லையா?

உங்களுக்கு முரணாக தென்படுபவை மற்றவருக்கு சரியானதாக தென்படலாம்.

நமக்குப் புரியவில்லை என்பதற்காக ஹதீஸ்களை மறுப்பது ஒரு வழிகெட்ட கொள்கை. அவர்களுக்கு அதில் முன்மாதிரி இல்லை.

மற்ற வாதங்களுக்கான பதில் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்....

ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் வரவில்லை.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
[06/06 10:21 pm]


🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 03

💡ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் தமது நவீன  கொள்கைக்கு சான்றாக உமர் (ரழி) அவர்கள் பாத்திமா பின்து கைஸ் என்பவர் பற்றி சொன்னதை முன்வைத்து, உமர் (ரழி) அவர்களும் இதே கொள்கையில் தான் இருந்திருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.💎
🙌அல்லாஹ் அவரைப் பாதுகாத்து விட்டான்.🙌

👉உமர் (ரலி) அவர்கள் "ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் 📖வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை.✏

⭕இது உமர் ரழி அவர்கள் சொன்னதாக பதியப்பட்டது.⭕
இதில் இரண்டு விடயங்களை கவனிக்க வேண்டும்.

1.
🌼 இதில் நபியவர்களோ, பாத்திமாவோ குர்ஆனுக்கு முரணாகக் கூறியுள்ளார்கள்,  எனவே அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உமர் (ரழி) கூறவில்லை. 🌼

✏பாத்திமா பின்து கைஸ் நபியவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை சரியாக ஞாபகம் வைத்திருக்கிறாரா இல்லையா என்று, அவரது ஞாபகத் தன்மை பற்றியுள்ள சந்தேகத்தை கூறி மறுக்கிறாரே தவிர, குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவில்லை.🍃

🌷ஒரு செய்தியை அதன் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை வைத்துத்தான் தரம் பிரிக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.🌷

🚫🌟அறிவிப்பாளர் நம்பிக்கையானவாராக இருப்பினும் சில போது அவர் சரியாக மனனமிட்டது உறுதி செய்யப்படாதவிடத்து, அவரது குறித்த செய்தி குர்ஆனுக்கும் மாற்றமாக உள்ளது என்பதை  சில போது மேலதிகமாக அறிஞர்கள் முன்வைப்பார்கள்🌟 ஒருவேளை அவர் மனனமிட்டது சரியென்று உறுதிப்படுத்தப்பட்டால் குர்ஆனுக்கு முரண் என்று மறுப்பதில்லை.🚥

2.
🌷🌼🌼🌼🌼🌼🌷

எல்லாவற்றுக்கும் மேலாக பாத்திமா பின்து கைஸ் பற்றி சொன்னதாக வரும் எல்லா அறிவிப்புகளை ஒன்று சேர்த்திருந்தாலே இது விளங்கியிருக்கும். 🌼

✏✏✏✏✏✏🌼

உமர் ரழி அவர்கள் என்ன சொன்னார்கள்?

⭕ (அங்கிருந்த) அஸ்வத்  அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எரிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள். 👊உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே?
இரண்டு சாட்சிகளைக் கொண்டு வந்தால் (ஏற்கலாம்) இல்லாவிட்டால் ஒரு பெண்ணின் கூற்றுக்காக அல்லாஹ்வின் வேதத்தை விட முடியாது என்று தான் கூறினார்கள். ⭕
 النسائي 5721، الدارقطني 5/47، البيهقي 7/707

💎ஒரு வேளை அவர் பற்றிய அந்த சந்தேகம் இரு சாட்சிகள் மூலம் நீங்கியிருந்தால் உமர் (ரழி) அவர்கள் அதை ஏற்றிருப்பார்கள்.💎

💎செய்தியின் முழு விபரமும் உங்களுக்கு கிடைக்கவில்லையா? அல்லது ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு முரணாக இருப்பதால் ஸஹாபியின் கூற்று என்று கண்டு கொள்ளவில்லையா?💎

🌟ஒரு ஹதீஸை  சரியாக விளங்குவதற்கு அதன் அறிவிப்புகளை முழுமையாக  தொகுத்து ஆராய வேண்டும். 🌟

🚫இந்த அடிப்படையைக் கூட தெரியாதவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்று தலைப்பிட்டு பேசத் துணிவது  வேடிக்கையே. 🚫

அடுத்த வாதத்திற்கான பதில் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்.....

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 04

💡ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் தமது நவீன  கொள்கைக்கு சான்றாக ஆயிஷா (ரழி) சொன்னதை முன்வைத்து, ஆயிஷா (ரழி) அவர்களும் இதே கொள்கையில் தான் இருந்திருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.💎
🙌அல்லாஹ் அவரைப் பாதுகாத்து விட்டான்.🙌

🔬ஆயிஷா  (ரழி) என்ன சொன்னார்கள்?🔬

🔮அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் மீதாணையாக (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை.✅

👉மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு,

 அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் 📖(53 : 43) ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது 📖(35 : 18) (என்று குர்ஆன் கூறுகிறது) குர்ஆனே உங்களுக்குப் போதும் என்றார்கள்"🔮

🚥🚧🚧🚧🚥
நிற்க....

1.
🌼 இதில் ஆயிஷா (ரழி) அவர்கள் எடுத்த எடுப்பில் "உமர் (ரழி) குர்ஆனுக்கு முரணாகக் அறிவிக்கிறார்,  எனவே அதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறவில்லை. 🌼

2.
✏ நபியவர்கள் இவ்வாறு தான்  சொன்னார்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டு, அதற்கு மேலதிக சான்றாக அவர் சொன்னது குர்ஆனுக்கும் முரண்படுகிறது என்று மறுக்கிறாரே தவிர, நேரடியாக அது குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவில்லை.🍃


🚫🌟அறிவிப்பாளர் நம்பிக்கையானவாராக இருப்பினும் சில போது அவர் சரியாக மனனமிட்டது உறுதி செய்யப்படாதவிடத்து, அவரது குறித்த செய்தி குர்ஆனுக்கும் மாற்றமாக உள்ளது என்பதை  சில போது மேலதிகமாக அறிஞர்கள் முன்வைப்பார்கள்🌟 ஒருவேளை அவர் மனனமிட்டது சரியென்று உறுதிப்படுத்தப்பட்டால்
ஒ குர்ஆனுக்கு முரண் என்று மறுப்பதில்லை.🚥

3.
முந்திய பகுதியில்  கூறியது போன்று இந்த செய்தியின் அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று சேர்த்திருந்தால் நன்கு   விளங்கியிருக்கும்.

ஏனெனில் ஸஹீஹான சில அறிவிப்புகளில் "உமர் (ரழி) அவர்கள் பொய் சொல்ல மாட்டார்", "மறந்திருப்பார்".என்றும் ஆயிஷா (ரழி) கூறினார்கள் என்றெல்லாம் இடம்பெற்றுள்ளது.

மனிதன் என்ற வகையில் தவறு நடந்திருக்கலாம். அதனால் தான்
"உமர் (ரழி) அவர்கள் மறந்திருப்பார்" என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறிவிட்டு அந்த  வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.

குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கும் விதி இருந்திருந்தால் நபியவர்கள் இப்படித்தான் சொன்னார்கள்  என்று ஆயிஷா (ரழி) கூற வேண்டிய அவசியமே
இல்லை. நேரடியாகவே முரண்பாட்டைக் கூறியிருக்கலாம்.

இந்த செய்தி ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு ஆதாரமாக மாட்டாது.


📤📤📤📤📤📤📤📤📤📤

இதே விடயம்  ஆயிஷா (ரழி) அவர்களின் மற்றைய செய்திக்கும் பொருந்தும்.

அதில் ஆயிஷா ரழி என்ன சொல்கிறார்கள்.?

அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் 📖குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை❌

👉 மாறாக அறியாமைக் கால 👩‍👩‍👧‍👦மக்கள் சகுணம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு➡

➡📌இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது 📌📖(57 : :22) என்ற வசனத்தை ஓதினார்கள்"

 🚥🚥🚥
இதிலும் நபியவர்கள் இவ்வாறு தான் சொன்னார்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டு, மேலதிக சான்றாக குர்ஆனுக்கும் முரணாக உள்ளது என்று கூறினார்களே அல்லாமல்,  இவர்கள் கூறுவது போன்று குர்ஆனுக்கு முரண் என்ற ஒரு காரணத்தை மாத்திரம் முன்வைத்து ஒரேயடியாக மறுக்கவில்லை.

💡💡💡💡💡அல்குர்ஆனும்நபிகளாரின் ஹதீஸ்களும் வஹீ என்றும் அவ்விரண்டும் முரண்பட சாத்தியமில்லை என்றும் கூறிவிட்டு, தாங்களே உருவாக்கிய நவீன ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு நேர்வழியில் நடந்த ஸஹாபாக்களைப் பலிக்கடாவாக்கப் பார்க்கின்றனர்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்று தலைப்பிட்டுப் பேசும் சகோதரர் ஸஹாபாக்கள் விடயத்தில் முன்வைத்த வாதங்களுக்கு நாம் பதிலளித்திருந்தோம். ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு அவற்றில் ஆதாரம் இல்லை என்றும் தெளிவாக நிரூபித்தோம்.

 அவற்றுக்கு அவர் பதில் அளிக்காமல், இமாம்கள் விடயத்திற்கு தாவியிருக்கிறார். எங்கே போய் முடியப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 05

🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் தமது நூதனக் கோட்பாட்டை நிலைநிறுத்த
ஸஹாபாக்கள் சார்பாகவும் , ஹதீஸ் கலை மேதாவிகள் , இமாம்கள் சார்பாகவும்  எடுத்தெழுதியுள்ள சம்பவங்களையும் , கூற்றுக்களையும் அவதானிக்கும் போது இரண்டு விதமாக அடையாளப்படுத்த முடிகின்றது.🔬

🌟1- தொடர்பற்றது

🌟2-தனக்கே எதிரானது

🌻இமாம் ஷாஃபி அவர்களின் கூற்று🌻

💡ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள். நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438💡

🚥🚥🚧🚧🚥🚥
நிற்க.....

இமாம் ஷாஃபி அவர்களின் கூற்றை சகோதரர் தவறாக மொழி பெயர்த்துள்ளார் ..

🍥சரியான மொழி பெயர்ப்பு 🍥

🍊கட்டாயமில்லை!! ஏனனில் அது குர்ஆனுக்கு முரண்படாத நிலையிலேயே தான் அதன் நிபந்தனைகள் பூரணம் பெறும்.🍊


🍏அதாவது நிபந்தனைகள் அறிவிப்பாளர் ரீதியாக குறைகாண முடியாத வகையில் அமைந்து விட்டாலேயே அது குர் ஆனுக்கு முரண் பாடில்லாத வகையில் தான் அமைந்திருக்கும்.🍏


💎அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் குர்ஆனுடன் உரசியே அதை ஏற்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்திருந்தால் இமாம் ஷாஃபி அவர்களின் பதில் " கட்டாயம்" என்றே அமைந்திருக்க வேண்டும்.💎
⭕ ஆனால் அவ்வாறு குர் ஆனோடு உரசிப்பார்க்க வேண்டிய தேவையே) لا يجب ) கிடையாது என்றுதான் கூறுகின்றார்கள். குறை காண முடியாத அறிவிப்பாளர் வரிசையுடன் கூடிய செய்தி குர்ஆனுடன் முரண்படவே செய்யாது என்பதே அடிப்படையாகும். இவ்வாறு இருக்கும் போது குர் ஆனுடன் ஹதீஸை உரச வேண்டிய தேவை கிடையாது அதன் காரணமாகவே அவசியம் இல்லை என இமாம் ஷா`ஃபி அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.⭕


💡இமாம் ஷா`ஃபி அவர்கள் உண்மையில் எதை நாடுகிறார்கள் என்ற வாதத்திற்கே முற்றுப்புள்ளி வைத்து விடுகின்ற இன்னுமொரு விடையம் இங்கே உள்ளது . அதைக்கவனிக்கும் யாரும் இமாம் ஷாஃபி அவர்கள் எமது நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளார்கள் என்பதைக்கன கச்சிதமாகப் புரியலாம்.💡

🌷பொதுவாக ஹனபி மத்ஹபில் கடும் போக்குக்கொண்ட ஒரு சிலரும் , மு`ஃதஸிலாகள் , ராபிழாக்களுமே உங்கள் நிலைப்பாட்டில் இருந்துள்ளார்கள்.🌹

ஷாஃபி மத்ஹபில் முரண்படாது என்பதுதான் பொதுவான கருத்தாகும் . ஹனபி மத்ஹபில் ஒரு சிலர் முரண் படும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளனர்.🌷

🌼அதாவது இமாம் ஷாஃபி அவர்களின் இக்கூற்றைப்பதிவு செய்யும் ஆசிரியர் அதைப்பதிவு செய்து விட்டுப் பின் வருமாறு கூறுகின்றார்கள்:

🔬ஈஸா இப்னு அப்பானிடம்( குர் ஆனுடன்) ஒப்பிடுவது கடமையாகும். " என்னைத்தொட்டும் ஒரு சைதி கிடைத்தால் அதைக்குர் ஆனுடன் ஒப்பிடுங்கள் , நேர்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் , இல்லை என்றால் தட்டி விடுங்கள் " என்ற ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து (கட்டாயம் என்கிறார்).🔬

(அல் மஹ்ஸூல்4/438)

🌷இமாம் ஷாஃபி அவர்களிடம் கட்டாயமில்லை , ஆனால் ஈஸா இப்னு அப்பானிடம் கடமையாகும் என்று இமாம் ஷாஃபியின் கூற்றைப் பதிவு செய்யும் அபூ அப்தில்லா அர்ராஸி அவர்களே கூறுகிறார்கள்.🌷


🌹குர் ஆனுடன் ஒப்பிட்டே ஏற்க வேண்டும் என்ற பலமற்ற ஒரு செய்தியை ஆதாரமாகக்காட்டி ஈஸா இப்னு அப்பான் கடமை என்கிறார். ஆனால் அதே நேரம் அதற்கு முரண்பட்டு இமாம் ஷா``ஃபி அவர்களோ அவ்வாறு கடமை இல்லை எனக்கூறியுள்ளார்கள்.🌹

💎இது போக குர் ஆனுடன் ஹதீஸ் முரண் பட்டால் தட்ட வேண்டும் என்ற ஒரு செய்தியை இமாம் ஷாஃபிக்கு முரண்பட்டு ஈஸா கூறியுள்ளார் என்பதிலிருந்தே இமாம் ஷாஃபியின் நிலைப்பாடு என்ன என்பது புரியவில்லையா???💎


🌟ஆதாரபூர்வமான செய்திகள் குர் ஆனுடன் முரண்படாது என்ற கருத்தையே இமாம் ஷாஃபி அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது வரலாற்றில் மிகப்பிரபல்யமான விடையமாகும் .🌟

✏ஆதார பூர்வமான செய்தி என்று வந்து விட்டால் அதன் இயல்பே குர் ஆனுக்கு முரண்படாது, அது எவ்வழியிலும் குர் ஆனுடன் ஒத்துதான் காணப்படும் , ஒரு போதும் வித்தியாசப்படாது என்பதுதான் இமாம் ஷாஃபி அவர்களின் நிலைப்பாடாகும்✏

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் இக்கூற்று ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் அவரும் இருந்தார் என்பதற்கு எந்த வகையிலும் பொருந்தாது.

இது பற்றி அவருடைய கூற்றுக்களை அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ் பதிகின்றேன்.

குறிப்பு : இத்தகவல்கள் ஹாதில் ஹக் அப்பாஸி அவர்களின் வலைப் பக்கத்திலிருந்து பெறப்பட்டவை. ஜஸாஹுல்லாஹு கைரா

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 06

🌻ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் இமாம் ஷாபிஈ அவர்களும் அவர்களது தவறான கொள்கையில் தான் இருந்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.🌻

🌟இமாம் ஷாஃபி அவர்களின் கூற்றுக்களை பாருங்கள் :🌟


1- قلت: لا تخالف سنة لرسول الله كتاب الله بحال(الرسالة ، باب الاستحسان ،ج1،ص546) (.

அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னா ஒரு போதும் அல்லாஹ்வின் வேதத்திற்கு முரண்படவே செய்யாது.


2- لا يختلف حكمُ الله ثم حكمُ رسوله، بل هو لازم بكلِّ حال.

(كتاب الرسالة ص105)

அல்லாஹ்வின் சட்டமும் , நபிகளாரின் சட்டமும் முரண்படாது , மாறாக எல்லா நிலைகளிலும் ( நடை முறைப்படுத்துவது) கட்டாயமாகும்



3 - இமாம் ஷாஃபி அவர்களிடம் பின் வருமாறு வினவப்பட்டது:

1- சில ஹதீஸ்கள் குர் ஆனில் உள்ளதைப்போன்றே உள்ளன

2- சில ஹதீஸ்களில் உள்ள விடையங்கள் குர் ஆனில் பொதுவாக உள்ளன

3- சில ஹதீஸ்கள் குர் ஆனில் உள்ளதை விட அதிகமாகப்பேசுகின்றன

4- சில ஹதீஸ்களில் வரும் சைதிகள் குர் ஆனில் இல்லை

5- சில சைதிகள் முரண் பட்ட வகையில் இருக்கும் ஆனால் நாஸிக் மன்ஸூக் என்ற நிலையில் இருக்கும்

6-இன்னும் சில ஹதீஸ்கள் முரண் பட்டிருக்கும் ஆனால் அதில் நாஸிக் மன்ஸூக் என்ற எதுவும் இருக்காது  இவ்வாறு அமைந்தால் என்ன செய்வது

(இக்கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்கும் ஷாஃபி அவர்கள் 6 வது கேள்விக்குப்பின் வருமாறு பதில் தருகின்றார்கள்)

அதன் முழு விவகாரமும் ஸஹீஹானதும், முறையானதுமாகும். அதில் எவ்வித முரண்பாடுமில்லை!!

(தேவையானதை மட்டும் மொழி பெயர்த்துள்ளேன்)
(كتاب الرسالة ص 215 ).


4- فالفرض على خلقه أن يكونوا عالمين بأنه لا يقول فيما أنزل الله عليه إلا بما أنزل عليه وأنه لا يخالف كتاب الله وأنه بين عن الله عز وعلا معنى ما أراد الله (1،55جماع العلم)

அல்லாஹ் இறக்கியதைத்தவிர வேறு எதையும் அவர் கூற மாட்டார் என்றும், மேலும் அல்லாஹ்வின் வேதத்திற்கு அவர் முரண் படமாட்டார் என்றும் ,அல்லாஹ் நாடும் விளக்கத்தையே அவன் புறத்திலிருந்து அவர் விளக்குகின்றார் என்றும் உறுதியாக அறிவது எல்லோர் மீது பர்ழ் ஆகும்.


5-(جماع العلم 1،55) قال الشافعي: ولا تكون سنة أبدا تخالف القرآن والله تعالى الموفق.

ஒரு காலமும் ஸுன்னா அல்குர் ஆனுக்கு முரண்படவே மாட்டாது

💡இவ்வளவு தெளிவாக இமாம் ஷாஃபி அவர்கள் பேசியிருந்தும் உங்கள் நிலைப்பாட்டில்தான் அவர் இருந்தார் என நீங்கள் வாதாடுவது மிக அபத்தமான ஒன்றாகும்.💡


💎ஒருவர் கூறாததை நாம் அவர் மீது சுமத்தாட்டுவது தர்மமாகாது , ஆய்வுக்குரிய அமானிதமாகவும் அது இருக்காது, ஒருவர் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை அவரது பல கூற்றுக்களை அறிந்த பின்பே முடிவுக்கு வர வேண்டும் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல !

🌟 இமாம் ஷாஃபி அவர்கள் உங்கள் நிலைப்பாட்டில் இருந்த ஒரு அறிஞர் என நீங்கள் கூறியுள்ளது ஆச்சர்யப்பட வேண்டிய ஒரு விடயம்.🌟

ஒற்றை நபர்கள் அறிவிக்கும் செய்திகளில்(கபருல் வாஹித்) ஊகம் வர நிறைய வாய்ப்புள்ளது, அதன் நம்பகத்தன்மையில் வலுவற்ற நிலை உள்ளது , ஆகையால் குர் ஆனுடன் மோத விட வேண்டும் என்ற விசமக்கருத்து முளைத்த போது அதை எதிர்த்துப் போராடியவர்களில் இமாம் ஷாஃபி அவர்கள் மிகப்பெரிய முன்னோடியாக இருந்துள்ளார்கள் என்பதை உங்களால் ஒரு காலமும் மறுக்க முடியாது.🌻

🌻இனியும் இமாம் ஷாஃபி அவர்களை உங்கள் நிலையோடு இணைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.🌻


🌹நான் மேலே எடுத்துக்காட்டிய கூற்றுக்கள் காணப்படும் இடங்களை நீங்கள் வாசித்தால் இமாம் ஷாஃபி அவர்களின் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாகப்புரியலாம் .🌹


🌼ஆதார பூர்வமான செய்தி என்று வந்து விட்டால் அதன் இயல்பே குர் ஆனுக்கு முரண்படாது, அது எவ்வழியிலும் குர் ஆனுடன் ஒத்துதான் காணப்படும் , ஒரு போதும் வித்தியாசப்படாது என்பதுதான் இமாம் ஷாஃபி அவர்களின் நிலைப்பாடாகும்🌼

குறிப்பு : இத்தகவல்கள் ஹாதில் ஹக் அப்பாஸி அவர்களின் வலைப் பக்கத்திலிருந்து பெறப்பட்டவை. ஜஸாஹுல்லாஹு கைரா

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 07

🌟இமாம் குர்துபீ குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று கூறினாரா?🌟

😆சொல்கின்ற பொய்யை பொருந்தச் சொல்லக்கூடாதா? 😆

✏அனுமதியின்றி மற்றவருடைய வீட்டில் நுழைய வேண்டாம் என்ற
வசனத்தின் விளக்கவுரையில் "அனுமதியின்றி எட்டிப் பார்த்தவரின் கண்களை பிடுங்க வீட்டாருக்கு அதிகாரம் இருக்கிறது" என்ற ஹதீஸை கூறிவிட்டு,💎

" இது விடயத்தில் கருத்து முரண்பாடு இருக்கிறது.🚥

⛳சில அறிஞர்கள் " குறித்த ஹதீஸ் இன்னொரு வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு விட்டது, எனவே கண்ணைப் பிடுங்குபவர் அதற்கு பொறுப்பாக வேண்டும். இந்த செய்தி குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை அமல் செய்யக்கூடாது " என்று கூறுகிறார்கள்.✏

⛳வேறு சில அறிஞர்கள் " அதற்குப் பொறுப்பாக தேவையுமில்லை. பழிவாங்கவும் தேவையில்லை."  என்று கூறுகிறார்கள்." ✏

🚥என்று இமாம் குர்துபீ கூறிவிட்டு இதுதான் சரியானது என்று இரண்டாவது கருத்தை சரிகாண்கிறார்.🌷

🚥🚥🚥🚥
இமாம் குர்துபீ சில அறிஞர்கள் இவ்வாறு சொன்னதைப் பதிவு  செய்ததை அவரே சொன்னதாகக் கூறுவது அவர் மீது அவதூறு சொல்வதாக இல்லையா?✏

💎எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அதை ஏற்காமல் மற்றைய அறிஞர்களின் கருத்தையே சரி காண்பது ஹதீஸ் மறுப்புக் கொள்கையை அவர் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறதல்லவா?🔬

💎இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கையின் விபரீதத்தை நேர்வழிக்குத் திரும்பிய மௌலவிஅப்பாஸ் அலி இவ்வாறு கூறுகிறார் :

இவர்களின் ஹதீஸ் மறுப்புக்கொள்கையை ஆதரித்தால் ஒட்டுமொத்த ஹதீஸ்களையும் மறுத்தாக வேண்டிய நிலை தான் வரும். இதன் இறுதி முடிவு ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை. எனவே குர்ஆன் மட்டுமே மார்க்க ஆதாரம் என்று கூறுவதேயாகும் இதற்கான அத்தனை வாசல்களையும் தற்போது திறந்துவிட்டுள்ளனர்.


⛳அடுத்து இமாம் ஜுர்ஜானி! ! உடைய கருத்து.

الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من مخالفة آية
♻ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

📘நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113

🌼நாம் ஏற்கெனவே கூறியது போன்று இந்தக் கொள்கை ஷீயாக்களுடையதும், பகுத்தறிவுவாத  முஃதஸிலாக்களினதும்  கொள்கை தான் என்பதை அவர்களே மிக பலமாக நிறுவுகிறார்கள். 🌼

👍இந்த ஜுர்ஜானி என்பவர் யார்?

✏இவர் "வரை விலக்கணக்கங்கள்" என்று ஒரு கிதாப் எழுதியிருக்கிறார். அதில் தான் ஸஹீஹான ஹதீஸுக்கு இவ்விளக்கத்தை கூறுகிறார். ✏

🌷முதலாவது
 இவர் ஹதீஸ்கலை அறிஞர் அல்ல. இவர் ஒரு அரபு மொழி மேதையாகவும் அஷ்அரிய்யா கொள்கை சார்ந்தவராகவும் எதிலும் தமது பகுத்தறிவுக்கு முதன்மை வழங்கக் கூடிய ஒரு தத்துவவாதியாகவும் இருந்தார்.🌟

🌼இதனால்தான் தனது புத்தகத்தின் முன்னுரையில் " ஒவ்வொரு துறையிலும் உள்ள கலைச் சொற்களுக்கு அவர்களுடைய புத்தகங்களில் உள்ள வரைவிலக்கணங்களை ஒன்று சேர்த்துள்ளேன்" என்று கூறுகிறார்.🌼

✏இது இவருடைய கருத்தல்ல என்பதும் தெளிவாகிறது.

📘இதல்லாத வேறு சில கலைச்சொற்களுக்கும் பிழையான விளக்கத்தை எழுதியுள்ளார்.📘

✏இவர் கூறும் விளக்கத்தை ஏற்க முடியாது. துறை சார்ந்தவர்களே இதை விளக்க வேண்டும். ✏

🌼இரண்டாவதாக
அவர் கூறிய வரை விலக்கணத்தில் இஜ்மாவுக்கு முரண்படாமலும் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

🔬தமது நவீன ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு முஃதஸிலாக்கள் அல்லது ஷீயாக்கள் சார்ந்தவரிடம் மட்டுமே மண்டியிட்டிருக்கிறார்கள்.🔬

அல்லாஹ் நம்மனைவரையும் இக் கொள்கையை விட்டும் பாதுகாப்பானாக.
அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 08

🚫இமாம் ஸுயூத்தியின் மீது அபாண்டம்.🚫

✏இமாம் ஸுயூத்தியின் கூற்று என்று இதை சுட்டிக்காட்டுகிறார்கள்.✏

أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية

📘இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276 📘

🔬முதலாவது
உண்மையில் இக்கூற்று இமாம் ஸுயூத்திக்குரியதல்ல, மாறாக அபூபக்ர் பின் தைய்யிப் என்பரின் கூற்றை எடுத்தெழுதியுள்ளார். 🔬

⛳இவரும் ஹதீஸ் துறை அறிஞர் அல்ல. இவர் அஷ்அரிய்யா கொள்கையைச் சார்ந்தவராகவும், எதிலும் பகுத்தறிவுக்கு முதன்மை வழங்கக் கூடிய தத்துவ ஞானிகளில் ஒருவராகவும் இருந்தார்.⛳

🔬இரண்டாவது
இஜ்மாவுக்கு முரண்படுவதும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிவதற்கான அடையாளம் என்கிறார். இதையும் ஏற்றுக் கொள்வார்களா இந்த மேதைகள்.!!!

மூன்றாவது
இந்தக் கூற்றை பதிவு செய்த எந்த ஹதீஸ் கலை அறிஞரும்  அறிவிப்பாளர் வரிசையில் இட்டுக்கட்டக்கூடியவர் இல்லாமல் இந்த விதியை மாத்திரம் வைத்து ஹதீஸ்களை மறுக்கவில்லை. இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ النكت 2/267 இல் கூறுவதை பார்க்கவும்.

🔬நான்காவது
இமாம் ஸுயூத்தி ஹதீஸைக் குர்ஆனுடன் மோத விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாரா? என்றால் இல்லை என்பதே உண்மை.💎

📘அதற்கு சான்றாக அவர் எழுதிய ஒரு புத்தகமே சாட்சியாகும். வரலாற்றில் குர்ஆனை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு ஹதீஸை ஒதுக்கிய கூட்டத்திற்கு பதிலடி கொடுத்த ஒரு சிறந்த அறிஞராக பார்க்கப்படுபவரே இமாம் ஸுயூத்தியாவார்கள்.📘

" مفتاح الجنة في الاحتجاج بالسنة "
எனும் பிரபல்யமான நூல் இமாம் சுயூத்திக்குரியதாகும்.

🌷இதில் ஹதீஸை குர் ஆனுடன் மோத விட வேண்டும் எனக்கூறுவோருக்கு மறுப்பாகவும், அவர்கள் முன் வைக்கும் ஆதாரமற்ற செய்திகளை விளக்கமாகவும் எழுதியுள்ளார். சில போது தனது கருத்தை வலு வூட்ட தனது மத்ஹபின் முன்னோடியான இமாம் ஷாஃபியின் கூற்றையும் கொண்டு வருகின்றார்.🌷

அவரது நூலின் ஆரம்பத்திலேயே இவ்வாறு கூறுகின்றார்:

وَهُوَ أَن قَائِلا رَافِضِيًّا زنديقا أَكثر فِي كَلَامه أَن السّنة النَّبَوِيَّة وَالْأَحَادِيث المروية - زَادهَا الله علوا وشرفا - لَا يحْتَج بهَا، وَأَن الْحجَّة فِي الْقُرْآن خَاصَّة، وَأورد على ذَلِك حَدِيث: "مَا جَاءَكُم عَنى من حَدِيث فاعرضوه على الْقُرْآن، فَإِن وجدْتُم لَهُ أصلا فَخُذُوا بِهِ وَإِلَّا فَردُّوهُ" هَكَذَا سَمِعت هَذَا الْكَلَام بجملته مِنْهُ وسَمعه مِنْهُ خلائق غَيْرِي، فَمنهمْ من لَا يلقِي لذَلِك بَالا. وَمِنْهُم من لَا يعرف أصل هَذَا الْكَلَام وَلَا من أَيْن جَاءَ. فَأَرَدْت أَن أوضح للنَّاس أصل ذَلِك، وَأبين بُطْلَانه، وَأَنه من أعظم المهالك.
فاعلموا رحمكم الله أَن من أنكر كَون حَدِيث النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قولا كَانَ أَو فعلا بِشَرْطِهِ الْمَعْرُوف فِي الْأُصُول حجَّة، كفر وَخرج عَن دَائِرَة الْإِسْلَام وَحشر مَعَ الْيَهُود وَالنَّصَارَى، أَو مَعَ من شَاءَ الله من فرق الْكَفَرَة (مفتاح الجنة ج1،ص 27 ).

ஒரு முனாபிக்கான ராபிழி, (ஆதாரபூர்வமாக ) அறிவிக்கப்படும் நபிகளாரின் செய்திகளையும் தனியான ஆதாரமாகக் கொள்ளத் தேவையிலை, குர்ஆனிலேயே விசேடமாக ஆதாரம் கொள்ள வேண்டும், எனக்கூறி அதற்கு சான்றாக "என்னிடம் இருந்து ஒரு சைசெய்தி வந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிடுங்கள், அதற்கான அடிப்படை குர்ஆனில் இருந்தால் எடுங்கள், இல்லை என்றால் தட்டி விடுங்கள்"..... இக்கூற்றின் அடிப்படையையும், அதன் பாத்திலான நிலையையும், அது மிகப்பெரிய அழிவுகளில் உள்ளது என்பதையும், விளக்க விரும்புகின்றேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் தெரிந்து கொள்ளுங்கள், நபியின் சொல்லோ, செயல , ஹதீஸ் கலையின் உஸூலில் அறியப்படும் நிபந்தனைகளுடன் வரும் செய்தி ஹதீஸ் என்பதையும், அது ஆதாரம் என்பதையும் யார் மறுக்கின்றானோ அவன் காபிராகும். அவன் இஸ்லாமிய வரையறையை விட்டும் வெளியேறிவிட்டான், யஹூதி, நஸாராக்களுடனேயே எழுப்பப்படுவான் (மிப்தாஹுல் ஜன்னா 1/27)

இமாம் சுயூத்தியின் நிலைப்பாட்டை இதிலிருந்து நாம் தெளிவாகப்புரியலாம்.

சகோதரர்களே! எந்த வழிகாட்டலும் இல்லாமல் இவர்களாகவே உருவாக்கிய இக் கொள்கைக்கு முன்னோர்களையும் பலிக்கடாவாக்கப் பார்க்கின்றனர்.

நம்மனைவரையும் இக் கொள்கையை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக.

குறிப்பு: நான்காவது தகவல் ஹாதில் ஹக் அப்பாஸி அவர்களின் வலைப் பக்கத்திலிருந்து பெறப்பட்டது. ஜஸாஹுல்லாஹு கைரா

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 09

👉🗣இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று

ومنها مخالفة الحديث صريح القرآن

♻"இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்"✅

📚நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

🌟முதலாவதாக
இந்தக் கூற்றில் இமாம் இப்னுல் கையிம் "அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் குர்ஆனுக்கு முரண்பட்டால் மறுக்க வேண்டும்" என்று சொல்லவில்லை.🌟

💎" ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது" என்று கூறுகிறார்.💎

🌼 இக்கூற்று பலமான அறிவிப்பாளர் வரிசை கொண்ட ஹதீஸையும், பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸையும் உள்ளடக்கி விடுகிறது. இவ்விரண்டில் எதை நாடுகிறார் என்பதை அவர் கூறும் உதாரணத்தை வைத்து விளங்கிக் கொள்ளலாம்.🌼

🔬"இவ்வுலகம் ஏழாயிரம் வருடங்கள் கொண்டது. நாம் ஏழாவது ஆயிரத்தில் இருக்கிறோம்" என்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியை உதாரணமாகக் கூறுகிறார். குர்ஆனுக்கு முரண் என்பதை துணை ஆதாரமாகக் தான் காண்கிறார் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.🔬

✏அடுத்ததாக
இமாமவர்கள் எந்தவொரு ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவில்லை.✏

🌼அதேபோன்று இவர்கள் முரண் என்று மறுத்தவைகள் அவருக்கு முரணாகத் தெரியவுமில்லை, அவர் மறுக்கவுமில்லை. 🌼

⛳இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகள் தமது குறுகிய அறிவுக்கு விளங்காதவற்றை குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கத் துணிந்து விட்டார்கள்.⛳

نعوذ بالله منها

🌹இறுதியாக நேர்வழிக்கு திரும்பிய மௌலவி அப்பாஸ் அலி அவர்களின் android வடிவிலுள்ள புத்தகத்தில் இருந்து சில வரிகள்.....🌹

🌟குர்ஆனுக்கு முரண் என்று கூறி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பது வழிகேடர்களின் வழிமுறை என்று இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.🌟

🌼நபிவழியையும் ஹதீஸ்களையும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி மறுப்பது தர்க்க ரீதியிலும் சுய சிந்தனை ரீதியிலும் மார்க்கத்தை அனுகுபவர்களின் வழிமுறையாகும்.

அல்முசவ்வதா (பக்கம் 11)🌼

🌷இது முன்மாதிரி இல்லாத நூதனக் கோட்பாடு என்பது தெளிவாகிறது 🌷

அல்லாஹுஅஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

பதில்கள் தொடரும் இன்ஷா அல்லாஹ்

நேர்வழியை நோக்கிய பயணம்
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 10

இமாம் அபூபக்கர் சர்ஹஸீ அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் குர்ஆனுக்கு முரண்பட்டால் மறுக்க வேண்டும் என்று கூறினாரா?

இமாம் ஸர்ஹஸீ உடைய கூற்று  என்று பின்வரும் செய்தியை ஹதீஸ் மறுப்பார்கள் முன்வைக்கிறார்கள் :

♻ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது❌செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது❌

📚நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364

📚நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492

📚நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

இவர் யார்?

இமாம் ஸர்ஹஸீ என்பவர் ஹனபி மத்ஹப் சார்ந்த ஒரு அறிஞர்.

ஹனபிகளின் நிலைப்பாடு என்ன?

ஹனபிகள் நம்பிக்கை சம்பந்தமாக ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களை ஏற்பதில்லை. இதற்கு خبر الواحد எனப்படும்.

இது பற்றிய பாடத்தில் தான் இதைக் கூறுகிறார். பொதுவாக ஹனபிகள் குர்ஆனையும், பலர் அறிவிக்கும் ஹதீஸ்களையும் அடிப்படையாக வைப்பார்கள். ஒருவர் அறிவிக்கின்ற செய்தி அவ்விரண்டுக்குமோ அல்லது ஒன்றுக்கோ முரண்படுவதாகத் தெரிந்தால் ஒருவர் அறிவிப்பதை மறுப்பார்கள்.

பலர் அறிவிப்பவற்றில் இந்த வழியை பேண மாட்டார்கள்.  ஹனபிகள் குர்ஆனுக்கு முரண் என்றும் பலர் அறிவிப்பதற்கு முரண் என்றும் மறுப்பது ஒருவர் அறிவிப்பதை மட்டும் தான்.
இவர்கள் கூறுவது போன்று எல்லா ஹதீஸ்களையும் குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்று துருவிப் பார்ப்பதில்லை.

ஹனபிகள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு முதன்மை வழங்குவார்கள். (இவர்களைப் போன்று அல்ல,ஏனென்றால் இவர்கள் மறுத்த ஹதீஸ்களைக் கூட அவர்கள் மறுக்கவில்லை)
இதனால் அவர்களை அறிஞர்கள் أصحاب الرأي என்று அழைப்பார்கள்.

இமாம்களான ஷாபிஈ, புகாரி போன்றவர்கள் ஹனபிகளின் இக்கருத்தை மறுத்ததோடு தமது கிதாபுகளில் அவர்களுக்கெதிரான ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்கள்.

இமாம் ஸர்ஹஸீ சொன்னதாக மேலே கூறப்படும் செய்தியை இவர்கள் முழுமையாக வாசித்திருந்தால் கூட இவரையும் தமது நவீன கொள்கைக்குள் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஏற்கக் கூடாது என்பதற்கான காரணத்தை அதில் விளக்குகிறார்.

 ஒரு பந்தியை முழுமையாக வாசித்ததன் பின்பு தான் அதில் என்ன சொல்லப்படுகிறது என்பதை விளங்கலாம். இந்த சாதாரண அடிப்படையை கூட விளங்காதவர்கள் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதை ஆராய்கிறார்களாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

அதன் இறுதியில்
 على ما بينا أن تخصيص العام بخير الواحد لا يجوز ابتداء
 என்று இடம்பெற்றுள்ளது. இதன் கருத்து :
 ஒருவர் அறிவிப்பதைக் கொண்டு பொதுவான ஒன்றை குறிப்பாக்குவது கூடாது என்று நாம் தெளிவுபடுத்தியதற்கு இணங்க...
என்று இடம்பெற்றுள்ளது.

இந்த அறிஞர் கூறுவது ஒருவர் அறிவிக்கின்ற செய்தியைப் பற்றியே அல்லாமல் பொதுவாக குர்ஆனுக்கு முரண்பட்டால் ஹதீஸ் மறுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அல்ல என்பது அரபு தெரிந்தவர்களிடம் அந்த கிதாபை வாசித்து பார்த்தால் விளங்கும். அதுவும் அந்த பாடத்தை முழுமையாக வாசிக்க வேண்டும்.
அரைகுறையாக வாசிக்கும் பழக்கம் இருப்பதால்தான் இப்படி தமது புத்திக்கு எட்டாதவற்றை மறுக்க முனைகிறார்கள்.

 ஏற்கனவே இமாம் குர்துபீ உடைய வாசகத்திலும் நாம் இவர்களின் மோசடியை விளக்கியுள்ளோம்.

அல்லாஹ் நம்மனைவரையும் இக் கொள்கையை விட்டும் பாதுகாப்பானாக

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 11

👉🗣முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்இஹ்காம் என்ற தன்னுடைய 📕நூலில் பதிவு செய்துள்ளார் என்று பின்வரும் செய்தியை ஹதீஸ் மறுப்பாளர்கள் முன்வைத்துள்ளார்கள்.

💈முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் கூறுகிறார் : ஹதீஸ் 3⃣மூன்று வகையாகும்.

1⃣குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம்✅

2⃣குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்✅

3⃣குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக👎 வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது❌

📚நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
அறிஞரின் முழுப் பெயரை இப்னு ஹஸ்ம் கூறியும், சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்ற காரணத்தால் தந்தையின் பெயரோடு மட்டும் சுருக்கிக் கொண்டார்கள் போல.

இவரின் முழுப் பெயர் முஹம்மது பின் அப்தில்லாஹ் பின் மஸர்ரா என்பதே.

இவர் யார்?

தற்போதைய ஸ்பெயினின் குர்துபாவைச் சேர்ந்த இவர் வழிகெட்ட சில கொள்கைகளை முன்வைத்தார். பின்னர் கிழக்குப் பக்கமாக சென்று முஃதஸிலாக்களிடம் கற்றார்.
மீண்டும் ஸ்பெயினுக்கு திரும்பி தனது கொள்கைகளை மறைக்க ஸூபியாக நடித்து தன்னை பின்பற்றும் கூட்டமொன்றையும் உருவாக்கினார்
دولة الإسلام في الأندلس 1/431

இப்னுல் பர்ழி அவர்கள் கூறுகிறார்கள்: கத்தாப் இப்னு மஸ்லமா எனக்குக்கூறினார்  "சிந்தீக் (வழி கெட்ட கொள்கையுடைய) முனாபிக் என குற்றம் சுமத்தப்பட்டவர் , அதனால் தப்பி ஓடினார் , மஷ்ரிகில் சில காலம் அலைந்தார் ,( இறைக்கோட்பாட்டில்) தர்க்க ரீதியாகவும் , பகுத்தறிவு ரீதியாகவும் , விவாதிப்போருடனும் , முஃதஸிலாக்களுடனுடனும் தொடர்பு பட்டிருந்தார் ,பிறகு உந்துலுஸுக்கு வந்து , நல்லவர் போல தன்னை வெளிக்காட்டிக்கொண்டார் , இதனால் மக்கள் ஏமாந்து போய் அவரிடம் சென்று வர ஆரம்பித்தனர் , பிறகு இவரது தவறான , மோசமான கொள்கை தெரிந்ததும் அறிவுடையோர் விலகிக்கொண்டனர் , கதரிய்யாக்களின் கொள்கையைப் பேசிக்கொண்டிருந்தார் , குர் ஆனில் அதிகமான இடங்களில் வலிந்து உள்ளதை மாற்றியமைக்கும் வேலையை செய்தார் , சூபிய்யாக்களின் ஞானத்தைப்பற்றியும் , சூபித்துவத்தைப்பற்றியும் இனிமையாகப் பேசுவார்.
تاريخ علماء الاندلس 2/41 ، تاريخ الإسلام 432 ،

இஸ்மாயீலிய்யா என்றால் ஷீயாப் பிரிவைச் சார்ந்தவராக இருந்தார்.
الإعلام للزركلي 6/223

இவரது ஊரைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் என்பவர் இவருக்கு மறுப்பாக ஒரு புத்தகமே எழுதினார்.
تاريخ الإسلام 27/373

அதே ஊரைச் சேர்ந்த இமாம் இப்னு ஹஸ்மும் இவருடைய இக்கூற்றுக்கு மறுப்புத் தெரிவிக்கவே அவரது கூற்றைப் பதிவு செய்துள்ளார்.
அவரின் கூற்றுக்கு அடுத்த வரியிலேயே இமாம் அவர்களின் கூற்றை இங்கே கவனியுங்கள்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆனுக்கு முரணாக இருப்பதற்கு அறவே வாய்ப்பில்லை. மார்க்கத்தின் அனைத்து ஹதீஸ்களும் ஒன்று குர்ஆனை விளக்கக்கூடியதாகவும் குர்ஆனுடன் இணையக்கூடியதாகவுமே உள்ளது. அல்லது குர்ஆனின் பொதுவான அடிப்படையிருந்து விதிவிலக்கலானதாக இருக்கும். மூன்றாவது வகையான ஹதீஸ்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
அல்இஹ்காம் ஃபீ உசூல் அஹ்காம் (பாகம் 2 பக்கம் 81)

ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக ஒரு கூட்டம் வாதிடுவது பற்றிய பாடம்.

 விபரமில்லாத ஒருவருக்கு இரண்டு ஹதீஸ்கள் அல்லது இரண்டு வசனங்கள் அல்லது ஒரு வசனமும் ஹதீஸும் முரண்படுவது போன்று
தெரிந்தால் இந்த அனைத்து ஆதாரங்களையும் மறுத்துவிடாமல் ஏற்பது தான் ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும். ஏனென்றால் ஏற்றுக்கொள்ளும் விசயத்தில் இந்த ஆதாரங்களில் ஒன்று மற்றொன்றை விட ஏற்றமானதில்லை.

ஒரு ஹதீசை புறக்கணித்து அது போன்ற இன்னொரு ஹதீசை ஏற்க வேண்டும் என்ற நிலையில்லை. வசனங்களில் ஒருவசனத்தை விடுத்து இன்னொரு வசனத்திற்கு கட்டுப்படுவதும் சரியல்ல. அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். கட்டுப்படுவதிலும் ஏற்பதிலும் இவை அனைத்தும் சமமானதாகும். எந்த வேறுபாடும் கிடையாது.

அல்இஹ்காம் ஃபீ உசூல் அஹ்காம் (பாகம் 2 பக்கம் 21)

இதுக்குத்தான் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது  முன்ன பின்ன பார்த்து வாசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். எங்கேயாவது குர்ஆனுக்கு முரண் என்று அரபி வார்த்தையைக் கண்டவுடனேயே அதை தப்புத் தப்பாக விளங்கி விழி பிதுங்கி நிற்க வேண்டியது தான்.

ஏற்கனவே நாம் சொன்னதுபோல் இவர்களின் அடிப்படை ஷீயா, முஃதஸிலா ஆகியவை தான்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி
[08/06 11:08 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 12

இமாம் இஸ்மாயீலீ அவர்கள், இப்ராஹீம் (அலை) அல்லாஹ்விடம் மறுமையில் தனது தந்தைக்காக பரிந்துரைப்பதாக வரும் ஹதீஸை குர்ஆனுக்கு முரண் என்று மறுத்ததாக, ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் கூறுகின்றனர்.

🚥🚥🚥🚥🚥
சிலவேளை குறித்த ஒரு ஹதீஸும் ஒரு குர்ஆன் வசனமும் முரண்படுவதாக ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் தனக்கு முரணாகத் தெரிவதாக கூறியதற்காக அவர் அதை மறுத்துவிட்டார் என்ற முடிவிற்கு ஒரேயடியாக வந்து விட முடியாது. அது பற்றிய அவரின் ஏனைய கருத்துக்களையும் பார்க்க வேண்டும். 🌹

🌹புகாரியில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை இமாம் இஸ்மாயீலீ மறுப்பதாக கூறவில்லை. மாறாக
 هَذَا خَبَر فِي صِحَّته نَظَر
இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சற்று ஆராய வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு, குர்ஆனுக்கு முரண்படுவதாக உள்ள தனது சந்தேகத்தை கூறுகிறாரே தவிர மறுக்கவில்லை. இதனால்தான் இமாம் இப்னு ஹஜர் இமாம் இஸ்மாயீலீ மறுத்தார் என்று சொல்லாமல் பின்வருமாறு கூறுகிறார்.🌹

 وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث
 இதில் استشكل என்பதற்கு  التبس என்று அரபி அகராதிகளில் காணலாம். இதற்கு ஆங்கிலத்தில் Confused என்று அர்த்தம். அதாவது இமாம் இஸ்மாயீலீ இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறதோ என்று குழம்பிப் போயுள்ளார் என்று கருத்து கொள்ளலாம்.🌹

🌹இமாம் இஸ்மாயீலீ குர்ஆனுக்கு முரண் என்று மறுத்திருப்பதை இமாம் இப்னு ஹஜரும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றவாறு தமது வாதத்தை முன்வைத்துள்ளனர்.🌹

🌹இப்னு ஹஜர் அஸ்கலானீ இவரது இக்கூற்றை பதிந்து விட்டு இப்ராஹீம் நபியுடைய விடயத்தை குர்ஆனுக்கு முரண்படாமல் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறார்.
எதையும் முழுமையாக வாசிப்பவர்களுக்குத் தான் இதெல்லாம் விளங்கும்.🌹

🌹இமாம் இஸ்மாயீலீ இந்த ஹதீஸை மறுக்கவில்லை என்பதற்கு ஸஹீஹுல் புகாரி உடைய ஹதீஸ்கள் பற்றிய அவரின் நிலைப்பாட்டிலிருந்து அறியலாம். 🌹

🌹"அபூ அப்தில்லாஹ் புகாரி கோர்வை செய்த கிதாபை நான் பார்த்தேன். அதன் பெயருக்கேற்றவாறு அதிகமான ஸஹீஹான ஸுன்னாக்களை ஒன்று சேர்த்தியதாக இருந்தது" என்கிறார்.🌹

🌹பின்னர் புகாரி இமாமை புகழ்ந்து விட்டு வேறு சிலர் அவரைப் போன்று ஹதீஸ்களை சேர்த்ததாகவும், என்றாலும் எவரும் புகாரி உடைய தரத்தை அடையவில்லை என்றும் கூறுகிறார்.🌹
مقدمة فتح الباري 1/11

🌹இஸ்மாயீலீயின் இந்தக் கூற்று புகாரி உடைய எந்த ஹதீஸையும் பலவீனமானதாகவோ குர்ஆனுக்கு முரணாகவோ காணவில்லை என்பதை உணர்த்துகின்றது.🌹

🌹 அதுமட்டுமல்லாமல் "இந்த கிதாபில் நான் பதிவு செய்தவை அனைத்தும் ஸஹீஹானவை தான். ஆனால், எல்லா ஸஹீஹானவைகளையும் நான் பதியவில்லை"  என்று இமாம் புகாரி கூறுவதை அறிவித்து விட்டு,🌹

🌹 "அவரிடம் ஸஹீஹானவற்றை அவர் பதிந்திருந்தால் ஒரு பாடத்திலேயே பல ஸஹாபாக்களின் ஹதீஸ்களை பதிய வேண்டி வந்திருக்கும். அதனால் அது மிகப் பெரிய புத்தகமாக மாறிவிடும்" என்று தானும் உறுதிப்படுத்துகிறார்.🌹

🌹மொத்தத்தில் இமாம் இஸ்மாயீலீ குர்ஆனுக்கு முரண் படுவதாகத் தனது சந்தேகத்தை தெரிவித்தாலும் அதை மறுக்கவில்லை என்பதற்கு புகாரி உடைய ஹதீஸ்கள் பற்றிய அவரது நிலைப்பாடே ஆதாரமாகும். ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் அவர் இருந்திருந்தால் அதை சுட்டிக் காட்டியிருப்பார்.🌹

🌹ஹதீஸ் மறுப்பாளர்களின் இந்த நூதனக் கோட்பாட்டை இமாம்கள் அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவான ஒரு விடயம். 🌹


🌹அல்லாஹ் நம் அனைவரையும் இந்தக் கொள்கையில் இருந்து பாதுகாப்பானாக.🌹

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி


🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 13🌻

💆கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்ணின் ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் குர்ஆனுக்கு முரண் என்று நிராகரிக்க, அதை இமாம் குர்துபீ அவர்கள் அங்கீகரித்தார்களா?💆

முதலாவது

இமாம் இப்னு ஹஜர் பத்ஹுல் பாரி 4/69 இல் "அந்த ஹதீஸ் ஹஜ் செய்யச் சக்தி பெறுதல் என்பது இன்னொருவர் மூலமும் நிகழலாம் என்பதற்கு ஆதாரமாகும்." என்று கூறிவிட்டு,

 மாலிக் மத்ஹப் சார்ந்த சிலர் இந்த ஹதீஸ் அந்த இயலாதவர் மீது ஹஜ்ஜை கட்டாயப்படுத்தவில்லை. என்றும் மாலிக் மத்ஹபினர் " ஒருவர் வஸிய்யத் செய்தால் அவருக்கு பதிலாக வேறொருவர் ஹஜ்ஜை நிறைவேற்றுவதை அனுமதிக்கிறார்கள்" என்றும் இன்னும் சிலர் "அது அந்தப் பெண்ணுக்கு மட்டும் குறிப்பான சட்டம்" என்று கூறுகிறார்கள் என்றும் கூறிவிட்டு இமாம் மாலிக் உடைய இக்கருத்தை பதிந்துள்ளார்.அத்தோடு நிற்காமல் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்துள்ளார்.

இரண்டாவது

இமாம் மாலிக்கின் நிலைப்பாடு என்ன?

முந்தைய பகுதியில் நாம் கூறியது போன்று ஒருவர் குறித்த ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரணாக தனக்குத் தெரிவதாக கூறுவதை வைத்து அவர் மறுத்து விட்டார் என்ற முடிவிற்கு ஒரேயடியாக வர முடியாது. "குர்ஆனில் சக்தியுள்ளவருக்கு ஹஜ் கடமை எனும் போது இந்த ஹதீஸ் சக்தியற்றவரையும் குறிப்பதால் அப்பெண்ணுக்கு மாத்திரமே குறிப்பானது என்று இமாம் மாலிக்கும் அவரது சகாக்களும் கூறுகிறார்கள்." என்று  அதே மாலிக் மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு அப்தில்பர் التمهيد 9/124 இலும்  குறிப்பிடுகிறார். எனவே இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண் என்று மறுக்காமல் அப்பெண்ணுக்கு மாத்திரம் குறிப்பாக சொல்லப்பட்டது என்று விளங்குவதே இமாம் மாலிக்கின் நிலைப்பாடாகும்.

மூன்றாவது

இமாம் குர்துபீ அங்கீகரித்தாரா?

"உறுப்புகள் துண்டிக்கப்பட்டவருக்கு பதிலாக இன்னொருவர் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா" என்பது பற்றி பேசும் போது இமாம் மாலிக் அவர்கள் அது குர்ஆனுக்கு முரண் என்றும் அவர் மரணித்ததன் பின்னர் வேறொருவர் நிறைவேற்றலாம் என்றும் கூறுகிறார். (இதில் அந்தப் பெண்ணின் ஹதீஸைக் குறிப்பிடவில்லை.)
تفسير القرطبي 4/150

இதை இமாம்  குர்துபீ பதிந்து விட்டு எமது உலமாக்கள் இந்த ஹதீஸ் சக்தியற்றவர் மீது ஹஜ்ஜை கடமையாக்கவில்லை அந்தப் பெண்ணின் ஆர்வத்தைக் கண்டு அவ்வாறு பதிலளித்தார்கள் என்று விளக்குகிறார்கள். என்று கூறிவிட்டு, இந்த ஹதீஸ் பற்றி இமாம் மாலிக்கின் நிலைப்பாடு பற்றி இமாம் இப்னு அப்தில் பர் கூறியதை பதிவு செய்துள்ளார்.
تفسير القرطبي 4/152

இதிலிருந்து இமாம் மாலிக் குறித்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுத்ததாக அவர் மீது அபாண்டத்தை சுமத்துகிறார்கள் என்பதும்,

அதை இமாம் குர்துபீயும் அங்கீகரித்துள்ளார் என்று அவர் மீதும் பொய் சொல்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

🚦🚦🚦🚦🚦
ஏற்கனவே நாம் சொன்னதுபோல ஒரு பந்தியையோ, பக்கத்தையோ, பாடத்தையோ முழுமையாக வாசிக்காமல் "முரண்" என்ற சொல் இருப்பவற்றையெல்லாம் தங்களுக்கு சாதகம் என்று நினைக்கிறார்கள்.

இதெல்லாம் யார்கிட்ட போய் சொல்றது😩 பாவம் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

இது தொடர் 10 பத்திற்குரிய பதில். மற்றவை தொடரும் இன்ஷா அல்லாஹ்......

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி பேருவளை

15/06/2016


🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 14🌻

இமாம் இப்னு தைமிய்யா குர்ஆனுக்கு முரண் என்று ஹதீஸை மறுத்தாரா?

ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதம்.

🌧வானம் மற்றும் 🏜பூமி 6⃣ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக 📖திருக்குர்ஆன் சொல்லும் போது 7⃣ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக இந்த 📕ஹதீஸ் கூறுகிறது. எனவே இது ஒரு குறை👎 இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது👎 என்பதே இப்னு தய்மியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம்📌

பதில்

இமாம் இப்னு தைமிய்யாவின் கூற்று அவர்களுக்கே எதிராக உள்ளது. குறித்த ஹதீஸை இவர்களைப் போன்று  குர்ஆனுக்கு முரண் என்று மாத்திரம் சொல்லி மறுக்கவில்லை. அதை அறிவிப்பவர்களில் ஒருவர் தவறிழைத்துள்ளார் என்பதையும் சேர்த்தே கூறுகிறார். இதை அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஏதாவது ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி இருக்கும் போது சில வேளை அது குர்ஆனுக்கு முரணாக வாய்ப்புண்டு. அவ்வாறு இருந்தால் அறிஞர்கள் அதையும் துணையாக சேர்த்து கூறுவார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் அதில் علة இல்லத்  அதாவது மேலோட்டமாக பார்த்தால் புலப்படாத நுணுக்கமான குறை இருப்பதாக கூறிவிட்டு,
அது பற்றிய கலை எவ்வாறானதென்று கூறுவதோடு, இது பற்றி யஹ்யா இப்னு ஸஈத், இப்னுல் மதீனீ, புகாரி, அஹ்மத், அபூஹாதம், நஸாயீ, தாரகுத்னீ போன்றவர்கள் மிக அறிந்தவர்கள். அது பற்றிய கிதாபுகளும் உள்ளன. என்றும் கூறுகிறார்.
مجموع الفتاوى 18/19

ஹதீஸ் மறுப்பாளர்களில் இந்த இமாம்களின் அளவு இல்லாவிட்டாலும் ஓரளவாவது ஹதீஸ் துறையில் அனுபவமுள்ளவர்கள் இருக்கிறார்களா?

ஒரு ஹதீஸின் முழு அறிவிப்பாளர் வரிசைகளையும் திரட்டி ஆய்வு செய்தால் தான் நம்பகமானவர்கள் தவறு விட்டிருந்தால் விளங்கும். ஒன்றை முழுமையாக வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இதெல்லாம் எட்டாக்கனி தான்.

அடுத்து இமாம் இப்னுல் கையிமும் இதில் தவறு நிகழ்ந்துள்ளதாக கூறும்போது, என்ன தவறு நடந்தது என்று சொல்வதை மறைத்து, ..... இடைவெளி விட்டு பதிந்துள்ளனர்.  அல்லாஹு அக்பர்  இது எவ்வளவு பெரிய இருட்டடிப்பு?

யார் பார்த்து விடப் போகிறார்கள் என்ற குருட்டு தைரியம் !!!

ولكن الغلط في رفعه وإنما هو من قول كعب الأحبار كذلك قال إمام اهل الحديث محمد بن إسماعيل البخاري في تاريخه الكبير وقاله غيره من علماء المسلمين.
المنار المنيف 1/85
இது தான் அந்த இடை வெளியில் உள்ளது
இது நபியவர்களுடைய கூற்று என்று தவறுதலாக இடம் பெற்றுள்ளது.  இது கஃபுல் அஹ்பார் என்பவருடைய கூற்று தான் என்று முஹத்திஸீன்களின் இமாமான புகாரி தனது தாரிகுல் கபீரிலும் வேறு இஸ்லாமிய அறிஞர்களும் கூறியுள்ளார்கள்.

இதற்குப் பின்னர் தான் குர்ஆனுக்கு முரண் என்று கூறுகிறார்.

ஏற்கெனவே அறிவிப்பாளர் ரீதியாக பலவீனம் அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்று முடிவு செய்யப்பட்டவை குர்ஆனுக்கும் முரண்படும் போது குர்ஆனுக்கு முரண் என்று அறிஞர்கள் கூறுகிறார்களே தவிர மேலெழுந்த வாரியாக குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவில்லை.

இறுதியாக மௌலவி அப்பாஸ் அலி அவர்களின் புத்தகத்திலிருந்து சில வரிகள்.....

குர்ஆனுக்கு முரண் என்ற வாதத்திற்கு பின்னால் ஹதீஸ்களை நிராகரிக்கும் கருவியாக மனித சிந்தனை தான் இருக்குமேத் தவிர குர்ஆன் ஒருக்காலும் இருக்காது. எனவே குர்ஆனுடன் முரண்பட்டால் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்பது ஒரு விதியே இல்லை.

இது ஹதீஸ் மறுப்பாளர்களின் 10, 11 இற்கான பதில். மற்றவை தொடரும் இன்ஷா அல்லாஹ்.....

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

15/06/2016

🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 15🌻

இமாம் அல்பானி குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைமறுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உடையவரா?

ஹதீஸ் மறுப்புக் கொள்கையை சித்தாந்தமாகக் கொண்டிருக்கும் பித்அத்வாதிகள் தமது தாமாகவே வலிந்து கண்டுபிடித்த அந்தக் கொள்கையை அறிஞர்களும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு,

 அவர்களின் கிதாபுகளில் இருந்து முன்வைக்கும் போது, முழுமையாக வாசிக்காமல் குர்ஆனுக்கு முரண் என்ற வார்த்தையைக் கண்டவுடனேயே அதை மட்டும் முன்வைப்பதை முந்தைய பகுதிகளில் நாம் விளக்கியிருந்தோம்.

அதேபோன்று இமாம் அல்பானியுடைய இரண்டு கூற்றையும் கையாண்டிருக்கிறார்கள்.

ஒரு செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி ஏற்பட்டால் சில வேளை அது குர்ஆனுக்கு நேரடியாக முரண்பட்டதாக இருக்கும். அந்த முரண்பாடு எல்லோருக்கும் விளங்கக் கூடியதாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் இருக்கும்.

அவ்வாறான செய்திகளை விமர்சிக்கும் அறிஞர்கள் இரண்டையும் சேர்த்தே கூறுவார்கள்.

1.
ஆதம் (அலை) அவர்கள் சம்பந்தமான செய்தி குர்ஆனுக்கு முரண்படுவதாக தனக்குத் தெரிகிறது என்று மட்டும் மறுக்கவில்லை.
ஏற்கனவே அதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள சில குறைகளையும் கூறி, சில அறிஞர்களுடைய நிலைப்பாட்டையும் விளக்கி விட்டுத்தான் இது குர்ஆனுக்கும் முரண்படுகிறது என்கிறார்.

1/103 இலிருந்து 1/114 பக்கங்கள் வரை இந்த செய்தி பற்றி விளக்குகிறார். முழுமையாக வாசிக்கும் பழக்கம் இருந்தால் புரியும் இன்ஷா அல்லாஹ்.

இமாம் அல்பானியின் கூற்றை பிழையாக மொழி பெயர்த்துமுள்ளார்கள்

ومما يؤيد ما ذهب إليه العلماء من وضع هذا الحديث وبطلانه أنه يخالف القرآن الكريم في موضعين منه....
அவர்களின் மொழிபெயர்ப்பு.

இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது பொய்யானது என்று அறிஞர்கள் முடிவு செய்ததற்குக் காரணம் இந்த ஹதீஸ் இரண்டு இடங்களில் சங்கை மிக்க 📖குர்ஆனுடன் முரண்படுகிறது. . .

சரியான மொழிபெயர்ப்பு.

இந்த ஹதீஸ் இரண்டு இடங்களில் சங்கை மிக்க 📖குர்ஆனுடன் முரண்படுவதும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிஞர்கள் முடிவு செய்ததை உறுதிப்படுத்தக் கூடியதாகும்.

2.
இமாம் அல்பானி உமர் (ரழி) அவர்களுடைய செய்தி குர்ஆனுக்கு முரண்படுவதை கூறும்போது "இரண்டாவது" என்று ஆரம்பிக்கிறார். இவர்கள்
"முதலாவது" என்ன என்பதையும் மறைத்ததோடு இரண்டாவது என்பதை மொழி பெயர்க்கவுமில்லை . இது பட்டப்பகலில் செய்யும் இலக்கியக் கொள்ளை.
1/117 இலிருந்து 1/126 பக்கங்களில் விளக்குகிறார்.

எனவே இது இமாம் அல்பானியும் ஆதரிக்காத நூதனக் கொள்கை என்பது தெளிவாகிறது.

இது பகுதி 12 இற்கான பதில்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை


🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 16🌻

இமாம் புல்கீனி குர்ஆனுக்கு முரண் என்று ஹதீஸை மறுக்கவில்லை.


👉இவ்வாறே நமது ஆசிரியர் 👳புல்கீனீ அவர்களும் உனது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான் என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்⚔

📚நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 13 பக்கம் : 437

அறிவிப்பை الرواية மறுப்பது என்பது வேறு الحديث மறுப்பது என்பது வேறு. ஹதீஸ் கலையில் சிறிது ஞானம் உள்ளவர்களுக்கும் இது புரியும்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் மாறி அறிவித்துள்ளார் مقلوب என்பதையே அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அவர்களின்மொழிபெயர்ப்பு

நரகத்திற்கு புதிய படைப்பை அல்லாஹ் படைப்பான் என்று வருகின்ற இந்த இடத்தில் (தவறுதலாக) மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று இமாம்களில் ஒரு கூட்டத்தினர் கூறியுள்ளார்கள்.

மாற்றம் அறிவிப்பாளர் மூலமே நடந்துள்ளது என்பதற்கு இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியில் உள்ள  வேறு சில அறிவிப்புகளை மேற்கோள் காட்டுகிறார்.
கொஞ்சம் முன்னப் பின்ன வாசித்தால் விளங்கும்.

இன்னும் வேடிக்கையாக உள்ள விடயம் என்னவென்றால் இமாம் புல்கீனி இந்த செய்தியை குர்ஆனுக்கு முரண்படாமல் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார். அதை இமாம் இப்னு ஹஜர் அடுத்ததாகவே  பதிந்துள்ளார். ஆனால் இவர்கள் அதை மறைத்து விட்டார்கள்.

இமாம் புல்கீனி ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் உள்ளவரல்ல. தாம் கொண்ட கொள்கையை நிறுவுவதற்கு பலியாக்கப்படும் இமாம்களில் ஒருவர்.

இது பகுதி 13 இதற்குரிய பதில்

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை


🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 17🌻

அவர்களின் வாதம்

ولهذا المعنى رد طائفة من العلماء حديث قطع الصلاة بمرور الكلب وغيره ، وقالوا: إنه مخالف للقرآن في قوله تعالى : { وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى } الأنعام:164،
كما ذكر ذلك الشافعي.

💥நாயும், மற்றவைகளும் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்துவிடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை 👳அறிஞர்கள் மறுக்கிறார்கள்✅

❇ ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் 📖(6 : 164) என்ற இறைவனுடைய கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது⚔ என்றும் கூறுகிறார்கள். ஷாபிஈயும் இதைக் கூறியுள்ளார்.

📚நூல் : ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப் பாகம் : 3 பக்கம் : 342

பதில்

இதில் ولهذا المعنى என்ற அரபுப் பதத்தை மொழி பெயர்க்கப்படவில்லை.

"இந்த கருத்தின் காரணமாக" என்பதே அதன் பொருளாகும்.

 இந்தக் கருத்து என்றால் என்ன?

  தொழுகையை துண்டித்து விடும்   يقطع الصلاة  என்ற வார்த்தை நன்மையைக் குறைக்கும் என்பதைக் குறிக்கின்றது என்பதற்கு சில அறிவிப்புகளை பதிந்துள்ளார். தொழுகையை முறிக்கும் என்ற கருத்தை விட தொழுகையின் நன்மையைக் குறைக்கும் என்பதே சரியான கருத்து என்பதை அந்த அறிவிப்புகள் மூலம் இமாமவர்கள் கூறியுள்ளார்கள்.

வேறு ஹதீஸ்கள் மூலம் இதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதை நிறுவி விட்டுத் தான் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறப்பட்டதை பதிந்துள்ளார்.

இவர்கள் கூறுவது போல் வெறுமனே குர்ஆனுக்கு முரண் என்பதால் மட்டும் மறுக்கவில்லை.

அந்தப் பந்தியை முழுமையாக வாசிக்கும் எவரும் இமாம் இப் ரஜப் மீது இப்படியொரு அபாண்டத்தை சுமத்துகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வார்கள்.

மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல காண்பதையெல்லாம் முரணாக விளங்குபவர்களாகவே இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் இருக்கின்றனர்.

இமாம்களின் மீது அவதூறு சொல்லித்தான் தங்களது கொள்கையை நிறுவ வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் இந்தக்கொள்கையில் இருந்து காப்பாற்றவேண்டும்

இது பகுதி 13 இன் 2ஆவது வாதத்திற்கு பதில்

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை