தொடர் 🌎 25
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔
🌹உங்களுடைய வீட்டில் அதிகமாக தொழுது வாருங்கள். அதனால் வீட்டில் நல்லவை அதிகமாகும்.🌹
🌴🍓🌱🌳
🌾இதை அனஸ் (ரழி ) அவர்கள் வழியாக இமாம்களான
🌽அபூநுஐம் தனது أخبار أصبهان 1/170 இலும்,
🌽பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 8385 இலும்,
🌽இப்னுல் முகர்ரிப் தனது الأربعين 1/88 இலும்,
🌽அப்துல் கனீ அல் மக்திஸீ தனது أخبار الصلاة 1/17 இலும்,
🌽இப்னு குதாமா தனது المتحابين في الله 1/57 இலும்,
🌽மேலும் ابن الأبار தனது முஃஜம் 1/273 இலும்,
பதிந்துள்ளனர்.🌾
💡🔬🔬🔬💡
🔬இந்த செய்தி அனஸ் (ரழி ) மூலம் பல அறிவிப்பாளர் வரிசைகளில் கூடுதல் குறைத்தலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.🔬
🍒இப்னு ஹஜர் அஸ்கலானீ ஒன்று சேர்த்த வேறு ஒன்பது அறிவிப்பாளர் வரிசைகளுடன், மேலும் ஐந்து வழிகளை தான் சேர்த்துள்ளதாக இமாம் அல்பானி குறிப்பிட்டுள்ளார்.🍒
📖 سلسلة الأحاديث الضعيفة 7039 📖
🏆அத்தோடு, அனைத்து அறிவிப்புகளையும் இணைத்து ஆதாரமாகக் கொள்ள முடியாத அளவுக்கு, ஒன்று மற்றதை விட மிக பலவீனமானதாக இருக்கின்றது. 🔵
இதன் பல அறிவிப்புகள், இந்த செய்திக்கு ஏதோ ஒரு அடிப்படை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று இமாம் இப்னு ஹஜர் கூறிவிட்டு, அவற்றை சரி காணாமல் அவை அனைத்தும் மிக பலவீனமானவை என்று கூறுகிறார்.🏆
📖سلسلة الأحاديث الضعيفة 3773 📖
✏இவ் அறிவிப்பில் இடம் பெறும் அலீ இப்னுல் ஜனத் علي بن الجند என்பவர் இட்டுக்கட்டுவார் என்று சந்தேகிக்கப்படக்கூடியவர் ஆவார்.✏
📖 الضعيفة 7039 📖
🌱இவரை இமாம் உகைலீ "அறியப்படாதவர்" என்கிறார்.
📖 الضعفاء الكبير (3/224) 📖
🌱இமாம் புகாரி "منكر الحديث" என்கிறார்.
📖 التاريخ الكبير 2363📖
🌱"இவர் கூறும் அறிவிப்பாளர் வரிசைகளை ஹதீஸ் துறையில் ஆரம்ப நிலையில் உள்ள ஒருவர் கேட்டால் கூட அது புனையப்பட்டது என்பது தெளிவாகி விடும்.🔵
பிரபலமான நம்பகமானவர்கள் சொன்னதாக மறுக்கத்தக்க விடயங்களை இவர் மாத்திரம் அறிவித்திருப்பதால் இவர் அறிப்பவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது" என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறுகிறார்.🎡
📖 المجروحين 682 📖
🌱இமாம் அபூஹாதம் "ஆளும் அறியப்படாதவர், ஹதீஸும் இட்டுக்கட்டப்பட்டது" என்கிறார்.
📖 الجرح والتعديل 973 📖
🌱"இவர் அறிவிப்பவை பொய்யானவையாகும்" என்று இமாம் அபூ ஹாதம் கூறியதாக இமாம் தஹபீ கூறுகிறார்.
📖 ميزان الاعتدال 3/118 📖
🚥🚥🚥🚥
🎓எனவே, மறுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள இவ்வறிவிப்பை ஓரங்கட்டிவிட்டு, வீடுகளில் தொழுவதை ஊக்குவிக்கும் ஸஹீஹான ஹதீஸ்களை நாம் கவனத்தில் கொள்வோம்.🎓
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
11/05/2016
தொடர் 🌎 26
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔
🍓"சுவர்க்கம் போகிறீரா? அல்லது இரண்டு ரக்அத்துகள் தொழுகிறீரா?" என்று என்னிடம் கேட்கப்பட்டால்,
இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கே நான் ஆசைப்படுவேன். ஏனென்றால், சொர்க்கம் செல்வதால் எனக்கு இன்பம் கிடைக்கிறது.
இரண்டு ரக்அத்துகள் தொழுவதால் எனது இறைவன் திருப்தி அடைகிறான்."🍓
💡🔬🔬🔬🔬💡
🚧 இந்த செய்தியில் பல விமர்சனங்கள் இருக்கின்றன.🚧
🍒 ஒன்று : 🍒
🌱 குறித்த அறிஞர் சொன்னதாக அரபு வாக்கியத்தில் இல்லை. உங்களுக்கு இவ்வாறு விருப்பம் கொடுக்கப்பட்டால் எதை தெரிவு செய்வீர்கள்? என்று மக்கள் கேட்டதற்கு பதிலாகச் சொன்னதாகவே வருகின்றது.🌱
🍒 இரண்டு : 🍒
🌱இதை சொன்ன அறிஞர் யாரென்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் , சமூக வலைத்தளங்களில் அந்த அறிஞர் ஹஸன் அல் பஸரீ (ரஹ் ) என்று காணலாம்.🎡
சூபிகளிடம் முஹம்மத் இப்னு ஸீரீன் (ரஹ்) என்று காணலாம்.🎡
ஷீஆக்களிடம் அலீ (அலை)!!! என்று காணலாம்.🌸
🚫இவற்றில் எது சரி? ❌
🍒 மூன்று : 🍒
🌹இந்த மூன்று இமாம்கள் பற்றிய வரலாறுகளும், அவர்களின் உபதேங்களும் தொகுக்கப்பட்டுள்ள மூல நூற்களில் இச்செய்தியை காணமுடியவில்லை.🍇
🍒 நான்கு : 🍒
🌳இந்த அறிஞர்கள் சொர்க்கத்தை ஆசை வைத்து அமல் செய்ததாகவே அவர்களின் வரலாறுகளில் காணலாம்.🌳
🍒 ஐந்து : 🍒
🌹சொர்க்கத்தை ஆசை வைத்து நரகைப் பயந்து அமல் செய்யாமல், அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் நாடி அமல் செய்ய வேண்டும் என்ற ஒரு கொள்கை சூபிகளிடம் இருக்கின்றது.🌸
🍇சொர்க்கம் என்பது வெறுமனே இன்பம் அனுபவிப்பது மட்டுமே என்ற எண்ணம் தான் இதற்கான காரணம்.🍇
🎓"உனது சொர்க்கத்தை ஆசைப்பட்டோ உனது நரகத்தைப் பயந்தோ உன்னை வணங்கவில்லை. மாறாக, உன்னைப் பார்க்கவும் சங்கைப் படுத்தவும் தான் வணங்குகிறேன்." என்பது அவர்களின் தாரக மந்திரம்.🎓
🌴அதை இமாம்கள் பெயரில் நியாயப்படுத்தும் முயற்சியாக இது இருக்கலாம்.🌱
🍒 ஆறாவது : 🍒
🌽தொழுகை, சொர்க்கம் இவ்விரண்டும் தான் நாம் செய்யும் அமல்களுக்கு கூலி என்று இருந்தால், இவ்வாறு சொல்வது நியாயம் தான்.🌽
🌾ஆனால், தொழுகைக்கே சொர்க்கம் தான் கூலி என்றும், அங்கு தான் மேலதிகமாக அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் கிடைக்கும் எனும் போது எப்படி ஒருவர் இப்படி சிந்திக்க அல்லது அதற்காக ஏங்க முடியும்?🌾
🍒 ஏழாவது : 🍒
🔵ஒரு முஸ்லிம் செய்யும் அமல்களுக்கு கூலியாக சொர்க்கத்தையே வழங்குவதாக அல் குர்ஆனின் பல வசனங்களில் அல்லாஹ் கூறியுள்ளான்.
மேலதிகமாக, தனது தரிசனத்தை வழங்குவதாக வாக்களித்துள்ளான். 🔵
🍒 எட்டாவது : 🍒
🌿இந்த சிந்தனைத் தாக்கத்தினால் தனக்குத் தேவையானதை அல்லாஹ்விடம் கேட்பதையும் ஆபத்துகளை விட்டும் பாதுகாப்பு தேடுவதையும் ஏன் சொர்க்கத்தை கேட்பதையும் நகரத்தை விட்டு பாதுகாப்பு தேடுவதையும் கூட சிலர் விட்டு விட்ட வரலாறும் இருக்கின்றது. 🍀
🔥"நரகம் வலதுபுறம் வைக்கப்பட்டால் இடது புறம் மாற்றுமாறு கூட கேட்கக் கூடாது." என்றும் சிலர் கூறியுள்ளார்கள். 🔥
🌲சிலர் சாப்பிடுதல், குடித்தல், தூங்குதல், ஆடை அணிதல், திருமணம் போன்ற அவசியத் தேவைகளையும் மறந்து,
பசி, இரவில் தூங்காமை, தனித்திருத்தல், யாருடனும் பேசாதிருத்தல், போன்றவைகளை இபாதத்துகளாக நினைத்து,
தம்மைத் தாமே வருத்திக் கொண்ட எத்தனையோ சூபி ஞானிகளின் வரலாறுகளை
நாம் அறிந்திருக்கிறோம். 🌲
🍀சிலர் சிறுநீரை பலநாட்கள் அடக்கிக் கொண்டு அதில் இறை பொருத்தத்தை தேடியிருக்கிறார்கள். 🍀
🍓சிலர் அடர்ந்த காடுகளிலும் பாலைவனங்களிலும் இறைவனையே தேடி பித்துப் பிடித்து அலைந்திருக்கிறார்கள்.🍓
🌿இச்சிந்தனை தான் ஏவல் விலக்கல் நல்லவன் கெட்டவன் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லாவற்றையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய ஹகீகத் என்று அவர்கள் சொல்லக்கூடிய மனநிலையை தோற்றுவித்திருக்கிறது எனலாம்.🌿
⚠ விளைவு?? ⚠
🌹தாங்கள் ஷரீஅத்தின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அவர்கள் செய்திருக்கும் கூத்துகள் கொஞ்ச நஞ்சமா என்ன?!!🌸
🌷இது பற்றி இன்னும் விரிவாக இமாம் இப்னு தைமிய்யா ( ரஹ்) அவர்களுடைய மஜ்மூஉ பதாவா مجموع فتاوى ابن تيمية 678 -720 இல் காணலாம்.🌷
🚥🚥🚥🚥🚥
🌹மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நாம் நாடவேண்டிய நிலையில் இஸ்லாம் எம்மை விடவில்லை.🌸
🌷ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் முன்வைப்போம். அவற்றின் படி அமல் செய்வோம்.🌷
அல்லாஹுஅஃலம்
ஷுஐப் உமரி
12/05/2016
தொடர் 🌎 27
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 பலவீனமான செய்தி 📔
🍓நான் அபூ உமாமா (ரழி) அவர்கள் மஸ்ஜிதில் இருக்கும் போது அவர்களிடம் சென்றேன்.
🌿"அபூ உமாமா அவர்களே! ஒருவர் நல்ல முறையில் வுழூச் செய்கிறார். இரு கைகளையும் முகத்தையும் கழுவி, தலையையும் காதுகளையும் மஸ்ஹ் செய்தார்.
🌿பிறகு பர்ழான தொழுகயைத் தொழுதால், அன்றைய தினம் அவரது கால்கள், கைகள், காதுகள், கண்கள் மூலம் நடந்த பாவங்களையும், தவறானவற்றை செய்ய நினைத்ததற்கான பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்."
🌿 என்று நபியவர்கள் சொன்னதை நீங்கள் கேட்டதாக ஒரு மனிதர் என்னிடம் கூறினார். என்றேன்.
🌿அப்போது அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதை நான் பல தடவைகள் நபியவர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன். என்றார்.🍓
💡🔬🔬🔬💡
இதை அபூ முஸ்லிம் என்பவர் கூறியதாக இமாம்களான
🌾அஹ்மத் தனது முஸ்னத் 22272 இலும்,
🌾தபரானீ தனது அல் கபீர் 8032 இலும்,
🌾இப்னு ஷாஹீன் தனது தர்கீப் 28 இலும்,
🌾பைஹகீ தனது ஷுஅப் 2481 இலும்,
🌾இப்னு அஸாகிர் தனது தாரீக் 8834 இலும்,
பதிந்துள்ளனர்.
🚥🚥🚥🚥🚥
🔷இதை அறிவிக்கும் அபூ முஸ்லிம் என்பவர் பற்றிய தகவல்களை யாரும் கூறவில்லை. என்று இமாம் ஹைஸமீ கூறுகிறார்.🔷
📖 مجمع الزوائد 1125, 1666📖
💎இமாம்களான புகாரி தனது தாரீக் 629 இலும்,
💎இப்னு அபீஹாதம் தனது அல் ஜர்ஹ் 2178 இலும் இவரின் நம்பகத்தன்மை பற்றி எதுவும் கூறவில்லை.🔬
💎யாரென்று அறியப்படாதவரையும் நம்பகமானவர் என்று சொல்லும் இமாம் இப்னு ஹிப்பான் கூட இவரை " நம்பகமானவர்கள் " என்ற தனது கிதாபில் சேர்க்கவில்லை. என்று இமாம் அல்பானி கூறுகிறார்.
📖 سلسلة الأحاديث الضعيفة 6711 📖
🍀அத்தோடு, " மனதால் எண்ணிய பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்." என்பது வேறு ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்படுகிறது.🍀
🌹பாவம் செய்ய நினைத்து அதை செய்யாவிட்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். என்று ஸஹீஹான ஹதீஸ்களில் காணலாம்.🌹
💎⭐💎⭐💎⭐
🌷தொழுகையின் பால் மக்களை ஆர்வப்படுத்த ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம். 🌷
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
14/05/2016
தொடர் 🌎 28
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔
🔴இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் வுழூ செய்யும் போது வடியும் நீரைப் பார்த்து, அதனால் எந்தப் பாவம் நீங்குகிறது என்று அறிந்து கொள்வார்கள்.🔴
💡🔬🔬🔬💡
🍀இந்த செய்தியை அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானீ என்பவர் தனது ஷைகான அலீ அல்கவாஸ் சொன்னதாக தனது الميزان அல்மீஸான் 333 இல் பதிவு செய்துள்ளார்.🍀
🌿வுழூ செய்பவர் உறுப்புக்களை கழுவும்போது அவ்வுறுப்புக்களால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற ஹதீஸின் படி
- பொதுவாக அசுத்தத்தை நீக்கிய தண்ணீர் நஜீஸாகி விடுவது போன்று -
பாவங்கள் என்ற அசுத்தங்களைப் போக்கிய அந்தத் தண்ணீரும் அசுத்தமாகி விடுகிறது. எனவே ஒருவர் வுழூ செய்த தண்ணீரை இன்னொருவர் பாவிக்க முடியாது. என்ற இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கருத்து ஹனபி கிதாபுகளில் காணலாம்.🌿
🌴கஷ்பு எனும் அகப்பார்வையின் மூலம் பாவங்கள் கழுவப்படுவதைக் கண்டதால் தான் அத்தண்ணீர் நஜீஸாகின்றதென்று கூறியுள்ளார்கள் என்று கற்பனை பண்ணி அவர் மீது இப்படியொரு அபாண்டத்தை சுமத்தி விட்டார்கள்.🌴
🌏கூபாவிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்குச் சென்ற போது அங்கு வுழூச் செய்து கொண்டிருந்த சிலரைப் பார்த்து இன்னின்ன பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். என்று கூறியதாகவும், பின்னர் இதன் மூலம் மற்றவர்களுடைய குறைகள் தமக்குத் தெரிவதால் அகப்பார்வையை நீக்கி விடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் என்றும் அலீ அல்கவாஸ் கூறுகிறார். 🌏
📖 الميزان للشعراني 333 - 338 📖
🍒கஷ்பு எனும் அகப்பார்வை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது உண்மையானால் அவர்களை விட பலமடங்கு உயர்வான மதிப்புடைய நபித்தோழர்களுக்கும் அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நபித்தோழர்களில் எவருமே எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்கள் என்று காண முடியவில்லை. 🍒
🌹நபித்தோழர்கள் கஷ்பு எனும் ஞானத்தின் வாயிலாக இதை அறிந்திருப்பார்களானால் பாவங்கள் கழுவப்படுகின்றன, என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கூற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.🌹
🍓நபித்தோழர்களை விட்டு விடுவோம். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் எத்தனையோ நபித்தோழர்கள் உலூச் செய்திருக்கிறார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் இவரது இந்தப் பாவம் கழுவப்படுகின்றது என்று நபி (ஸல்) கூறியதுண்டா? நிச்சயமாக இல்லை. 🍓
🌸மறைவான ஞானம் இறைவனுக்கு மாத்திரமே உரியது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒருவன் எவருக்கும் தெரியாமல் ஒரு பாவம் செய்கின்றான் என்றால் அதுபாவம் செய்தவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் கஷ்பு என்பது, அந்த ஞானத்தில் மற்றவர்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. 🍓
🔮கஷ்பு என்னும் ஞானம் (?) பெற்றவர்கள் இறைவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்வார்கள் என்ற நச்சுக் கருத்து இதன் மூலம் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்படுவதை சிந்திக்கும் போது உணரலாம்.🔮
🔦🔦மற்றொரு வழியிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
வுழூச் செய்யும்போது எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கண்டதை அவர்களைத் தவிர மற்ற எவரும் அறிந்து கொள்ள முடியாது.🚪
🎊 அபூஹனீபா (ரஹ்) அவர்களே தன்னைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தால் மட்டுமே மற்றவர்களால் அதை அறிய முடியும்.🎀
அபூஹனீபா (ரஹ்) அவர்கள் எந்த நூலிலாவது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்களார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. அல்லது இவர்கள் தமது மாணவர்களில் எவரிடமாவது கூறி அந்த மாணவர்களாவது எழுதி வைத்திருக்கின்றார்களா? அதுவும் இல்லை.🔦🔦
🌐http://frtj.net/2012/05/blog-post_30-3.html🌐
🌷ஹிஜ்ரி 150 இல் மரணித்த இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய இந்த விஷயம் - அவர்கள் கூறாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் - ஹிஜ்ரீ ஒன்பதுகளில் வாழ்ந்த அலீ அல்கவாஸ் என்பவருக்கு எப்படித் தெரிந்தது? 🌷
🚥🚥🚥🚥🚥
💐இப்படிப்பட்ட பொய்யான சம்பவங்களை இமாம்களின் பெயரால் சொல்லி மக்களை தொழுகைக்கு அழைப்பதை விட்டு ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம்.💐
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
16/05/2016
தொடர் 🌎 29
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔬 🔦🔦🔦 🔬
📔 ஸஹீஹான ஹதீஸ் 📔
🌹 (தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று எண்ணி யாரும் பாவங்களைச் செய்யத் துணிந்து) ஏமாந்து விட வேண்டாம். என்று நபி ( ஸல்) கூறினார்கள். 🌹
🌼 இது உஸ்மான் (ரழி)அவர்கள் நபியவர்களின் வுழூ பற்றி தெளிவுபடுத்தும் ஹதீஸின் இறுதிப் பகுதியாகும்.🌼
💐 ஸஹீஹுல் புகாரியில் 6433 இலும், வேறு பல கிதாபுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.💐
🌟அல்லாஹு அஃலம்🌟
🌷ஷுஐப் உமரி🌷
17/05/2016
தொடர் 🌎 30
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔬 🔦🔦🔦 🔬
📔 பலவீனமான அறிவிப்பாளர் வரிசை உடையது 📔
🍎அபூஹுரைரா ( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
🌾குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்த இருவர் ஒரே நேரத்தில் முஸ்லிமானார்கள். ஒருவர் ஷஹீதாகி விட்டார். அடுத்தவர் ஒரு வருடத்திற்குப் பிறகு மரணமடைந்தார். 🌾
🌹தல்ஹா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். "இறுதியில் மரணித்தவர் ஷஹீதுக்கு முன்னரே சொர்க்கத்தில் நுழைந்ததாக கனவு கண்டேன். இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. 🌹
🎀இது பற்றி நானோ வேறு யாரோ நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது "ஒரு வருடத்திற்குப் பின்னர் மரணித்தவர் செய்த அதிகமான நன்மைகளை நீ கவனிக்கவில்லையா? ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைத்திருக்கிறார். 🎀
🌴ஒரு வருடத்தில் ஆறாயிரம் ரக்அத்துகளும் இன்னும் எத்தனையோ ரக்அத்துகளும் (ஷஹீதை விட) அதிகமாக தொழுதிருக்கிறார்." என்று பதில் கூறினார்கள்.🍎
🚥🚥🚥🚥🚥
🍒இந்த செய்தியை அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் என்பவர் அபூஹுரைரா ( ரழி) இடமிருந்து அறிவிக்கிறார்.🍒
🔬💡இதில் சில குறைகள் காணப்படுகின்றன.
🔦முதலாவது🔦
🍀அபூஸலமாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் இப்னு அம்ர் என்பவர் 🍀
🌻சிலரிடம் இது தல்ஹாவிடமிருந்து அபூஸலமா அறிவித்ததாகவும்,🌻
📚مسند الشاشي 27 ، مسند ابي يعلى 648
الأحاديث المختارة 826 ، 📚أحمد 8400
الزهد للبيهقي 632 ،الفوائد المنتقاة للخلعي 827 ، شرح مشكل الآثار 2307📚
✏இன்னும் சிலரிடம் அபூஸலமா தான் இதைச் சொன்னார் என்றும்,✏
📖شرح مشكل الآثار 2308📖
🔮இன்னும் சிலரிடம் அபூஸலமா அபூஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாகவும் கூறி, 🔮
📚أحمد 8399 ، البزار 929 ، امالي الشجري 1251 ، تاريخ أصبهان 2/220📚
தனக்குத் தானே முரண்படுகிறார். 🔬💡
🔧இதில் அபூஹுரைரா ( ரழி ) கூறப்பட்டிருப்பது தவறு என்று இமாம் தாரகுத்னீ கூறுகிறார்🔧
📖العلل 518📖
✂இதனால் தான் இவருடைய ஹதீஸ்களை மக்கள் தவிர்ந்து கொண்டார்கள் என்று இமாம் இப்னு மயீன் கூறுகிறார்.✂
📖تهذيب الكمال 6188📖
💊இமாம்களான புகாரி முஸ்லிம் ஆகியோர் வேறு அறிவிப்பார்கள் மூலம் அறிவிக்கப்பட்ட இவரது ஹதீஸ்களையே தமது கிதாபுகளில் பதிந்துள்ளனர். என்று இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார் 💊
📖هدي الساري 1/441📖
🔦இரண்டாவது🔦
🔬அபூஸலமாவிடமிருந்து அறிவிக்கும் மற்றையவரான முஹம்மத் இப்னு இப்ராஹீம் என்பவரும் 🍀
🍑சிலரிடம் அபூஸலமா தான் இதைச் சொன்னதாகவும் 🍑
📖أحمد 1389 ، الأحاديث المختارة 827📖
🍒இன்னும் சிலரிடம் அபூஸலமா தல்ஹாவிடமிருந்து அறிவிப்பதாகவும்🍒
📚أحمد 1403 ، ابن ماجه 3925 ، ابن حبان 2982، 📚البيهقي 6530 ، المختارة 828، شرح مشكل الآثار 2309/2310 📚
🌻இன்னும் சிலரிடம் தான் தல்ஹாவிடமிருந்து அறிவிப்பதாகவும்🌻
📖مسند الشاشي 28📖
தனக்குத் தானே முரணாகக் கூறியுள்ளார். 🔬
⚠இவர் நம்பகமானவராக இருந்தாலும் மறுக்கப்படக்கூடிய சில விடயங்களை அறிவித்துள்ளார் என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.
📖تهذيب الكمال 5691📖
🎓இந்த செய்தியும் அவ்வாறானதாக இருக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால், இந்த சம்பவம் ஸஹீஹாக இடம் பெற்றுள்ள ஏனைய அறிவிப்புகளில் கனவு விவகாரமோ, தொழுகைகளின் எண்ணிக்கையோ, ஒரு வருடம் என்பதோ கூறப்படவில்லை.🎓
🔦மூன்றாவது 🔦
♻எல்லாவற்றிற்கும் மேலாக இதை அறிவிக்கும் அபூஸலமா இச்சம்பவம் நிகழும் போது இருக்கவுமில்லை. 🌹
✏இமாம்களான இப்னுல் மதீனீ, இப்னு மஈன், பஸ்ஸார் ஆகியோர் கூறுவது போன்று தல்ஹாவிடமிருந்து அபூஸலமா எதையும் கேட்டு அறிவிக்கவுமில்லை. 🌻
📚جامع التحصيل 1380 ، مصباح الزجاجة البوصيري 3/218📚
⚠எனவே அவர் தல்ஹாவிடமிருந்து அறிவிப்பவை தொடர்பு துண்டிக்கப்பட்டவையாகும் என்று இமாம் தஹபீ மற்றும் இமாம் பூஸீரீ கூறுகின்றார்கள்.⚠
📚سير أعلام النبلاء 4/287 ، مصباح الزجاجة 4/158📚
💡💡💡💡💡
🌟எனவே இது பலவீனமான அறிவிப்பாகும். இதைத் தவிர்த்து மற்றைய ஸஹீஹான அறிவிப்புகளை கவனத்தில் கொள்வோம். அடுத்த தொடரில் அதனுடைய விபரத்தைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.🌟
அல்லாஹுஅஃலம்
ஷுஐப் உமரி
19/05/2016
தொடர் 🌎 31
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔬 🔦🔦🔦 🔬
📔 ஆதாரபூர்வமானது📔
🍑நபியவர்களின் காலத்தில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மிக நல்லவர் முதலில் மரணித்து விட்டார். மற்றவர் நாற்பது நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார். 🍑
🌳முதலில் மரணித்தவரைப் பற்றி நபியவர்களிடம் மக்கள் புகழ்ந்த போது, " மற்றவர் தொழுது கொண்டு தானே இருந்தார். என்று கேட்டதற்கு, " ஆம். ஆனால் அவர் சாதாரணமானவராகத் தான் இருந்தார்." என்றார்கள்.🌳
🌻( அந்த நாற்பது நாட்களில்) அவர் தொழுத தொழுகை எந்த நிலைக்கு உயர்த்தி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?🌼
🌹 தொழுகை ஒருவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஓடக்கூடிய ஒரு ஆழமான ஆறு போன்றதாகும். அதில் அவர் ஒரு நாளைக்கு ஐந்து வேளை குளித்தால் அவருடைய உடலில் அழுக்கு இருக்குமா?
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌻
💡💡💡💡💡
இந்த ஹதீஸை இமாம்களான
🌷அஹ்மத் 1534 இலும்,
🌷தௌரகீ الدورقي தனது முஸ்னத் 40 இலும்,
🌷இப்னு ஹுஸைமா 310 இலும்,
🌷தபரானீ தனது அல் அவ்ஸத் 6476 இலும்,
🌷இப்னு ஷாஹீன் தனது அத்தர்கீப் 50 இலும்,
🌷அபூ அஹ்மத் அல் ஹாகிம் தனது அவாலீ العوالي 52 இலும்,
🌷ஹாகிம் தனது முஸ்தத்ரக் 718 இலும்,
🌷பைஹகீ தனது ஷுஅப் 2557 இலும்,
ஆகியோர் பதிந்துள்ளனர்.
🌱🍃🌱🍃🌱🍃🌱🍃
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் மஹ்ரமா مخرمة بن بكير என்பவர் தனது தந்தை புகைரிடம் நேரடியாக கேட்டு அறிவிக்காமல் அவர் எழுதி வைத்த கிதாபுகளில் இருந்து அறிவிக்கிறார்.
📖 تهذيب الكمال 📖
🌸இமாம் மாலிக் உடைய அறிவிப்பில் அவர் முஸ்லிமாகத் தானே இருந்தார்? என்று இடம் பெற்றுள்ளது.
இமாம் மாலிக் அவர்கள் நான் கேள்விப்பட்டேன் என்று அறிவித்துள்ளார்.🌸
🌼இமாம் ஹாகிம் இந்த ஹதீஸை ஸஹீஹானது என்று கூறியுள்ளதை இமாம் தஹபீ சரி கண்டுள்ளார்.🌼
இமாம் அல்பானி அவர்களும் இதை ஸஹீஹானது என்று கூறியுள்ளார் 🌷
🌟அல்லாஹு அஃலம்🌟
🌼ஷுஐப் உமரி பேருவளை🌼
25/05/2016
தொடர் 🌎 32
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔬 🔦🔦🔦 🔬
📔 இட்டுக்கட்டப்பட்டது 📔
🌹ஒரு நாள் ரமலான் பிறை தெரிந்த போது "ரமலான் மாதத்தில் உள்ளதை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுவதும் ரமலானாக இருக்காதா? என்று ஆசைபடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌹
🔬இந்த செய்தியை அபூமஸ்வூத் (ரலி) வழியாக இமாம்களான
🌷இப்னு ஹுஸைமா 1886 இலும்,
🌷அவர் வழியாக பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 3361இலும் , பழாஇலுல் அவ்காத் 42 இலும்,
🌷ஷஜரீ தனது அமாலீ 1379, 1477, 1569 இலும்,
🔬இப்னு மஸ்ஊத் (ரழி) வழியாக இமாம்களான
🌷அபூயஃலா 5273 இலும்,
🌷இப்னு அபித்துன்யா தனது பழாஇலு ரமழான் 22
🌷அத்தர்கீப் வத்தர்ஹீப் 1765 இல் قوام السنة வும்,
🌷இப்னு ஷாஹீன் தனது பழாஇலு ரமழான் 18 இலும்,
🌷அல்மக்திஸீ தனது பழாஇலு ரமழான் 09 இலும்,
🌷அபூநுஐம் தனது மஃரிபதுஸ் ஸஹாபா 7091 இலும்,
🌷அபூதாஹிர் தனது துயூரிய்யாத் 983 இலும் பதிந்துள்ளனர்.
🚥🚥🚥
இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஜரீர் பின் அய்யூப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம்களான
⛳இப்னு மஈன்تاريخ ابن معين2644 ،1434
⛳இமாம் பகவீ معجم الصحابة 2/41
⛳இமாம் தஹபீ المقتنى في سرد الكنى1/430 இலும், பிரபலமான பலவீனமானவர் என்று ميزان الاعتدال 1/391இலும் ,
⛳இமாம் அபூஸுர்ஆ الضعفاء2/419
இலும்,
⛳இமாம் பைஹகீ அல் குப்ரா 3361 இலும்,
⛳இமாம் ஹைஸமீ தனது மஜமஉஸ் ஸவாஇத் 4781 இலும்,
குறிப்பிடுகிறார்கள்.
🌷இமாம்களான புகாரி، அபூஹாதம், அபூஸுர்ஆ, உகைலீ منكر الحديث என்கிறார்கள்
التاريخ الأوسط 1964 ، التاريخ الكبير 2237 ، الضعفاء الصغير 51 ، الجرح والتعديل 2/504, علل الترمذي 1/389, الضعفاء للعقيلي 242،
🌼நான் யாரைப்பற்றியாவது منكر الحديث என்று கூறினால் அவர் வழியாக அறிவிக்கக் கூடாது என்று இமாம் புகாரி கூறியதாக இமாம் தஹபீ கூறுகிறார்.🌼
ميزان الاعتدال 1/6
🌟அதிகம் தவறு விடக்கூடியவர். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் என்று இமாம் அபூநுஐம், கூறுகிறார்.🌟
المجروحين 194
🌟இமாம்களான வகீஃ, அபூநுஐம் இவர் இட்டுக்கட்டக் கூடியவர் என்கிறார்கள். இமாம் இப்னு மஈன் பலவீனமானவர் என்கிறார். புகாரி அபூஸுர்ஆ منكرالحديث என்கிறார்கள். நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் ஹதீஸ் கலையில் ஓரங்கட்டப்பட்டவர் என்கிறார்கள்.
الضعفاء والمتروكون لابن الجوزي 647
💎ஹதீஸ் கலையில் ஓரங்கட்டப்பட்டவர் என்கிறார் இமாம் அபூஸுர்ஆ மற்றும் இப்னுல் கைஸரானீ .💎
المغني في الضعفاء 1107 ، ذخيرة الحفاظ
✏இமாம் ஸிப்த் இப்னுல் அஜமீ தனது الكشف الحثيث عمن رمي بوضع الحديث 185 இல் இவரை பதிந்துள்ளார். ✏
🚥இமாம்களான இப்னுல் ஜௌஸி, முன்திரீ, ஷௌகானீ, அல்பானீ ஆகியோர் இது இட்டுக்கட்டப்பட்டசெய்தி என்கிறார்கள். 🚥
الموضوعات لابن الجوزي 2/189، الترغيب والترهيب للمنذري 2/72، الفوائد المجموعة 1/88، ضعيف الترغيب 596
🌼🌼🌼🌼🌼
இதே செய்தியை இமாம் தபரானீ தனது அல் கபீர் 967 இல் வேறொரு அறிவிப்பாளர் வரிசையில் பதிந்துள்ளார்.🌹
🔬இதில் இடம்பெறும் ஹய்யாஜ் என்பவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியிருப்பதை இமாம் மிஸ்ஸீ தஹ்தீபுல் கமாலில் 6637 பதிவு செய்துள்ளார்.🔬
தொடரும் அறிவிப்பு
அப்போது குஸாஆ குலத்தைச் சார்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! (இது தொடர்பாக) விளக்குங்கள் என்றார். அதற்கு, சொர்க்கம் அந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து அடுத்தவருடம் வரை அலங்கரிக்கப்படும். ரமலான் மாதத்தின் முதல்நாள் வரும் போது அர்ஷின் கீழிலிருந்து காற்று அடிக்கும் சொர்க்கத்தின் இலைகள் அசையும். இதை ஹூருல் ஈன்கள் பார்ப்பார்கள். இறைவா! இந்த மாதத்தில் உன் அடியார்களில் எங்களுக்கு துணையாக்குவாயாக! அவர்கள் மூலம் எங்களுக்கு கண் குளிர்ச்சியும் எங்கள் மூலம் அவர்களுக்கு கண் குளிர்ச்சியும் ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.
யார் ரமலான் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். (அல்குர்ஆன் 55:72) என்று அல்லாஹ் வர்ணித்த முத்தாலான கூடாரத்தில் ஹூர் எனும் கன்னியரை அல்லாஹ் மனைவியாக்குவான். அவர்களில் உள்ள பெண்களில் ஒவ்வொருவருக்கும் எழுபது மேலாடைகள் இருக்கும். ஒன்று மற்றொரு நிறத்தில் இருக்காது. எழுபது நிற நறுமணங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ஒன்று மற்றொரு நிறத்தில் இருக்காது. (இதைப்போன்று) ஒரு வாசனை மற்றொரு நிறத்தில் அமைந்திருக்காது.
அப்பெண்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தேவையை நிறைவு செய்ய எழுபதாயிரம் வேலைக்காரப் பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்காரப் பெண்ணிடமும் தங்கத்தாலான தட்டு இருக்கும். அதில் உணவுகள் இருக்கும். அதில் கடைசி கவள உணவின் சுவை ஆரம்பத்தின் சுவையைப் போன்று இருக்காது. ஒவ்வொரு கட்டிலிலும் எழுபது விரிப்புகள் இருக்கும். அதன் உட்பகுதி இஸ்தபரக் என்ற பட்டுவகையைச் சார்ந்திருக்கும்... என்று நீண்டு செல்கிறது.
ஷுஐப் உமரி
அல்லாஹு அஃலம்
06/01/2016
தொடர் 🌎 33
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 02
🔬 🔦🔦🔦 🔬
📔 ஆதாரபூர்வமானது 📔
🍓" பொறுமையின் மாதத்தில் நோன்பு நோற்பதும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் ஊசலாட்டங்களையும் நீக்கிவிடும்."
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🍓
🚥🚥🚥🚥🚥
0⃣1⃣
🍒இதை النمر بن تولب என்ற கிராமப்புற ஸஹாபி அறிவித்ததாக பின்வரும் கிரந்தங்களில் ஒரு சம்பவத்துடன் பதிவாகியுள்ளது.🍒
📚مصنف عبد الرزاق 7877 ، 📙الأموال لابن أبي عبيد 30 ، 📘طبقات ابن سعد 1/213 ، 📓مسند أحمد 20737 ،20738 ،23070، 📔الأموال لابن زنجويه 80 ، 📒التاريخ الكبير 7/238 ، 📕سنن أبي داود 2999 ، 📓سنن النسائي 4146 ، 📗المنتقى لابن الجارود 1099 ، 📘شرح معاني الآثار 5429 ،📙معجم الصحابة لابن قانع 3/165،166 ، 📒صحيح ابن حبان 6557 ، ، 📙المعجم الأوسط 4940 ، 📕معرفة الصحابة لأبي نعيم 6466،7309،6468، 📘أخبار أصبهان 1/360 ، 📗السنن الكبرى للبيهقي 12749 ، 📕شعب الإيمان 3574 ،3575 ، 📗الاسماء المبهمة للخطيب 157.📚
🌹இதன் சில அறிவிப்புகள் பலவீனமாக இருந்தாலும் மற்றவை ஆதாரபூர்வமானவையாகும்.🌹
0⃣2⃣
🌱இதே செய்தியை தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அபூதர் (ரழி) வழியாக அறிவிப்பதாக ஒரு சம்பவத்துடன் பின்வரும் கிதாபுகளில் பதிந்துள்ளனர்.🌱
📚مسند أبي داود الطيالسي 484 ، 📕مسند أحمد 21364 ، 📘شعب الإيمان 3573 ، 📙فضائل الأوقات للبيهقي 295 ، 📒تاريخ دمشق 9075 ، 📓الأمالي لابن عساكر 5 .📚
🍑இந்த தமீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர் அபூரீமா என்ற ஸஹாபியாக இருக்கலாம். ஏனெனில் இவரிடமிருந்து அறிவிக்கும் அஸ்zரக் என்பவர் வேறொரு ஹதீஸை அறிவிக்கும் போதும் "அபூரீமா என்று கூறப்படும் ஒருவர் எங்களுக்கு தொழுவித்தார்" என்று அறிவிக்கிறார். அவ்வாறு இருந்தால் இவ்வறிவிப்பும் ஆதாரமானதாகும்.🍑
0⃣3⃣
🍀இதே செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) வழியாகவும்
📚كشف الأسرار عن زوائد البزار 1057 ، 📖التاريخ الكبير للبخاري 7/238 📚
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.🍀
🌸இதன் அறிவிப்பாளர் வரிசையில் سماك بن حرب என்பவர் பற்றி விமர்சனம் இருந்தாலும் இந்த செய்தி வேறு வழிகளில் நபியவர்களிடமிருந்தே அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர் பற்றிய விமர்சனம் இல்லாமல் போய்விடுகின்றது.🌸
0⃣4⃣
🌴இதே செய்தி அலி (ரழி) வழியாகவும்
📚مسند البزار 862،688، 📖 المعجم الأوسط 9174 ، 📕تنبيه الغافلين 484 📚
ஆகிய கிதாபுகளில் பதிந்துள்ளார்கள். 🌴
🔮இதில் இடம்பெறும் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் பலவீனமானவர். சில அறிஞர்கள் பொய்யர் என்றும் கூறியுள்ளனர்.🔮 📖تهذيب الكمال📖
0⃣5⃣
🌳இதே விடயத்தை عمرو بن شرحبيل என்பவர் ஒரு ஸஹாபியிடமிருந்து அறிவித்துள்ளதாகவும் பின்வரும் கிதாபுகளில் பதிந்துள்ளனர். 🌳
📚مصنف عبد الرزاق 7867 ، 📗سنن النسائي 2706 ،2707 ، 📙الترغيب والترهيب لقوام السنة 1886.📚
👉ஆனால் இந்த அறிவிப்பில் ரமழான் மாதம் பற்றி கூறப்படவில்லை.👈
0⃣6⃣
💼இதே விடயம் المعجم الكبير 8984 இல் இப்னு மஸ்ஊத் (ரழி) உடைய கூற்றாக பதிவாகியுள்ளது.💼
0⃣7⃣
🚪இது மேற்கண்ட ஹாரிஸ் என்ற பலவீனமானவருடைய கூற்றாகவும் مصنف عبد الرزاق 7872 இல் பதிவாகியுள்ளது.🚪
🚦🚦🚦🚦🚦
இந்த அறிவிப்புகளில் சிலது பலவீனமானதாக இருந்தாலும் அதிகமானவை நம்பகமானவர்கள் வழியாக வந்துள்ளன.
எனவே இந்த ரமழான் மூலம் உள்ளங்களில் உள்ள அசுத்தங்கள் நீங்கிய கூட்டத்தில் நம் அனைவரையும் அல்லாஹ் சேர்ப்பானாக.
🌹🌺🌷🌸🌼🌻
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
14/06/2016
தொடர் 🌎 34
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 03
🔬🔦🔦🔦🔬
🌟பலவீனமானது🌟
🌷இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஸுஹுபுகள் ரமழான் மாதம் இரண்டாவது இரவில் இறக்கப்பட்டது. தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் வேதம் ரமழான் மாதம் ஆறாவது நாளிலும் மூஸா (அலை) அவர்களுக்கு தௌராத் வேதம் பதினெட்டிலும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இருபத்தி நான்கிலும் இறக்கப்பட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌷
🚥🚥🚥🚥🚥
1⃣
🎒இதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வழியாக இமாம் இப்னு அஸாகிர் தனது 📓தாரீகு திமிஷ்க் 84/17,6/202 📓 இல் பதிந்துள்ளார்.🎒
👒இப்னு அப்பாஸ் (ரழி) இடமிருந்து அறிவிக்கும் அலீ இப்னு அபீதல்ஹா என்பவரின் நம்பகத்தன்மை பற்றி அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.👒 📖 تهذيب الكمال 4754📖
🔮இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குர்ஆனுக்கு விளக்கமாக கூறியவற்றை இவர் அறிவிக்கிறார். ஆனால் இவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை காணவில்லை.🔮
📖 تاريخ الإسلام 313📖 تهذيب الكمال 4754📚
🔭ஆனால் அவருடைய மாணவர்களான முஜாஹித், காஸிம் இடமிருந்து அவர்களை கூறாமல் அறிவிக்கிறார்.🔭
📖 جامع التحصيل للعلائي 542 📖 ميزان الاعتدال 5870📖
🎈இவர்களிடமிருந்து தான் அறிந்தவற்றை ஒரு ஏட்டில் எழுதி வைத்திருந்தார். அதிலிருந்து இமாம் புகாரி போன்ற அறிஞர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள்.
ஆனால் இந்த செய்தி அந்த ஏட்டிலும் இல்லை.🎈
2⃣
📮இதே செய்தியை அபூ முலைஹ் என்பவர் واثلة بن الأسقع என்ற ஸஹாபியின் வழியாக அறிவிப்பதாக நாட்கள் மாற்றங்களுடன் பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.📮
📚مسند أحمد 16984 ، 📖 مختصر قيام الليل للمروزي 1/250 ، 📙 تفسير الطبري 2814 ، 📗 تفسير ابن أبي حاتم 519،1649 ، 📓 المعجم الكبير 185 ، 📒 المعجم الأوسط 3740 ، 📘 جزء من حديث النعالي 66 ، 📕 السنن الكبرى للبيهقي 18649 ، 📑 الأسماء والصفات له 494 ، 📖 شعب الإيمان له 2053 ، 📙 التفسير الوسيط للواحدي 1/280 ، 📗 أسباب النزول له 1/15 ، 📓 الترغيب والترهيب لقوام السنة 1848 ، 📒 تاريخ دمشق 1477 ، 📘 فضائل شهر رمضان لعبد الغني المقدسي 32 📚
📝இதில் இப்ராஹீம் நபிக்கு ஸுஹுபுகள் ரமழான் ஒன்றிலும் தௌராத் ஆறிலும் இன்ஜீல் பதிமூன்றிலும் ஸபூர் பதினெட்டிலும் குர்ஆன் இருபத்தி நான்கிலும் இறக்கப்பட்டதாக வந்துள்ளது.📝
✏இந்த அறிவிப்பில் இரு குறைகள் இருக்கின்றன. ✏
1. இந்த அறிவிப்பாளர் வரிசையில் இம்ரான் இப்னு தாவர் என்பவரை அபூதாவூத், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் "பலவீனமானவர்" என்று கூறியுள்ளனர்.
2. இதில் வரும் கதாதா قتادة என்பவர் مدلس இருட்டடிப்பு செய்பவர் என்று பிரபலமானவர். "இவர் தனது ஆசிரியரிடம் கேட்டதை உறுதிப்படுத்திக் கூடிய வார்த்தைகளை பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்." என்று இமாம் தஹபீ سير أعلام النبلاء 5/271 இல் குறிப்பிடுகிறார்.ஆனால் இந்த அறிவிப்பில் அவ்வாறு சொல்லாமல் عن என்ற பதத்தைப் பாவித்துள்ளார்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.✉
3⃣
📌மேலே கூறப்பட்ட அபூ முலைஹ் என்பவர் ஜாபிர் (ரழி) வழியாக அறிவித்துள்ளதாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.📌
📚 جزء هشام بن عمار 14 ، 📘 مسند أبي يعلى 2190📚
💻இதில் ஹிஷாமுடைய அறிவிப்பில் இன்ஜீல் ரமழான் பதினெட்டில் இறக்கப்பட்டது என்றும் அபூ யஃலாவுடைய அறிவிப்பில் ஸபூர் பதினொன்றில் இறக்கப்பட்டது என்றும் பதிவாகியுள்ளது.💻
📂இந்த அறிவிப்பிலும் இரு குறைகள் காணப்படுகின்றன.📂
1. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் உபைதுல்லாஹ் என்பவர் பலவீனமானவர்.
📖 تهذيب الكمال 4285 📖
2. அதேபோல் سفيان بن وكيع என்பவரும் பலவீனமானவர் ஆவார்.
⛺இதே செய்தி இமாம் இப்னு அஸாகிர் தனது தாரீகு திமிஷ்க் 5/100 இல் பதிந்துள்ளார். அதில் இடம் பெறும் அபூ பக்ர் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார். ⛺ 📖تهذيب الكمال 8002 📖
🔦இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ அவர்கள் இந்த அறிவிப்பு مقلوب மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. என்கிறார். 🔦
📗المطالب العالية لابن حجر 3482📗
🔭அதாவது அபூ முலைஹ் வாஸிலா (ரழி) இடமிருந்து அறிவித்ததை ஜாபிர்(ரழி) இடமிருந்து அறிவித்ததாக கூறப்படுகிறது.🔭
4⃣
🗼இதே விடயத்தை இமாம் الثعلبي தனது தப்ஸீரில் அபூதர் (ரழி) வழியாக பதிந்துள்ளதாக இமாம் ஸைலஈ அவர்கள்
📒 تخريج أحاديث الكشاف 1/113 📘
இல் குறிப்பிட்டுள்ளார்.🗼
💈இந்த அறிவிப்பில் இடம் பெறும் ஷிஹாப் இப்னு தாரிக், தாரிக் இப்னு இயாஸ் என்பவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை.💈
🚨அதேநேரம் இதில் வரும் நஹ்ஷல் என்பவர் மிகவும் பலவீனமானவர். இமாம் அபூதாவூத் தயாலஸீ இமாம் இஸ்ஹாக் ஆகியோர் இவரை "பொய்யர்" என்கிறார்கள். 🚨
📖 تهذيب الكمال 7198 📖
5⃣
இதே செய்தி أبو الجلد என்பவருடைய கூற்றாக
📚 مصنف عبد الرزاق 30191 ، 📗 فضائل القرآن لابن الضريس 127📚
ஆகிய கிதாபுகளில் பதிந்துள்ளனர். இவரிடமிருந்து அறிவிக்கும் இருவரும் யாரென்று கூறப்படவில்லை. ⏳
⏰அத்தோடு இவர் குர்ஆனை ஏழு நாட்களிலும் தௌராத்தை ஆறு நாட்களிலும் வாசித்து முடிப்பார். என்று அவருடைய மகள் மைமூனா சொன்னதாக இமாம் இப்னு ஸஃத 📘طبقات ابن سعد 3115📘 இல் கூறுகிறார்.⏰
✏இந்த விடயம் வேதக்காரர்களிடமிருந்து வந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அவர்களிடமிருந்து அறிவிப்பதாக பிரபலமான வஹப் இப்னு முனப்பஹ் என்ற அறிஞர் இக் கூற்றை கூறியுள்ளதாக இமாம் இப்னுல் ஜௌஸி المنتظم 1/144இல் குறிப்பிடுவதை குறிப்பிடலாம்.
இவர் அந்த வேதங்களில் உள்ளவற்றை குர்ஆனுடன் இணைத்துக் கூறியிருக்க வாய்ப்புண்டு.✏
🚥🚥🚥
எனவே இதை நபியவர்கள் சொன்னதாக பலவீனமான அறிவிப்புகளில் தான் வந்துள்ளது.🎈
⏳வேதக்காரர்கள் அவர்களது வேதங்களிலிருந்து சொல்பவற்றை நாம் முழுமையாக நம்பவோ மறுக்கவோ முடியாது.⏳
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
18/06/2016
தொடர் 🌎 35
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 04
🔦🔭🔭🔭🔦
✏🔬பலவீனமானது🔬✏
🎀முன்வந்த எந்த சமூகங்களுக்கும் கொடுக்கப்படாத ஐந்து விடயங்கள் எனது உம்மத்தினருக்கு ரமழான் மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
1.
நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட அதிக நறுமணமுள்ளதாக இருக்கும்.
2.
நோன்பு திறக்கும் வரை மலக்குகள் அவர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
3.
ஒவ்வொரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படும். "எனது நல்லடியார்கள் உலகத் துன்பங்களை விட்டு உன்னிடம் வரவிருக்கிறார்கள்." என்று அல்லாஹ் கூறுவான்.
4.
அட்டூழியம் செய்யும் ஷைத்தான்கள் அம்மாதத்தில் விலங்கிடப்படும். ஏனைய மாதங்களில் அவர்களை நெருங்கியவற்றைக் கொண்டு அம்மாதத்தில் நெருங்க மாட்டார்கள்.
5.
கடைசி இரவில் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
"அது லைலதுல் கத்ர் இரவா?" என்று ஒருவர் கேட்டதற்கு, " இல்லை. வேலைக்காரருக்கு கூலி கொடுக்கப்படுவது அவர் வேலையை முடித்த பிறகு தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🎀
🚥🚥🚥🚥🚥
இந்த செய்தி அபூஹுரைரா (ரழி) வழியாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
📚 مسند أحمد 7917 ، 📗 فضائل رمضان لابن أبي الدنيا 18 ، 📘 مسند الحارث 318 ، 📙 مسند البزار 8571 ، 📔 مختصر قيام الليل للمروزي 1/258 ، 📒 شرح مشكل الآثار 3013 ، 📑 المجالسة وجواهر العلم للدينوري 2991 ، 📓 تنبيه الغافلين للسمرقندي 453 ، 📕 فضائل رمضان لابن شاهين 27 ، 📗 المخلصيات 819 ، 📕 شعب الإيمان 3330 ، 📓 فضائل الأوقات للبيهقي 35 ، 📑 أمالي الباطرقاني 8 ، 📒 أمالي الشجري 1499 ، 📔 الترغيب والترهيب لقوام السنة 1757 ، 📙 فضل شهر رمضان لابن عساكر 7 ، 📘 فضائل شهر رمضان لعبد الغني المقدسي 18 ، 📗 أحاديث شهر رمضان لأبي اليمن بن عساكر 9 ، 📚 مسند أحمد بن منيع 📓 الثواب لأبي الشيخ ، 📓 حديث محمد المديني لأبي نعيم📚
✏✏இதன் அறிவிப்பாளர் வரிசையில் இரண்டு பலவீனமானவர்கள் உள்ளனர்.
1.
முஹம்மத் இப்னுல் அஸ்வத்.
இவருடைய நம்பகத்தன்மை பற்றி இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர யாரும் பேசவில்லை. இமாம் இப்னு ஹஜர் இவரை مستور என்கிறார்.
📚تقريب التهذيب 6269، 📕تهذيب الكمال 6269📚
2.
ஹிஷாம் இப்னு ஸியாத்.
இவரை பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.
📚 تهذيب الكمال 7292، إكمال تهذيب الكمال 4945 📚
✏✏
🗼🗼🗼🗼🗼
⏳இதே செய்தி ஜாபிர் (ரழி) வழியாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.⏳
📚 فضائل رمضان لابن شاهين 19 ، 📕 الأربعون للنسوي 34 ، 📗 شعب الإيمان 3331 ، 📘 فضائل الأوقات للبيهقي 36 ، 📙 التفسير الوسيط للواحدي80 ، 📒 الترغيب والترهيب لقوام السنة 1820 ، 📔 فضل شهر رمضان لابن عساكر 8 📚
🔬 இந்த அறிவிப்பில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதை கூறுவதற்கு பதிலாக "ரமழான் முதல் இரவில் அவர்களைப் பார்க்கிறான். யாரை அல்லாஹ் பார்த்து விட்டானோ அவனை ஒருபோதும் வேதனை செய்ய மாட்டான்." என்று இடம்பெற்றுள்ளது.🔬
🔮இதன் அறிவிப்பாளர் வரிசையிலும் இரண்டு பலவீனமானவர்கள் உள்ளனர்.🔮
1.
ஹைஸம் இப்னுல் ஹவாரீ.
இவர் பற்றிய தகவல்கள் எதுவுமே இல்லை என இமாம் அல்பானி கூறுகிறார்கள்.
📖 الضعيفة 5081 📖
2.
ஸைத் அல்அம்மீ.
இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
📚تهذيب الكمال 2131، 📙 تقريب التعذيب 2131 📚
🔦எனவே இது பலவீனமானதாகும். என்றாலும் இதில் கூறப்பட்ட சிலது வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் இருப்பதால் இதை விட்டு ஸஹீஹானதை மாத்திரம் பிற்பற்றுவோம். 🔦
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
22/06/2016
தொடர் 🌎 36
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 05
🔦🔭🔭🔭🔦
✏🔬பலவீனமானது🔬✏
🍇ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசல் இருக்கும். (عبادة) வணக்கங்களுக்குரிய வாசல் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🍇
🚥🚥🚥🚥🚥
🍎இந்த செய்தியை அபூதர்தா (ரழி)வழியாக இமாம் அபூயஃலா பதிவு செய்துள்ளதாக இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ கூறுகிறார்.🍎
📕 المطالب العالية 105📕
🌺 இதை இமாம் அபுஷ் ஷைக் தனது الثواب என்ற கிதாபிலும் பதிந்துள்ளதாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.🌺
📚المغني عن حمل الأسفار للعراقي 1/273 ، 📙 الجامع الصغير وزيادته 10191 للسيوطي ، 📒 الفتح الكبير 9831 له ، 📗 كنز العمال للمتقي الهندي 23581 📚
🌹இவ்வறிவிப்பில் வரும் அபூபக்ர் இப்னு அபீ மர்யம் என்பவர் பலவீனமானவர் ஆவார்.🌹
📚تهذيب الكمال 7974 ، 📕 تقريب التهذيب 7974 ، 📓 الكاشف 6526 📚
🌴🌴🌴🌴🌴
🍅 இதே செய்தியை ضمرة بن حبيب என்ற தாபிஈ நபியவர்களிடமிருந்து அறிவிப்பதாக இந்த அபூபக்ர் இப்னு அபீமர்யம் கூறிய செய்தி பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.🍅
📚الزهد والرقائق لابن المبارك 1423 ، 📔 الزهد لهناد 2/358 ، 📘 مسند الشهاب للقضاعي 1032 📚
🍄இந்த செய்தி ஒரு தாபிஈ நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கக் கூடிய முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும்.🍄
🍏இதனாலும் இதை அறிவப்பவரான அபூபக்ர் பலவீனமானவர் என்பதாலும் இந்த செய்தி பலவீனமானதாகும்.🍏
🌱🌱🌱🌱🌱🌱🌱
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
22/06/2016
[23/06 6:25 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 37
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 06
🔦🔭🔭🔭🔦
✏🔬இட்டுக்கட்டப்பட்டது🔬✏
🍎நபி (ஸல்) அவர்கள் ரமழான் நம்மை வந்தடைந்த போது கூறினார்கள் :
பரகத் பொருந்திய ரமழான் மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் அல்லாஹ் உங்கள் பக்கம் கவனம் செலுத்தி ரஹ்மத்தை இறக்குகிறான். பாவங்களை மன்னிக்கிறான். துஆக்களை ஏற்றுக் கொள்கிறான். (அமல்களில்) நீங்கள் போட்டி போடுவதைப் பார்த்து மலக்குகளிடம் பெருமையாகப் பேசுகிறான். அல்லாஹ்வுக்கு உங்கள் நன்மைகளைக் காட்டுங்கள். அதில் அவனது அருளைப் பெறாதவன் துர்ப்பாக்கியசாலி தான். 🍎
🍇இந்த செய்தியை அபூதர்தா (ரழி) வழியாக இமாம் தபரானீ தனது مسند الشاميين 2238 இல் பதிந்துள்ளார்.🍇
🍓இமாம் இப்னுன் நஜ்ஜாரும் இதை பதிந்துள்ளதாக பின்வரும் கிதாபுகளில் கூறுகிறார்கள்.🍓
📚مجمع الزوائد 4783 ، 📘جامع الأحاديث 255 ، 📗كنز العمال 23692📚
🚥🚥🚥🚥🚥
🍏இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் முஹம்மத் இப்னு அபீகைஸ் என்பவர் நான்காயிரம் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவராவார். அவரை அபூஜஃபர் அல் மன்ஸூர் எனும் கலீபா கொலை செய்து சிலுவையில் அறைந்தார். இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் இவரென்று தெரியாமல் இருப்பதற்காக நூறு விதங்களில் இவரது பெயரை மாற்றி அறிவிக்கிறார்கள். 🍏
📘تقريب التهذيب 5907📘
🌹பிரபலமான ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர்கள் நால்வர் இருக்கின்றனர்.🌹
1. மதீனாவில் இப்ராஹீம் இப்னு அபீஷைபா யஹ்யா
2. பக்தாதில் வாகிதீ
3. குராஸானில் முகாதில் இப்னு ஸுலைமான்
4. ஷாமில் முஹம்மத் இப்னு ஸஈத்
என்று இமாம் நஸாயீ கூறுகிறார்.⏳
🍄ஒரு கருத்து நல்லதாக இருந்தால் அதற்கு ஒரு அறிவிப்பாளர் வரிசையை உண்டாக்க நான் தயங்க மாட்டேன். என்றும் அவர் கூறியுள்ளார்.🍄
📓 تهذيب الكمال 5907 📓
🌺இவரிடமிருந்து அறிவிக்கும் மர்வான் இப்னு முஆவியா நம்பகமானவராக இருந்தாலும் இவ்வாறு இருட்டடிப்பு செய்யக்கூடியவராவார். 🌺
📔تقريب التهذيب 6575📔
🌴எனவே இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியாகும்🌴
🍀ரமழான் மாதத்தில் அமல் செய்வதற்கு ஆர்வமூட்டப்பட்ட வேறு ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம்.🍀
🌴🌴🌴🌴🌴🌴🌴
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
23/06/2016
[25/06 6:05 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 38
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 07
🔦🔭🔭🔭🔦
✏🔬ஸஹீஹானது🔬✏
🍇ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரகத் இருக்கிறது. என்று நபி (ஸல்) கூறினார்கள். 🍇
🍅இதை அனஸ் இப்னு மாலிக் (ரழி) வழியாக 🔮
📚صحيح البخاري 1933 ، 📔صحيح مسلم 1059📚
போன்ற பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.🍅
🌹இதே விடயத்தை
🌴அபூ ஹுரைரா,
🌴இப்னு மஸ்ஊத்,
🌴ஜாபிர்,
🌴இப்னு அப்பாஸ்,
🌴அம்ருப்னுல் ஆஸ்,
🌴இர்பாழ் இப்னு ஸாரியா,
🌴உத்பா இப்னு அப்து,
🌴அபூதர்தா
(ரழியல்லாஹு அன்ஹும்)
ஆகிய ஸஹாபாக்களும் அறிவித்துள்ளார்கள் என்று இமாம் திர்மிதீ கூறுகிறார்கள்.🌹
📗سنن الترمذي 708📗
🌺🌺🌺🌺🌺🌺🌺
🍏 எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் அந்த பரகத்தை பெற்றவர்களாக ஆக்குவானாக.🍏
🌷🌷🌷🌷🌷
ஷுஐப் உமரி பேருவளை
25/06/2016
[14/07 1:02 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 39
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 08
🌳ஸஹர் பற்றிய சில ஹதீஸ்கள்.
🌹🌹🌹🌹🌹🌹
இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனம் இருந்தாலும், சில அறிவிப்பாளர்கள் விடப்படக்கூடிய அளவுக்கு பலவீனமாக இல்லாததாலும், அவற்றின் சில கருத்துக்கள் வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதாலும் இமாம் அல்பானி, ஷுஐப் அல் அர்ணவூத் போன்றோர் சரி காண்கிறார்கள். அல்லாஹு அஃலம்.
1.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது. ஸஹர் செய்யுங்கள். அது சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, ஸுன்னத்தானதுமாகும். ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது ஸஹர் செய்யுங்கள். ஸஹர் செய்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிவானாக.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஸஈத் அல் இஸ்கந்தரீ என்ற ஸஹாபியின் வழியாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
📚 مسند ابن الجعد 3391 ، فضائل رمضان لابن أبي الدنيا 62 ، مسند الحارث 323 ، المجالس العشرة الأمالي للحسن الخلال 43 ، الخامس والتاسع من المشيخة البغدادية لأبي طاهر السلفي 50،221 📚
இவ்வறிவிப்பில் இடம்பெற்றுள்ள بحر بن كنيز என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்கிறார்கள். இமாம் தாரகுத்னீ மத்ரூக் என்கிறார்.
تهذيب الكمال ،تقريب التهذيب 637 ، الكاشف 537 ، الضعفاء والمتروكون للدارقطني 128
இதே விடயம் அலீ (ரழி) வழியாக
حديث أبي القاسم عافية وغيره 137
என்ற கிதாபில் "அளக்கப்பட்ட உணவிலும்" என்று மேலதிகமாக பதிவாகியுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் பலவீனமானவர் .
تهذيب الكمال ، تقريب التهذيب 1029 ، الكاشف 859
அத்தோடு அபூ மஃமர் , ஹாரிஸ் இப்னுல் ஹஜ்ஜாஜ் , உமர் இப்னு புஸைஃ ஆகியோர் யாரென்று அறியப்படாதவர்களாவர்.
لسان الميزان 650 ، 817
2.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது.
இதை ஸல்மான் (ரழி) வழியாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.
المعجم الكبير 6127 ، المشيخة للأنباري ، شعب الإيمان 7114
இதில் இடம் பெறும் அபூ அப்தில்லா அல் பஸரி என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இமாம் தஹபீ கூறுவதாக இமாம் ஹைஸமீ கூறுகிறார்.
مجمع الزوائد 4850
இமாம் முனாவியும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
فيض القدير 3202 ، التيسير 1/439
3.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது.
என்று
موضح أوهام الجمع والتفريق للخطيب 83
இலும்,
ஸஹர் உணவிலும் அளக்கப்பட்ட உணவிலும் அல்லாஹ் பரகத் செய்துள்ளான்.
என்று
موضح أوهام الجمع والتفريق للخطيب 83 ،
فضائل شهر رمضان للمقدسي 46
இலும்
ஸஹர் உணவிலும் ஸரீதிலும் அளக்கப்பட்ட உணவிலும் பரகத் செய்யுமாறு நபியவர்கள் துஆ செய்தார்கள் என்று
الأوسط 6866 ، الصغير 972 ،
இலும் அபூஹுரைரா வழியாக பதியப்பட்டுள்ளது
இதில் இடம் பெறும் أسد بن عيسى رفعين என்பவர் ஷாம் தேச வணக்கவாளியாக இருந்தார்.
இமாம் இப்னு ஹிப்பான் தனது الصفات 12618 இல் يغرب என்கிறார்.
لسان الميزان 1204
இவரைப் பற்றிய வேறு தகவல்கள் இல்லை.
இவரிடமிருந்து அறிவிக்கும்
مزداد أو يزداد بن جميل
என்பவர் வணக்கவாளியாக இருந்தார். என்று இமாம் தஹபீ تاريخ الإسلام 542 இல் குறிப்பிடுகின்றார். அவரைப்பற்றிய வேறு தகவல்கள் இல்லை.
அதன் அறிவிப்பாளர் வரிசையில் வரும் சிலர் பற்றி யாரும் கூறியதாக தெரியவில்லை.
مجمع الزوائد 7879
4.
ஸஹர், ஸரீத் ஆகிய உணவுகளில் பரகத் செய்யுமாறு நபியவர்கள் துஆ செய்தார்கள்.
என்று அபூஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து عطاء என்பவர் அறிவிப்பதாக
الترغيب والترهيب لقوام السنة 1795 ، المقصد العلي للهيثمي 1500
ஆகிய கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
இதை عطاء இடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் இப்னு அபீலைலா என்பவர் பலவீனமானவர். அதாவிடமிருந்து அறிவிக்கும் போது அதிகம் தவறு விடுபவர் என்று இமாம் அஹ்மத் கூறுகிறார்.
மிகவும் மனனக் கோளாறு உள்ளவர் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.
تهذيب الكمال ، تقريب التهذيب 6081 ،
مجمع الزوائد 7877
5.
ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும், கூட்டாக இருப்பதிலும் பரகத் இருக்கிறது.
இதை அபூஹுரைரா ரழி வழியாக இமாம் அபூயஃலா பதிந்துள்ளார்.
المقصد العلي 1501
இதில் இடம் பெறும் அபூ யாஸிர் என்பவர் பலவீனமானவர். பிறரின் ஹதீஸ்களை திருடி அறிவிப்பவராக இருந்தார்.
تهذيب الكمال، تقريب التهذيب 4835 ، مجمع الزوائد 7878
மூஸா இப்னு ஹாரூன் என்ற அறிஞர் இவரை மத்ரூக் என்கிறார்.
ميزان الاعتدال 6009
6.
கூட்டாக இருப்பதிலும், ஸஹர் உணவிலும், ஸரீத் என்ற உணவிலும் பரகத் இருக்கிறது.
இதை அனஸ் (ரழி) அவர்கள் வழியாக المشيخة الصغيرة لابن شاذان 63 இல் பதிவாகியுள்ளது.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் ஹஸன் அல்அதவீ என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவராவார்.
الكامل لابن عدي 474
7.
ஸஹர் உணவில் பரகத் இருக்கிறது. அதை விட்டு விடாதீர்கள். ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது (ஸஹர் செய்யுங்கள்). ஏனெனில் அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஸஈத் அல் குத்ரீ (ரழி) வழியாக இமாம் அஹ்மத் இரு அறிவிப்பாளர் வரிசையூடாக பதிந்துள்ளார்.
அவற்றில் 11086 இலக்க அறிவிப்பில் உள்ள அபூ ரிபாஆ என்பவரைப் பற்றி எந்த அறிஞரும் எதுவும் கூறவில்லை. என்று இமாம் ஹைஸமீ கூறுகிறார்.
مجمع الزوائد 4840
11396 இலக்க அறிவிப்பில் அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் என்ற மிக பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.
இது தவிர அபூஸஈத் அல் குத்ரீ (ரழி) வழியாக உள்ள 11281 இலக்க அறிவிப்பில் மிகவும் மனனக் கோளாறு உள்ள இப்னு அபீலைலா முதல்லிஸ் என்று இனங்காணப்பட்ட அதிய்யா அல் அவ்பீ ஆகிய பலவீனமானவர்கள் இடம் பெறுவதோடு,
"ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் அதில் பரகத் இருக்கிறது" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதே ஸஹாபி வழியாக நஸ்ர் இப்னு தரீப் என்பவரின் அறிவிப்பு
التاسع من المشيخة البغدادية 218
இல் பதிவாகியுள்ளது.
இந்த நஸ்ர் என்பவர் மிக பலவீனமானவர். இட்டுக்கட்டியவர் என்று பிரபலமானவர்.
ميزان الاعتدال 9034
இந்த அறிவிப்பில் " ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது ஸஹர் செய்யுங்கள்" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.
8.
யாஅல்லாஹ்! ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிவாயாக.
என நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்.
இதை அபூஸுவைத் என்ற ஸஹாபி வழியாக
الآحاد والمثاني 2758 ، كشف الأستار للهيثمي 974 ، الكنى للدولابي 217 ، المعجم الكبير للطبراني 845 ، معرفة الصحابة لأبي نعيم 6843
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.
இந்த அறிவிப்பில் வரும் ஹாதம் இப்னு அபீ நஸ்ர் என்பவர் யாரென்று அறியப்படாதராவார்.
بيان الوهم والإيهام لابن القطان 3/413 ، البدر المنير 9/301 ، اتحاف الخيرة للبوصيري 1878 ، المغني للذهبي 1217 ، التقريب لابن حجر 1000
இவரிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம் இப்னு ஸஃத் என்பவரும் பலவீனமானவர் ஆவார்.
التقريب لابن حجر 7294 ، الكاشف 5964
9.
ஸஹர் உணவு ஒரு முஃமினின் சிறந்த உணவாகும். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு உமர் (ரழி) வழியாக
فضائل شهر رمضان لابن أبي الدنيا 61 ، أمالي الجوهري 3 /25
இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
تقريب التهذيب 3865 ، الكاشف 3196
அத்தோடு அப்துல்லாஹ் இப்னு ஷபீப் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
لسان الميزان 4273
10.
நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு உமர் (ரழி) வழியாக
مسند الروياني 1432 ، مجموع فيه مصنفات أبي العباس الأصم 416 ، صحيح ابن حبان 3467 ، الأوسط للطبراني 6434 ، الحليةلأبي نعيم 8/320 ، الترغيب لقوام السنة 1793
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் அத்தவீல் என்பவரை இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறெவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. என்று இமாம் அல்பானி கூறுகிறார்.
الضعيفة 6427, 2591
இமாம் இப்னு ஹஜர் صدوق يخطئ என்கிறார்.
التقريب 3370
11.
ஈத்தம் பழம் சிறந்த ஸஹர் உணவாகும். ஸஹர் செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான்
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை ஸாஇப் இப்னு யஸீத் (ரழி) வழியாக
المعجم الكبير للطبراني 6689
இல் பதிவாகியுள்ளது.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் யஸீத் இப்னு அப்துல் மலிக் என்பவர் பலவீனமானவர்.
تقريب التهذيب 7751 ، الكاشف 6338
அத்தோடு இவரிடமிருந்து அறிவிக்கும் காலித் இப்னு யஸீத் என்பவர் மிக பலவீனமானவர், இட்டுக்கட்டப்பட்டவைகளை அறிவிப்பவர்.
تاريخ الإسلام 123
12.
ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக
ஸஹர் செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான்
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை ஸைத் இப்னு அர்கம் (ரழி) வழியாக
التاسع من المشيخة البغدادية لأبي طاهر 219
இல் பதிவாகியுள்ளது.
இந்த ஸஹாபியிடமிருந்து அறிவிக்கும் அவரது மகன் பற்றிய தகவல்கள் இல்லை.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் காரிஜா என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
التقريب 1612 ، الكاشف 1303
13.
நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை அலீ (ரழி) வழியாக
أمالي الشجري1503
இல் பதிவாகியுள்ளது.
இந்த அறிவிப்பில் முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னுல் அஷ்அஸ் என்பவர் ஷீயாக் கொள்கை சார்ந்தவராகவும், மூஸா இப்னு இஸ்மாயீல் என்பவரூடாக அஹ்லுல் பைத் வழியாக தாம் அறிவிக்கும் கிட்டத்தட்ட ஆயிரம் ஹதீஸ்கள் கொண்ட ஒரு பிரதியை வைத்திருந்தார்.
அவற்றில் தொடர்பு துண்டிக்கப்பட்டவைகளும் முன்கரானவைகளும் இருக்கின்றன.
இந்த மூஸா என்பவரின் நாற்பது வருட அண்டை வீட்டாரான அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த ஹுஸைனிடம் அந்த ஹதீஸ்களை நாம் கூறிய போது அவ்வாறான அறிவிப்புகள் தம்மிடம் இருப்பதாக கூறவில்லை என்றார்.
الكامل لابن عدي 1791
14.
ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது (ஸஹர் செய்யுங்கள்).
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாக
صحيح ابن حبان 3476
இல் பதிவாகியுள்ளது.
இந்த அறிவிப்பாளர் வரிசையில் இம்ரான் இப்னு தாவர் என்பவரை அபூதாவூத், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் "பலவீனமானவர்" என்று கூறியுள்ளனர்.
இதில் வரும் கதாதா قتادة என்பவர் مدلس இருட்டடிப்பு செய்பவர் என்று பிரபலமானவர். "இவர் தனது ஆசிரியரிடம் கேட்டதை உறுதிப்படுத்திக் கூடிய வார்த்தைகளை பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்." என்று இமாம் தஹபீ سير أعلام النبلاء 5/271 இல் குறிப்பிடுகிறார்.ஆனால் இந்த அறிவிப்பில் அவ்வாறு சொல்லாமல் عن என்ற பதத்தைப் பாவித்துள்ளார்.
முஹம்மத் இப்னு பிலால் என்பவர் இம்ரானிடமிருந்து வேறெவரும் அறிவிக்காதவற்றை அறிவிக்கிறார்.
الكامل 1636
15.
இதே செய்தியை அனஸ் (ரழி) வழியாக இமாம் அபூயஃலா 3340 இல் பதிந்துள்ளார்.
அந்த அறிவிப்பில் வரும் அப்துல் வாஹித் என்பவர் முன்கருல் ஹதீஸ் என்று இமாம் புகாரி கூறுகிறார்.
ميزان الاعتدال 5282
எல்லாம் வல்ல இறைவன் நம்மனைவரையும்அவனது அருள் பெற்ற கூட்டத்தில் சேர்ப்பானாக.
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
14/07/2016
[20/07 5:43 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 40
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 09
🔭 பலவீனமானது 🔭
🔬🔦🔦🔦🔬
🌹இரவில் நின்று வணங்குவதற்கு பகலில் (கைலூலா) தூங்குவதைக் கொண்டும், பகலில் நோன்பு நோற்க ஸஹர் சாப்பிடுவதைக் கொண்டும் உதவி பெற்றுக் கொள்ளுங்கள்.🌵
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌹
🚥🚥🚥🚥🚥
1.
🚋இந்த செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) வழியாக நான்கு அறிவிப்பாளர் வரிசை ஊடாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.🚄
📔حديث خالد بن مرداس السراج 18
📗الفوائد المعللة لأبي زرعة الدمشقي 80
📙فضائل رمضان لابن أبي الدنيا 63
📔مختصر قيام الليل للمروزي 1/104
📒المعجم الكبير للطبراني 11625
📓حديث أبي القاسم لابن المهندس 122
📕التاسع من المشيخة البغدادية للسلفي 222
📑سنن ابن ماجه 1683
📗الكامل لابن عدي 4/368
📘المستدرك على الصحيحين للحاكم 1551
📙الأحاديث المختارة للضياء 424
📔صحيح ابن خزيمة 1939
📒الترغيب والترهيب لقوام السنة 1796
📑المخلصيات لأبي طاهر المخلص 516
📓ذيل تاريخ بغداد لابن النجار 33
📕تاريخ أصبهان 2/107
📙شعب الإيمان للبيهقي 4413
🔦இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் زمعة بن صالح என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்.🔦
📚تهذيب الكمال ، تقريب التهذيب 2035📚
🔦இவர் அறிவித்தவை வேறு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டதால் இமாம் முஸ்லிம் அவற்றை துணை ஆதாரமாக பதிந்துள்ளார்.🔦
📖من تكلم فيه وهو موثق للذهبي 116📖
🔦இவரது ஆசிரியரான سلمة بن وهرام என்பவரை அபூஸுர்ஆ, இப்னு மயீன் ஆகிய இமாம்கள் அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும், அவரிடமிருந்து زمعة அறிவிப்பவை கணக்கெடுக்கப்பட மாட்டாது என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.🔦
📙تهذيب الكمال 2515
📒الثقات لابن حبان 8284
📕الكامل لابن عدي 789
🔮இவரை இமாம் அபூதாவூத்,நஸாயீ ஆகியோர் பலவீனமானவர் என்கிறார்கள்.🔮
📗تهذيب الكمال 2474
📘تاريخ الإسلام 135
2.
🎓இதே செய்தி நபியவர்கள் சொன்னதாக தான் கேள்விப்பட்டதாக தாவூஸ் என்ற தாபியீ அறிவித்துள்ளார்.🎓
💎இது பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.💎
📕مصنف عبد الرزاق 7603
📙شعب الإيمان للبيهقي 4412
📘الآداب للبيهقي 676
🌹இது முர்ஸல் எனப்படும் பலவீனமான செய்தியாகும்.🌹
🔮அத்தோடு இவரிடமிருந்து அறிவிக்கும் إسماعيل بن شروس என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் ஆவார்.🔮
📕ميزان الاعتدال 895
📗الكامل لابن عدي 144
3.
💎இதை அபூஹுரைரா வழியாக இமாம் இப்னு அபீ ஹாதம் தனது علل الحديث 701 இல் பதிந்துள்ளார்.💎
🎊இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும்.🎊
مروان الفزاري ، علي بن عبد العزيز
ஆகியோர் مدلس இருட்டடிப்பு செய்பவர்களாவர்.🚪
📱இமாம் இப்னு ஹஜர் مدلس களின் பட்டியலில் மூன்றாவது படித்தரத்தில் இவர்களை சேர்த்துள்ளார். இவ்வாறானவர்கள் தாம் கேட்டதை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்.📱
✏ஆனால் இவர்கள் தாம் கேட்டதை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகிக்கவில்லை.✏
💻அத்தோடு يزيد بن أبي يزيد الجزري என்பவர் யாரென்று அறியப்படவில்லை.
இந்த அறிவிப்பு பற்றி தனது தந்தை இமாம் அபூஹாதமிடம் கேட்டதாகவும், அதற்கவர் "யாரென்று அறியப்படாதவர்கள் இருக்கின்றனர்" என்றார். என இமாம் இப்னு அபீஹாதம் கூறுகிறார்.💻
📘علل الحديث 701📘
💿இந்த அறிவிப்புகளை இமாம் அல்பானி அவர்களும் பலவீனமானவை என்று கூறுகிறார்.💿
📗الضعيفة 2758📗
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
20/07/2016
[27/07 7:43 am] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 41
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 10
🔭 இட்டுக்கட்டப்பட்டது🔭
🔬🔦🔦🔦🔬
🚥பின்வரும் சம்பவம் நேரடியாக ஸுன்னாவுக்கு முரணாக இருக்கிறது. என்றாலும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை தீர்மானிக்கப்படுவது அதன் அறிவிப்பாளர் வரிசையை அடிப்படையாகக் கொண்டு தான் என்ற நல்லறிஞர்களின் வழிமுறையின் படி இதை பதிவு செய்கிறேன். எடுத்த எடுப்பில் கூறப்படும் விடயத்தை ஏதாவதொன்றுக்கு முரண் என்று மறுப்பது வழிகெட்ட சிந்தனையாகும்.🚥
✏✏✏✏✏✏✏
🌠ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் துஸ்துரீ (ரஹ்) அவர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் சாப்பிடும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். ஆனால் ஸுன்னத்தைப் பின்பற்றுவதற்காக ரமழான் மாதத்தில் மட்டும் ஒரு பிடி உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். நோன்பு திறக்க தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்வார்கள்.🌠
🔼🔼🔼🔼🔼🔼
இந்த சம்பவம் ஸஹர் சாப்பிடுவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக கூறப்படுகிறது. தமது வாழ்நாளை நோன்பு நோற்பதிலேயே கழித்த பெரியார்கள் கூட ஸஹரை விடவில்லை எனும் தொனியில் கூறுவார்கள்.
🔮இச்செய்தியை 632 இல் மரணித்த ஸுஹ்ரவர்தீ என்ற பிரபல ஸூபி அறிஞர் தனது عوارف المعارف 144 இல் இவ்வாறு கூறப்படுகிறது என்று பதிந்துள்ளார். உறுதியாக கூறவில்லை.
💾இதனை 386 இல் மரணித்த அபூதாலிப் அல்மக்கீ தனது قوت القلوب இல் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடும் 1205 இல் மரணித்த مرتضى الزبيدي என்பவர் தனது اتحاف السادة المتقين என்ற إحياء علوم الدين உடைய விரிவுரை நூலில் "ரமழான் மாதம் வந்து விட்டால் (ஷவ்வால்) பிறை பார்க்கும் வரை சாப்பிடவே மாட்டார்" என்று கூறுகிறார்.
🚪ஆனால் இவ்வாறு قوت القلوب இல் காண முடியவில்லை.
🚨ஒரு நேரம் சிறிது உணவு உட்கொண்டு விட்டு குறிப்பிட்ட சில நாட்களை தன்னை வருத்தி பசியோடு கழித்து பயிற்சி பெறும் வழமை ஸூபிய்யாக்களிடம் உள்ளது. அதனை தைய்
طي (من طوى يطوي)
என்று அழைப்பர்.
🔰சூபித்துவத்தின் ஆணிவேரே தன்னை வருத்துவது தான் என்பதை அவர்களே கூறியுள்ளார்கள்.
🔎பசி, உலகப் பற்றின்மை விருப்பமானவற்றையும் விட்டு விடுவது ஆகியவை மூலமே தஸவ்வுபை நாம் பெற்றுக் கொண்டோம்
📗الرسالة القشيرية 1/117📗
🍒இதுபோன்ற அவர்களின் கூற்றுக்களை ஹி 1407 இல் மரணித்த إحسان إلهي ظهير என்ற பாகிஸ்தானிய அறிஞர் எழுதிய التصوف - المنشأ والمصادر ، دراسات في التصوف ஆகிய கிதாபுகளில் காணலாம்.
🛀இப்பயிற்சியில் ஈடுபட்டு பதினைந்து தொடக்கம் இருபது மற்றும் ஒரு மாத காலத்தைக் கழித்தவர்கள் பட்டியலில் இவரை قوت القلوب இன் ஆசிரியர் 2/279 இல் கூறியுள்ளார்.
🚩2/280 இல் 23 நாட்கள் கழித்தவர் பட்டியலிலும் கூறுகிறார்.
💡இதை 505 இல் மரணித்த إحياء علوم الدين இன் ஆசிரியரும் 3/83இல் கூறியுள்ளார்.
💥இச்சம்பவத்தின் அடிப்படையை அறிவிப்பாளர் ரீதியாக ஆராய்ந்த போது உஸூலுல் பிக்ஹில் இமாம் ஷாபிஈ உடைய அர்ரிஸாலா என்ற கிதாபின் தரத்தை தஸவ்வுபில் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட الرسالة القشيرية 1/59 இல் அறிவிப்பாளர் வரிசையுடன் பதியப்பட்டுள்ளது.
இதன் ஆசிரியர் 465 இல் மரணித்தவராவார்.💥
🔓அதில் ஸஹ்ல் என்பவர் தனது இளமைக்காலம் பற்றியும் தனது
மாமனார் محمد بن سوار என்பவர் மூலம் தான் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறும் இவர் தான் எடுத்த பயிற்சியை இவ்வாறு கூறுகிறார்.
🔎ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் ஸஹர் நேரத்தில் மாத்திரம் உப்பு, கறி எதுவும் இல்லாமல் ஒரு ரொட்டி சாப்பிடுவேன். பின்பு ஒரு வேளை உணவுடன் மூன்று நாட்கள் வரை இருந்தேன். பின்னர் 5, 7, என்று 25 நாட்கள் வரை நீடித்தேன். இவ்வாறு இருபது வருடங்களாக இருந்தேன். என்கிறார்.🔓
🔇இந்த செய்தியை அறிவிக்கும் உமர் இப்னு வாஸில் என்பவரும்
அவரிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ் இப்னு லுஃலுஃ என்பவரும்
இட்டுக்கட்டுவார்கள் என்று சந்தேகிக்கப் படக்கூடிவர்களாவர்.
📘لسان الميزان 959📘
👑நான் நபிமார்களுக்கு முத்திரையானவன். அலீ வலிமார்களுக்கு முத்திரையானவர் என்று நபியவர்கள் சொன்னதாக வரும் செய்தியை இவர்கள் தான் இட்டுக்கட்டியுள்ளார்கள்.
📖تاريخ بغداد 5464📖
🌎ஸஹ்ல் என்பவர் ஹதீஸ்களை அறிவிக்கும் ஒரு ராவியாக இருப்பதால் அவர் பற்றி அறிவிப்பார்கள் பற்றிய கிதாபுகளில் கூறப்பட்டாலும் இந்த செய்தி கூறப்படுவதில்லை. மாறாக ஸூபிகளுடைய கிதாபுகளில் மட்டுமே காணலாம்.
🍜இச்செய்தி பற்றி அவரது நெருங்கிய மாணவர் இப்னு ஸாலிமிடம் "இவ்வாறு கூறப்படுகிறதே!" என்று கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளிக்காமல் " அவர் சாப்பாட்டை விடவில்லை. சாப்பாடு தான் அவரை விட்டது" என்று பதிலளிக்கிறார்
📕اللمع للطوسي 269📕
🍝70 நாட்கள் வரை சாப்பிடாமல் இருப்பார் என்றும் அவர் சாப்பிட்டால் பலவீனமடைவார். பசித்திருந்தால் திடகாத்திரமாக இருப்பார் என்றும் اللمع للطوسي 406 இல் பதிவாகியுள்ளது.
இதை அறிவிக்கும் المقحى ، طلحة العصائدي ஆகியோர் யாரென்று அறியப்படவில்லை.
💯எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும்.💯
💡💡💡💡💡
இந்த ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் என்பவர் ஸூபியாக இருந்தாலும் ஹதீஸ் துறையில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
🌷ஒருவர் எது வரை ஹதீஸை கற்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போது "மரணம் வரைக்கும் கற்று, அவற்றை எழுதி எஞ்சிய மையை அவரது கப்ரில் கொட்டப்பட வேண்டும்." என்றார்.
🍒"யார் இம்மையையும் மறுமையையும் நாடுகிறாரோ அவன் ஹதீஸைக் கற்றுக் கொள்ளட்டும். அதில் ஈருலகத்தின் பலன்கள் இருக்கின்றன." என்றார்.
இவ்வாறு தான் முன்னைய ஸூபி அறிஞர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றுள்ளவர்கள் மடையர்களாகவும் வீணர்களாகவும் சோம்பேறிகளாகவும் சாப்பிடுவதை நோக்கமாகக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
📒تاريخ الإسلام 280📒
🍹இது போக 🍹
🍶இவ்வாறு தன்னை வருத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது இஸ்லாத்தின் போதனை அல்ல.
💈ஹிந்து பௌத்த கிறிஸ்தவ துறவிகளிடமிருந்து வந்தவைகள் ஆகும்.
🏁தேவையானளவு தூக்கம்😴 சாப்பாடு🍞 ஓய்வு 🛀ஆகியவற்றை இஸ்லாம் அனுமதித்துள்ளது.
🌟🌟அல்லாஹ் கடமையாக்காத இவ்வாறான அமல்களை கஷ்டப்பட்டு செய்து நகரத்துக்கு செல்லும் கூட்டத்தை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக. 🌟
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
27/07/2016
[31/07 10:35 am] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 🌙தொடர் 42 🌎 ஹஜ் 01🌙
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔭 இஸ்ராஈலிய்யாத்🔭
🔬🔦🔦🔦🔬
✒ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்திலிருந்து இறக்கிய போது அவர்களுடன் தனது வீட்டையும் இறக்கி,
" ஆதமே! நான் உம்முடன் எனது வீட்டையும் இறக்குகிறேன். என்னுடைய அர்ஷை சுற்றுவது போல் இதை சுற்றி தவாப் செய்யப்பட வேண்டும். மேலும் எனது அர்ஷை நோக்கி தொழப்படுவது போல் இதை நோக்கி தொழப்பட வேண்டும். என அருளினான்.🏁
🌊பின்னர் நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது இவ்வாலயம் உயர்த்தப்பட்டது. அதன் பின் நபிமார்கள் அவ்விடத்தை சுற்றி தவாப் செய்தார்களே தவிர ஆலயம் அங்கிருக்கவில்லை.🌊
🌇இதற்குப் பிறகு தான் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அவ்விடத்தில் இறையில்லம் கட்டும்படி அல்லாஹ் உத்தரவிட்டான். அத்துடன் அது இருந்த இடத்தின் அடையாளத்தையும் தானே அறிவித்துக் கொடுத்தான். அவர் حراء ، ثبير ، لبنان ، الطور ، الجبل الأحمر ஆகிய ஐந்து மலைகளில் மூலம் அதை கட்டினார். 🌃
🚥🚥🚥🚥🚥
🔎இச்செய்தியை அபூகிலாபா என்பவர் கூறியதாக,
📕أخبار مكة للأزرقي 1/63
📓العرش لمحمد بن عثمان بن أبي شيبة 40
📗تفسير الطبري 2/551
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது. 🔎
✒இந்த செய்தியை இந்த அபூ கிலாபா என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாகவும் அறிவித்துள்ளார். 💎
📔تفسير الطبري 2/550
📒المعجم الكبير للطبراني 14157
✒இதே செய்தியை கதாதா என்பவர் கூறியதாக
تفسيرالطبري 2042
مصنف ابن أبي شيبة 9096
இல் பதிவாகியுள்ளது.
🎀இந்தியாவில் இறக்கப்பட்ட ஆதம் நபியின் கால்கள் பூமியிலும் தலை வானத்திலும் இருந்ததாகவும், மலக்குகள் வேண்டுதலின் படி 60 முழமாக அவரது உயரத்தை குறைத்ததாகவும், தான் இது வரை கேட்டுக் கொண்டிருந்த மலக்குகளின் தஸ்பீஹ் சத்தத்தை கேட்க முடியவில்லையே என அல்லாஹ்விடம்முறையிட்ட போது தான் இவ்வாறு ஆதம் நபிக்கு கூறியதாகவும் இவ்வறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.🎀
✒இதே செய்தியை عطاء بن أبي رباح கூறியதாக
📙مصنف عبد الرزاق 9090
📘تفسير الطبري 2041
இல் பதிவாகியுள்ளது. 🍇
✒இந்த عطاء என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாகவும் அறிவித்துள்ளதாக
📕المعجم الكبير 14158
இல் பதிவாகியுள்ளது. 🌇
✨✨✨✨✨
🌹முதன்முதலில் கஃபாவை நிர்மாணித்தது யார்? என்பதில் ஆறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.🌹
1. ஆதம் (அலை) அவர்களுக்கு முன்னரே அல்லாஹ் இறக்கிவிட்டான். பச்சை நிற மரகதத்தினாலான இரண்டு கதவுகளும் சுவனத்து விளக்குகளும் இருந்தது.
📕مثير العزم الساكن لابن الجوزي 303 ،
நபியவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் வழியாக வரும் இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் محمد بن زياد الميموني என்பவரை "பொய்யர், இட்டுக்கட்டியவர்"என்று முஹத்திஸீன்கள் கூறுகிறார்கள்.
📗تقريب التهذيب 5890
✒இதை நபியவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாகவும் வந்துள்ளது.
📔دلائل النبوة للبيهقي 2/45
🍒இது "இப்னு லஹீஆ என்பவர் தனியாக அறிவித்தது" என இமாம் பைஹகி கூறுகிறார். இதை இமாம் இப்னு கஸீர் கூறி விட்டு "அவர் பலவீனமானவர்" என்கிறார்.
📒البداية والنهاية 2/299
2.
மலக்குகள் கட்டினார்கள்.
📙مثير العزم لابن الجوزي 204
3.
ஆதம் (அலை) அவர்களுடன் அல்லாஹ் இறக்கினான். (மேலே கூறப்பட்டதைப் போல)
4.
ஆதம் (அலை) அவர்கள் கட்டினார்கள்.
📚تفسير الطبري 2037 ، 2038 ، 📒دلائل النبوة 2/44
5.
ஷீத் (அலை) கட்டினார்கள்
6.
இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள்.
✨✨✨✨✨
🌇இந்த கருத்துக்கள் பற்றி இமாம் இப்னு கஸீர் பின்வருமாறு கூறுகிறார் :
💍இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்னர் கஃபா கட்டப்பட்டது பற்றி நபியவர்கள் சொன்னதாக எந்த ஸஹீஹான செய்திகளிலும் வரவில்லை.
💍ஆதம் நபியின் காலத்தில் கட்டப்பட்டதாக வரும் செய்திகள் வேதக்காரர்களிடம் இருந்து பெறப்பட்டவையே.
💍முதன்முதலில் கஃபாவை நிர்மாணித்ததும் கட்டியதும் இப்ராஹீம் நபி என்றே அல் குர்ஆன் கூறுகிறது.
அந்த இடம் அதற்கு முன் கண்ணியப்படுத்தப்பட்டது.
💍இவ்வாறான செய்திகளை நாம் நம்பவோ அல்லது மறுக்கவோ முடியாது.
💍நபியவர்கள் சொன்னதாக ஸஹீஹாக வந்தால் ஏற்றுக் கொள்வோம்.
تفسير ابن كثير 1/297 ، 2/78
البداية والنهاية 1/163 ، 2/2989
👑இதுபோன்ற கருத்தை இமாம் தபரியும் கூறியுள்ளார்.
تفسير الطبري 3/64
👑இக்கருத்தையே பல சமகால அறிஞர்களும் சரி காண்கிறார்கள்.
الشيخ محمد صالح المنجد ، موقع الإسلام سؤال وجواب 1903
الشيخ عبد العزيز بن باز
فتاوى اللجنة الدائمة / رقم الفتوى 3056
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
31/07/2016
🌙தொடர் 43 🌎 ஹஜ் 02🌙
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔭 பித்துப் பிடித்தவரின் கதை🔭
🔬🔦🔦🔦🔬
🍈ஒருவர் ஏதாவதொரு விடயத்தில் அளவுக்கு அதிகமாக லயிக்கும் போது அதனாலேயே பித்துப் பிடித்து அலைவதைப் பார்க்கலாம். 🍈
🌌சூபித்துவத்தின் அடிநாதமான
" இறைவனை அடைய தன்னை வருத்திக் கொள்ளல் " என்ற கோட்பாட்டின் படி, இடம் உடை உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளை முற்றிலுமாகத் துறந்து மாற்று மதத் துறவிகளையும் மிஞ்சுமளவிற்கு சில சூபிகள் தம்மைத் தாமே வருத்திக் கொண்டதை வரலாறு நெடுகிலும் காணலாம். 🌌
💖சிலர் சுய தேவைகளையும் துறந்து இறைவனைத் தேடி பாலைவனம் வனாந்திரம் என்று அலைந்து திரிந்து இறுதியில் பைத்தியம் முத்தியவராக மாறிவிட்டனர்.
இப்படியானவர்களை சூபிகள் இஷ்க் என்னும் இறை காதல் வயப்பட்டவர்கள், இறை காதலர்கள் என்றெல்லாம் அழைப்பார்கள். 💖
🍑இன்னும் சிலர் தன்னை ஒரு பாவி என்று மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு
இறைவனை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக அளவுக்கதிகமாக கடுமையாக வழிபாடுகளில் ஈடுபட்டனர். இவர்களும் இறுதியில் பெரும்பாலும் பித்துப் பிடித்து அலைந்தனர். 🍑
🌳இவர்களுக்கு (மஜ்னூன்) அல்லது (மஜ்தூப்) என்ற சிறப்புப் பட்டம் ??? வழங்கப்படுகிறது. அதாவது பைத்தியக்காரர் அல்லது பித்துப் பிடித்தவர்.🌳
🍓இவர்களை இறை முக்தி பெற்றவர்களாகவும் மஃரிபத்தை அடைந்த ஞானிகளாகவும் சூபிகள் கருதுவர்.🍓
🌴கலாநிதி தீன் முஹம்மத் எனும் இலங்கையின் சமகால சூபி அறிஞர் 27ஆகஸ்ட் 2009 ஆம் தேதி வீரகேசரி வெளியீடான‘விடிவெள்ளி’பத்திரிகையில் வெளியான நேர்காணலில்
இவ்வாறு கூறுகிறார் :
சிலவேளை,ஆத்மீகத்தில் மிகவும் லயித்துப் போகின்றதொரு நிலையிலும், சிலர் தமது சுய புத்தியை இழந்து விடுவதுண்டு. இதை அரபியில் ‘மஜ்தூப்’என்பார்கள். இதுகூட, சித்த சுவாதீனமற்றதொரு நிலைதான். (முற்றும்) 🌴
🌺இவர் தனது கலாநிதிப் பட்டதுக்காக ‘இறை காதல்’எனும் தலைப்பிலான ஆய்வை முன்வைத்தவர் ஆவார். 🌺
🎓இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஸஃதூன் மஜ்னூன் என்பவர். இவரை சூபிகள் மிகப் பெரிய அந்தஸ்தில் வைக்கின்றனர். 🎓
🎇இவ்வளவுக்கும் இவர் ஒரு பைத்தியக்காரர். இவர் நல்ல கவிதைகளையும் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். எனவே ஓரளவு தெளிந்த பைத்தியக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.🎇
📗فوات الوفيات لمحمد صلاح الدين 2/48
📘الوافي بالوفيات للصفدي 15/118
📙عقلاء المجانين لابن حبيب النيسابوري
⚠இஸ்லாம் தொடர்ந்து ரமழான் ஒரு மாதம் மட்டுமே நோன்பிருக்க அனுமதித்திருக்கும் போது இவர்
தொடர்ந்து அறுபது வருடங்கள் நோன்பிருந்தார். இதனால் அவருக்கு புத்திக் கோளாறு ஏற்பட்டு விட்டது. மக்கள் அவரை பைத்தியக்காரர் என்று அழைத்தார்கள். ⚠
📔المنتظم في تاريخ الملوك والأمم لابن الجوزي 1037
📒صفة الصفوة له 1/570
📑البداية والنهاية 13/675
📓النجوم الزاهرة في ملوك مصر والقاهرة لابن تغري بردي2/133
இப்படிப்பட்டவரின் சம்பவமே இது. சம்பவத்தின் சுருக்கம்.
🔮துன்னூன் மிஸ்ரி என்பவர் கூறுகிறார்:
🎆நான் ஒரு முறை தவாப் செய்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் பின்வருமாறு துஆ செய்தார்.🌴
🎆என்னுடைய இரட்சகனே அடியேன் உனது மிஸ்கீனான அடியான்.
உன்னுடைய தர்பாரிலிருந்து வெளியேற்றப்பட்டவன் ஆவான்.
உன்னுடைய வாசலிலிருந்து விரண்டு ஓடியவன் ஆவான். 🌴
🎆யா அல்லாஹ் எது உனக்கு மிகவும் சமீபித்திருக்கிறதோ அதை உன்னிடம் கேட்கிறேன்.
எது உனக்கு எல்லாவற்றையும் விட மிகப் பிரியமானதாக இருக்கிறதோ அந்த வணக்கங்களை உன்னிடம் கேட்கிறேன். 🌴
🎆யா அல்லாஹ் உன் அன்பு நேசர்களின் பொருட்டாலும் அன்பியாக்களின் வஸீலாவைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.
உன் அன்பு பானத்தின் ஒரு கோப்பையை எனக்கு அருந்தக் கொடுப்பாயாக.🌴
🎆உன்னுடைய மஃரிபத்தைக் கொண்டு எனது நெஞ்சில் இருந்து அறியாமை எனும் திரைகளை அகற்றி விடுவாயாக.
அதனால் நான் ஆசையெனும் சிறகடித்து உன் வரை பறந்து வந்து விடுவேன். 🌴
🎆மேலும் இர்பானுடைய தோட்டங்களில் உன்னிடம் தனிமையில் ரகசியம் பேசுவேன்.
என்று கூறி கண்ணில் விட்டு அழுதார். 🌴
⚠பின்னர் சிரித்தவராக திறந்த வெளியில் செல்ல ஆரம்பித்தார். இவர் இறை நேசத்தில் முக்தி பெற்றவராகவோ பைத்தியம் முத்தியவராக இருக்க வேண்டும் என்று எண்ணியவனாக அவரைப் பின்தொடர்ந்தேன்.⚠
🌺"ஏன் என்னை பின்தொடர்கிறீர். உமது வேலையைப் பாரும்" என்றார்.
"உமது பெயர் என்ன?" என்று நான் கேட்டதற்கு, "அப்துல்லாஹ் அல்லாஹ்வின் அடிமை" என்றார். தந்தையின் பெயரைக் கேட்டபோதும், "அப்துல்லாஹ்" என்றார். 🌺
🍑"எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்பது தெரிந்த உண்மையே. அவர்களில் உமது பெயர் என்ன?" என்று கூறும் என்றதும் "என் தந்தை எனக்கு சாதூன்" என பெயரிட்டார். என்றார். "சாதூன் மஜ்னூன் என்று பிரபலமானவரா?" என்று கேட்டதற்கு "ஆம் அவனே தான்" என்றார். 🍑
💖"தாங்கள் எந்த நல்லடியார்களின் பொருட்டால் துஆக் கேட்டீர்கள். ?" என்று கேட்டதற்கு "இஷ்க் என்னும் இறை நேசத்தை தன் வாழ்வின் இலட்சியமாக ஆக்கிக் கொண்ட ஒருவன் எவ்வாறு விரைவானோ அது போல் அவர்கள் அல்லாஹ்வின் பால் விரைவார்கள். தம் மனதை ஒன்றில் பறி கொடுத்த ஒருவரைப் போல் அவர்கள் உலகிலிருந்து விலகியிருப்பார்கள்." என்று கூறிவிட்டு💖
🌳 " ஏ துன்னூன் நீர் மஃரிபத்துக்குரிய காரண காரியங்களை அறிவிப்பதாக கேள்விப்பட்டேனே." என்றார்.
"ஆம் தங்களது அறிவு ஞானங்களிலிருந்து நான் பயனடைய விரும்புகிறேன்." என்றேன். 🌳
🎇 அரபியில் இரு கவிதைகளைக் கூறினார்.
🔮"ஆரிபீன்களின் உள்ளம் சதாவும் இறை தியானத்தின் தோட்டத்தில் திளைத்திருக்கும். எது வரையென்றால் இறுதியாக அவனருகில் ஒரு தங்குமிடத்தை ஆக்கிக் கொள்வார்கள். 🔮
💞தனது இறை அன்பில் எந்தளவு தூய்மையான எண்ணத்துடன் ஈடுபடுவார்கள் என்றால் அவர்களை அவன் அன்பிலிருந்து எவ்வஸ்துவும் அகற்றிவிட முடியாது." 💞
என்றார்.
🌺ஹி 190 இல் மரணித்த ஸஃதூன் என்பவர் பற்றி கூறப்படும் வரலாற்று நூல்களிலோ அல்லது ஸூபிகள் பற்றி நூல்களிலோ (நான் வாசித்த வரை. அல்லாஹு அஃலம் ) இந்த சம்பவத்தைக் காண முடியவில்லை. 🌺
🌌உ+ம்
المنتظم لابن الجوزي ، البداية والنهاية لابن كثير ، فوات الوفيات ، الوافي بالوفيات، حلية الأولياء لأبي نعيم ، طبقات السلمي ، طبقات الشعراني.🌌
🍈406 இல் மரணித்த ابن حبيب النيسابوري என்பவர் தனது عقلاء المجانين ) ஓரளவு தெளிந்த பைத்தியக்காரர்கள் என்ற கிதாபில் 1/60 பதிந்துள்ளார். 🍈
🌴துன்னூன் என்பவர் கூறியதாக கூறும் இவர் தனக்கும் அவருக்குமிடையிலான அறிவிப்பாளர் வரிசையை கூறவில்லை. ஒரு வேளை இச்சம்பவம் மக்களிடம் பரவலாக பேசப்பட்டதால் அதை பதிந்திருக்கலாம். மேலும் இவரை இமாம் ஹாகிம் குறை கூறியுள்ளார் என்று السجزي அறிவித்துள்ளதாக இமாம் தஹபீ سير أعلام النبلاء 3768 இல் குறிப்பிடுகிறார். 🌴
🚥எனவே இது இட்டுக்கட்டப்பட்டதாகும்🚥
🍑இவ்வாறான கட்டுக்கதைகளை விடுத்து ஸஹீஹான ஹதீஸ்களைத் தேடிப் படித்துப் பின்பற்றுவோம்.🍑
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
06/08/2016
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔
🌹உங்களுடைய வீட்டில் அதிகமாக தொழுது வாருங்கள். அதனால் வீட்டில் நல்லவை அதிகமாகும்.🌹
🌴🍓🌱🌳
🌾இதை அனஸ் (ரழி ) அவர்கள் வழியாக இமாம்களான
🌽அபூநுஐம் தனது أخبار أصبهان 1/170 இலும்,
🌽பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 8385 இலும்,
🌽இப்னுல் முகர்ரிப் தனது الأربعين 1/88 இலும்,
🌽அப்துல் கனீ அல் மக்திஸீ தனது أخبار الصلاة 1/17 இலும்,
🌽இப்னு குதாமா தனது المتحابين في الله 1/57 இலும்,
🌽மேலும் ابن الأبار தனது முஃஜம் 1/273 இலும்,
பதிந்துள்ளனர்.🌾
💡🔬🔬🔬💡
🔬இந்த செய்தி அனஸ் (ரழி ) மூலம் பல அறிவிப்பாளர் வரிசைகளில் கூடுதல் குறைத்தலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.🔬
🍒இப்னு ஹஜர் அஸ்கலானீ ஒன்று சேர்த்த வேறு ஒன்பது அறிவிப்பாளர் வரிசைகளுடன், மேலும் ஐந்து வழிகளை தான் சேர்த்துள்ளதாக இமாம் அல்பானி குறிப்பிட்டுள்ளார்.🍒
📖 سلسلة الأحاديث الضعيفة 7039 📖
🏆அத்தோடு, அனைத்து அறிவிப்புகளையும் இணைத்து ஆதாரமாகக் கொள்ள முடியாத அளவுக்கு, ஒன்று மற்றதை விட மிக பலவீனமானதாக இருக்கின்றது. 🔵
இதன் பல அறிவிப்புகள், இந்த செய்திக்கு ஏதோ ஒரு அடிப்படை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று இமாம் இப்னு ஹஜர் கூறிவிட்டு, அவற்றை சரி காணாமல் அவை அனைத்தும் மிக பலவீனமானவை என்று கூறுகிறார்.🏆
📖سلسلة الأحاديث الضعيفة 3773 📖
✏இவ் அறிவிப்பில் இடம் பெறும் அலீ இப்னுல் ஜனத் علي بن الجند என்பவர் இட்டுக்கட்டுவார் என்று சந்தேகிக்கப்படக்கூடியவர் ஆவார்.✏
📖 الضعيفة 7039 📖
🌱இவரை இமாம் உகைலீ "அறியப்படாதவர்" என்கிறார்.
📖 الضعفاء الكبير (3/224) 📖
🌱இமாம் புகாரி "منكر الحديث" என்கிறார்.
📖 التاريخ الكبير 2363📖
🌱"இவர் கூறும் அறிவிப்பாளர் வரிசைகளை ஹதீஸ் துறையில் ஆரம்ப நிலையில் உள்ள ஒருவர் கேட்டால் கூட அது புனையப்பட்டது என்பது தெளிவாகி விடும்.🔵
பிரபலமான நம்பகமானவர்கள் சொன்னதாக மறுக்கத்தக்க விடயங்களை இவர் மாத்திரம் அறிவித்திருப்பதால் இவர் அறிப்பவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது" என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறுகிறார்.🎡
📖 المجروحين 682 📖
🌱இமாம் அபூஹாதம் "ஆளும் அறியப்படாதவர், ஹதீஸும் இட்டுக்கட்டப்பட்டது" என்கிறார்.
📖 الجرح والتعديل 973 📖
🌱"இவர் அறிவிப்பவை பொய்யானவையாகும்" என்று இமாம் அபூ ஹாதம் கூறியதாக இமாம் தஹபீ கூறுகிறார்.
📖 ميزان الاعتدال 3/118 📖
🚥🚥🚥🚥
🎓எனவே, மறுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள இவ்வறிவிப்பை ஓரங்கட்டிவிட்டு, வீடுகளில் தொழுவதை ஊக்குவிக்கும் ஸஹீஹான ஹதீஸ்களை நாம் கவனத்தில் கொள்வோம்.🎓
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
11/05/2016
தொடர் 🌎 26
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔
🍓"சுவர்க்கம் போகிறீரா? அல்லது இரண்டு ரக்அத்துகள் தொழுகிறீரா?" என்று என்னிடம் கேட்கப்பட்டால்,
இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கே நான் ஆசைப்படுவேன். ஏனென்றால், சொர்க்கம் செல்வதால் எனக்கு இன்பம் கிடைக்கிறது.
இரண்டு ரக்அத்துகள் தொழுவதால் எனது இறைவன் திருப்தி அடைகிறான்."🍓
💡🔬🔬🔬🔬💡
🚧 இந்த செய்தியில் பல விமர்சனங்கள் இருக்கின்றன.🚧
🍒 ஒன்று : 🍒
🌱 குறித்த அறிஞர் சொன்னதாக அரபு வாக்கியத்தில் இல்லை. உங்களுக்கு இவ்வாறு விருப்பம் கொடுக்கப்பட்டால் எதை தெரிவு செய்வீர்கள்? என்று மக்கள் கேட்டதற்கு பதிலாகச் சொன்னதாகவே வருகின்றது.🌱
🍒 இரண்டு : 🍒
🌱இதை சொன்ன அறிஞர் யாரென்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் , சமூக வலைத்தளங்களில் அந்த அறிஞர் ஹஸன் அல் பஸரீ (ரஹ் ) என்று காணலாம்.🎡
சூபிகளிடம் முஹம்மத் இப்னு ஸீரீன் (ரஹ்) என்று காணலாம்.🎡
ஷீஆக்களிடம் அலீ (அலை)!!! என்று காணலாம்.🌸
🚫இவற்றில் எது சரி? ❌
🍒 மூன்று : 🍒
🌹இந்த மூன்று இமாம்கள் பற்றிய வரலாறுகளும், அவர்களின் உபதேங்களும் தொகுக்கப்பட்டுள்ள மூல நூற்களில் இச்செய்தியை காணமுடியவில்லை.🍇
🍒 நான்கு : 🍒
🌳இந்த அறிஞர்கள் சொர்க்கத்தை ஆசை வைத்து அமல் செய்ததாகவே அவர்களின் வரலாறுகளில் காணலாம்.🌳
🍒 ஐந்து : 🍒
🌹சொர்க்கத்தை ஆசை வைத்து நரகைப் பயந்து அமல் செய்யாமல், அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் நாடி அமல் செய்ய வேண்டும் என்ற ஒரு கொள்கை சூபிகளிடம் இருக்கின்றது.🌸
🍇சொர்க்கம் என்பது வெறுமனே இன்பம் அனுபவிப்பது மட்டுமே என்ற எண்ணம் தான் இதற்கான காரணம்.🍇
🎓"உனது சொர்க்கத்தை ஆசைப்பட்டோ உனது நரகத்தைப் பயந்தோ உன்னை வணங்கவில்லை. மாறாக, உன்னைப் பார்க்கவும் சங்கைப் படுத்தவும் தான் வணங்குகிறேன்." என்பது அவர்களின் தாரக மந்திரம்.🎓
🌴அதை இமாம்கள் பெயரில் நியாயப்படுத்தும் முயற்சியாக இது இருக்கலாம்.🌱
🍒 ஆறாவது : 🍒
🌽தொழுகை, சொர்க்கம் இவ்விரண்டும் தான் நாம் செய்யும் அமல்களுக்கு கூலி என்று இருந்தால், இவ்வாறு சொல்வது நியாயம் தான்.🌽
🌾ஆனால், தொழுகைக்கே சொர்க்கம் தான் கூலி என்றும், அங்கு தான் மேலதிகமாக அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் கிடைக்கும் எனும் போது எப்படி ஒருவர் இப்படி சிந்திக்க அல்லது அதற்காக ஏங்க முடியும்?🌾
🍒 ஏழாவது : 🍒
🔵ஒரு முஸ்லிம் செய்யும் அமல்களுக்கு கூலியாக சொர்க்கத்தையே வழங்குவதாக அல் குர்ஆனின் பல வசனங்களில் அல்லாஹ் கூறியுள்ளான்.
மேலதிகமாக, தனது தரிசனத்தை வழங்குவதாக வாக்களித்துள்ளான். 🔵
🍒 எட்டாவது : 🍒
🌿இந்த சிந்தனைத் தாக்கத்தினால் தனக்குத் தேவையானதை அல்லாஹ்விடம் கேட்பதையும் ஆபத்துகளை விட்டும் பாதுகாப்பு தேடுவதையும் ஏன் சொர்க்கத்தை கேட்பதையும் நகரத்தை விட்டு பாதுகாப்பு தேடுவதையும் கூட சிலர் விட்டு விட்ட வரலாறும் இருக்கின்றது. 🍀
🔥"நரகம் வலதுபுறம் வைக்கப்பட்டால் இடது புறம் மாற்றுமாறு கூட கேட்கக் கூடாது." என்றும் சிலர் கூறியுள்ளார்கள். 🔥
🌲சிலர் சாப்பிடுதல், குடித்தல், தூங்குதல், ஆடை அணிதல், திருமணம் போன்ற அவசியத் தேவைகளையும் மறந்து,
பசி, இரவில் தூங்காமை, தனித்திருத்தல், யாருடனும் பேசாதிருத்தல், போன்றவைகளை இபாதத்துகளாக நினைத்து,
தம்மைத் தாமே வருத்திக் கொண்ட எத்தனையோ சூபி ஞானிகளின் வரலாறுகளை
நாம் அறிந்திருக்கிறோம். 🌲
🍀சிலர் சிறுநீரை பலநாட்கள் அடக்கிக் கொண்டு அதில் இறை பொருத்தத்தை தேடியிருக்கிறார்கள். 🍀
🍓சிலர் அடர்ந்த காடுகளிலும் பாலைவனங்களிலும் இறைவனையே தேடி பித்துப் பிடித்து அலைந்திருக்கிறார்கள்.🍓
🌿இச்சிந்தனை தான் ஏவல் விலக்கல் நல்லவன் கெட்டவன் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லாவற்றையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய ஹகீகத் என்று அவர்கள் சொல்லக்கூடிய மனநிலையை தோற்றுவித்திருக்கிறது எனலாம்.🌿
⚠ விளைவு?? ⚠
🌹தாங்கள் ஷரீஅத்தின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அவர்கள் செய்திருக்கும் கூத்துகள் கொஞ்ச நஞ்சமா என்ன?!!🌸
🌷இது பற்றி இன்னும் விரிவாக இமாம் இப்னு தைமிய்யா ( ரஹ்) அவர்களுடைய மஜ்மூஉ பதாவா مجموع فتاوى ابن تيمية 678 -720 இல் காணலாம்.🌷
🚥🚥🚥🚥🚥
🌹மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நாம் நாடவேண்டிய நிலையில் இஸ்லாம் எம்மை விடவில்லை.🌸
🌷ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் முன்வைப்போம். அவற்றின் படி அமல் செய்வோம்.🌷
அல்லாஹுஅஃலம்
ஷுஐப் உமரி
12/05/2016
தொடர் 🌎 27
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 பலவீனமான செய்தி 📔
🍓நான் அபூ உமாமா (ரழி) அவர்கள் மஸ்ஜிதில் இருக்கும் போது அவர்களிடம் சென்றேன்.
🌿"அபூ உமாமா அவர்களே! ஒருவர் நல்ல முறையில் வுழூச் செய்கிறார். இரு கைகளையும் முகத்தையும் கழுவி, தலையையும் காதுகளையும் மஸ்ஹ் செய்தார்.
🌿பிறகு பர்ழான தொழுகயைத் தொழுதால், அன்றைய தினம் அவரது கால்கள், கைகள், காதுகள், கண்கள் மூலம் நடந்த பாவங்களையும், தவறானவற்றை செய்ய நினைத்ததற்கான பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்."
🌿 என்று நபியவர்கள் சொன்னதை நீங்கள் கேட்டதாக ஒரு மனிதர் என்னிடம் கூறினார். என்றேன்.
🌿அப்போது அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதை நான் பல தடவைகள் நபியவர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன். என்றார்.🍓
💡🔬🔬🔬💡
இதை அபூ முஸ்லிம் என்பவர் கூறியதாக இமாம்களான
🌾அஹ்மத் தனது முஸ்னத் 22272 இலும்,
🌾தபரானீ தனது அல் கபீர் 8032 இலும்,
🌾இப்னு ஷாஹீன் தனது தர்கீப் 28 இலும்,
🌾பைஹகீ தனது ஷுஅப் 2481 இலும்,
🌾இப்னு அஸாகிர் தனது தாரீக் 8834 இலும்,
பதிந்துள்ளனர்.
🚥🚥🚥🚥🚥
🔷இதை அறிவிக்கும் அபூ முஸ்லிம் என்பவர் பற்றிய தகவல்களை யாரும் கூறவில்லை. என்று இமாம் ஹைஸமீ கூறுகிறார்.🔷
📖 مجمع الزوائد 1125, 1666📖
💎இமாம்களான புகாரி தனது தாரீக் 629 இலும்,
💎இப்னு அபீஹாதம் தனது அல் ஜர்ஹ் 2178 இலும் இவரின் நம்பகத்தன்மை பற்றி எதுவும் கூறவில்லை.🔬
💎யாரென்று அறியப்படாதவரையும் நம்பகமானவர் என்று சொல்லும் இமாம் இப்னு ஹிப்பான் கூட இவரை " நம்பகமானவர்கள் " என்ற தனது கிதாபில் சேர்க்கவில்லை. என்று இமாம் அல்பானி கூறுகிறார்.
📖 سلسلة الأحاديث الضعيفة 6711 📖
🍀அத்தோடு, " மனதால் எண்ணிய பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்." என்பது வேறு ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்படுகிறது.🍀
🌹பாவம் செய்ய நினைத்து அதை செய்யாவிட்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். என்று ஸஹீஹான ஹதீஸ்களில் காணலாம்.🌹
💎⭐💎⭐💎⭐
🌷தொழுகையின் பால் மக்களை ஆர்வப்படுத்த ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம். 🌷
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
14/05/2016
தொடர் 🌎 28
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔
🔴இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் வுழூ செய்யும் போது வடியும் நீரைப் பார்த்து, அதனால் எந்தப் பாவம் நீங்குகிறது என்று அறிந்து கொள்வார்கள்.🔴
💡🔬🔬🔬💡
🍀இந்த செய்தியை அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானீ என்பவர் தனது ஷைகான அலீ அல்கவாஸ் சொன்னதாக தனது الميزان அல்மீஸான் 333 இல் பதிவு செய்துள்ளார்.🍀
🌿வுழூ செய்பவர் உறுப்புக்களை கழுவும்போது அவ்வுறுப்புக்களால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற ஹதீஸின் படி
- பொதுவாக அசுத்தத்தை நீக்கிய தண்ணீர் நஜீஸாகி விடுவது போன்று -
பாவங்கள் என்ற அசுத்தங்களைப் போக்கிய அந்தத் தண்ணீரும் அசுத்தமாகி விடுகிறது. எனவே ஒருவர் வுழூ செய்த தண்ணீரை இன்னொருவர் பாவிக்க முடியாது. என்ற இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கருத்து ஹனபி கிதாபுகளில் காணலாம்.🌿
🌴கஷ்பு எனும் அகப்பார்வையின் மூலம் பாவங்கள் கழுவப்படுவதைக் கண்டதால் தான் அத்தண்ணீர் நஜீஸாகின்றதென்று கூறியுள்ளார்கள் என்று கற்பனை பண்ணி அவர் மீது இப்படியொரு அபாண்டத்தை சுமத்தி விட்டார்கள்.🌴
🌏கூபாவிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்குச் சென்ற போது அங்கு வுழூச் செய்து கொண்டிருந்த சிலரைப் பார்த்து இன்னின்ன பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். என்று கூறியதாகவும், பின்னர் இதன் மூலம் மற்றவர்களுடைய குறைகள் தமக்குத் தெரிவதால் அகப்பார்வையை நீக்கி விடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் என்றும் அலீ அல்கவாஸ் கூறுகிறார். 🌏
📖 الميزان للشعراني 333 - 338 📖
🍒கஷ்பு எனும் அகப்பார்வை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது உண்மையானால் அவர்களை விட பலமடங்கு உயர்வான மதிப்புடைய நபித்தோழர்களுக்கும் அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நபித்தோழர்களில் எவருமே எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்கள் என்று காண முடியவில்லை. 🍒
🌹நபித்தோழர்கள் கஷ்பு எனும் ஞானத்தின் வாயிலாக இதை அறிந்திருப்பார்களானால் பாவங்கள் கழுவப்படுகின்றன, என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கூற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.🌹
🍓நபித்தோழர்களை விட்டு விடுவோம். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் எத்தனையோ நபித்தோழர்கள் உலூச் செய்திருக்கிறார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் இவரது இந்தப் பாவம் கழுவப்படுகின்றது என்று நபி (ஸல்) கூறியதுண்டா? நிச்சயமாக இல்லை. 🍓
🌸மறைவான ஞானம் இறைவனுக்கு மாத்திரமே உரியது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒருவன் எவருக்கும் தெரியாமல் ஒரு பாவம் செய்கின்றான் என்றால் அதுபாவம் செய்தவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் கஷ்பு என்பது, அந்த ஞானத்தில் மற்றவர்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. 🍓
🔮கஷ்பு என்னும் ஞானம் (?) பெற்றவர்கள் இறைவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்வார்கள் என்ற நச்சுக் கருத்து இதன் மூலம் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்படுவதை சிந்திக்கும் போது உணரலாம்.🔮
🔦🔦மற்றொரு வழியிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
வுழூச் செய்யும்போது எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கண்டதை அவர்களைத் தவிர மற்ற எவரும் அறிந்து கொள்ள முடியாது.🚪
🎊 அபூஹனீபா (ரஹ்) அவர்களே தன்னைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தால் மட்டுமே மற்றவர்களால் அதை அறிய முடியும்.🎀
அபூஹனீபா (ரஹ்) அவர்கள் எந்த நூலிலாவது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்களார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. அல்லது இவர்கள் தமது மாணவர்களில் எவரிடமாவது கூறி அந்த மாணவர்களாவது எழுதி வைத்திருக்கின்றார்களா? அதுவும் இல்லை.🔦🔦
🌐http://frtj.net/2012/05/blog-post_30-3.html🌐
🌷ஹிஜ்ரி 150 இல் மரணித்த இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய இந்த விஷயம் - அவர்கள் கூறாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் - ஹிஜ்ரீ ஒன்பதுகளில் வாழ்ந்த அலீ அல்கவாஸ் என்பவருக்கு எப்படித் தெரிந்தது? 🌷
🚥🚥🚥🚥🚥
💐இப்படிப்பட்ட பொய்யான சம்பவங்களை இமாம்களின் பெயரால் சொல்லி மக்களை தொழுகைக்கு அழைப்பதை விட்டு ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம்.💐
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
16/05/2016
தொடர் 🌎 29
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔬 🔦🔦🔦 🔬
📔 ஸஹீஹான ஹதீஸ் 📔
🌹 (தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று எண்ணி யாரும் பாவங்களைச் செய்யத் துணிந்து) ஏமாந்து விட வேண்டாம். என்று நபி ( ஸல்) கூறினார்கள். 🌹
🌼 இது உஸ்மான் (ரழி)அவர்கள் நபியவர்களின் வுழூ பற்றி தெளிவுபடுத்தும் ஹதீஸின் இறுதிப் பகுதியாகும்.🌼
💐 ஸஹீஹுல் புகாரியில் 6433 இலும், வேறு பல கிதாபுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.💐
🌟அல்லாஹு அஃலம்🌟
🌷ஷுஐப் உமரி🌷
17/05/2016
தொடர் 🌎 30
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔬 🔦🔦🔦 🔬
📔 பலவீனமான அறிவிப்பாளர் வரிசை உடையது 📔
🍎அபூஹுரைரா ( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
🌾குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்த இருவர் ஒரே நேரத்தில் முஸ்லிமானார்கள். ஒருவர் ஷஹீதாகி விட்டார். அடுத்தவர் ஒரு வருடத்திற்குப் பிறகு மரணமடைந்தார். 🌾
🌹தல்ஹா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். "இறுதியில் மரணித்தவர் ஷஹீதுக்கு முன்னரே சொர்க்கத்தில் நுழைந்ததாக கனவு கண்டேன். இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. 🌹
🎀இது பற்றி நானோ வேறு யாரோ நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது "ஒரு வருடத்திற்குப் பின்னர் மரணித்தவர் செய்த அதிகமான நன்மைகளை நீ கவனிக்கவில்லையா? ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைத்திருக்கிறார். 🎀
🌴ஒரு வருடத்தில் ஆறாயிரம் ரக்அத்துகளும் இன்னும் எத்தனையோ ரக்அத்துகளும் (ஷஹீதை விட) அதிகமாக தொழுதிருக்கிறார்." என்று பதில் கூறினார்கள்.🍎
🚥🚥🚥🚥🚥
🍒இந்த செய்தியை அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் என்பவர் அபூஹுரைரா ( ரழி) இடமிருந்து அறிவிக்கிறார்.🍒
🔬💡இதில் சில குறைகள் காணப்படுகின்றன.
🔦முதலாவது🔦
🍀அபூஸலமாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் இப்னு அம்ர் என்பவர் 🍀
🌻சிலரிடம் இது தல்ஹாவிடமிருந்து அபூஸலமா அறிவித்ததாகவும்,🌻
📚مسند الشاشي 27 ، مسند ابي يعلى 648
الأحاديث المختارة 826 ، 📚أحمد 8400
الزهد للبيهقي 632 ،الفوائد المنتقاة للخلعي 827 ، شرح مشكل الآثار 2307📚
✏இன்னும் சிலரிடம் அபூஸலமா தான் இதைச் சொன்னார் என்றும்,✏
📖شرح مشكل الآثار 2308📖
🔮இன்னும் சிலரிடம் அபூஸலமா அபூஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாகவும் கூறி, 🔮
📚أحمد 8399 ، البزار 929 ، امالي الشجري 1251 ، تاريخ أصبهان 2/220📚
தனக்குத் தானே முரண்படுகிறார். 🔬💡
🔧இதில் அபூஹுரைரா ( ரழி ) கூறப்பட்டிருப்பது தவறு என்று இமாம் தாரகுத்னீ கூறுகிறார்🔧
📖العلل 518📖
✂இதனால் தான் இவருடைய ஹதீஸ்களை மக்கள் தவிர்ந்து கொண்டார்கள் என்று இமாம் இப்னு மயீன் கூறுகிறார்.✂
📖تهذيب الكمال 6188📖
💊இமாம்களான புகாரி முஸ்லிம் ஆகியோர் வேறு அறிவிப்பார்கள் மூலம் அறிவிக்கப்பட்ட இவரது ஹதீஸ்களையே தமது கிதாபுகளில் பதிந்துள்ளனர். என்று இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார் 💊
📖هدي الساري 1/441📖
🔦இரண்டாவது🔦
🔬அபூஸலமாவிடமிருந்து அறிவிக்கும் மற்றையவரான முஹம்மத் இப்னு இப்ராஹீம் என்பவரும் 🍀
🍑சிலரிடம் அபூஸலமா தான் இதைச் சொன்னதாகவும் 🍑
📖أحمد 1389 ، الأحاديث المختارة 827📖
🍒இன்னும் சிலரிடம் அபூஸலமா தல்ஹாவிடமிருந்து அறிவிப்பதாகவும்🍒
📚أحمد 1403 ، ابن ماجه 3925 ، ابن حبان 2982، 📚البيهقي 6530 ، المختارة 828، شرح مشكل الآثار 2309/2310 📚
🌻இன்னும் சிலரிடம் தான் தல்ஹாவிடமிருந்து அறிவிப்பதாகவும்🌻
📖مسند الشاشي 28📖
தனக்குத் தானே முரணாகக் கூறியுள்ளார். 🔬
⚠இவர் நம்பகமானவராக இருந்தாலும் மறுக்கப்படக்கூடிய சில விடயங்களை அறிவித்துள்ளார் என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.
📖تهذيب الكمال 5691📖
🎓இந்த செய்தியும் அவ்வாறானதாக இருக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால், இந்த சம்பவம் ஸஹீஹாக இடம் பெற்றுள்ள ஏனைய அறிவிப்புகளில் கனவு விவகாரமோ, தொழுகைகளின் எண்ணிக்கையோ, ஒரு வருடம் என்பதோ கூறப்படவில்லை.🎓
🔦மூன்றாவது 🔦
♻எல்லாவற்றிற்கும் மேலாக இதை அறிவிக்கும் அபூஸலமா இச்சம்பவம் நிகழும் போது இருக்கவுமில்லை. 🌹
✏இமாம்களான இப்னுல் மதீனீ, இப்னு மஈன், பஸ்ஸார் ஆகியோர் கூறுவது போன்று தல்ஹாவிடமிருந்து அபூஸலமா எதையும் கேட்டு அறிவிக்கவுமில்லை. 🌻
📚جامع التحصيل 1380 ، مصباح الزجاجة البوصيري 3/218📚
⚠எனவே அவர் தல்ஹாவிடமிருந்து அறிவிப்பவை தொடர்பு துண்டிக்கப்பட்டவையாகும் என்று இமாம் தஹபீ மற்றும் இமாம் பூஸீரீ கூறுகின்றார்கள்.⚠
📚سير أعلام النبلاء 4/287 ، مصباح الزجاجة 4/158📚
💡💡💡💡💡
🌟எனவே இது பலவீனமான அறிவிப்பாகும். இதைத் தவிர்த்து மற்றைய ஸஹீஹான அறிவிப்புகளை கவனத்தில் கொள்வோம். அடுத்த தொடரில் அதனுடைய விபரத்தைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.🌟
அல்லாஹுஅஃலம்
ஷுஐப் உமரி
19/05/2016
தொடர் 🌎 31
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔬 🔦🔦🔦 🔬
📔 ஆதாரபூர்வமானது📔
🍑நபியவர்களின் காலத்தில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மிக நல்லவர் முதலில் மரணித்து விட்டார். மற்றவர் நாற்பது நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார். 🍑
🌳முதலில் மரணித்தவரைப் பற்றி நபியவர்களிடம் மக்கள் புகழ்ந்த போது, " மற்றவர் தொழுது கொண்டு தானே இருந்தார். என்று கேட்டதற்கு, " ஆம். ஆனால் அவர் சாதாரணமானவராகத் தான் இருந்தார்." என்றார்கள்.🌳
🌻( அந்த நாற்பது நாட்களில்) அவர் தொழுத தொழுகை எந்த நிலைக்கு உயர்த்தி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?🌼
🌹 தொழுகை ஒருவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஓடக்கூடிய ஒரு ஆழமான ஆறு போன்றதாகும். அதில் அவர் ஒரு நாளைக்கு ஐந்து வேளை குளித்தால் அவருடைய உடலில் அழுக்கு இருக்குமா?
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌻
💡💡💡💡💡
இந்த ஹதீஸை இமாம்களான
🌷அஹ்மத் 1534 இலும்,
🌷தௌரகீ الدورقي தனது முஸ்னத் 40 இலும்,
🌷இப்னு ஹுஸைமா 310 இலும்,
🌷தபரானீ தனது அல் அவ்ஸத் 6476 இலும்,
🌷இப்னு ஷாஹீன் தனது அத்தர்கீப் 50 இலும்,
🌷அபூ அஹ்மத் அல் ஹாகிம் தனது அவாலீ العوالي 52 இலும்,
🌷ஹாகிம் தனது முஸ்தத்ரக் 718 இலும்,
🌷பைஹகீ தனது ஷுஅப் 2557 இலும்,
ஆகியோர் பதிந்துள்ளனர்.
🌱🍃🌱🍃🌱🍃🌱🍃
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் மஹ்ரமா مخرمة بن بكير என்பவர் தனது தந்தை புகைரிடம் நேரடியாக கேட்டு அறிவிக்காமல் அவர் எழுதி வைத்த கிதாபுகளில் இருந்து அறிவிக்கிறார்.
📖 تهذيب الكمال 📖
🌸இமாம் மாலிக் உடைய அறிவிப்பில் அவர் முஸ்லிமாகத் தானே இருந்தார்? என்று இடம் பெற்றுள்ளது.
இமாம் மாலிக் அவர்கள் நான் கேள்விப்பட்டேன் என்று அறிவித்துள்ளார்.🌸
🌼இமாம் ஹாகிம் இந்த ஹதீஸை ஸஹீஹானது என்று கூறியுள்ளதை இமாம் தஹபீ சரி கண்டுள்ளார்.🌼
இமாம் அல்பானி அவர்களும் இதை ஸஹீஹானது என்று கூறியுள்ளார் 🌷
🌟அல்லாஹு அஃலம்🌟
🌼ஷுஐப் உமரி பேருவளை🌼
25/05/2016
தொடர் 🌎 32
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔬 🔦🔦🔦 🔬
📔 இட்டுக்கட்டப்பட்டது 📔
🌹ஒரு நாள் ரமலான் பிறை தெரிந்த போது "ரமலான் மாதத்தில் உள்ளதை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுவதும் ரமலானாக இருக்காதா? என்று ஆசைபடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌹
🔬இந்த செய்தியை அபூமஸ்வூத் (ரலி) வழியாக இமாம்களான
🌷இப்னு ஹுஸைமா 1886 இலும்,
🌷அவர் வழியாக பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 3361இலும் , பழாஇலுல் அவ்காத் 42 இலும்,
🌷ஷஜரீ தனது அமாலீ 1379, 1477, 1569 இலும்,
🔬இப்னு மஸ்ஊத் (ரழி) வழியாக இமாம்களான
🌷அபூயஃலா 5273 இலும்,
🌷இப்னு அபித்துன்யா தனது பழாஇலு ரமழான் 22
🌷அத்தர்கீப் வத்தர்ஹீப் 1765 இல் قوام السنة வும்,
🌷இப்னு ஷாஹீன் தனது பழாஇலு ரமழான் 18 இலும்,
🌷அல்மக்திஸீ தனது பழாஇலு ரமழான் 09 இலும்,
🌷அபூநுஐம் தனது மஃரிபதுஸ் ஸஹாபா 7091 இலும்,
🌷அபூதாஹிர் தனது துயூரிய்யாத் 983 இலும் பதிந்துள்ளனர்.
🚥🚥🚥
இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஜரீர் பின் அய்யூப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம்களான
⛳இப்னு மஈன்تاريخ ابن معين2644 ،1434
⛳இமாம் பகவீ معجم الصحابة 2/41
⛳இமாம் தஹபீ المقتنى في سرد الكنى1/430 இலும், பிரபலமான பலவீனமானவர் என்று ميزان الاعتدال 1/391இலும் ,
⛳இமாம் அபூஸுர்ஆ الضعفاء2/419
இலும்,
⛳இமாம் பைஹகீ அல் குப்ரா 3361 இலும்,
⛳இமாம் ஹைஸமீ தனது மஜமஉஸ் ஸவாஇத் 4781 இலும்,
குறிப்பிடுகிறார்கள்.
🌷இமாம்களான புகாரி، அபூஹாதம், அபூஸுர்ஆ, உகைலீ منكر الحديث என்கிறார்கள்
التاريخ الأوسط 1964 ، التاريخ الكبير 2237 ، الضعفاء الصغير 51 ، الجرح والتعديل 2/504, علل الترمذي 1/389, الضعفاء للعقيلي 242،
🌼நான் யாரைப்பற்றியாவது منكر الحديث என்று கூறினால் அவர் வழியாக அறிவிக்கக் கூடாது என்று இமாம் புகாரி கூறியதாக இமாம் தஹபீ கூறுகிறார்.🌼
ميزان الاعتدال 1/6
🌟அதிகம் தவறு விடக்கூடியவர். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் என்று இமாம் அபூநுஐம், கூறுகிறார்.🌟
المجروحين 194
🌟இமாம்களான வகீஃ, அபூநுஐம் இவர் இட்டுக்கட்டக் கூடியவர் என்கிறார்கள். இமாம் இப்னு மஈன் பலவீனமானவர் என்கிறார். புகாரி அபூஸுர்ஆ منكرالحديث என்கிறார்கள். நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் ஹதீஸ் கலையில் ஓரங்கட்டப்பட்டவர் என்கிறார்கள்.
الضعفاء والمتروكون لابن الجوزي 647
💎ஹதீஸ் கலையில் ஓரங்கட்டப்பட்டவர் என்கிறார் இமாம் அபூஸுர்ஆ மற்றும் இப்னுல் கைஸரானீ .💎
المغني في الضعفاء 1107 ، ذخيرة الحفاظ
✏இமாம் ஸிப்த் இப்னுல் அஜமீ தனது الكشف الحثيث عمن رمي بوضع الحديث 185 இல் இவரை பதிந்துள்ளார். ✏
🚥இமாம்களான இப்னுல் ஜௌஸி, முன்திரீ, ஷௌகானீ, அல்பானீ ஆகியோர் இது இட்டுக்கட்டப்பட்டசெய்தி என்கிறார்கள். 🚥
الموضوعات لابن الجوزي 2/189، الترغيب والترهيب للمنذري 2/72، الفوائد المجموعة 1/88، ضعيف الترغيب 596
🌼🌼🌼🌼🌼
இதே செய்தியை இமாம் தபரானீ தனது அல் கபீர் 967 இல் வேறொரு அறிவிப்பாளர் வரிசையில் பதிந்துள்ளார்.🌹
🔬இதில் இடம்பெறும் ஹய்யாஜ் என்பவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியிருப்பதை இமாம் மிஸ்ஸீ தஹ்தீபுல் கமாலில் 6637 பதிவு செய்துள்ளார்.🔬
தொடரும் அறிவிப்பு
அப்போது குஸாஆ குலத்தைச் சார்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! (இது தொடர்பாக) விளக்குங்கள் என்றார். அதற்கு, சொர்க்கம் அந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து அடுத்தவருடம் வரை அலங்கரிக்கப்படும். ரமலான் மாதத்தின் முதல்நாள் வரும் போது அர்ஷின் கீழிலிருந்து காற்று அடிக்கும் சொர்க்கத்தின் இலைகள் அசையும். இதை ஹூருல் ஈன்கள் பார்ப்பார்கள். இறைவா! இந்த மாதத்தில் உன் அடியார்களில் எங்களுக்கு துணையாக்குவாயாக! அவர்கள் மூலம் எங்களுக்கு கண் குளிர்ச்சியும் எங்கள் மூலம் அவர்களுக்கு கண் குளிர்ச்சியும் ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.
யார் ரமலான் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். (அல்குர்ஆன் 55:72) என்று அல்லாஹ் வர்ணித்த முத்தாலான கூடாரத்தில் ஹூர் எனும் கன்னியரை அல்லாஹ் மனைவியாக்குவான். அவர்களில் உள்ள பெண்களில் ஒவ்வொருவருக்கும் எழுபது மேலாடைகள் இருக்கும். ஒன்று மற்றொரு நிறத்தில் இருக்காது. எழுபது நிற நறுமணங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ஒன்று மற்றொரு நிறத்தில் இருக்காது. (இதைப்போன்று) ஒரு வாசனை மற்றொரு நிறத்தில் அமைந்திருக்காது.
அப்பெண்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தேவையை நிறைவு செய்ய எழுபதாயிரம் வேலைக்காரப் பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்காரப் பெண்ணிடமும் தங்கத்தாலான தட்டு இருக்கும். அதில் உணவுகள் இருக்கும். அதில் கடைசி கவள உணவின் சுவை ஆரம்பத்தின் சுவையைப் போன்று இருக்காது. ஒவ்வொரு கட்டிலிலும் எழுபது விரிப்புகள் இருக்கும். அதன் உட்பகுதி இஸ்தபரக் என்ற பட்டுவகையைச் சார்ந்திருக்கும்... என்று நீண்டு செல்கிறது.
ஷுஐப் உமரி
அல்லாஹு அஃலம்
06/01/2016
தொடர் 🌎 33
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 02
🔬 🔦🔦🔦 🔬
📔 ஆதாரபூர்வமானது 📔
🍓" பொறுமையின் மாதத்தில் நோன்பு நோற்பதும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் ஊசலாட்டங்களையும் நீக்கிவிடும்."
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🍓
🚥🚥🚥🚥🚥
0⃣1⃣
🍒இதை النمر بن تولب என்ற கிராமப்புற ஸஹாபி அறிவித்ததாக பின்வரும் கிரந்தங்களில் ஒரு சம்பவத்துடன் பதிவாகியுள்ளது.🍒
📚مصنف عبد الرزاق 7877 ، 📙الأموال لابن أبي عبيد 30 ، 📘طبقات ابن سعد 1/213 ، 📓مسند أحمد 20737 ،20738 ،23070، 📔الأموال لابن زنجويه 80 ، 📒التاريخ الكبير 7/238 ، 📕سنن أبي داود 2999 ، 📓سنن النسائي 4146 ، 📗المنتقى لابن الجارود 1099 ، 📘شرح معاني الآثار 5429 ،📙معجم الصحابة لابن قانع 3/165،166 ، 📒صحيح ابن حبان 6557 ، ، 📙المعجم الأوسط 4940 ، 📕معرفة الصحابة لأبي نعيم 6466،7309،6468، 📘أخبار أصبهان 1/360 ، 📗السنن الكبرى للبيهقي 12749 ، 📕شعب الإيمان 3574 ،3575 ، 📗الاسماء المبهمة للخطيب 157.📚
🌹இதன் சில அறிவிப்புகள் பலவீனமாக இருந்தாலும் மற்றவை ஆதாரபூர்வமானவையாகும்.🌹
0⃣2⃣
🌱இதே செய்தியை தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அபூதர் (ரழி) வழியாக அறிவிப்பதாக ஒரு சம்பவத்துடன் பின்வரும் கிதாபுகளில் பதிந்துள்ளனர்.🌱
📚مسند أبي داود الطيالسي 484 ، 📕مسند أحمد 21364 ، 📘شعب الإيمان 3573 ، 📙فضائل الأوقات للبيهقي 295 ، 📒تاريخ دمشق 9075 ، 📓الأمالي لابن عساكر 5 .📚
🍑இந்த தமீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர் அபூரீமா என்ற ஸஹாபியாக இருக்கலாம். ஏனெனில் இவரிடமிருந்து அறிவிக்கும் அஸ்zரக் என்பவர் வேறொரு ஹதீஸை அறிவிக்கும் போதும் "அபூரீமா என்று கூறப்படும் ஒருவர் எங்களுக்கு தொழுவித்தார்" என்று அறிவிக்கிறார். அவ்வாறு இருந்தால் இவ்வறிவிப்பும் ஆதாரமானதாகும்.🍑
0⃣3⃣
🍀இதே செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) வழியாகவும்
📚كشف الأسرار عن زوائد البزار 1057 ، 📖التاريخ الكبير للبخاري 7/238 📚
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.🍀
🌸இதன் அறிவிப்பாளர் வரிசையில் سماك بن حرب என்பவர் பற்றி விமர்சனம் இருந்தாலும் இந்த செய்தி வேறு வழிகளில் நபியவர்களிடமிருந்தே அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர் பற்றிய விமர்சனம் இல்லாமல் போய்விடுகின்றது.🌸
0⃣4⃣
🌴இதே செய்தி அலி (ரழி) வழியாகவும்
📚مسند البزار 862،688، 📖 المعجم الأوسط 9174 ، 📕تنبيه الغافلين 484 📚
ஆகிய கிதாபுகளில் பதிந்துள்ளார்கள். 🌴
🔮இதில் இடம்பெறும் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் பலவீனமானவர். சில அறிஞர்கள் பொய்யர் என்றும் கூறியுள்ளனர்.🔮 📖تهذيب الكمال📖
0⃣5⃣
🌳இதே விடயத்தை عمرو بن شرحبيل என்பவர் ஒரு ஸஹாபியிடமிருந்து அறிவித்துள்ளதாகவும் பின்வரும் கிதாபுகளில் பதிந்துள்ளனர். 🌳
📚مصنف عبد الرزاق 7867 ، 📗سنن النسائي 2706 ،2707 ، 📙الترغيب والترهيب لقوام السنة 1886.📚
👉ஆனால் இந்த அறிவிப்பில் ரமழான் மாதம் பற்றி கூறப்படவில்லை.👈
0⃣6⃣
💼இதே விடயம் المعجم الكبير 8984 இல் இப்னு மஸ்ஊத் (ரழி) உடைய கூற்றாக பதிவாகியுள்ளது.💼
0⃣7⃣
🚪இது மேற்கண்ட ஹாரிஸ் என்ற பலவீனமானவருடைய கூற்றாகவும் مصنف عبد الرزاق 7872 இல் பதிவாகியுள்ளது.🚪
🚦🚦🚦🚦🚦
இந்த அறிவிப்புகளில் சிலது பலவீனமானதாக இருந்தாலும் அதிகமானவை நம்பகமானவர்கள் வழியாக வந்துள்ளன.
எனவே இந்த ரமழான் மூலம் உள்ளங்களில் உள்ள அசுத்தங்கள் நீங்கிய கூட்டத்தில் நம் அனைவரையும் அல்லாஹ் சேர்ப்பானாக.
🌹🌺🌷🌸🌼🌻
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
14/06/2016
தொடர் 🌎 34
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 03
🔬🔦🔦🔦🔬
🌟பலவீனமானது🌟
🌷இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஸுஹுபுகள் ரமழான் மாதம் இரண்டாவது இரவில் இறக்கப்பட்டது. தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் வேதம் ரமழான் மாதம் ஆறாவது நாளிலும் மூஸா (அலை) அவர்களுக்கு தௌராத் வேதம் பதினெட்டிலும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இருபத்தி நான்கிலும் இறக்கப்பட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌷
🚥🚥🚥🚥🚥
1⃣
🎒இதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வழியாக இமாம் இப்னு அஸாகிர் தனது 📓தாரீகு திமிஷ்க் 84/17,6/202 📓 இல் பதிந்துள்ளார்.🎒
👒இப்னு அப்பாஸ் (ரழி) இடமிருந்து அறிவிக்கும் அலீ இப்னு அபீதல்ஹா என்பவரின் நம்பகத்தன்மை பற்றி அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.👒 📖 تهذيب الكمال 4754📖
🔮இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குர்ஆனுக்கு விளக்கமாக கூறியவற்றை இவர் அறிவிக்கிறார். ஆனால் இவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை காணவில்லை.🔮
📖 تاريخ الإسلام 313📖 تهذيب الكمال 4754📚
🔭ஆனால் அவருடைய மாணவர்களான முஜாஹித், காஸிம் இடமிருந்து அவர்களை கூறாமல் அறிவிக்கிறார்.🔭
📖 جامع التحصيل للعلائي 542 📖 ميزان الاعتدال 5870📖
🎈இவர்களிடமிருந்து தான் அறிந்தவற்றை ஒரு ஏட்டில் எழுதி வைத்திருந்தார். அதிலிருந்து இமாம் புகாரி போன்ற அறிஞர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள்.
ஆனால் இந்த செய்தி அந்த ஏட்டிலும் இல்லை.🎈
2⃣
📮இதே செய்தியை அபூ முலைஹ் என்பவர் واثلة بن الأسقع என்ற ஸஹாபியின் வழியாக அறிவிப்பதாக நாட்கள் மாற்றங்களுடன் பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.📮
📚مسند أحمد 16984 ، 📖 مختصر قيام الليل للمروزي 1/250 ، 📙 تفسير الطبري 2814 ، 📗 تفسير ابن أبي حاتم 519،1649 ، 📓 المعجم الكبير 185 ، 📒 المعجم الأوسط 3740 ، 📘 جزء من حديث النعالي 66 ، 📕 السنن الكبرى للبيهقي 18649 ، 📑 الأسماء والصفات له 494 ، 📖 شعب الإيمان له 2053 ، 📙 التفسير الوسيط للواحدي 1/280 ، 📗 أسباب النزول له 1/15 ، 📓 الترغيب والترهيب لقوام السنة 1848 ، 📒 تاريخ دمشق 1477 ، 📘 فضائل شهر رمضان لعبد الغني المقدسي 32 📚
📝இதில் இப்ராஹீம் நபிக்கு ஸுஹுபுகள் ரமழான் ஒன்றிலும் தௌராத் ஆறிலும் இன்ஜீல் பதிமூன்றிலும் ஸபூர் பதினெட்டிலும் குர்ஆன் இருபத்தி நான்கிலும் இறக்கப்பட்டதாக வந்துள்ளது.📝
✏இந்த அறிவிப்பில் இரு குறைகள் இருக்கின்றன. ✏
1. இந்த அறிவிப்பாளர் வரிசையில் இம்ரான் இப்னு தாவர் என்பவரை அபூதாவூத், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் "பலவீனமானவர்" என்று கூறியுள்ளனர்.
2. இதில் வரும் கதாதா قتادة என்பவர் مدلس இருட்டடிப்பு செய்பவர் என்று பிரபலமானவர். "இவர் தனது ஆசிரியரிடம் கேட்டதை உறுதிப்படுத்திக் கூடிய வார்த்தைகளை பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்." என்று இமாம் தஹபீ سير أعلام النبلاء 5/271 இல் குறிப்பிடுகிறார்.ஆனால் இந்த அறிவிப்பில் அவ்வாறு சொல்லாமல் عن என்ற பதத்தைப் பாவித்துள்ளார்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.✉
3⃣
📌மேலே கூறப்பட்ட அபூ முலைஹ் என்பவர் ஜாபிர் (ரழி) வழியாக அறிவித்துள்ளதாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.📌
📚 جزء هشام بن عمار 14 ، 📘 مسند أبي يعلى 2190📚
💻இதில் ஹிஷாமுடைய அறிவிப்பில் இன்ஜீல் ரமழான் பதினெட்டில் இறக்கப்பட்டது என்றும் அபூ யஃலாவுடைய அறிவிப்பில் ஸபூர் பதினொன்றில் இறக்கப்பட்டது என்றும் பதிவாகியுள்ளது.💻
📂இந்த அறிவிப்பிலும் இரு குறைகள் காணப்படுகின்றன.📂
1. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் உபைதுல்லாஹ் என்பவர் பலவீனமானவர்.
📖 تهذيب الكمال 4285 📖
2. அதேபோல் سفيان بن وكيع என்பவரும் பலவீனமானவர் ஆவார்.
⛺இதே செய்தி இமாம் இப்னு அஸாகிர் தனது தாரீகு திமிஷ்க் 5/100 இல் பதிந்துள்ளார். அதில் இடம் பெறும் அபூ பக்ர் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார். ⛺ 📖تهذيب الكمال 8002 📖
🔦இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ அவர்கள் இந்த அறிவிப்பு مقلوب மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. என்கிறார். 🔦
📗المطالب العالية لابن حجر 3482📗
🔭அதாவது அபூ முலைஹ் வாஸிலா (ரழி) இடமிருந்து அறிவித்ததை ஜாபிர்(ரழி) இடமிருந்து அறிவித்ததாக கூறப்படுகிறது.🔭
4⃣
🗼இதே விடயத்தை இமாம் الثعلبي தனது தப்ஸீரில் அபூதர் (ரழி) வழியாக பதிந்துள்ளதாக இமாம் ஸைலஈ அவர்கள்
📒 تخريج أحاديث الكشاف 1/113 📘
இல் குறிப்பிட்டுள்ளார்.🗼
💈இந்த அறிவிப்பில் இடம் பெறும் ஷிஹாப் இப்னு தாரிக், தாரிக் இப்னு இயாஸ் என்பவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை.💈
🚨அதேநேரம் இதில் வரும் நஹ்ஷல் என்பவர் மிகவும் பலவீனமானவர். இமாம் அபூதாவூத் தயாலஸீ இமாம் இஸ்ஹாக் ஆகியோர் இவரை "பொய்யர்" என்கிறார்கள். 🚨
📖 تهذيب الكمال 7198 📖
5⃣
இதே செய்தி أبو الجلد என்பவருடைய கூற்றாக
📚 مصنف عبد الرزاق 30191 ، 📗 فضائل القرآن لابن الضريس 127📚
ஆகிய கிதாபுகளில் பதிந்துள்ளனர். இவரிடமிருந்து அறிவிக்கும் இருவரும் யாரென்று கூறப்படவில்லை. ⏳
⏰அத்தோடு இவர் குர்ஆனை ஏழு நாட்களிலும் தௌராத்தை ஆறு நாட்களிலும் வாசித்து முடிப்பார். என்று அவருடைய மகள் மைமூனா சொன்னதாக இமாம் இப்னு ஸஃத 📘طبقات ابن سعد 3115📘 இல் கூறுகிறார்.⏰
✏இந்த விடயம் வேதக்காரர்களிடமிருந்து வந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அவர்களிடமிருந்து அறிவிப்பதாக பிரபலமான வஹப் இப்னு முனப்பஹ் என்ற அறிஞர் இக் கூற்றை கூறியுள்ளதாக இமாம் இப்னுல் ஜௌஸி المنتظم 1/144இல் குறிப்பிடுவதை குறிப்பிடலாம்.
இவர் அந்த வேதங்களில் உள்ளவற்றை குர்ஆனுடன் இணைத்துக் கூறியிருக்க வாய்ப்புண்டு.✏
🚥🚥🚥
எனவே இதை நபியவர்கள் சொன்னதாக பலவீனமான அறிவிப்புகளில் தான் வந்துள்ளது.🎈
⏳வேதக்காரர்கள் அவர்களது வேதங்களிலிருந்து சொல்பவற்றை நாம் முழுமையாக நம்பவோ மறுக்கவோ முடியாது.⏳
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
18/06/2016
தொடர் 🌎 35
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 04
🔦🔭🔭🔭🔦
✏🔬பலவீனமானது🔬✏
🎀முன்வந்த எந்த சமூகங்களுக்கும் கொடுக்கப்படாத ஐந்து விடயங்கள் எனது உம்மத்தினருக்கு ரமழான் மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
1.
நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட அதிக நறுமணமுள்ளதாக இருக்கும்.
2.
நோன்பு திறக்கும் வரை மலக்குகள் அவர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
3.
ஒவ்வொரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படும். "எனது நல்லடியார்கள் உலகத் துன்பங்களை விட்டு உன்னிடம் வரவிருக்கிறார்கள்." என்று அல்லாஹ் கூறுவான்.
4.
அட்டூழியம் செய்யும் ஷைத்தான்கள் அம்மாதத்தில் விலங்கிடப்படும். ஏனைய மாதங்களில் அவர்களை நெருங்கியவற்றைக் கொண்டு அம்மாதத்தில் நெருங்க மாட்டார்கள்.
5.
கடைசி இரவில் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
"அது லைலதுல் கத்ர் இரவா?" என்று ஒருவர் கேட்டதற்கு, " இல்லை. வேலைக்காரருக்கு கூலி கொடுக்கப்படுவது அவர் வேலையை முடித்த பிறகு தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🎀
🚥🚥🚥🚥🚥
இந்த செய்தி அபூஹுரைரா (ரழி) வழியாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
📚 مسند أحمد 7917 ، 📗 فضائل رمضان لابن أبي الدنيا 18 ، 📘 مسند الحارث 318 ، 📙 مسند البزار 8571 ، 📔 مختصر قيام الليل للمروزي 1/258 ، 📒 شرح مشكل الآثار 3013 ، 📑 المجالسة وجواهر العلم للدينوري 2991 ، 📓 تنبيه الغافلين للسمرقندي 453 ، 📕 فضائل رمضان لابن شاهين 27 ، 📗 المخلصيات 819 ، 📕 شعب الإيمان 3330 ، 📓 فضائل الأوقات للبيهقي 35 ، 📑 أمالي الباطرقاني 8 ، 📒 أمالي الشجري 1499 ، 📔 الترغيب والترهيب لقوام السنة 1757 ، 📙 فضل شهر رمضان لابن عساكر 7 ، 📘 فضائل شهر رمضان لعبد الغني المقدسي 18 ، 📗 أحاديث شهر رمضان لأبي اليمن بن عساكر 9 ، 📚 مسند أحمد بن منيع 📓 الثواب لأبي الشيخ ، 📓 حديث محمد المديني لأبي نعيم📚
✏✏இதன் அறிவிப்பாளர் வரிசையில் இரண்டு பலவீனமானவர்கள் உள்ளனர்.
1.
முஹம்மத் இப்னுல் அஸ்வத்.
இவருடைய நம்பகத்தன்மை பற்றி இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர யாரும் பேசவில்லை. இமாம் இப்னு ஹஜர் இவரை مستور என்கிறார்.
📚تقريب التهذيب 6269، 📕تهذيب الكمال 6269📚
2.
ஹிஷாம் இப்னு ஸியாத்.
இவரை பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.
📚 تهذيب الكمال 7292، إكمال تهذيب الكمال 4945 📚
✏✏
🗼🗼🗼🗼🗼
⏳இதே செய்தி ஜாபிர் (ரழி) வழியாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.⏳
📚 فضائل رمضان لابن شاهين 19 ، 📕 الأربعون للنسوي 34 ، 📗 شعب الإيمان 3331 ، 📘 فضائل الأوقات للبيهقي 36 ، 📙 التفسير الوسيط للواحدي80 ، 📒 الترغيب والترهيب لقوام السنة 1820 ، 📔 فضل شهر رمضان لابن عساكر 8 📚
🔬 இந்த அறிவிப்பில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதை கூறுவதற்கு பதிலாக "ரமழான் முதல் இரவில் அவர்களைப் பார்க்கிறான். யாரை அல்லாஹ் பார்த்து விட்டானோ அவனை ஒருபோதும் வேதனை செய்ய மாட்டான்." என்று இடம்பெற்றுள்ளது.🔬
🔮இதன் அறிவிப்பாளர் வரிசையிலும் இரண்டு பலவீனமானவர்கள் உள்ளனர்.🔮
1.
ஹைஸம் இப்னுல் ஹவாரீ.
இவர் பற்றிய தகவல்கள் எதுவுமே இல்லை என இமாம் அல்பானி கூறுகிறார்கள்.
📖 الضعيفة 5081 📖
2.
ஸைத் அல்அம்மீ.
இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
📚تهذيب الكمال 2131، 📙 تقريب التعذيب 2131 📚
🔦எனவே இது பலவீனமானதாகும். என்றாலும் இதில் கூறப்பட்ட சிலது வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் இருப்பதால் இதை விட்டு ஸஹீஹானதை மாத்திரம் பிற்பற்றுவோம். 🔦
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
22/06/2016
தொடர் 🌎 36
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 05
🔦🔭🔭🔭🔦
✏🔬பலவீனமானது🔬✏
🍇ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசல் இருக்கும். (عبادة) வணக்கங்களுக்குரிய வாசல் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🍇
🚥🚥🚥🚥🚥
🍎இந்த செய்தியை அபூதர்தா (ரழி)வழியாக இமாம் அபூயஃலா பதிவு செய்துள்ளதாக இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ கூறுகிறார்.🍎
📕 المطالب العالية 105📕
🌺 இதை இமாம் அபுஷ் ஷைக் தனது الثواب என்ற கிதாபிலும் பதிந்துள்ளதாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.🌺
📚المغني عن حمل الأسفار للعراقي 1/273 ، 📙 الجامع الصغير وزيادته 10191 للسيوطي ، 📒 الفتح الكبير 9831 له ، 📗 كنز العمال للمتقي الهندي 23581 📚
🌹இவ்வறிவிப்பில் வரும் அபூபக்ர் இப்னு அபீ மர்யம் என்பவர் பலவீனமானவர் ஆவார்.🌹
📚تهذيب الكمال 7974 ، 📕 تقريب التهذيب 7974 ، 📓 الكاشف 6526 📚
🌴🌴🌴🌴🌴
🍅 இதே செய்தியை ضمرة بن حبيب என்ற தாபிஈ நபியவர்களிடமிருந்து அறிவிப்பதாக இந்த அபூபக்ர் இப்னு அபீமர்யம் கூறிய செய்தி பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.🍅
📚الزهد والرقائق لابن المبارك 1423 ، 📔 الزهد لهناد 2/358 ، 📘 مسند الشهاب للقضاعي 1032 📚
🍄இந்த செய்தி ஒரு தாபிஈ நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கக் கூடிய முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும்.🍄
🍏இதனாலும் இதை அறிவப்பவரான அபூபக்ர் பலவீனமானவர் என்பதாலும் இந்த செய்தி பலவீனமானதாகும்.🍏
🌱🌱🌱🌱🌱🌱🌱
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
22/06/2016
[23/06 6:25 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 37
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 06
🔦🔭🔭🔭🔦
✏🔬இட்டுக்கட்டப்பட்டது🔬✏
🍎நபி (ஸல்) அவர்கள் ரமழான் நம்மை வந்தடைந்த போது கூறினார்கள் :
பரகத் பொருந்திய ரமழான் மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் அல்லாஹ் உங்கள் பக்கம் கவனம் செலுத்தி ரஹ்மத்தை இறக்குகிறான். பாவங்களை மன்னிக்கிறான். துஆக்களை ஏற்றுக் கொள்கிறான். (அமல்களில்) நீங்கள் போட்டி போடுவதைப் பார்த்து மலக்குகளிடம் பெருமையாகப் பேசுகிறான். அல்லாஹ்வுக்கு உங்கள் நன்மைகளைக் காட்டுங்கள். அதில் அவனது அருளைப் பெறாதவன் துர்ப்பாக்கியசாலி தான். 🍎
🍇இந்த செய்தியை அபூதர்தா (ரழி) வழியாக இமாம் தபரானீ தனது مسند الشاميين 2238 இல் பதிந்துள்ளார்.🍇
🍓இமாம் இப்னுன் நஜ்ஜாரும் இதை பதிந்துள்ளதாக பின்வரும் கிதாபுகளில் கூறுகிறார்கள்.🍓
📚مجمع الزوائد 4783 ، 📘جامع الأحاديث 255 ، 📗كنز العمال 23692📚
🚥🚥🚥🚥🚥
🍏இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் முஹம்மத் இப்னு அபீகைஸ் என்பவர் நான்காயிரம் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவராவார். அவரை அபூஜஃபர் அல் மன்ஸூர் எனும் கலீபா கொலை செய்து சிலுவையில் அறைந்தார். இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் இவரென்று தெரியாமல் இருப்பதற்காக நூறு விதங்களில் இவரது பெயரை மாற்றி அறிவிக்கிறார்கள். 🍏
📘تقريب التهذيب 5907📘
🌹பிரபலமான ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர்கள் நால்வர் இருக்கின்றனர்.🌹
1. மதீனாவில் இப்ராஹீம் இப்னு அபீஷைபா யஹ்யா
2. பக்தாதில் வாகிதீ
3. குராஸானில் முகாதில் இப்னு ஸுலைமான்
4. ஷாமில் முஹம்மத் இப்னு ஸஈத்
என்று இமாம் நஸாயீ கூறுகிறார்.⏳
🍄ஒரு கருத்து நல்லதாக இருந்தால் அதற்கு ஒரு அறிவிப்பாளர் வரிசையை உண்டாக்க நான் தயங்க மாட்டேன். என்றும் அவர் கூறியுள்ளார்.🍄
📓 تهذيب الكمال 5907 📓
🌺இவரிடமிருந்து அறிவிக்கும் மர்வான் இப்னு முஆவியா நம்பகமானவராக இருந்தாலும் இவ்வாறு இருட்டடிப்பு செய்யக்கூடியவராவார். 🌺
📔تقريب التهذيب 6575📔
🌴எனவே இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியாகும்🌴
🍀ரமழான் மாதத்தில் அமல் செய்வதற்கு ஆர்வமூட்டப்பட்ட வேறு ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம்.🍀
🌴🌴🌴🌴🌴🌴🌴
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
23/06/2016
[25/06 6:05 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 38
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 07
🔦🔭🔭🔭🔦
✏🔬ஸஹீஹானது🔬✏
🍇ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரகத் இருக்கிறது. என்று நபி (ஸல்) கூறினார்கள். 🍇
🍅இதை அனஸ் இப்னு மாலிக் (ரழி) வழியாக 🔮
📚صحيح البخاري 1933 ، 📔صحيح مسلم 1059📚
போன்ற பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.🍅
🌹இதே விடயத்தை
🌴அபூ ஹுரைரா,
🌴இப்னு மஸ்ஊத்,
🌴ஜாபிர்,
🌴இப்னு அப்பாஸ்,
🌴அம்ருப்னுல் ஆஸ்,
🌴இர்பாழ் இப்னு ஸாரியா,
🌴உத்பா இப்னு அப்து,
🌴அபூதர்தா
(ரழியல்லாஹு அன்ஹும்)
ஆகிய ஸஹாபாக்களும் அறிவித்துள்ளார்கள் என்று இமாம் திர்மிதீ கூறுகிறார்கள்.🌹
📗سنن الترمذي 708📗
🌺🌺🌺🌺🌺🌺🌺
🍏 எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் அந்த பரகத்தை பெற்றவர்களாக ஆக்குவானாக.🍏
🌷🌷🌷🌷🌷
ஷுஐப் உமரி பேருவளை
25/06/2016
[14/07 1:02 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 39
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 08
🌳ஸஹர் பற்றிய சில ஹதீஸ்கள்.
🌹🌹🌹🌹🌹🌹
இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனம் இருந்தாலும், சில அறிவிப்பாளர்கள் விடப்படக்கூடிய அளவுக்கு பலவீனமாக இல்லாததாலும், அவற்றின் சில கருத்துக்கள் வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதாலும் இமாம் அல்பானி, ஷுஐப் அல் அர்ணவூத் போன்றோர் சரி காண்கிறார்கள். அல்லாஹு அஃலம்.
1.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது. ஸஹர் செய்யுங்கள். அது சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, ஸுன்னத்தானதுமாகும். ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது ஸஹர் செய்யுங்கள். ஸஹர் செய்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிவானாக.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஸஈத் அல் இஸ்கந்தரீ என்ற ஸஹாபியின் வழியாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
📚 مسند ابن الجعد 3391 ، فضائل رمضان لابن أبي الدنيا 62 ، مسند الحارث 323 ، المجالس العشرة الأمالي للحسن الخلال 43 ، الخامس والتاسع من المشيخة البغدادية لأبي طاهر السلفي 50،221 📚
இவ்வறிவிப்பில் இடம்பெற்றுள்ள بحر بن كنيز என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்கிறார்கள். இமாம் தாரகுத்னீ மத்ரூக் என்கிறார்.
تهذيب الكمال ،تقريب التهذيب 637 ، الكاشف 537 ، الضعفاء والمتروكون للدارقطني 128
இதே விடயம் அலீ (ரழி) வழியாக
حديث أبي القاسم عافية وغيره 137
என்ற கிதாபில் "அளக்கப்பட்ட உணவிலும்" என்று மேலதிகமாக பதிவாகியுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் பலவீனமானவர் .
تهذيب الكمال ، تقريب التهذيب 1029 ، الكاشف 859
அத்தோடு அபூ மஃமர் , ஹாரிஸ் இப்னுல் ஹஜ்ஜாஜ் , உமர் இப்னு புஸைஃ ஆகியோர் யாரென்று அறியப்படாதவர்களாவர்.
لسان الميزان 650 ، 817
2.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது.
இதை ஸல்மான் (ரழி) வழியாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.
المعجم الكبير 6127 ، المشيخة للأنباري ، شعب الإيمان 7114
இதில் இடம் பெறும் அபூ அப்தில்லா அல் பஸரி என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இமாம் தஹபீ கூறுவதாக இமாம் ஹைஸமீ கூறுகிறார்.
مجمع الزوائد 4850
இமாம் முனாவியும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
فيض القدير 3202 ، التيسير 1/439
3.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது.
என்று
موضح أوهام الجمع والتفريق للخطيب 83
இலும்,
ஸஹர் உணவிலும் அளக்கப்பட்ட உணவிலும் அல்லாஹ் பரகத் செய்துள்ளான்.
என்று
موضح أوهام الجمع والتفريق للخطيب 83 ،
فضائل شهر رمضان للمقدسي 46
இலும்
ஸஹர் உணவிலும் ஸரீதிலும் அளக்கப்பட்ட உணவிலும் பரகத் செய்யுமாறு நபியவர்கள் துஆ செய்தார்கள் என்று
الأوسط 6866 ، الصغير 972 ،
இலும் அபூஹுரைரா வழியாக பதியப்பட்டுள்ளது
இதில் இடம் பெறும் أسد بن عيسى رفعين என்பவர் ஷாம் தேச வணக்கவாளியாக இருந்தார்.
இமாம் இப்னு ஹிப்பான் தனது الصفات 12618 இல் يغرب என்கிறார்.
لسان الميزان 1204
இவரைப் பற்றிய வேறு தகவல்கள் இல்லை.
இவரிடமிருந்து அறிவிக்கும்
مزداد أو يزداد بن جميل
என்பவர் வணக்கவாளியாக இருந்தார். என்று இமாம் தஹபீ تاريخ الإسلام 542 இல் குறிப்பிடுகின்றார். அவரைப்பற்றிய வேறு தகவல்கள் இல்லை.
அதன் அறிவிப்பாளர் வரிசையில் வரும் சிலர் பற்றி யாரும் கூறியதாக தெரியவில்லை.
مجمع الزوائد 7879
4.
ஸஹர், ஸரீத் ஆகிய உணவுகளில் பரகத் செய்யுமாறு நபியவர்கள் துஆ செய்தார்கள்.
என்று அபூஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து عطاء என்பவர் அறிவிப்பதாக
الترغيب والترهيب لقوام السنة 1795 ، المقصد العلي للهيثمي 1500
ஆகிய கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
இதை عطاء இடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் இப்னு அபீலைலா என்பவர் பலவீனமானவர். அதாவிடமிருந்து அறிவிக்கும் போது அதிகம் தவறு விடுபவர் என்று இமாம் அஹ்மத் கூறுகிறார்.
மிகவும் மனனக் கோளாறு உள்ளவர் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.
تهذيب الكمال ، تقريب التهذيب 6081 ،
مجمع الزوائد 7877
5.
ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும், கூட்டாக இருப்பதிலும் பரகத் இருக்கிறது.
இதை அபூஹுரைரா ரழி வழியாக இமாம் அபூயஃலா பதிந்துள்ளார்.
المقصد العلي 1501
இதில் இடம் பெறும் அபூ யாஸிர் என்பவர் பலவீனமானவர். பிறரின் ஹதீஸ்களை திருடி அறிவிப்பவராக இருந்தார்.
تهذيب الكمال، تقريب التهذيب 4835 ، مجمع الزوائد 7878
மூஸா இப்னு ஹாரூன் என்ற அறிஞர் இவரை மத்ரூக் என்கிறார்.
ميزان الاعتدال 6009
6.
கூட்டாக இருப்பதிலும், ஸஹர் உணவிலும், ஸரீத் என்ற உணவிலும் பரகத் இருக்கிறது.
இதை அனஸ் (ரழி) அவர்கள் வழியாக المشيخة الصغيرة لابن شاذان 63 இல் பதிவாகியுள்ளது.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் ஹஸன் அல்அதவீ என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவராவார்.
الكامل لابن عدي 474
7.
ஸஹர் உணவில் பரகத் இருக்கிறது. அதை விட்டு விடாதீர்கள். ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது (ஸஹர் செய்யுங்கள்). ஏனெனில் அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஸஈத் அல் குத்ரீ (ரழி) வழியாக இமாம் அஹ்மத் இரு அறிவிப்பாளர் வரிசையூடாக பதிந்துள்ளார்.
அவற்றில் 11086 இலக்க அறிவிப்பில் உள்ள அபூ ரிபாஆ என்பவரைப் பற்றி எந்த அறிஞரும் எதுவும் கூறவில்லை. என்று இமாம் ஹைஸமீ கூறுகிறார்.
مجمع الزوائد 4840
11396 இலக்க அறிவிப்பில் அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் என்ற மிக பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.
இது தவிர அபூஸஈத் அல் குத்ரீ (ரழி) வழியாக உள்ள 11281 இலக்க அறிவிப்பில் மிகவும் மனனக் கோளாறு உள்ள இப்னு அபீலைலா முதல்லிஸ் என்று இனங்காணப்பட்ட அதிய்யா அல் அவ்பீ ஆகிய பலவீனமானவர்கள் இடம் பெறுவதோடு,
"ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் அதில் பரகத் இருக்கிறது" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதே ஸஹாபி வழியாக நஸ்ர் இப்னு தரீப் என்பவரின் அறிவிப்பு
التاسع من المشيخة البغدادية 218
இல் பதிவாகியுள்ளது.
இந்த நஸ்ர் என்பவர் மிக பலவீனமானவர். இட்டுக்கட்டியவர் என்று பிரபலமானவர்.
ميزان الاعتدال 9034
இந்த அறிவிப்பில் " ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது ஸஹர் செய்யுங்கள்" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.
8.
யாஅல்லாஹ்! ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிவாயாக.
என நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்.
இதை அபூஸுவைத் என்ற ஸஹாபி வழியாக
الآحاد والمثاني 2758 ، كشف الأستار للهيثمي 974 ، الكنى للدولابي 217 ، المعجم الكبير للطبراني 845 ، معرفة الصحابة لأبي نعيم 6843
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.
இந்த அறிவிப்பில் வரும் ஹாதம் இப்னு அபீ நஸ்ர் என்பவர் யாரென்று அறியப்படாதராவார்.
بيان الوهم والإيهام لابن القطان 3/413 ، البدر المنير 9/301 ، اتحاف الخيرة للبوصيري 1878 ، المغني للذهبي 1217 ، التقريب لابن حجر 1000
இவரிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம் இப்னு ஸஃத் என்பவரும் பலவீனமானவர் ஆவார்.
التقريب لابن حجر 7294 ، الكاشف 5964
9.
ஸஹர் உணவு ஒரு முஃமினின் சிறந்த உணவாகும். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு உமர் (ரழி) வழியாக
فضائل شهر رمضان لابن أبي الدنيا 61 ، أمالي الجوهري 3 /25
இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
تقريب التهذيب 3865 ، الكاشف 3196
அத்தோடு அப்துல்லாஹ் இப்னு ஷபீப் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
لسان الميزان 4273
10.
நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு உமர் (ரழி) வழியாக
مسند الروياني 1432 ، مجموع فيه مصنفات أبي العباس الأصم 416 ، صحيح ابن حبان 3467 ، الأوسط للطبراني 6434 ، الحليةلأبي نعيم 8/320 ، الترغيب لقوام السنة 1793
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் அத்தவீல் என்பவரை இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறெவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. என்று இமாம் அல்பானி கூறுகிறார்.
الضعيفة 6427, 2591
இமாம் இப்னு ஹஜர் صدوق يخطئ என்கிறார்.
التقريب 3370
11.
ஈத்தம் பழம் சிறந்த ஸஹர் உணவாகும். ஸஹர் செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான்
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை ஸாஇப் இப்னு யஸீத் (ரழி) வழியாக
المعجم الكبير للطبراني 6689
இல் பதிவாகியுள்ளது.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் யஸீத் இப்னு அப்துல் மலிக் என்பவர் பலவீனமானவர்.
تقريب التهذيب 7751 ، الكاشف 6338
அத்தோடு இவரிடமிருந்து அறிவிக்கும் காலித் இப்னு யஸீத் என்பவர் மிக பலவீனமானவர், இட்டுக்கட்டப்பட்டவைகளை அறிவிப்பவர்.
تاريخ الإسلام 123
12.
ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக
ஸஹர் செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான்
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை ஸைத் இப்னு அர்கம் (ரழி) வழியாக
التاسع من المشيخة البغدادية لأبي طاهر 219
இல் பதிவாகியுள்ளது.
இந்த ஸஹாபியிடமிருந்து அறிவிக்கும் அவரது மகன் பற்றிய தகவல்கள் இல்லை.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் காரிஜா என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
التقريب 1612 ، الكاشف 1303
13.
நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை அலீ (ரழி) வழியாக
أمالي الشجري1503
இல் பதிவாகியுள்ளது.
இந்த அறிவிப்பில் முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னுல் அஷ்அஸ் என்பவர் ஷீயாக் கொள்கை சார்ந்தவராகவும், மூஸா இப்னு இஸ்மாயீல் என்பவரூடாக அஹ்லுல் பைத் வழியாக தாம் அறிவிக்கும் கிட்டத்தட்ட ஆயிரம் ஹதீஸ்கள் கொண்ட ஒரு பிரதியை வைத்திருந்தார்.
அவற்றில் தொடர்பு துண்டிக்கப்பட்டவைகளும் முன்கரானவைகளும் இருக்கின்றன.
இந்த மூஸா என்பவரின் நாற்பது வருட அண்டை வீட்டாரான அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த ஹுஸைனிடம் அந்த ஹதீஸ்களை நாம் கூறிய போது அவ்வாறான அறிவிப்புகள் தம்மிடம் இருப்பதாக கூறவில்லை என்றார்.
الكامل لابن عدي 1791
14.
ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது (ஸஹர் செய்யுங்கள்).
என நபியவர்கள் கூறினார்கள்.
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாக
صحيح ابن حبان 3476
இல் பதிவாகியுள்ளது.
இந்த அறிவிப்பாளர் வரிசையில் இம்ரான் இப்னு தாவர் என்பவரை அபூதாவூத், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் "பலவீனமானவர்" என்று கூறியுள்ளனர்.
இதில் வரும் கதாதா قتادة என்பவர் مدلس இருட்டடிப்பு செய்பவர் என்று பிரபலமானவர். "இவர் தனது ஆசிரியரிடம் கேட்டதை உறுதிப்படுத்திக் கூடிய வார்த்தைகளை பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்." என்று இமாம் தஹபீ سير أعلام النبلاء 5/271 இல் குறிப்பிடுகிறார்.ஆனால் இந்த அறிவிப்பில் அவ்வாறு சொல்லாமல் عن என்ற பதத்தைப் பாவித்துள்ளார்.
முஹம்மத் இப்னு பிலால் என்பவர் இம்ரானிடமிருந்து வேறெவரும் அறிவிக்காதவற்றை அறிவிக்கிறார்.
الكامل 1636
15.
இதே செய்தியை அனஸ் (ரழி) வழியாக இமாம் அபூயஃலா 3340 இல் பதிந்துள்ளார்.
அந்த அறிவிப்பில் வரும் அப்துல் வாஹித் என்பவர் முன்கருல் ஹதீஸ் என்று இமாம் புகாரி கூறுகிறார்.
ميزان الاعتدال 5282
எல்லாம் வல்ல இறைவன் நம்மனைவரையும்அவனது அருள் பெற்ற கூட்டத்தில் சேர்ப்பானாக.
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
14/07/2016
[20/07 5:43 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 40
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 09
🔭 பலவீனமானது 🔭
🔬🔦🔦🔦🔬
🌹இரவில் நின்று வணங்குவதற்கு பகலில் (கைலூலா) தூங்குவதைக் கொண்டும், பகலில் நோன்பு நோற்க ஸஹர் சாப்பிடுவதைக் கொண்டும் உதவி பெற்றுக் கொள்ளுங்கள்.🌵
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌹
🚥🚥🚥🚥🚥
1.
🚋இந்த செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) வழியாக நான்கு அறிவிப்பாளர் வரிசை ஊடாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.🚄
📔حديث خالد بن مرداس السراج 18
📗الفوائد المعللة لأبي زرعة الدمشقي 80
📙فضائل رمضان لابن أبي الدنيا 63
📔مختصر قيام الليل للمروزي 1/104
📒المعجم الكبير للطبراني 11625
📓حديث أبي القاسم لابن المهندس 122
📕التاسع من المشيخة البغدادية للسلفي 222
📑سنن ابن ماجه 1683
📗الكامل لابن عدي 4/368
📘المستدرك على الصحيحين للحاكم 1551
📙الأحاديث المختارة للضياء 424
📔صحيح ابن خزيمة 1939
📒الترغيب والترهيب لقوام السنة 1796
📑المخلصيات لأبي طاهر المخلص 516
📓ذيل تاريخ بغداد لابن النجار 33
📕تاريخ أصبهان 2/107
📙شعب الإيمان للبيهقي 4413
🔦இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் زمعة بن صالح என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்.🔦
📚تهذيب الكمال ، تقريب التهذيب 2035📚
🔦இவர் அறிவித்தவை வேறு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டதால் இமாம் முஸ்லிம் அவற்றை துணை ஆதாரமாக பதிந்துள்ளார்.🔦
📖من تكلم فيه وهو موثق للذهبي 116📖
🔦இவரது ஆசிரியரான سلمة بن وهرام என்பவரை அபூஸுர்ஆ, இப்னு மயீன் ஆகிய இமாம்கள் அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும், அவரிடமிருந்து زمعة அறிவிப்பவை கணக்கெடுக்கப்பட மாட்டாது என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.🔦
📙تهذيب الكمال 2515
📒الثقات لابن حبان 8284
📕الكامل لابن عدي 789
🔮இவரை இமாம் அபூதாவூத்,நஸாயீ ஆகியோர் பலவீனமானவர் என்கிறார்கள்.🔮
📗تهذيب الكمال 2474
📘تاريخ الإسلام 135
2.
🎓இதே செய்தி நபியவர்கள் சொன்னதாக தான் கேள்விப்பட்டதாக தாவூஸ் என்ற தாபியீ அறிவித்துள்ளார்.🎓
💎இது பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.💎
📕مصنف عبد الرزاق 7603
📙شعب الإيمان للبيهقي 4412
📘الآداب للبيهقي 676
🌹இது முர்ஸல் எனப்படும் பலவீனமான செய்தியாகும்.🌹
🔮அத்தோடு இவரிடமிருந்து அறிவிக்கும் إسماعيل بن شروس என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் ஆவார்.🔮
📕ميزان الاعتدال 895
📗الكامل لابن عدي 144
3.
💎இதை அபூஹுரைரா வழியாக இமாம் இப்னு அபீ ஹாதம் தனது علل الحديث 701 இல் பதிந்துள்ளார்.💎
🎊இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும்.🎊
مروان الفزاري ، علي بن عبد العزيز
ஆகியோர் مدلس இருட்டடிப்பு செய்பவர்களாவர்.🚪
📱இமாம் இப்னு ஹஜர் مدلس களின் பட்டியலில் மூன்றாவது படித்தரத்தில் இவர்களை சேர்த்துள்ளார். இவ்வாறானவர்கள் தாம் கேட்டதை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்.📱
✏ஆனால் இவர்கள் தாம் கேட்டதை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகிக்கவில்லை.✏
💻அத்தோடு يزيد بن أبي يزيد الجزري என்பவர் யாரென்று அறியப்படவில்லை.
இந்த அறிவிப்பு பற்றி தனது தந்தை இமாம் அபூஹாதமிடம் கேட்டதாகவும், அதற்கவர் "யாரென்று அறியப்படாதவர்கள் இருக்கின்றனர்" என்றார். என இமாம் இப்னு அபீஹாதம் கூறுகிறார்.💻
📘علل الحديث 701📘
💿இந்த அறிவிப்புகளை இமாம் அல்பானி அவர்களும் பலவீனமானவை என்று கூறுகிறார்.💿
📗الضعيفة 2758📗
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
20/07/2016
[27/07 7:43 am] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 41
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 10
🔭 இட்டுக்கட்டப்பட்டது🔭
🔬🔦🔦🔦🔬
🚥பின்வரும் சம்பவம் நேரடியாக ஸுன்னாவுக்கு முரணாக இருக்கிறது. என்றாலும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை தீர்மானிக்கப்படுவது அதன் அறிவிப்பாளர் வரிசையை அடிப்படையாகக் கொண்டு தான் என்ற நல்லறிஞர்களின் வழிமுறையின் படி இதை பதிவு செய்கிறேன். எடுத்த எடுப்பில் கூறப்படும் விடயத்தை ஏதாவதொன்றுக்கு முரண் என்று மறுப்பது வழிகெட்ட சிந்தனையாகும்.🚥
✏✏✏✏✏✏✏
🌠ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் துஸ்துரீ (ரஹ்) அவர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் சாப்பிடும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். ஆனால் ஸுன்னத்தைப் பின்பற்றுவதற்காக ரமழான் மாதத்தில் மட்டும் ஒரு பிடி உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். நோன்பு திறக்க தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்வார்கள்.🌠
🔼🔼🔼🔼🔼🔼
இந்த சம்பவம் ஸஹர் சாப்பிடுவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக கூறப்படுகிறது. தமது வாழ்நாளை நோன்பு நோற்பதிலேயே கழித்த பெரியார்கள் கூட ஸஹரை விடவில்லை எனும் தொனியில் கூறுவார்கள்.
🔮இச்செய்தியை 632 இல் மரணித்த ஸுஹ்ரவர்தீ என்ற பிரபல ஸூபி அறிஞர் தனது عوارف المعارف 144 இல் இவ்வாறு கூறப்படுகிறது என்று பதிந்துள்ளார். உறுதியாக கூறவில்லை.
💾இதனை 386 இல் மரணித்த அபூதாலிப் அல்மக்கீ தனது قوت القلوب இல் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடும் 1205 இல் மரணித்த مرتضى الزبيدي என்பவர் தனது اتحاف السادة المتقين என்ற إحياء علوم الدين உடைய விரிவுரை நூலில் "ரமழான் மாதம் வந்து விட்டால் (ஷவ்வால்) பிறை பார்க்கும் வரை சாப்பிடவே மாட்டார்" என்று கூறுகிறார்.
🚪ஆனால் இவ்வாறு قوت القلوب இல் காண முடியவில்லை.
🚨ஒரு நேரம் சிறிது உணவு உட்கொண்டு விட்டு குறிப்பிட்ட சில நாட்களை தன்னை வருத்தி பசியோடு கழித்து பயிற்சி பெறும் வழமை ஸூபிய்யாக்களிடம் உள்ளது. அதனை தைய்
طي (من طوى يطوي)
என்று அழைப்பர்.
🔰சூபித்துவத்தின் ஆணிவேரே தன்னை வருத்துவது தான் என்பதை அவர்களே கூறியுள்ளார்கள்.
🔎பசி, உலகப் பற்றின்மை விருப்பமானவற்றையும் விட்டு விடுவது ஆகியவை மூலமே தஸவ்வுபை நாம் பெற்றுக் கொண்டோம்
📗الرسالة القشيرية 1/117📗
🍒இதுபோன்ற அவர்களின் கூற்றுக்களை ஹி 1407 இல் மரணித்த إحسان إلهي ظهير என்ற பாகிஸ்தானிய அறிஞர் எழுதிய التصوف - المنشأ والمصادر ، دراسات في التصوف ஆகிய கிதாபுகளில் காணலாம்.
🛀இப்பயிற்சியில் ஈடுபட்டு பதினைந்து தொடக்கம் இருபது மற்றும் ஒரு மாத காலத்தைக் கழித்தவர்கள் பட்டியலில் இவரை قوت القلوب இன் ஆசிரியர் 2/279 இல் கூறியுள்ளார்.
🚩2/280 இல் 23 நாட்கள் கழித்தவர் பட்டியலிலும் கூறுகிறார்.
💡இதை 505 இல் மரணித்த إحياء علوم الدين இன் ஆசிரியரும் 3/83இல் கூறியுள்ளார்.
💥இச்சம்பவத்தின் அடிப்படையை அறிவிப்பாளர் ரீதியாக ஆராய்ந்த போது உஸூலுல் பிக்ஹில் இமாம் ஷாபிஈ உடைய அர்ரிஸாலா என்ற கிதாபின் தரத்தை தஸவ்வுபில் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட الرسالة القشيرية 1/59 இல் அறிவிப்பாளர் வரிசையுடன் பதியப்பட்டுள்ளது.
இதன் ஆசிரியர் 465 இல் மரணித்தவராவார்.💥
🔓அதில் ஸஹ்ல் என்பவர் தனது இளமைக்காலம் பற்றியும் தனது
மாமனார் محمد بن سوار என்பவர் மூலம் தான் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறும் இவர் தான் எடுத்த பயிற்சியை இவ்வாறு கூறுகிறார்.
🔎ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் ஸஹர் நேரத்தில் மாத்திரம் உப்பு, கறி எதுவும் இல்லாமல் ஒரு ரொட்டி சாப்பிடுவேன். பின்பு ஒரு வேளை உணவுடன் மூன்று நாட்கள் வரை இருந்தேன். பின்னர் 5, 7, என்று 25 நாட்கள் வரை நீடித்தேன். இவ்வாறு இருபது வருடங்களாக இருந்தேன். என்கிறார்.🔓
🔇இந்த செய்தியை அறிவிக்கும் உமர் இப்னு வாஸில் என்பவரும்
அவரிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ் இப்னு லுஃலுஃ என்பவரும்
இட்டுக்கட்டுவார்கள் என்று சந்தேகிக்கப் படக்கூடிவர்களாவர்.
📘لسان الميزان 959📘
👑நான் நபிமார்களுக்கு முத்திரையானவன். அலீ வலிமார்களுக்கு முத்திரையானவர் என்று நபியவர்கள் சொன்னதாக வரும் செய்தியை இவர்கள் தான் இட்டுக்கட்டியுள்ளார்கள்.
📖تاريخ بغداد 5464📖
🌎ஸஹ்ல் என்பவர் ஹதீஸ்களை அறிவிக்கும் ஒரு ராவியாக இருப்பதால் அவர் பற்றி அறிவிப்பார்கள் பற்றிய கிதாபுகளில் கூறப்பட்டாலும் இந்த செய்தி கூறப்படுவதில்லை. மாறாக ஸூபிகளுடைய கிதாபுகளில் மட்டுமே காணலாம்.
🍜இச்செய்தி பற்றி அவரது நெருங்கிய மாணவர் இப்னு ஸாலிமிடம் "இவ்வாறு கூறப்படுகிறதே!" என்று கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளிக்காமல் " அவர் சாப்பாட்டை விடவில்லை. சாப்பாடு தான் அவரை விட்டது" என்று பதிலளிக்கிறார்
📕اللمع للطوسي 269📕
🍝70 நாட்கள் வரை சாப்பிடாமல் இருப்பார் என்றும் அவர் சாப்பிட்டால் பலவீனமடைவார். பசித்திருந்தால் திடகாத்திரமாக இருப்பார் என்றும் اللمع للطوسي 406 இல் பதிவாகியுள்ளது.
இதை அறிவிக்கும் المقحى ، طلحة العصائدي ஆகியோர் யாரென்று அறியப்படவில்லை.
💯எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும்.💯
💡💡💡💡💡
இந்த ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் என்பவர் ஸூபியாக இருந்தாலும் ஹதீஸ் துறையில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
🌷ஒருவர் எது வரை ஹதீஸை கற்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போது "மரணம் வரைக்கும் கற்று, அவற்றை எழுதி எஞ்சிய மையை அவரது கப்ரில் கொட்டப்பட வேண்டும்." என்றார்.
🍒"யார் இம்மையையும் மறுமையையும் நாடுகிறாரோ அவன் ஹதீஸைக் கற்றுக் கொள்ளட்டும். அதில் ஈருலகத்தின் பலன்கள் இருக்கின்றன." என்றார்.
இவ்வாறு தான் முன்னைய ஸூபி அறிஞர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றுள்ளவர்கள் மடையர்களாகவும் வீணர்களாகவும் சோம்பேறிகளாகவும் சாப்பிடுவதை நோக்கமாகக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
📒تاريخ الإسلام 280📒
🍹இது போக 🍹
🍶இவ்வாறு தன்னை வருத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது இஸ்லாத்தின் போதனை அல்ல.
💈ஹிந்து பௌத்த கிறிஸ்தவ துறவிகளிடமிருந்து வந்தவைகள் ஆகும்.
🏁தேவையானளவு தூக்கம்😴 சாப்பாடு🍞 ஓய்வு 🛀ஆகியவற்றை இஸ்லாம் அனுமதித்துள்ளது.
🌟🌟அல்லாஹ் கடமையாக்காத இவ்வாறான அமல்களை கஷ்டப்பட்டு செய்து நகரத்துக்கு செல்லும் கூட்டத்தை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக. 🌟
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
27/07/2016
[31/07 10:35 am] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 🌙தொடர் 42 🌎 ஹஜ் 01🌙
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔭 இஸ்ராஈலிய்யாத்🔭
🔬🔦🔦🔦🔬
✒ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்திலிருந்து இறக்கிய போது அவர்களுடன் தனது வீட்டையும் இறக்கி,
" ஆதமே! நான் உம்முடன் எனது வீட்டையும் இறக்குகிறேன். என்னுடைய அர்ஷை சுற்றுவது போல் இதை சுற்றி தவாப் செய்யப்பட வேண்டும். மேலும் எனது அர்ஷை நோக்கி தொழப்படுவது போல் இதை நோக்கி தொழப்பட வேண்டும். என அருளினான்.🏁
🌊பின்னர் நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது இவ்வாலயம் உயர்த்தப்பட்டது. அதன் பின் நபிமார்கள் அவ்விடத்தை சுற்றி தவாப் செய்தார்களே தவிர ஆலயம் அங்கிருக்கவில்லை.🌊
🌇இதற்குப் பிறகு தான் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அவ்விடத்தில் இறையில்லம் கட்டும்படி அல்லாஹ் உத்தரவிட்டான். அத்துடன் அது இருந்த இடத்தின் அடையாளத்தையும் தானே அறிவித்துக் கொடுத்தான். அவர் حراء ، ثبير ، لبنان ، الطور ، الجبل الأحمر ஆகிய ஐந்து மலைகளில் மூலம் அதை கட்டினார். 🌃
🚥🚥🚥🚥🚥
🔎இச்செய்தியை அபூகிலாபா என்பவர் கூறியதாக,
📕أخبار مكة للأزرقي 1/63
📓العرش لمحمد بن عثمان بن أبي شيبة 40
📗تفسير الطبري 2/551
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது. 🔎
✒இந்த செய்தியை இந்த அபூ கிலாபா என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாகவும் அறிவித்துள்ளார். 💎
📔تفسير الطبري 2/550
📒المعجم الكبير للطبراني 14157
✒இதே செய்தியை கதாதா என்பவர் கூறியதாக
تفسيرالطبري 2042
مصنف ابن أبي شيبة 9096
இல் பதிவாகியுள்ளது.
🎀இந்தியாவில் இறக்கப்பட்ட ஆதம் நபியின் கால்கள் பூமியிலும் தலை வானத்திலும் இருந்ததாகவும், மலக்குகள் வேண்டுதலின் படி 60 முழமாக அவரது உயரத்தை குறைத்ததாகவும், தான் இது வரை கேட்டுக் கொண்டிருந்த மலக்குகளின் தஸ்பீஹ் சத்தத்தை கேட்க முடியவில்லையே என அல்லாஹ்விடம்முறையிட்ட போது தான் இவ்வாறு ஆதம் நபிக்கு கூறியதாகவும் இவ்வறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.🎀
✒இதே செய்தியை عطاء بن أبي رباح கூறியதாக
📙مصنف عبد الرزاق 9090
📘تفسير الطبري 2041
இல் பதிவாகியுள்ளது. 🍇
✒இந்த عطاء என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாகவும் அறிவித்துள்ளதாக
📕المعجم الكبير 14158
இல் பதிவாகியுள்ளது. 🌇
✨✨✨✨✨
🌹முதன்முதலில் கஃபாவை நிர்மாணித்தது யார்? என்பதில் ஆறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.🌹
1. ஆதம் (அலை) அவர்களுக்கு முன்னரே அல்லாஹ் இறக்கிவிட்டான். பச்சை நிற மரகதத்தினாலான இரண்டு கதவுகளும் சுவனத்து விளக்குகளும் இருந்தது.
📕مثير العزم الساكن لابن الجوزي 303 ،
நபியவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் வழியாக வரும் இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் محمد بن زياد الميموني என்பவரை "பொய்யர், இட்டுக்கட்டியவர்"என்று முஹத்திஸீன்கள் கூறுகிறார்கள்.
📗تقريب التهذيب 5890
✒இதை நபியவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாகவும் வந்துள்ளது.
📔دلائل النبوة للبيهقي 2/45
🍒இது "இப்னு லஹீஆ என்பவர் தனியாக அறிவித்தது" என இமாம் பைஹகி கூறுகிறார். இதை இமாம் இப்னு கஸீர் கூறி விட்டு "அவர் பலவீனமானவர்" என்கிறார்.
📒البداية والنهاية 2/299
2.
மலக்குகள் கட்டினார்கள்.
📙مثير العزم لابن الجوزي 204
3.
ஆதம் (அலை) அவர்களுடன் அல்லாஹ் இறக்கினான். (மேலே கூறப்பட்டதைப் போல)
4.
ஆதம் (அலை) அவர்கள் கட்டினார்கள்.
📚تفسير الطبري 2037 ، 2038 ، 📒دلائل النبوة 2/44
5.
ஷீத் (அலை) கட்டினார்கள்
6.
இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள்.
✨✨✨✨✨
🌇இந்த கருத்துக்கள் பற்றி இமாம் இப்னு கஸீர் பின்வருமாறு கூறுகிறார் :
💍இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்னர் கஃபா கட்டப்பட்டது பற்றி நபியவர்கள் சொன்னதாக எந்த ஸஹீஹான செய்திகளிலும் வரவில்லை.
💍ஆதம் நபியின் காலத்தில் கட்டப்பட்டதாக வரும் செய்திகள் வேதக்காரர்களிடம் இருந்து பெறப்பட்டவையே.
💍முதன்முதலில் கஃபாவை நிர்மாணித்ததும் கட்டியதும் இப்ராஹீம் நபி என்றே அல் குர்ஆன் கூறுகிறது.
அந்த இடம் அதற்கு முன் கண்ணியப்படுத்தப்பட்டது.
💍இவ்வாறான செய்திகளை நாம் நம்பவோ அல்லது மறுக்கவோ முடியாது.
💍நபியவர்கள் சொன்னதாக ஸஹீஹாக வந்தால் ஏற்றுக் கொள்வோம்.
تفسير ابن كثير 1/297 ، 2/78
البداية والنهاية 1/163 ، 2/2989
👑இதுபோன்ற கருத்தை இமாம் தபரியும் கூறியுள்ளார்.
تفسير الطبري 3/64
👑இக்கருத்தையே பல சமகால அறிஞர்களும் சரி காண்கிறார்கள்.
الشيخ محمد صالح المنجد ، موقع الإسلام سؤال وجواب 1903
الشيخ عبد العزيز بن باز
فتاوى اللجنة الدائمة / رقم الفتوى 3056
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
31/07/2016
🌙தொடர் 43 🌎 ஹஜ் 02🌙
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷
🔭 பித்துப் பிடித்தவரின் கதை🔭
🔬🔦🔦🔦🔬
🍈ஒருவர் ஏதாவதொரு விடயத்தில் அளவுக்கு அதிகமாக லயிக்கும் போது அதனாலேயே பித்துப் பிடித்து அலைவதைப் பார்க்கலாம். 🍈
🌌சூபித்துவத்தின் அடிநாதமான
" இறைவனை அடைய தன்னை வருத்திக் கொள்ளல் " என்ற கோட்பாட்டின் படி, இடம் உடை உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளை முற்றிலுமாகத் துறந்து மாற்று மதத் துறவிகளையும் மிஞ்சுமளவிற்கு சில சூபிகள் தம்மைத் தாமே வருத்திக் கொண்டதை வரலாறு நெடுகிலும் காணலாம். 🌌
💖சிலர் சுய தேவைகளையும் துறந்து இறைவனைத் தேடி பாலைவனம் வனாந்திரம் என்று அலைந்து திரிந்து இறுதியில் பைத்தியம் முத்தியவராக மாறிவிட்டனர்.
இப்படியானவர்களை சூபிகள் இஷ்க் என்னும் இறை காதல் வயப்பட்டவர்கள், இறை காதலர்கள் என்றெல்லாம் அழைப்பார்கள். 💖
🍑இன்னும் சிலர் தன்னை ஒரு பாவி என்று மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு
இறைவனை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக அளவுக்கதிகமாக கடுமையாக வழிபாடுகளில் ஈடுபட்டனர். இவர்களும் இறுதியில் பெரும்பாலும் பித்துப் பிடித்து அலைந்தனர். 🍑
🌳இவர்களுக்கு (மஜ்னூன்) அல்லது (மஜ்தூப்) என்ற சிறப்புப் பட்டம் ??? வழங்கப்படுகிறது. அதாவது பைத்தியக்காரர் அல்லது பித்துப் பிடித்தவர்.🌳
🍓இவர்களை இறை முக்தி பெற்றவர்களாகவும் மஃரிபத்தை அடைந்த ஞானிகளாகவும் சூபிகள் கருதுவர்.🍓
🌴கலாநிதி தீன் முஹம்மத் எனும் இலங்கையின் சமகால சூபி அறிஞர் 27ஆகஸ்ட் 2009 ஆம் தேதி வீரகேசரி வெளியீடான‘விடிவெள்ளி’பத்திரிகையில் வெளியான நேர்காணலில்
இவ்வாறு கூறுகிறார் :
சிலவேளை,ஆத்மீகத்தில் மிகவும் லயித்துப் போகின்றதொரு நிலையிலும், சிலர் தமது சுய புத்தியை இழந்து விடுவதுண்டு. இதை அரபியில் ‘மஜ்தூப்’என்பார்கள். இதுகூட, சித்த சுவாதீனமற்றதொரு நிலைதான். (முற்றும்) 🌴
🌺இவர் தனது கலாநிதிப் பட்டதுக்காக ‘இறை காதல்’எனும் தலைப்பிலான ஆய்வை முன்வைத்தவர் ஆவார். 🌺
🎓இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஸஃதூன் மஜ்னூன் என்பவர். இவரை சூபிகள் மிகப் பெரிய அந்தஸ்தில் வைக்கின்றனர். 🎓
🎇இவ்வளவுக்கும் இவர் ஒரு பைத்தியக்காரர். இவர் நல்ல கவிதைகளையும் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். எனவே ஓரளவு தெளிந்த பைத்தியக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.🎇
📗فوات الوفيات لمحمد صلاح الدين 2/48
📘الوافي بالوفيات للصفدي 15/118
📙عقلاء المجانين لابن حبيب النيسابوري
⚠இஸ்லாம் தொடர்ந்து ரமழான் ஒரு மாதம் மட்டுமே நோன்பிருக்க அனுமதித்திருக்கும் போது இவர்
தொடர்ந்து அறுபது வருடங்கள் நோன்பிருந்தார். இதனால் அவருக்கு புத்திக் கோளாறு ஏற்பட்டு விட்டது. மக்கள் அவரை பைத்தியக்காரர் என்று அழைத்தார்கள். ⚠
📔المنتظم في تاريخ الملوك والأمم لابن الجوزي 1037
📒صفة الصفوة له 1/570
📑البداية والنهاية 13/675
📓النجوم الزاهرة في ملوك مصر والقاهرة لابن تغري بردي2/133
இப்படிப்பட்டவரின் சம்பவமே இது. சம்பவத்தின் சுருக்கம்.
🔮துன்னூன் மிஸ்ரி என்பவர் கூறுகிறார்:
🎆நான் ஒரு முறை தவாப் செய்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் பின்வருமாறு துஆ செய்தார்.🌴
🎆என்னுடைய இரட்சகனே அடியேன் உனது மிஸ்கீனான அடியான்.
உன்னுடைய தர்பாரிலிருந்து வெளியேற்றப்பட்டவன் ஆவான்.
உன்னுடைய வாசலிலிருந்து விரண்டு ஓடியவன் ஆவான். 🌴
🎆யா அல்லாஹ் எது உனக்கு மிகவும் சமீபித்திருக்கிறதோ அதை உன்னிடம் கேட்கிறேன்.
எது உனக்கு எல்லாவற்றையும் விட மிகப் பிரியமானதாக இருக்கிறதோ அந்த வணக்கங்களை உன்னிடம் கேட்கிறேன். 🌴
🎆யா அல்லாஹ் உன் அன்பு நேசர்களின் பொருட்டாலும் அன்பியாக்களின் வஸீலாவைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.
உன் அன்பு பானத்தின் ஒரு கோப்பையை எனக்கு அருந்தக் கொடுப்பாயாக.🌴
🎆உன்னுடைய மஃரிபத்தைக் கொண்டு எனது நெஞ்சில் இருந்து அறியாமை எனும் திரைகளை அகற்றி விடுவாயாக.
அதனால் நான் ஆசையெனும் சிறகடித்து உன் வரை பறந்து வந்து விடுவேன். 🌴
🎆மேலும் இர்பானுடைய தோட்டங்களில் உன்னிடம் தனிமையில் ரகசியம் பேசுவேன்.
என்று கூறி கண்ணில் விட்டு அழுதார். 🌴
⚠பின்னர் சிரித்தவராக திறந்த வெளியில் செல்ல ஆரம்பித்தார். இவர் இறை நேசத்தில் முக்தி பெற்றவராகவோ பைத்தியம் முத்தியவராக இருக்க வேண்டும் என்று எண்ணியவனாக அவரைப் பின்தொடர்ந்தேன்.⚠
🌺"ஏன் என்னை பின்தொடர்கிறீர். உமது வேலையைப் பாரும்" என்றார்.
"உமது பெயர் என்ன?" என்று நான் கேட்டதற்கு, "அப்துல்லாஹ் அல்லாஹ்வின் அடிமை" என்றார். தந்தையின் பெயரைக் கேட்டபோதும், "அப்துல்லாஹ்" என்றார். 🌺
🍑"எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்பது தெரிந்த உண்மையே. அவர்களில் உமது பெயர் என்ன?" என்று கூறும் என்றதும் "என் தந்தை எனக்கு சாதூன்" என பெயரிட்டார். என்றார். "சாதூன் மஜ்னூன் என்று பிரபலமானவரா?" என்று கேட்டதற்கு "ஆம் அவனே தான்" என்றார். 🍑
💖"தாங்கள் எந்த நல்லடியார்களின் பொருட்டால் துஆக் கேட்டீர்கள். ?" என்று கேட்டதற்கு "இஷ்க் என்னும் இறை நேசத்தை தன் வாழ்வின் இலட்சியமாக ஆக்கிக் கொண்ட ஒருவன் எவ்வாறு விரைவானோ அது போல் அவர்கள் அல்லாஹ்வின் பால் விரைவார்கள். தம் மனதை ஒன்றில் பறி கொடுத்த ஒருவரைப் போல் அவர்கள் உலகிலிருந்து விலகியிருப்பார்கள்." என்று கூறிவிட்டு💖
🌳 " ஏ துன்னூன் நீர் மஃரிபத்துக்குரிய காரண காரியங்களை அறிவிப்பதாக கேள்விப்பட்டேனே." என்றார்.
"ஆம் தங்களது அறிவு ஞானங்களிலிருந்து நான் பயனடைய விரும்புகிறேன்." என்றேன். 🌳
🎇 அரபியில் இரு கவிதைகளைக் கூறினார்.
🔮"ஆரிபீன்களின் உள்ளம் சதாவும் இறை தியானத்தின் தோட்டத்தில் திளைத்திருக்கும். எது வரையென்றால் இறுதியாக அவனருகில் ஒரு தங்குமிடத்தை ஆக்கிக் கொள்வார்கள். 🔮
💞தனது இறை அன்பில் எந்தளவு தூய்மையான எண்ணத்துடன் ஈடுபடுவார்கள் என்றால் அவர்களை அவன் அன்பிலிருந்து எவ்வஸ்துவும் அகற்றிவிட முடியாது." 💞
என்றார்.
🌺ஹி 190 இல் மரணித்த ஸஃதூன் என்பவர் பற்றி கூறப்படும் வரலாற்று நூல்களிலோ அல்லது ஸூபிகள் பற்றி நூல்களிலோ (நான் வாசித்த வரை. அல்லாஹு அஃலம் ) இந்த சம்பவத்தைக் காண முடியவில்லை. 🌺
🌌உ+ம்
المنتظم لابن الجوزي ، البداية والنهاية لابن كثير ، فوات الوفيات ، الوافي بالوفيات، حلية الأولياء لأبي نعيم ، طبقات السلمي ، طبقات الشعراني.🌌
🍈406 இல் மரணித்த ابن حبيب النيسابوري என்பவர் தனது عقلاء المجانين ) ஓரளவு தெளிந்த பைத்தியக்காரர்கள் என்ற கிதாபில் 1/60 பதிந்துள்ளார். 🍈
🌴துன்னூன் என்பவர் கூறியதாக கூறும் இவர் தனக்கும் அவருக்குமிடையிலான அறிவிப்பாளர் வரிசையை கூறவில்லை. ஒரு வேளை இச்சம்பவம் மக்களிடம் பரவலாக பேசப்பட்டதால் அதை பதிந்திருக்கலாம். மேலும் இவரை இமாம் ஹாகிம் குறை கூறியுள்ளார் என்று السجزي அறிவித்துள்ளதாக இமாம் தஹபீ سير أعلام النبلاء 3768 இல் குறிப்பிடுகிறார். 🌴
🚥எனவே இது இட்டுக்கட்டப்பட்டதாகும்🚥
🍑இவ்வாறான கட்டுக்கதைகளை விடுத்து ஸஹீஹான ஹதீஸ்களைத் தேடிப் படித்துப் பின்பற்றுவோம்.🍑
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி பேருவளை
06/08/2016
No comments:
Post a Comment