Wednesday, June 08, 2016

💍முன்னோர் வாழ்வில்💍தொடர்

💍முன்னோர் வாழ்வில்💍01

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🍀அபூ பக்ர்  (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும்போது அவரிடம் நாற்பதாயிரம் திர்ஹங்கள் இருந்தன.🍀

🌿மரணிக்கும் போது ஒரு தீனாரையோ திர்ஹத்தையோ விட்டுச் செல்லவில்லை.🌿

⭐🔷⭐🔷⭐🔷⭐🔷⭐🔷⭐
ஆதாரம் :
அபூதாவூத் தயாலஸீ -- ஸுஹ்த் 58,
அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் -- ஸுஹ்த் 136
இப்னு ஸஃத் -- தபகாத் 3/146
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

[13/05 3:41 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍02

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🍀அபூபக்ர் (ரழி ) அவர்கள், அதிகம் நோன்பு நோற்பவர் என்பதாலோ, அதிகம் தொழுபவர் என்பதாலோ மனிதர்களில் சிறந்தவராக இருக்கவில்லை.  உள்ளத்தில் இருந்த தூய எண்ணத்தினால் தான் அவர் சிறந்து விளங்கினார். என்று பக்ர் இப்னு அப்துல்லாஹ் என்ற அறிஞர் கூறுகிறார்.🍀

தயாலஸீ -- ஸுஹ்த் 59
அஹ்மத் -- பழாஇலுஸ் ஸஹாபா 118
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
[13/05 4:14 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍03

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🍀உமர்  (ரழி) அவர்கள் எனது மடியில் படுத்துக் கொண்டிருந்த போது "எனது தலையை தரையில் வை" என்றார்கள். எனது போர்வையை  சுருட்டி தலைக்கு கீழே வைக்க முற்பட்டபோது "தலையை தரையில் வை" என்று கூறி விட்டு " அல்லாஹ் என்னை மன்னிக்கா விட்டால் எனது நிலை என்னவாகுமோ? என்று கூறினார்கள்.
🔷🌾🔷🔷🔷🌾🔷🔷🔷🔷
தயாலஸீ -- ஸுஹ்த் 67
உமர் -- தாரீகுல் மதீனா 3/818

🌷ஷுஐப் உமரி 🌷
[14/05 8:39 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍04

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷
                 🌏அச்சம்🌏

உமர்  (ரழி) அவர்கள் குத்தப்பட்டு காயமுற்ற நிலையில் "  என்னிடம் இந்தப் பூமி நிறைய தங்கம் இருந்தால், அதை அல்லாஹ்வின்  தண்டனைக்குப் பகரமாக அதைக் காணும் முன்பே அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்து விடுவேன்." என்றார்கள்.

இன்னொரு அறிவிப்பில் "பூமியில் உள்ள அனைத்தும் எனக்கு சொந்தமானதாக இருந்தால்" என இடம் பெற்றுள்ளது.

🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷
அபூதாவூத் -- ஸுஹ்த் 70,71
உமர் -- தாரீகுல் மதீனா  3/909
அபூநுஐம் -- ஹில்யா 1/52

🌷ஷுஐப் உமரி 🌷
[14/05 7:28 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍05

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அனஸ் இப்னு மாலிக்  (ரழி ) அவர்கள் கூறுகிறார்கள். நான் உமர் (ரழி) அவர்களுடன் ஒரு தோட்டத்திற்கு சென்றேன். ஒரு சுவர் எங்களைப் பிரித்த போது " முஃமின்களின் தலைவராகிய உமரே. அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள். இல்லாவிட்டால் அவன் உன்னை தண்டிப்பான்."  என்று தனக்குள் சொன்னதை நான் கேட்டேன்.
 🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் -- ஸுஹ்த் 73
மாலிக் -- முவத்தா 2/992
அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் 144
இப்னு ஸஃத் -- தபகாத் 3/221
இப்னு அஸாகிர் -- தாரீகு திமிஷ்க் 13/112

🌷ஷுஐப் உமரி 🌷
[15/05 6:24 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍06

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அனஸ் இப்னு மாலிக்  (ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்.
உமர் (ரழி) அவர்களிடம் களவெடுத்து மாட்டிக் கொண்ட ஒரு வாலிபர் கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன் களவெடுத்ததில்லை என்றார் அந்த வாலிபர். அப்போது உமர் (ரழி) அவர்கள் " அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ பொய் சொல்கிறாய். முதல் முறையாக தவறு செய்பவனை அல்லாஹ் ஒரு போதும் காட்டிக்கொடுக்க மாட்டான்." என்று கூறினார்கள்.
🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் -- ஸுஹ்த் 74

🌷ஷுஐப் உமரி 🌷
[15/05 8:52 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍07

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அனஸ் இப்னு மாலிக்  (ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்.
உமர் (ரழி) அவர்கள் கலீபாவாக இருக்கும் போது அவரது இரு புஜங்களுக்கு மத்தியில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக நான்கு ஒட்டுக்கள் போடப்பட்டிருந்ததைக் கண்டேன்.
🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் -- ஸுஹ்த் 75
மாலிக் -- முவத்தா 918
இப்னுல் முபாரக் -- ஸுஹ்த் 208
இப்னு ஸஃத் -- தபகாத் 3/249
ஹன்னாத் -- ஸுஹ்த் 701
இப்னு அபீஷைபா 13/264,265
இப்னு அஸாகிர் -- தாரீக் 13/109

🌷ஷுஐப் உமரி 🌷
[15/05 3:26 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍08

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

"இவ்வுலக வாழ்வை மறுமையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முயலின் ஒரு பாய்ச்சலுக்கு ஒப்பானது"  என்று உமர் (ரழி) கூறினார்கள்.
🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் --- ஸுஹ்த் 76

🌷ஷுஐப் உமரி 🌷
[16/05 12:09 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍09

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🎀ஒரு மனிதனின் தொழுகையையும், நோன்பையும் வைத்து (மாத்திரம்) அவனை (நல்லவனென்று) எடைபோட வேண்டாம்.

🚥பேசினால் உண்மை பேசுகிறானா?
🚥நம்பினால் நாணயமாக நடக்கிறானா?
🚥ஏதாவதொன்றை செய்யும் போது பேணுதலாக நடந்து கொள்கின்றானா?
என்று பார்த்து முடிவு செய்யுங்கள். என்று உமர் (ரழி) கூறினார்கள்.🎀
🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் -- ஸுஹ்த் 80

🌷ஷுஐப் உமரி 🌷
[16/05 10:06 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍10

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அபூபக்ர்  ( ரழி) தனது குத்பாவில் பின்வருமாறு கூறினார்கள்.

🌼(எப்போது முடியும்  என்ற விடயம் பற்றிய) அறிவு உங்களுக்கு மறைக்கப்பட்ட ஒரு தவணையில் வாழ்கின்றீர்கள். முடியுமென்றால்  அல்லாஹ்வுக்குரிய அமல்களைச்  செய்வதிலேயே  அந்தத் தவணையை கழியுங்கள். அல்லாஹ்வின் உதவியால் தான் அ(ந்தப் பாக்கியத்)தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்🌼

🌻சிலர் தங்களது தவணையை தமக்குப் பாதகமாக அமைத்துக் கொண்டார்கள். அதனால் அவர்களைப் போன்று நீங்களும் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ் தடுத்திருக்கிறான். 🌻

🍇"அல்லாஹ்வை மறந்தவர்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டாம். அவர்களையே அவர்களுக்கு மறக்கடித்து விட்டான்." ( ஹஷ்ர்/19)🍎

🌾உங்களுக்குத் தெரிந்த சகோதரர்கள் எங்கே? தாம் முற்படுத்தி வைத்தவற்றின் மூலம் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ தனியாக  அனுபவித்துக் கொண்டிருக்கன்றார்கள்.🌾

🍀நகரங்களையும் அவற்றைச் சுற்றி பாதுகாப்பான கோட்டைகளையும் அமைத்து, அடக்கியாண்டு கொண்டிருந்தவர்கள் எங்கே?
கல் மற்றும் குன்றுகளுக்குக் கீழே புதைந்து விட்டார்கள்.🍀

🌹அல்லாஹ்வின் இந்த வேதத்தின் அற்புதங்கள் அழிந்து விடாது. இருள் சூழ்ந்த (மறுமை ) நாளுக்காக அதிலிருக்கும் ஒளியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவனுடைய வேதத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் உபதேசம் பெற்றுக் கொள்ளுங்கள். 🌹

🌸அல்லாஹ் ஜகரிய்யா ( அலை ) அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் பின்வருமாறு புகழ்ந்து கூறுகிறான்.🌸

🍑" அவர்கள் நன்மையானவற்றை விரைந்து செய்வார்கள். அச்சத்தோடும் ஆசையோடும் எம்மை அழைப்பார்கள். எம்மைப் பயந்தவர்களாகவும் இருந்தார்கள்."
( அல் அன்பியா 90 )🍑

🍋அல்லாஹ்வின் திருமுகம் நாடப்படாத எந்தப் பேச்சிலும்,  அல்லாஹ்வுக்காக செலவளிக்கப்படாத எந்த சொத்திலும்,
அறியாமை அதிகம் இருப்பவனிடத்திலும் பழிப்பவர்களின் பழிப்புக்கு பயப்படக் கூடியவனிடத்திலும் எந்த நலவும்  இருக்காது.🍋

💐🌻🌼🌸🌹🌷💐

அபூதாவூத் --- ஸுஹ்த் 50
தபரானீ --- அல் கபீர் 1/60
அபூபக்கர் நுஐம் -- ஹில்யா 1/36

🌷ஷுஐப் உமரி 🌷
[17/05 5:43 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍11

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அபூபக்ர்  (ரழி) அவர்கள் "இதுதான் என்னை அழிவுக்கு உள்ளாக்கக் கூடியது." என்று தமது நாவைப் பிடித்து சொன்னார்கள்.

அபூதாவூத் -- ஸுஹ்த் 55
இப்னுல் முபாரக் -- ஸுஹ்த் 125
இப்னு அபீஆஸிம் - ஸுஹ்த் 20
வகீஃ - ஸுஹ்த் 287
அஹ்மத் -- ஸுஹ்த் 135,136
ஹன்னாத் - ஸுஹ்த் 1093
மாலிக் - முவத்தா 988
பைஹகீ - ஷுஅப் 4/4990

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி 🌷
[21/05 4:43 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍12

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🌼அபூபக்ர் (ரழி) அவர்களும் இருக்கக்கூடிய ஒரு படைக்குத் தளபதியாக  அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்களை நியமித்து  ذات السلاسل  என்ற யுத்தத்திற்கு நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். 🍃
செல்லும் வழியில் எதிர்ப்படும் முஸ்லிம்களையும் கூட்டிச் செல்லுமாறு பணித்திருந்தார்கள்.🌼

🌹 அபூபக்ர்  (ரழி) அவர்களும் இருந்த ஒரு படைக்கு அம்ருப்னுல் ஆஸ் தலைமை தாங்கினார் என்று ஷாம் வாசிகள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். எங்களைக் கடந்து செல்லும் போது நாங்களும் சேர்ந்து கொண்டோம்.🌹

🌻யாருடனாவது சேர்ந்து செல்ல வேண்டுமே என்று அபூபக்ர்  (ரழி) உடன் சேர்ந்து கொண்டேன். அவரிடம் فدك பதக் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு போர்வை இருந்தது. வாகனத்தில் இருக்கும் போது குச்சிகளால்  அவர் இணைத்து போர்த்திக் கொள்வார். நான் ஏறும் போது நான் அதை
அணிந்து கொள்வேன். 🌻

🌳அதை هوازن ஹவாஸின் கோத்திரத்தார் அவருக்கு இரவலாக கொடுத்திருந்தனர். 🌷குச்சிகளால்
இணைத்து ஆடையை அணிபவரா ரஸூலுல்லாஹ்வுக்கு பின்னர் தலைவராகப் போகிறார்.🌷 என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். 🌳

🍁யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் " அபூபக்ரே! உம்முடன் நான்  சேர்ந்திருக்கிறேன். ஸஹாபாக்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. நினைத்தவுடன் என்னால் மதீனாவுக்கு வர முடியாது. எனக்குப் பயன் தரக்கூடிய ஏதாவதொன்றை சொல்லித் தாருங்கள்." என்றேன்.🍁

🌺அதற்கவர் "நீர் கேட்டிருக்கா விட்டாலும் நான் செய்திருப்பேன். அல்லாஹ்வை வணங்கு. அவனுக்கு எதையும் இணையாக்க வேண்டாம். கடமையான தொழுகையை நிறைவேற்று. கடமையான ஸகாத்தை கொடுத்து விடு. ரமழானில் நோன்பு இரு. பைத்துல்லாஹ்வை ஹஜ் செய். இருவருக்கு தலைவராக இருக்க வேண்டாம்." என்றார்.🌺

🍑அல்லாஹ்வை வணங்குதல், தொழுவதை நான் அறிவேன். இருவருக்கு தலைவராக இருக்க வேண்டாம் என்றால் என்ன? தலைமைத்துவம் மூலம் மக்களுக்கு நலவும் சிறப்பும் தானே கிடைக்கும்." என்று கேட்டதற்கு,🍑

🌾"நீ விளக்கம் கேட்டு விட்டதால் ( பதில் சொல்ல) முயற்சிக்கிறேன். விரும்பியோ விரும்பாமலோ மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அநியாயத்திலிருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாத்து விட்டான். எனவே,  அல்லாஹ்வின் பாதுகாப்பில் அவர்கள் இருக்கின்றார்கள்.🌾

🌱 உங்களில் யாராவது தாம் செய்துள்ள உடன்படிக்கையை மீறினால் அல்லாஹ்வின் உடன்படிக்கையையே மீறுகிறார்.  உங்களில் ஒருவர் தனது அண்டை வீட்டாரின் சிறிய ஆட்டையோ ஒட்டகத்தையோ  அநியாயமாக எடுத்துக் கொண்டு அவருடனே கோபித்துக் கொண்டிருப்பார். அல்லாஹ் அண்டை வீட்டாரின் பக்கம் இருக்கின்றான்."
என்று கூறினார்கள். 🌱

🌹பின்னர் எமது வீடுகளுக்கு சென்று விட்டோம். நபியவர்கள் மரணித்ததன் பிறகு அபூபக்ர் தலைவராகி விட்டார் என்று கேள்விப்பட்டேன்.
தலைமைத்துவத்தை விட்டும் என்னை தடுத்தவரே தலைவராகி விட்டாரா. (இது பற்றி விசாரிக்க)
அவரிடம் நான் செல்ல வேண்டும் என்று மதீனாவுக்கு சென்று,🌹

🌸" அபூபக்ரே! தலைமைத்துவத்தை விட்டும் என்னை தடுத்து விட்டு நீங்களே தலைவராகி விட்டீர்களே. " என்று கேட்டதற்கு,🌸

 🌼" மக்கள் இஸ்லாத்தை ஏற்ற புதிதிலே நபியவர்கள் மரணித்து விட்டார்கள். சில அரபிகள் மதம் மாறினார்கள். எனது தோழர்கள் என்னை விடாப்பிடியாக இப்பதவியில் அமர்த்தி விட்டார்கள். என்று காரணம் சொல்லிக் கொண்டே இருந்தார். நானும் ஏற்றுக் கொண்டேன்.🌼

🌺 ஜாஹிலிய்யா காலத்தில் திருடனாக இருந்த நான் காலப்போக்கில் ஹஜ்ஜாஜுடைய காலத்தில் நானும் ஒரு தலைவராக நியமிக்கப்பட்டேன்.🌺

🌼அறிவிப்பவர் : ராபிஃ இப்னு அபீராபிஃ🌼

💐🌻🌼🌸🌹🌷💐

🌟الزهد لأبي داود 25،26
🌟الزهد لوكيع 130
🌟الزهد لأحمد 135
🌟مصنف ابن أبي شيبة 8/145
🌟المعجم الكبير الطبراني 5/21،22
🌟السيرة لابن هشام 2/479


🌷ஷுஐப் உமரி 🌷

21/05/2016
[22/05 9:54 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍13

⭐🔷⭐🔷 ஹஸன்⭐🔷⭐🔷

நான் உங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் உங்களை விடவும் சிறந்தவனல்ல. நான் சரியாக நடந்தால் எனக்கு உதவி செய்யுங்கள். நான் தவறிழைத்தால் என்னை சரிப்படுத்துங்கள். ஏனென்றால் என்னுடனும் ஒரு ஷைத்தான் இருக்கிறான்.

என்னால் உங்களுக்கு எந்தத் தீங்கும் வராமல் இருப்பதற்காக,  நான் கோபமாக இருக்கும் போது என்னை நெருங்காதீர்கள். என்று அபூபக்ர்  (ரழி) அவர்கள் தனது குத்பாவில் கூறினார்கள்.

உண்மையில் மக்களில் நீங்கள் தான் சிறந்தவர். என்றாலும் ஒரு முஃமின் தன்னை தாழ்த்திக் கொள்வான். என்று இதை அறிவிப்பவர்களில் ஒருவரான இமாம் ஹஸன் அல் பஸரீ கூறுகிறார்கள்.
الزهد لابي داود 56
💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி 🌷
[23/05 9:10 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍14

🌟🔷ஆதாரபூர்வமானது🔷🌟

🌹(ஒருநாள்) உமர் (ரழி) அவர்கள் ثمغ என்ற இடத்தில் உள்ள தனது சொத்துக்களை பார்க்கச் சென்ற போது, அஸ்ர் தொழுகைக்கு நேரத்திற்கு  சமூகமளிக்க முடியவில்லை.🌹

🌼 (இவர் வராததால்) வேறொருவரை மக்கள் இமாமாக நிற்க வைத்து தொழுதார்கள்.
உமர் (ரழி) அவர்கள் தொழுவதற்காக வந்த போது மக்கள் தொழுது முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.🌸

🌳 அவர்களிடம்  (தொழுகை முடிந்து விட்டதா என்று) இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டு, "ثمغ இல் உள்ள சொத்தினால் எனது தொழுகையை நான் தவறிவிட்டேனே" என்று கூறிவிட்டு,  🌼

🌻(எனது தொழுகைக்கு பங்கம் விளைவித்த) அந்த சொத்து எனக்குத் தேவையில்லை. அதை அல்லாஹ்வுக்காக ஸதகா செய்து விடுகிறேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் . என்று கூறினார்கள். 🌼


الزهد لابي داود 65


🌟இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்.  🌟

🌻உமர்(ரலி) ثمغ  'தம்ஃக்' என்ற இடத்திலுள்ள தம் சொத்தொன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தருமம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர் தரமானதாகும். எனவே, அதை தருமம் செய்து விட விரும்புகிறேன்" என்று கூறினார்கள். 🌻

🌸நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிலத்தை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதை தருமம் செய்து விடு" என்று கூறினார்கள்.🌸

🌹 எனவே, உமர்(ரலி) அதை தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அவர்களின் அந்த தருமம் (வக்ஃபு) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது.🌹

🌼 'நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை' என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். 🌼
 📖 صحيح البخاري 2764 📖

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

23/05/2016
[24/05 6:23 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍15

🌟🔷ஆதாரபூர்வமானது🔷🌟

🌹உமர் (ரழி)அவர்களிடம் கொஞ்சம் பணம் கொண்டு வரப்பட்டு பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்தது. அதை பிரட்டிப் பிரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் கண்களால் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.🌹

🌼 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்  (ரழி) அவர்கள் " அமீருல் முஃமினீன் அவர்களே!  ஏன் அழுகின்றீர்கள்?
அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது  ஒரு சந்தோசப்பட வேண்டிய நேரம் தானே" என்று சொன்ன போது "🌳

🌱 அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த சமூகத்திற்கு இது கொடுக்கப்படுகிறதோ அவர்களுக்கிடையே பகைமையும் விரோதமும் ஏற்படும். என்று கூறினார்கள்.🌼🍑

📙الزهد لعبد الله بن أحمد 143
📙مصنف ابن أبي شيبة 8/147
📙تاريخ ابن عساكر 13/167 ، 13/126
📙الزهد لابن المبارك 265
📙الزهد لأبي داود 68

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

24/05/2016
[02/06 6:12 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍16

🌟🔷ஆதாரபூர்வமானது🔷🌟

🌼உமர் (ரழி) அவர்கள் ஷாம் நாட்டுக்கு வந்த போது பலமான ஒரு குதிரையில் ஏறினார். அந்தக் குதிரை அவரை அசைத்ததால்,  அதிலிருந்து இறங்கி ஒரு ஒட்டகத்தில் ஏறிக்கொண்டார். வழியில் ஓரு ஆறு எதிர்ப்பட்ட போது ஒட்டகத்திலிருந்து இறங்கி, தனது காலணியை கையில் எடுத்துக் கொண்டு அவரும் தண்ணீரில் இறங்கினார்.🌼

💎"உலக மக்கள் பெரிதாக கருதக்கூடிய ஒரு விடயத்தை நீங்கள் செய்து விட்டீர்கள்" என்று அபூ உபைதா (ரழி) அவர்கள் கூறினார்கள்.💎

✏"வேறு யாராவது இதை சொல்லியிருந்தால்" என்று கூறியவராக அவருடைய நெஞ்சில் உமர் (ரழி) குத்தி விட்டு,

 🌷"மனிதர்களில் மிகவும் குறைந்தவர்களாகவும், இழிவானவர்களாகவும், பலவீனர்களாகவும் இருந்த உங்களை, அல்லாஹ் இஸ்லாத்தைக் கொண்டு கண்ணியப்படுத்தினான்.

 வேறெதைக் கொண்டாவது நீங்கள் கண்ணியத்தைத் தேடினால் அவன் உங்களை இழிவுபடுத்தி விடுவான். என்று கூறினார்கள்.🌷

📘الزهد لأبي داود 69
📘الزهد لابن المبارك 207
📘مصنف ابن ابي شيبة 8/146
📘المستدرك 1/61،62 - 3/82
📘حلية الأولياء 1/47

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

02/06/2016
[04/06 5:17 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍17

🌟🔷ஆதாரபூர்வமானது🔷🌟

💎யஹ்யா இப்னு ஸஈத் (ரஹ்) கூறுகிறார்.💎
🌟"உமர் (ரழி) அவர்களுடன் நான் ஹஜ் செய்யச் சென்றேன். அவர் திரும்பி வரும் வரை (தனக்கு) கூடாரம் எதுவும் அமைக்கவில்லை." என்று அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரஹ்)  என்பவர் கூறிய போது, 🌟

🌼"(நிழல் பெற) என்ன செய்தார்?" என நான் கேட்டேன். அதற்கவர் "போர்வையாலும் விரிப்பாலுமே நிழல் பெற்றார்." என்று கூறினார்.🌼

📘الزهد لأبي داود 70
📘مصنف ابن أبي شيبة 8/153
📘طبقات ابن سعد 3/211

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

04/06/2016


💍முன்னோர் வாழ்வில்💍18

⭐🔷ஸஹீஹ்⭐🔷

🌼உபைதுல்லாஹ் இப்னு அதீ என்பவர் கூறுகிறார். உமர் (ரழி) அவர்கள் மிம்பரில்,📣

🔮"ஒரு அடியான் பணிவாக நடந்து கொண்டால் அல்லாஹ் அவனை உயர்த்துகின்றான். அவன் தன்னைத் தாழ்ந்தவனாக நினைத்துக் கொண்டாலும் மக்களிடையே பெரியவனாக இருப்பான்.🎤

🔮ஒரு அடியான் அளவு கடந்து பெருமையடித்தால் அல்லாஹ் அவனை இழிவாக்கி விடுவான். அவன் தன்னைப் பெரியவனாக நினைத்துக் கொண்டாலும் மக்களுடைய பார்வையில் பன்றியை விடவும் இழிவானவனாக இருப்பான்.

 📢மக்களே! மக்களுக்கு அல்லாஹ் பற்றி வெறுப்பை உண்டாக்க வேண்டாம். என்று கூறினார்கள்.🔮

🌼அப்போது ஒருவர் "அல்லாஹ் உம்மை சீராக்குவானாக. அது எவ்வாறு ஏற்படும்? என்று கேட்டார். அதற்கு உமர் (ரழி),

🚈 " உங்களில் ஒருவர் இமாமாக நின்று நீண்ட நேரம் தொழுவிப்பதாலும், உபதேசிப்பதாலும் (மக்களுக்கு) வெறுப்பூட்டி விடுகின்றார். என்றார்கள்.🚇

📔مصنف ابن أبي شيبة 8/150
📔الزهد لأبي داود 73
📔تاريخ المدينة لابن شبة 2/750
📔تاريخ عمر بن الخطاب لابن الجوزي 177
📔مكارم الأخلاق للخرائطي

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

08/06/2016


💍முன்னோர் வாழ்வில்💍19

⭐🔷ஸஹீஹ்⭐🔷

🍐அப்துல்லாஹ் இப்னுல் அர்கம் (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம்🌴
"அமீருல் முஃமினீன் அவர்களே! ஜலூலா யுத்தத்தின் போது கிடைத்த சில ஆபரணங்களும் தங்கம் வெள்ளிப் பாத்திரங்களும் இருக்கின்றன. அவற்றை என்ன செய்யலாம் என கட்டளையிடுகிறீர்" என்று கேட்டார். 🍐

🍒அதற்கவர் " நான் ஓய்வாக இருக்கக் கண்டால் என்னை அழைப்பீராக" என்றார்.
பின்பு ஒருநாள் அவரைக் கண்டு " இன்று ஓய்வாக இருக்கக் காண்கிறேனே" என்ற போது,🍓

🍍 ஈத்தஞ்சோலை ஒன்றை சுட்டிக்காட்டி " இந்த தோட்டத்தில் ஒரு விரிப்பை விரியுங்கள்" என்றார்.🌲
பின்னர் அந்த செல்வங்களை கொண்டு வரப்பட்டு அவற்றை அவ்விரிப்பில் கொட்டப்பட்டன. 🌱

🌸உமர் (ரழி) அவர்கள் " யா அல்லாஹ்! "பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம் வெள்ளிக் குவியல்கள் மனிதர்களுக்கு அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது" என்றும், 🍀
"உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் கவலை கொள்ளாமல் இருக்கவும் உங்களுக்கு வழங்கியவற்றுக்காக ஆவணம் கொள்ளாதிருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தினான்" என்றும் செல்வங்களைப் பற்றி நீ கூறியுள்ளாய். 🌹

🍑யா அல்லாஹ்! எங்களுக்கு அலங்கரித்தவற்றைக் கொண்டு நாம் சந்தோசப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் எங்களால் செய்ய முடியாது. யா அல்லாஹ் அதனை உரிய முறையில் செலவளிப்பதை வேண்டுவதோடு, அதன் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என்று கூறினார்கள்.🍋

🍊அப்போது அங்கு கொண்டு வரப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு பஹிய்யா என்ற அவரது பிள்ளை
 " தந்தையே! எனக்கு ஒரு மோதிரம்💫 தாருங்களேன்." அதற்கவர் " உனது தாயிடம் சென்று கஞ்சி குடித்துக் கொள்" என்று சொல்லி அனுப்பினார். அந்தப் பிள்ளைக்கு எதுவும் கொடுக்கவில்லை.🍅

🌹🌹🌹🌹🌹🌹🌹
الزهد لأبي داود 74
تاريخ المدينة لابن شبة 699، 700/2
زوائد عبد الله بن أحمد 143
تاريخ دمشق 13/119


💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

11/06/2016



[25/06 7:57 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍20

       ⭐🔷ஸஹீஹ்⭐🔷

 🌸எளிமையை விரும்பிய       🌺உமர் (ரழி)🌸

🍏உமர் (ரழி) அவர்களுடன் ஷாமுக்குப் போனேன். தண்ணீர் இருக்கும் ஒரு தாழ்ந்த இடத்தை அடைந்ததும் அவர்கள்  இறங்கி தமது சுய தேவைகளை முடித்துவிட்டு வந்தார்கள். எனது போர்வையை பொதிகளுக்கிடையே வைத்தேன். அவர் எனது ஒட்டகையிலும் நான் அவரது ஒட்டகையிலும் ஏறினோம்.🍏

🍀சில மக்கள்  (இவரா) அமீருல் முஃமினீன்? என்று தங்களது மொழியில் ஏதோ பேசிக்கொண்டார்கள்.
"அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்களின் (ஆணவமான) நடையை நம்மிடம் காணாததால் எம்மை இழிவாக நினைக்கிறார்கள்." என்று உமர் (ரழி) கூறினார்கள்.🍀

🌱பின்பு அம்ரு இப்னுல் ஆஸையும் (ரழி) படைத் தளபதிகளையும் சந்தித்தார்கள்.
"அமீருல் முஃமினீனே! நீங்கள் இஸ்லாத்தை புதிதாக அறிந்து கொண்டவர்களிடம் வந்திருக்கிறீர்கள்." என்று அம்ரு (ரழி) கூறிய போது "அதற்கென்ன?" என்று கேட்டார். 🌱

🍇"வேறொரு வாகனத்தில் ஏறிக் கொள்ளுங்கள்" என்றார் அம்ரு (ரழி).
"உங்களது விருப்பம்" என்று கூறி, கொண்டு வரப்பட்ட (பலமிக்க) குதிரையில் ஏறினார். அக்குதிரை அவரை அங்குமிங்கும் அசைத்ததால் அதற்கும் அதன் முகத்திற்கும் அடித்தார். ஆனால் அது சென்று கொண்டே இருந்தது.
"அதில் அமீருல் முஃமினீன் என்ன குறையை கண்டுவிட்டார்!" என்று குதிரையோட்டி கூறியதும் அவர் இறங்கி விட்டார்.🍇

🍅"என்னை ஒரு ஷைத்தானின் மீதுதான் ஏற்றியிருக்கிறீர்கள். என்னை நான் பழித்தவனாகவே  அதிலிருந்து இறங்கினேன். எனது ஒட்டகத்தை கொண்டு வாருங்கள் ." என்றார்.
அதில் ஏறி மக்களை விட்டும் தனியாகச் சென்றார்.🍅

🌹பின்பு கறுப்பு கயிறினால் கடிவாளமிடப்பட்ட ஒரு ஒட்டகையில் வந்த  அபூ உபைதாவை சந்தித்தார்.
உமர் ரழி அவர்கள் அவரைக் கண்டவுடன் "சகோதரரே! உம்மை துன்யா மாற்றிவிடவில்லையே" என்று புன்முறுவலுடன் கூறினார்.🌹

🍓பின்னர் தனது ஆடையை கழுவி, ஒட்டுப் போடுவதற்காக அந்த இடத்தின் உரிமையாளரிடம் கொடுத்தார். அவர் அதையும் தயாரித்து புதிய ஆடையொன்றை அவருக்கு கொடுத்த போது, என்னுடைய ஆடையை தாருங்கள் என்று தமது ஆடையை அணிந்து கொண்டார்கள். 🍓

         🌺🌺🌺🌺🌺🌺

📘الزهد لأبي داود 77،78
📘تاريخ المدينة لابن شبة3/831،  3/823
📘الزهد لابن المبارك 207

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

25/04/2016
[26/06 5:39 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍21

       ⭐🔷ஸஹீஹ்⭐🔷

    🌷இரவுத் தொழுகை🌷

🍅உமர் (ரழி) அவர்கள் இரவில் அல்லாஹ் நாடியளவு (அதிகம்) தொழுவார்கள். இரவின் இறுதிப் பகுதி வந்தால் தமது குடும்பத்தினரையும் தொழுவதற்காக எழுப்புவார்கள். பின்வரும் வசனத்தையும் ஓதிக் காட்டுவார்கள்.🍅

🌸"நபியே! உமது குடும்பத்தை தொழுமாறு ஏவுவீராக. அதன் மீது பொறுமையாக இருப்பீராக. உம்மிடம் நாம் ரிஸ்கை கேட்கவில்லை. நாமே உமக்கு ரிஸ்கை வழங்குகிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்கு உரியதாகும்."🌸

📖அல்குர்ஆன் 20/132📖

        🌹🌹🌹🌹🌹🌹
📚موطأ الإمام مالك 119
📚مصنف عبد الرزاق 3/49
📚تفسير الطبري 16/170
📚الزهد لأبي داود 81

         🌺🌺🌺🌺🌺🌺

ஷுஐப் உமரி பேருவளை

26/06/2016
[28/06 2:27 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍22

       ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🌹உமர் (ரழி) அவர்கள் நபித்தோழர்களிடம் "பின்வரும் வசனம் எவ்விடயமாக இறங்கியதென்று நினைக்கிறீர்கள்? " என்று கேட்டார்.🌸

📖"உங்களில் ஒருவர் அவருக்கு பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும்🍇 கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது;🌴🌴 அதன் கீழே நீரோடைகள்🏊 ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன;🍎🍊🍋

🌸 (அப்பொழுது) அவருக்கு வயோதிபம்👳 வந்து விடுகிறது;அவருக்கு பலஹீனமான சிறு சந்ததிகள் இருக்கின்றன இந்நிலையில் நெருப்புடன் 🔥கூடிய ஒரு சூறாவளிக் காற்று,💨 அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி)விடுகின்றது அவர் (இதை) விரும்புவாரா?. நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ்(தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்." 🌹

📖 سورةالبقرة 266 📖

🌺அதற்கவர்கள் " அல்லாஹ்வே மிக அறிந்தவன்" என்றனர்.🍊
 உமர் ரழி அவர்கள் கோபமாக
" தெரியும் என்று கூறுங்கள், அல்லது தெரியாது என்று கூறுங்கள் " என்ற போது, 🌺

🍎இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் " அமீருல் முஃமினீனே! அது பற்றி எனக்கு ஒரு விடயம் தோன்றுகிறது." என்றார்.🍊

🔦"சொல்லுங்கள். எனது சகோதரரின் மகனே! உம்மை நீர் தாழ்த்திக் கொள்ளாதீர்." என உமர் ரழி அவர்கள் கூறியபோது, 🔦

📬" அல்லாஹ் அமல் செய்வதற்கு உதாரணம் கூறியுள்ளான்" என்றார்.
" எந்த அமலுக்கு?" என வினவியதற்கு, "ஒரு அமலுக்கு" என்றார் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள்.📬

🍄அப்போது உமர் ரழி அவர்கள்  "(ஆம்). வசதியுள்ள ஒரு மனிதருக்கு உதாரணம் கூறுகிறான்.
அவர் (தனது செல்வத்தின் மூலம்) நல்லறங்கள் செய்கிறார். பின்னர் அல்லாஹ் (அவரை சோதிப்பதற்காக) ஷைத்தானை அனுப்புகிறான். (அவனது தாண்டுதலினால்) பாவங்களைச் செய்து தான் செய்த நன்மைகளை இழந்து விடுகிறான். என்று கூறினார்கள்.🍄

🌼🌼🌼🌼🌼🌼

📚صحيح البخاري 732
📚تفسير الطبري 3/51
📚الزهد لأبي داود 85،86،87

🌷🌷🌷🌷🌷

ஷுஐப் உமரி பேருவளை

28/06/2016
[11/07 8:09 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍23

       ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🍎யார் (பிறருக்கு) இரக்கம் காட்டவில்லையோ அவருக்கு இரக்கம் காட்டப்பட மாட்டாது.🍎

🍓யார் (பிறரை) மன்னிக்கவில்லையோ அவரை மன்னிக்கப்பட மாட்டாது.🍓

🌳 யார் விட்டுக் கொடுக்கவில்லையோ அவருக்கு விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது.

🍉 யார்(பாவங்களை விட்டும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவில்லையோ)  அவர் (பாவங்களை விட்டும் )  பாதுகாக்கப்பட மாட்டார்.🍉

என்று உமர் (ரழி) கூறினார்கள்.🌹

   ⛅⛅⛅⛅⛅
الأدب المفرد 371
الزهد لأبي داود 88
تاريخ عمر لابن الجوزي 181

🌷🌷🌷🌷🌷🌷

ஷுஐப் உமரி பேருவளை

11/07/2016
[15/07 2:08 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍23

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

      🌹 இரகசிய வணக்கம் 🌹

( ஒருவர் தனக்கு மட்டுமே தெரிந்த, மற்றவர்களுக்கு ) மறைக்கப்பட்ட (இரகசியமான) ஒரு நல் அமலைச் செய்து வர முடியுமென்றால் அதை அவர் செய்யட்டும்.

என்று சுவனத்தைக் கொண்டு நன்மாறாயம் சொல்லப்பட்ட ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

      🌼🌼🌼🌼🌼🌼🌼

                    📚📚📚

📒الزهد لابن المبارك بزيادة المروزي 392
📗الزهد لوكيع 252
📘مصنف ابن أبي شيبة 8/174،193
📙الزهد لأحمد 179
📕الزهد لهناد 878
📓الزهد لأبي داود 119،120

   🌷🌷🌷🌷🌷🌷

ஷுஐப் உமரி பேருவளை

15/07/2016
[24/07 3:39 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍25

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

✏அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள்.

🌹நல்லவரோ கெட்டவரோ, மரணம் இருவருக்குமே நலவாக  இருக்கின்றது.🌹

🌴"அல்லாஹ்விடம் இருப்பவை நல்லவர்களுக்கு சிறந்தது" என்று நல்லவர்கள் பெறும் (வெகுமதி) பற்றி அல்லாஹ் கூறுகிறான்.🌴
(ஆலு இம்ரான் 178)✏

🍇"அவர்களை நாம் தண்டிக்காமல் விட்டு வைப்பது தங்களுக்கு நல்லது என்று நிராகரிப்போர் எண்ண வேண்டாம். அவர்களைநாம் விட்டு வைப்பது அவர்கள் பாவங்களை அதிகரித்துக் கொள்வதற்கே. மேலும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு."
என்று பாவிகள் (மரணிப்பதில் அவர்களுக்குரிய நலவு) பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
(ஆலு இம்ரான் 198)🍇

          🍀🍀🍀🍀🍀🍀🍀

            📚📚📚📚📚📚

📗مصنف ابن أبي شيبة 35575
📘تفسير ابن أبي حاتم 846
📙الزهد لأبي داود 128
📔المعجم الكبير 9/151
📒تفسير الطبري 3/527
📓المستدرك للحاكم 3168
📕القدر للبيهقي 325

🌷🌷🌷🌷🌷🌷


ஷுஐப் உமரி பேருவளை

23/07/2016

  💍முன்னோர் வாழ்வில்💍26

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🍒நீங்கள் அதிகம் நீண்ட நேரம் நின்று வணங்குகிறீர்கள். நபியவர்களின் தோழர்களையும் விட அதிகமாக ஜிஹாதில் பங்கு பற்றுகிறீர்கள். என்றாலும் அவர்களுக்கு உங்களை விட அதிக கூலி இருக்கிறது. என்று இப்னு மஸ்ஊத்  (ரழி) கூறிய போது " ஏன் அபூ அப்திர் ரஹ்மானே? என்று மக்கள் கேட்டார்கள்.  🍇

🎓அதற்கவர் " அவர்கள் மிகவும் உலகப் பற்றில்லாதவர்களாகவும், மறுமை பற்றி மிகுந்த ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். 🎀

            ✒✒✒✒✒✒✒

                 📚📚📚📚📚

📗مصنف ابن أبي شيبة 8/162
📘الزهد لهناد 575
📙ذم الدنيا لابن أبي الدنيا 68، 176
📔المعجم الكبير 9/153
📒المستدرك للحاكم 4/315
📓حلية الأولياء 1/136
📕شعب الإيمان للبيهقي 7/10636
📑الزهد لابن المبارك 173

         🌹🌹🌹🌹🌹🌹🌹

ஷுஐப் உமரி பேருவளை

28/07/2016[04/08 6:25 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍27

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🌺சில மனிதர்கள் (மரங்கள் அற்ற) மேட்டு நிலங்களில் (உட்புறம் விசாலமான) குழிகளைத் தோண்டி,
மக்களுடன் பேசவோ பழகவோ மாட்டோம் என்று கூறி அங்கு கடும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாக இப்னு மஸ்ஊத்  (ரழி) அவர்களுக்கு கேள்விப்பட்ட போது, 🍓

🌺 "பதுங்குக் குழிகளில் இருந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது. அல்லாஹ்வின் மீது ஆணையாக நாம் அறிந்தவற்றை நீங்கள் அறிந்தால் அமல் செய்வதையே விட்டிருப்பீர்கள்." என்று கூறினார்கள். 🍑

              🍉🍉🍉🍉🍉

              📚📚📚📚📚

📙 الزهد لأبي داود 138

ஷுஐப் உமரி பேருவளை

04/08/2016
[04/08 8:43 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍28

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🌷அல்லாஹ் உமக்கு அளித்தவற்றைப் பொருந்திக் கொள். மனிதர்களில் நீ தான் மிகவும் செல்வந்தனாக இருப்பாய். 🌴

🌷அவன் உன் மீது கடமையாக்கியவற்றை நிறைவேற்று.  மக்களிலேயே மிகவும் வணக்கவாளியாக நீ இருப்பாய்.🌴

🌷 அவன் உன் மீது ஹராமாக்கியவற்றை தவிர்த்து விடு. மக்களிலேயே மிக பேணுதலுள்ளவனாக இருப்பாய்.🌴
என்று இப்னு மஸ்ஊத்  (ரழி) அவர்கள் கூறினார்கள்.🌺

          🌳🌳🌳🌳🌳🌳

          📚📚📚📚📚📚

📗الزهد لهناد 1032
📘شعب الإيمان 1/201 ، 6/8477
📙الزهد لأبي داود 139
📒الكامل لابن عدي 5/220


ஷுஐப் உமரி பேருவளை

04/08/2016

No comments: