Wednesday, June 13, 2012


ஹிஜாபுக்காக உயிரை நீத்த வீரப்பெண்மனி மர்வா ஷர்பீனி




ஹிஜாபுக்காக உயிரை நீத்த வீரப்பெண்மனி மர்வா ஷர்பீனி
நீதிமன்றில்..
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
காவல் துறை கண்முன்பு 
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 
சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?
 
"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.
 
துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில்,ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும். 
 
தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது. 
 
திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
 
"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம்  எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக  சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 
 
ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு  உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர    
 
அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.  
 
உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?
 
ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?
 
நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல்ஷெர்பினியின் தியாகம் ................
 
                                அல்லாஹ் நன்கறிந்நவன்.    

Monday, June 11, 2012

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!


வியர்வை நாற்றம்; அழுகிய குப்பைகளிலிருந்து கிளம்பும் நெடி; கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி; அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம்; தலை மேலே குறட்டைச் சத்தம்; இன்னொரு மூலையில் தொலைக்காட்சியின் இரைச்சல்; எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை; சாராய நெடி.
பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் 8 பேர்; அறைக்கு சன்னலில்லை; சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை – காற்று வெளியே போகவும் உள்ளே வரவும் அவ்வளவுதான் இடம்.
இது சிறைக் கொட்டடியில்லை; பம்பாய், கல்கத்தாவின் குடிசைப் பகுதியில்லை – நியூயார்க்.
மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். 100 மாடி 150 மாடிக் கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கிரீட் காட்டின் ஏதோ ஒரு கட்டிடத்தில் இது ஒரு பொந்து.
இந்தப் பொந்தில் வசிப்பவர்கள் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு 7 மணிக்கு வேலை செய்யத்துவங்க வேண்டும்.
வேலை செய்யும் தொழிற்கூடமோ பக்கத்து அறைதான். 15 அடிக்கு 18 அடி அளவுள்ள அறைக்கு 15 தையல் எந்திரங்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை.
இந்தச் சித்திரவதைக் கூடங்களுக்கு அமெரிக்கப் பத்திரிகைகள் சூட்டியிருக்கும் பெயர் வியர்வைக் கடைகள். நியூயார்க், லாஸ் எஞ்செல்ஸ் போன்ற அமெரிக்காவின் பெருநகரங்கள் அனைத்திலும் நிரம்பியுள்ள இத்தகைய ‘வியர்வைக்கடை’களில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தாய்லாந்து, சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் – கொத்தடிமைகள்.
துபாய்க்கும் சிங்கப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையைக் காட்டிலும் கொடியது இவர்களது கதை.
”லாஸ் எஞ்செல்ஸ் நகரிலுள்ள அதி நவீன தையற்கூடம் ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்குக் காட்டினார்கள். பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை; வாரத்தில் 5 நாட்கள் வேலை. மாதம் 2400 டாலர் சம்பளம். விடுமுறை நாட்களில் டிஸ்னிலாந்து போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம் என்று ஆசை காட்டினார்கள்; நம்பி வந்தோம்.”
“லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேரே இந்தப் பொந்துக்குத்தான் கொண்டு வந்தார்கள். எங்களிடமிருந்து பாஸ்போர்ட், பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். அதிகம் பேசாதே – கேள்வி கேட்காதே – யாரோடும் நட்பு சேராதே – என்ற எச்சரிக்கையுடன் இங்கே அடைக்கப்பட்டோம்”.
”தாய்லாந்தில் 8 மணி நேரம் உழைத்துச் சம்பாதித்ததை இங்கே 16 மணிநேரம் உழைத்துச் சம்பாதிக்கிறோம்.”
இது லே போதாங் என்ற தாய்லாந்துப் பெண்ணின் கதறல்.
அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்
யூலி என்ற சீனப்பெண்ணின் கதை இன்னும் கொடூரமானது.
”அமெரிக்காவில் வேலை வாங்கித் தருகிறோம், அங்கே சம்பாதித்து எங்கள் கடனைக் கொடுத்தால் போதும்” என்று சொன்ன ஏஜெண்டுகளின் பேச்சை நம்பி, தன் கணவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள் யூலி.
1991-இல் அமெரிக்கா போன கணவனிடமிருந்து பணம் வரவில்லை; கடிதமும் இல்லை; ஆளையும் காணவில்லை. அனுப்பி வைத்த ஏஜென்டுகளைக் கேட்டால் ”இன்னும் கடன் அடையவில்லை” என்றார்கள். தன்னந்தனியாக 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகளாக வாழ்வதற்குப் போராடி வந்த யூலி ஒரு முடிவுக்கு வந்தாள்.
மிச்சமிருந்த எல்லா உடைமைகளையும் விற்றுத் தன் கணவன் வாங்கிய கடனை அடைத்தாள். ”என்னையும் என் பிள்ளைகள் மூன்று பேரையும் என் கணவனுடன் நியூயார்க்கில் சேர்த்துவிடுங்கள்” என்று ஏஜென்டுகளிடம மன்றாடினாள்.
அதற்கு 1,32,000 டாலர் செலவாகும்; நீங்கள் வேலை செய்து அடைக்க வேண்டும் என்றார்கள் ஏஜெண்டுகள். யூலி ஒப்புக் கொண்டாள்.
இப்போது யூ லியும் 3 பிள்ளைகளும் நியூயார்க் நகரில். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. கணவனைப் பார்த்துவிட்டாள். ஆனால் குடும்பம் சேர்ந்து வாழமுடியவில்லை. ஆளுக்கோரிடத்தில் வேலை. சேர்ந்து வாழவேண்டும் என்ற கனவுக்காகத் தனித்தனியாக உழைக்கிறார்கள்.
ஐந்து பேரும் ஒரு நாளைக்கு 17 மணிநேரம் உழைக்கிறார்கள். மாதந்தோறும் 3000 டாலர் கடன் கட்டுகிறார்கள்: ஆனால் கடன் அடையவில்லை; அடையப் போவதுமில்லை.
படிக்க வேண்டிய பிள்ளைகளைக் கொத்தடிமையாக்கி விட்டதற்காக வருந்தி அழுகிறாள் யூலி.

ண்ணீர்க் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்இந்தத் தொழிலாளர்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து மாஃபியாக் கும்பல்களால் கொண்டுவரப் பட்டவர்கள். முறையான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அதை இத்தொழிலாளர்களிடமிருந்து பறித்து வைத்துக் கொள்கின்றன இந்த மாஃபியா கும்பல்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கள்ளத் தோணியில் கொண்டுவரப்பட்டவர்கள்.
ஒவ்வொர் ஆண்டும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அமெரிக்க உளவு நிறுவனம். தாய்லாந்திலிருந்தோ 24,000 பேர். சட்ட பூர்வமாகவே தாய்லாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்களை அமெரிக்க அரசு ஏன் தடுத்து நிறுத்த வில்லை என்று கேட்டால், அந்தக் கேள்விக்கான விடைகளில் ஒன்றுதான் இந்த வியர்வைக் கடைகள். பலமாடிக் கட்டிடங்களின் இடுக்குகளிலும், காற்றுப் புகாத பரண்களிலும், நிலவறைகளிலும் இயங்கும் இத்தகைய வியர்வைக் கடைகள். நியூயார்க் நகரில் மட்டும் 400.
”வேலை நிலைமைகளைப் பற்றியோ, கூலியைப் பற்றியோ யாராவது புகார் செய்தால் மறுகணமே அவர்கள் அமெரிக்காவை விட்டுத் துரத்தப்படுவார்கள். எனவே யாரும் வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்” என்கிறார் சீனத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் விங்லாம்.
அமெரிக்காவை விட்டு ஓடத் தயாராக இருப்பவர்களையும் அப்படி ஓடிவிடுவதற்கு அனுமதிப்பதில்லை மாஃபியா கும்பல்கள். ”எங்களுக்குச் சேரவேண்டிய தொகையை கொள்ளையடித்தாவது கொடுத்துவிட்டுப் போ” என்று மிரட்டுகிறார்கள். கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள். கொத்தடிமையாக நீடிப்பதா, கிரிமினலாக மாறுவதா என்ற கேள்வி வந்தால் முதலாவதைத்தான் தெரிவு செய்கிறார்கள் அந்த ஏழைத்தொழிலாளர்கள்.
நியூயார்க் நகரின் தொழிலாளர் சடப்படி ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 5.15 டாலர். இந்தக் கொத்தடிமைகளுக்குக் கொடுக்கப்படுவதோ ஒரு டாலர். அந்தச் சம்பளமும் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு மாதச் சம்பளத்தைப் பிடித்து வைத்துக் கொள்வதென்பது மிகவும் சகஜம். அமெரிக்காவின் காவல்துறை, குடியேற்றத் துறை, தொழிலாளர்துறை ஆகிய மூன்றுமே இந்த இரகசிய உலகத்தைக் கண்டு கொள்வதில்லை.
அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்
மே தினப் போராட்டத்தின் மூலம் உலகத்தொழிலாளர்களுக்கு ”8 மணி நேர வேலை” எனும் அடிப்படை உரிமையைப் பெற்றுத்தந்த நாட்டில், மே தினப் போராட்டத்திற்கு முன்னால், சென்ற நூற்றாண்டில் நிலவியதைக் காட்டிலும் கொடூரமான சுரண்டலும் ஒடுக்கு முறையும் தொடர்கிறதே இதற்குக் காரணம் என்ன?
வியர்வைக் கடைகள் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை இதற்குப் பதில் சொல்கிறது. ”அவர்கள் தங்கள் சொந்த நாட்டினராலேயே இரக்கமில்லாமல் சுரண்டப் படுகிறார்கள்.” உண்மைதான், தமது சொந்த நாட்டைச் சேர்ந்த மாஃபியாக் கும்பல்களால்தான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களால்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் யாருக்காக? அந்த வியர்வைக் கடைகளின் பொந்துகளிலிருந்து அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றோட்டமான சட்டைகளை அணிபவர்கள் யார்? அவற்றை விற்று ஆதாயம் அடைவர்கள் யார்? அமெரிக்காவின் மிகப்பிரபலமான ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும்தான் இந்த வியர்வைக் கடைகளின் சரக்கைக் கொள்முதல் செய்பவர்கள்.
இந்தியாவிலிருந்தும் பிற ஏழை நாடுகளிலிருந்தும் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அமெரிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், நேரடியாக சென்னைக்கும், பம்பாய்க்கும் வந்திறங்கி, தங்களது ஆடைகள் எங்கே தைக்கப்படுகின்றன, எப்படித் தைக்கப்படுகின்றன என்று சோதனை செய்கிறார்களே – துணை ஒப்பந்தத்தில் வேலை செய்யும் சிறிய முதலாளிகளின் தையலகங்களைக் கூட அவர்கள் விட்டுவைப்பதில்லையே – அத்தகைய அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டின் வியர்வைக் கடைகளை மட்டும் பார்வையிடாதது ஏன்?
”கலிஃபோர்னியாவில் இத்தகைய வியர்வைக் கடையொன்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கே உற்பத்தியாகும் ஆடைகளெல்லாம் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆடை விற்பனையகங்களுக்குச் சொந்தமானவை எனத் தெரியவந்தது” என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.
அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்நியூயார்க்கின் மிகப்பெரும் நிறுவனங்களான வால் மார்ட், கே மார்ட் ஆகியோரது ஆடை விற்பனையில் பாதி நியூயார்க் கொத்தடிமைகளின் தயாரிப்புதான் என்கிறது – டைம் வார ஏடு. வால் – மார்ட், கே – மார்ட் ஆடைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
சதாம் உசேனின் கழிப்பறையில் இரசாயன ஆயுதத்தின் நெடி வீசுவதை வானத்திலிருந்தே மோப்பம் பிடிக்கத் தெரிந்த கிளிண்டனின் நாசியில் வால் மார்ட் சட்டைகளில் வீசும் வியர்வையின் நெடி ஏறாதது ஏன்?
இது ஒரு வர்த்தகத் தந்திரம். மலிவான உழைப்புச் சந்தை என்ற ஒரே காரணத்தினால்தான் இந்தியா போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். இந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் தலைவிதி பிணைக்கப்பட்டு விட்டது. மலிவு விலையில் உழைப்பை இறக்குமதி செய்த அமெரிக்கா, இப்போது உழைப்பாளிகளையே மலிவு விலையில் இறக்குமதி செய்கிறது.
அன்று ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை விலங்குகளைப் போல வலைவீசிப் பிடித்து, தாயை கரும்புத் தோட்டத்திலும், பிள்ளையை நிலக்கரிச் சுரங்கத்திலும் பிரித்துப் போட்டு, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி அமெரிக்க சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்டார்கள். இன்று அந்தச் சொர்க்கத்தின் நியான் விளக்குகளில் சொக்கி விழும் விட்டில் பூச்சிகளான யூலி போன்றோரைக் கள்ளத்தோணியின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள்.
து ஒரு ராஜ தந்திரம். தமக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் கிளின்டனின் அரசியல் ஆணைக்குப் பணிய மறுத்தால், ஆடை இறக்குமதி நிறுத்தப்படும். ஒரே நொடியில் இந்நாடுகளின் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் வீசப்படுவார்கள்.  ஆசியாவின் ஆடை இறக்குமதியாகாத அத்தகைய தருணங்களில் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொத்தடிமைகள் அமெரிக்காவின் நிர்வாணத்தை மறைத்து நாகரிகப் படுத்துவார்கள். ஆசியத் தொழிலாளிக்கெதிராக ஆசியத் தொழிலாளிகள்!
து ஒரு வர்க்கத் துவேசம்! மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் கணினி வல்லுநர்களையும் குடியுரிமை தந்து இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா இந்த உழைப்பாளிகளுக்கும் குடியுரிமை தரலாமே! சட்டப்படி குடியுரிமை தந்தால், சட்டப்படி ஊதியம் கேட்பார்கள். அவர்களைக் கள்ளத் தோணிகளாகவே வைத்திருந்தால்தான், தேவை முடிந்தபின், அவர்களது இளமை முடிந்தபின், அவர்களைக் கந்தல் துணியைப் போலக் கடலில் வீச முடியும். வீசிவிட்டுக் கள்ளத் தோணியைத் தடுக்கத் தவறியதாக அந்த நாட்டைக் குற்றம் சாட்டி மிரட்டவும் முடியும்.
துதான் சுதந்திர வர்த்தகம்! தேசங்கடந்து அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வரும் மூலதனத்திற்கு இங்கே ரத்தினக் கம்பளம்; மாலை மரியாதைகள். தேசங்கடந்து செல்லும் நம் உழைப்புக்கு அங்கே கொத்தடிமைத் தனம்! குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை எதிர்க்கிறது பென்டகன். ஏனென்றால் அமெரிக்க ராணுவத்தின் சீருடைகள் ஆசியக் குழந்தைகளால் தைக்கப்படுகின்றன. பிள்ளைக்கறி தின்னும் இந்த நாயன்மார்கள்தான் தாங்கள் சுத்த சைவமென்றும், பரீதாபாத்திலிருந்து (டில்லி) அனுப்பப்படும் கம்பளங்களில் ”இது குழந்தைகளால் நெய்யப்பட்டதல்ல” என்று முத்திரை குத்தி அனுப்ப வேண்டுமென்றும் கோருகிறார்கள். இந்த நாயன்மார்களிடம் எச்சில் பிரசாதம் வாங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ”சிவகாசி மத்தாப்பூ கொளுத்தமாட்டோம்” என்று நாளைய அமெரிக்கக் குடி மக்களான பத்மா சேஷாத்ரி, சர்ச் பார்க் கான்வென்டு பிள்ளைகளை வைத்து மனிதச் சங்கிலி நடத்துகிறார்கள்.
அப்படியா
அப்படி ஓர் இடம் இருக்கிறதா?
ஒன்றுமே தெரியாதது போல
பாசாங்கு செய்கிறார்கள்
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
அப்படியொரு ரகசிய உலகம்
இருக்கிறது என்பதை.
சகமனிதர்கள் உழிழும் கழிவிலும்
குப்பை கூளத்திலும்தான் – அங்கே
சிலர் வாழ்கிறார்கள் என்பதை
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்விண்ணை முட்டும் 150 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, கியூபா முதல் சீனம் வரை, உலக மக்கள் அனைவருக்கும் ஜனநாயகமும் மனித உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்குகிறார் கிளின்டன்.
அந்தக் கட்டிடத்தின் நிலவறையில் புதைந்திருக்கும் வியர்வைக் கடையிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. ” நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்” என்கிறார் 66 வயதான சோன் லீ என்ற சீனத் தொழிலாளி.
வால் – மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடித்து ஏப்பம் விட்ட பாமரேனியன்களும், சீமைப் பன்றிகளும் ”மனித உரிமை வாழ்க” என்று கைதட்டுகின்றன.
_____________________________________

இன்று ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு நடப்பது என்ன?



இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசிவரும் அமைப்புக்கள் விட்ட மிகப் பெரும் தவறுகளில் ஒன்றுதான் இஸ்லாமிய ஆட்சிக் கோஷத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்களையெல்லாம் 
ஆதரிக்க முற்பட்டமையாகும். 


சிலவேளை நாம் அவ்வாறு கண்மூடித்தனமாக அனைவரையும் ஆதரிக்கவில்லை என அவர் இதை மறுக்கலாம் ஆனால் அதுவே மறுக்கப்பட முடியாத உண்மை. அதிலும் குறிப்பாக ஈரானை ஆளும் ஷீஆக்களை ஆதரிக்க முற்பட்டமையாகும். 


இந்தத் தோறணையிலமைந்த இவர்களின் வழமையான புலம்பல்களில் ஒன்றுதான் ‘அரபு நாடுகளைப் பாருங்கள்! கோழைகளாக இருக்கின்றன. அமெரிக்காவுக்குத் தளம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. அங்கு பன்றி இறைச்சி, விபச்சாரம், மதுபானங்கள் போன்ற அனைத்தும் மலிந்து விட்டனளூ அமெரிக்காவை எதிர்க்கத்திராணியற்று அரபு நாடுகள் கிடக்கின்றனளூ ஆனால் ஈரானைப்பாருங்கள்! அமெரிக்காவை எதிர்க்க கொமைனீ இருந்தார்… தற்போது நஜாதி வந்திருக்கின்றார்ளூ ஈரான் தற்போது அணுவாயுத பலத்தையும் பெற்று விட்டது……..இஸ்லாமியஆட்சியைப் பற்றி அடிக்கடி பேசுகின்றது…..’என்று கூறுவதாகும். இஸ்லாமிய ஆட்சி பேசுவோர் மீது இவர்களுக்கிருந்த அபரிமிதமான அபிமானமானது, ‘யாராயினும் சரி, அவர் எக்கொள்கையாயினும் சரி, இஸ்லாமிய ஆட்சியைப் பேசினால் அவரை நாம் ஆதரிப்போம்’ என்ற நிலைக்கு இவர்களைத் தள்ளிவிட்டது எனலாம்.


 அஹ்மத் நஜாதி ஈரானின் ஜனாதிபதியானதும் அல்ஹஸனாத் சஞ்சிகையானது அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து‘இரும்பு மனிதர்’, ‘ஈரானில் அணுப்புரட்சி’, ‘இஸ்ரேலை உலகப்படத்திலிருந்து அகற்ற வேண்டும் என சூளுரைத்தவர்’ என்றெல்லாம் எழுதியது. 


அஹ்மத் நஜாதி யார்? அவரின் கொள்கை என்ன? பிடல் காஸ்ட்ரோவும் இப்படித்தானே சீறுகிறார்? இவ்வாறு ஒருவர் பேசினால் அது இஸ்லாமாகி விடுமா? என்பதையெல்லாம் இவர்கள் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்கவில்லை.


 ‘இமாம்கொமைனீ‘” என்று நாக்கூசாமல் பலரும் சர்வ சாதரனமாகப் பேசுவதை சமூகத்தில் காணலாம். இதுவும் அபரிமிதமான, தவறான இஸ்லாமிய ஆட்சி மோகத்தால் விளைந்த மிகப் பெரும் கேடுகளில் ஒன்றே.பொது மக்கள் கொமைனீயின் உரைகளையோ, புத்தகங்களையோ கேட்டிராது, படித்திராத போது எவ்வாறு இந்த கொமைனீ சமூகத்தில் ‘இமாம்’ கொமைனீயாக அறிமுகமானார்? அவரை நமக்கு அறிமுகஞ் செய்தது யார்? எந்த முஸ்லிம் நாட்டுத் தலைவர்களின் பெயர்களும் பரீட்சியமில்லாத பொது மக்களுக்கு இந்தப் பெயர் மாத்திரம் அறிமுகமானது எவ்வாறு?. ஈரானின் ஜனாதிபதி யார்? என்றால் ‘அஹ்மத் நஜாதி’ என்கிறோம். எனவே ஈரானில் ஆட்சி செய்த, செய்கின்ற இவர்களை இமாமாகவும், வீரமிகு ஜனாதிபதியாகவும் நமக்கு அறிமுகஞ் செய்தவர்கள் இஸ்லாமிய ஆட்சியை மொட்டைத்தனமாக விளங்கிய இவர்கள்தாம்.


 அமெரிக்காவை எதிர்த்தார்கள் என்ற ஒரே காராணத்துக்காகத்தான் இவர்களை கதாபுருஷர்களாக நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். கழுகுப்புத்தியோடிருக்கும் ஷீஆக்கள், தம்மை ஆதரிக்கும் இது போன்ற குழுக்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும். இஸ்லாமியப் போர்வையிலிருக்கும் ஸியோனிஸ்டுகள் அல்லது யூதர்களே ஈரானிலிருக்கும் இந்த ஷீஆக்கள் என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க நாம் தயாராளளோம்.( இப்படிச் சொல்லும் போது ஈரானில் உள்ள அனைத்து சீயாப் பொது மக்களையும் நாம் இவ்வாறு சொல்வதாக கருதிவிடக் கூடாது. வழிகாட்டிகளையும் மேலிடத்தவர்களையுமே நாம் இவ்வாறு குறிப்பிடுகிறோம்) யூதர்களால் உருவாக்கப்பட்ட கூலிப்படைகளே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதற்கு அவர்களே சாட்சியாகவுமுள்ளனர்.

1980களில் ஈரானிலே ஷாஹ் மன்னரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. விபச்சாரம், கொல்லை என்ற பஞ்சமாபாதகங்கள் அனைத்தும் அப்போது தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன. அப்போதுதான் இவற்றுக்கெதிராக கொமைனீயின் தலைமையில் ஆன்மீக புரட்சியொன்று அங்கு அரங்கேறுகிறது. இதன்போது ‘ஷாஹ்வின் அராஜக ஆட்சியை ஒழிப்போம், இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவோம்’என்ற கோஷங்கள் முழங்கின. இதைப்பார்த்த இவர்கள் ‘ஆஹா இஸ்லாமிய ஆட்சியொன்று ஏற்படப் போகுது’ என்று எகிப்திலே அப்துந்நாஸர், அஹ்மத் நஜீப் போன்றோரை நம்பி இஹ்வானுல் முஸ்லிமூன் ஏமாந்ததைப் போன்று குமைனியிடம் இவர்கள் ஏமாந்தார்கள்.
இஸ்லாமிய ஆட்சிய பேசியோர் மீது இவர்களுக்கிருந்த அதீத பற்றுதல் காரணமாக இதே இஸ்லாமிய ஆட்சிப் படலத்தைப் பாடிய ஷீஆக்களுக்கு சார்பாக இவர்கள் என்னென்ன அறிக்களையெல்லாம் விட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் இங்கு தருகிறோம்.
1- இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் கருத்தைத் தாங்கி குவைத்திலிருந்து வெளியாகும்‘அல்முஜ்தமஃ’ (المجتمع) என்ற சஞ்சிகையில் 434வது இதழில் ஈரானியப் புரட்சி பற்றி 1979 களில் கீழுள்ளவாறு எழுதப்பட்டிருந்தது:
‘இஹ்வானுல் முஸ்லிமூன் பொதுவான அரிக்கையொன்றை வெளியிடுகின்றது…. கொமைனீயைச் சந்திக்க நாம் உத்தேசித்துள்ளோம். இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய ஜமாஅத்தே இஸ்லாமி, இந்தோனேஸிய மாஸூமி, மலேசிய ஷபாபுல் இஸ்லாம் போன்ற இயக்கங்களை அழைக்கின்றோம்…..’
ஈரானுக்கு சென்ற இவர்களுக்கு மத்தியில் கொமைனீ பேசும் போது ‘இது ஈரானின் புரட்சியல்ல, இது லாஇலாஹ இல்லல்லாஹ் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் புரட்சியாகும். இஸ்லாத்துக்கெதிராக அடக்கியாள்பவர்களுக்கெதிராக ஏற்பட்ட புரட்சியாகும். ஷாஹ்வுக்கு எதிராக வெற்றியைத்தந்த அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்த வெற்றயைத்தருவான்’ என்று சொல்கின்றார். உடனே இவர்கள் ‘நாம் எங்கள் உடல் ரீதியிலும், ஏனைய வழிகளிலும் உங்களுக்குதவ தயாராகவுள்ளோம்’என்று சொல்கிறார்கள். பின்னர் புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களுக்காக ஸலாத்துல் காயிப் தொழுகை தொழுததாக அந்த குறிப்புச் சொல்கின்றது.
பின்னர் இவர்களுக்கு கொமைனீயின் நிறம் விளங்கி விட்டது . ‘ஈரான் இத்னா அஸரிய்யா கோட்பாட்டில்தான் ஆளப்படும். இதை யாராலும் மாற்ற முடியாது’ என கொமைனீ எழுதிய யாப்பு பற்றி பின்னரே இவர்களுக்குத் தெரிந்தது . அதன் பின்புதான் கொஞ்சம் இவர்கள் அடக்கி வாசிக்கலானார்கள்.
2- 1985களில் ‘மஜல்லதுத்தஃவா’ எனும் சஞ்சிகையில் 105 வது இதழில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான உமர் அத்தில்மிஸானீ என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:
‘இன்றுள்ள மார்க்க அறிஞர்களில் பொறுப்புக்களில் ஒன்றுதான் ஷீஆக்களையும், ஸுன்னிகளையும் சேர்த்து வைப்பதாகும்…. இந்தப் புரட்சிக்குப் பின்னால் இஹ்வானுல் மஸ்லிமூனுக்கும், ஷீஆக்களுக்குமிடையே தொடர்புகள் குறையவில்லை. ஆயத்துல்லா காஸானியோடு நாம் தொடர்பிலுள்ளோம். நவாப் ஸபவீயை எகிப்துக்கு விருந்தாளியாக நாம் அழைத்துள்ளோம். அவருடைய மத்ஹபைவிட்டு இங்கே வரவேண்டும் என்பதற்காக நாம் அவரை விருந்துக்கழைக்கவில்லை. பரஸ்பரம் அன்பு பரிமாறிக் கொள்வதற்காகவே நாம் அவரையழைத்தோம். இஸ்லாமிய மத்ஹபுகள்(அகீதாவிலுள்ள மத்ஹபுகள்) அனைத்தும் ஒன்றித்து செல்லவேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம்……ஷீஆ அறிஞர்களாயினும், ஸுன்னி அறிஞர்களாயினும் இந்த வேளையை அவர்கள் செய்யவில்லையென்றால் மார்க்கத்தை அவர்கள் சரியாக விளங்கவில்லை என்பதே அதன் அர்த்தமாகும்…….’ என்றவாறு அவருடை கருத்துக்கள் காணப்பட்டன.
அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொல்லுவதற்காக உருவாக்கப்பட்ட பிதாஇய்யா அல் இஸ்லாம் எனும் அமைப்பின் ஈராக்கைச் சேர்ந்த தலைவரே இந்த நவாப் ஸபவீ என்பவனாகும். அஹ்மத் கஸ்ரவீ எனும் ஷீஆ அறிஞர் ஷீஆ மத்ஹபை பிழையென்று விளங்கி அஹ்லுஸ்ஸுன்னாவின் பக்கம் வந்த போது அவரைக் கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்தவனையா விருந்துக்கு அழைப்பது?
3- ஈரானியப் புரட்சி வெடித்த அதே காலப்பகுதியில் குவைத்திலிருந்து வெளியான மஜல்லதுல் இத்திஹாத் என்ற சஞ்கிகையில் ஓர் அரிக்கை வெளியாகியது. ‘ஈரானின் புரட்சிக்கு உதவுமாறு குவைத் அரசிடம் நாம் வேண்டுகிறோம். ஈரானுக்கு எதிராக என்ன தடைகள் வந்தாலும் அந்நாட்டுக்கு குவைத் அரசு உதவ வேண்டும். ஏனென்றால் ஈரானின் வெற்றியானது குவைத்தின் வெற்றியாகும். அதன் தோல்வியானது குவைத்தின் தோல்வியாகும்……’ என்றவாறு அவ்வறிக்கை அமைந்திருந்தது.
4- ‘மௌஸுஅத்துல் ஹரகிய்யா’ எனும் நூலில் 289ம் பக்கத்தில் நவாப் ஸபவீ யைப் பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார். ‘ஈமானும், நல்லுணர்வும் கொண்ட 29வயதுடைய ஒரு வாலிபர். இவரைப் போன்றே எல்லோரும் இவ்வுலகிலிருக்க வேண்டும்…..’ அஹ்லுஸ்ஸுன்னாவினரைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறிபிடித்த ஷீஆவைப் பற்றி இவர் சொல்லும் பாராட்டு மழைதான் இது.
5- ஹஸனுல்பன்னாவுக்கு அடுத்த படியாக வந்தவரென்று இஹ்வான்கள் மதிக்கின்ற முஹம்மத் அல் கஸ்ஸாலி என்பவர் தனது ‘கைப நப்ஹமுல் இஸ்லாம்’ என்ற நூலில் 142ம் பக்கத்தில் அகீதா ரீதியாக இஸ்லாத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பற்றிச் சொல்லிவிட்டு ‘அல்லாஹ்வையும், நபியவர்களின் தூதுத்துவத்தையும் ஏற்றுள்ள நாம் ஏன் ஷீஆ, ஸுன்னி என்று சண்டை பிடித்துக் கொள்கிறோம். ஸுன்னிகளாகிய நமக்கும் ஷீஅக்களுக்கும் அகீதாவில் கருத்து வேறுபாடு ஏதுமில்லையே. அப்போது ஏன் நமக்குள் இந்த சச்சரவுகள்……..?’ என்று உலக விடயங்களெல்லாம் தெரிந்த இந்த கஸ்ஸாலி எழுதுகின்றார். ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் அகீதாவில் காணப்படும் முரண்பாடுகள் பற்றி இவருக்குத் தெரியாது போலும். அதே நூலில் 145ம் பக்கத்தில் தொடர்ந்தும் அவர் கூறும் போது ‘ஷீஅக்களுக்கும் ஸுன்னிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் எதைப்போன்றதென்றால் ஹனபீ, ஷாபிஈ, மாலிகீ மத்ஹபுகளுக்கிடையே பிக்ஹு ரீதியாகக் காணப்படும் வேறுபாடுகளைப் போன்றதே……’ என்று சொல்கிறார். அப்படியாயின் ஷீஅக்களை ஐந்தாம் மத்ஹபாகச் சொல்கின்றார்.
6- இதே முஹம்மத் அல் கஸ்ஸாலி ‘ழலாமுன் மினல் கர்ப்’ எனும் நூலில் 252ம் பக்கத்தில் ‘இத்னா அஷரிய்யா மத்ஹப் தொடர்பாக ஒரு பாடத்தை நமது மாணவர்களுக்கு ஏன் நாம் கற்பிக்கக் கூடாது? ‘என்று கூறியுள்ளார்.
7- அபுல் அஃலா மொளானா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1979 ஓகஸ்டில் வெளியான தஃவா எனும் சஞ்சிகையின் 19வது இதழில் ‘கொமைனீயின் புரட்சி ஓர் இஸ்லாமிய புரட்சியாகும். இஸலாமிய ஜமாஅத்துக்களே அதைச் செய்கின்றன. ஆகவே பொதுவாக அனைத்து முஸ்லிம்களும், குறிப்பாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அதற்காகப் போராட வேண்டும்….’ என்று அறிக்கை விடுகின்றார்.
8- சூடானிலிருந்து இஹ்வான்களால் வெளியிடப்படும் ஸபாஹுன் ஜதீத் என்ற சஞ்சிகையில் ‘கொமைனீக்கெதிராக சவுதியிலிருந்து மார்க்கத்தீர்ப்புச் சொல்லப்பட்டுள்ளது…. அரபுத்தீபகற்பத்திலிருக்கும் இவர்கள் ஏன் மார்க்கத்தின் பேரால் இத்தகைய தீர்ப்புக்களைச் சொல்கிறார்கள். இஸ்லாத்துக்கெதிராக இஸ்லாமா? இல்லை. இது ஜிஹாதிய இஸ்லாத்திற்கு எதிரான ஐந்து தூன்களையுடைய இஸ்லாம். கன்னியமிகு மார்க்கத்துக்கெதிராக வந்துள்ள ரியாழுடைய இஸ்லாம் அல்லாஹ்வின் படைக்கெதிரன அநியாயக்காரர்களின் இஸ்லாம்.பிரான்ஸிருந்து வருகின்ற கோழி இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா என்ற இஸ்லாம்தான் இவர்களுக்குத் தெரியும் உண்மையான இஸ்லாம் தெரியது…...’ என்று அவ்வாக்கம் சொல்கின்றது. இஸ்லாமிய ஆட்சி என்று சொன்ன ஒரே காரணுத்துக்காக அஹ்லுஸ்ஸுன்னாவை நக்கலடித்து எழுதும் இவர்களின் வாசகங்களைப் பாருங்களேன்!
கொமைனீயின் வருகையின் பின்னர் ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கெதிராக பல்வேறு அராஜகங்கள் இடம் பெற்றுள்ளன. தஹ்ரான், புலூஷிஸ்தான் போன்ற அஹ்லுஸ்ஸுன்னாவினர் செரிந்து வாழும் பகுதிகளில் கொமைனீயின் வருகையின் பின்னர் ஒரு பள்ளிவாயில் கூட கட்டப்படவில்லை. ஏற்கனவே இருந்தவைகள் உடைக்கப்பட்டன. இதைப்போன்று அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பல அறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அவர்கள் பற்றிய விபரங்கள் ஆதாரங்களுடன் உள்ளன. முஃதமீன் என்ற சிறையில் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கெதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெறுகின்றன. ராபிதது அஹ்லிஸ்ஸுன்னா பில் ஈரான் என்ற அமைப்புத்தான் ஈரானில் நடைபெறும் இந்தக் கொடுமைகளை வெளியுலகுக்கு வெளியிடுகின்றது. இவ்வளவும் தெரிந்த பின்பும்தான் இஹ்வானுல் முஸ்லிமூனைச் சேர்ந்த யூஸுப் நதா என்பவர் அல்ஜெஸீராவுக்கு ‘ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கும் ஷீஅக்களுக்குமிடையில் எந்தப் பிரச்சிணையுமில்லை’ என்று பேட்டியளிக்கின்றார். ஈரானிய ஸுன்னாவைச் சேர்ந்த அறிஞர் அபூ முன்தஸர் அல் பலூஷி என்பவர் ‘ஈரானில் நடைபெறுவது தெரியாமலா? இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள்?’ என்று எழுதுகின்றார். அஹ்மத் நஜாதிக்கு குண்டு வைத்தார்கள் என்ற பேரில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த பலர் இன்றும் சிறையிலுள்ளார்கள். இலங்கையில் தமிழீம விடுதலைப் புலிகள் உரிமை கோரிப் போராடியதைப் போன்று ஈரானில் ஜுன்துல்லாஹ், ஹரகதுல் புர்கான், முனல்லமதுன் புலூஸிஸ்தானிய்யா போன்ற அஹ்லுஸ்ஸுன்னா அமைப்புக்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகள் கூட ஈரானில் வாழும் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்குக் கிடைப்பதில்லை. இந்த நாட்டைப்பார்த்து இவர்கள் இஸ்லாமி ஆட்சி நடைபெறுவதாய் சொல்கிறார்கள். அமெரிக்காவை எதிர்க்கின்றார் என்றும், அணுப்புரட்சி பண்ணப் போகின்றார் என்றும் இந்த நஜாதியை இவர்கள் மெச்சுகின்றனர். இவர் மட்டுமல்ல உலகிலிருக்கும் அரசியற் தலைவர்கள் பலர் தமது சுய அரசியல் இலாபத்துக்காகக் கையிலெடுத்ததுவே அமெரிக்காவை எதிர்ப்பதாகும்.எனவே இந்த ஆக்கத்தில் இன்றைய ஈரானின் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு எதிரான நடவடிக்கைகளை விபரபாக நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
யார் இந்தக் கொமைனீ

அடுத்ததாக கொமைனீயைப் பற்றி கொஞ்சம் அலசுவோம். கொமைனீ என்பவன் ஒரு காபிர் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கக்கூடாது. இதற்கு அவனுடை நூற்களான ‘கஷ்புல் அஸ்ரர், தஹ்ரீருல் வஸீலா, ஹுகூமத்துல் இஸ்லாமியா’ போன்றவைகளே சான்றாகவுள்ளன.
ஷீஆக்கள் என்போர் யார்?
அலீ (ரழி) அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் முஸ்லிம்களில் அநேகர் அநியாயம் செய்து விட்டதாகவும், ஸஹாபாக்கள் அநீதியிழைத்து விட்டதாகவும், நபியவர்களுக்குப்பின்னால் அலீ அவர்களுக்கே ஆட்சியைக் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் கொடுக்கவில்லையென்றும், அபூபக்கர், உமர், உஸ்மான் போன்றோர் அதைத் தட்டிப் பறித்துக்கொண்டதாகவும், அஹ்லுஸ்ஸுன்னாவினர் அஹ்லுல் பைத்தினருக்கு எதிரானவர்கள் நாமே அஹ்லுல் பைத்தினருக்கு சார்பானவர்கள் என்றும் ஷீஆக்கள் அன்று முதல் இன்று வரை கூறி வருகின்றனர்.
1.யூதனாக இருந்து முஸ்லிமாக நடித்த அப்துல்லாஹ் இப்னு ஸபஃ
இந்த சிந்தனை உருவாகி முஸ்லிம்களுக்குள் பிளவு விளையக் காரணமானவன் யமன் பிரதேசத்திலிருந்து வந்த அப்துல்லாஹிப்னு ஸபஃ எனும் ஒரு யூதன். இவன் இஸ்லாத்தைத் தழுவி தன்னை ஒரு முஸ்லிமாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றான். தன்னிடமிருந்த யூதக் கொள்கைகள் அனைத்தையும் மக்களிடையே இஸ்லாமியப்; போர்வையில் நுழைக்கிறான். ஓவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு வஸீ வேண்டும் ஒவ்வொரு நபியும் தனக்குப்பின்னால் ஒருவரை நியமித்து விட்டுச் சென்றுள்ளார். மூஸாவுக்கு வஸீ யூஷஃ . எனவே முஹம்மதுக்கும் அவ்வாறு ஒருவர் இருக்க வேண்டுமே மகனில்லாது விட்டாலும் மறுமகனையாவது நியமித்திருக்க வேண்டுமே என்று சொல்லி பலவீனர்களையெல்லாம் தன் கொள்கையின் பால் ஈர்த்துக்கொள்கின்றான். உஸ்மான் (ரழி) அவர்களின் காலத்திலேயே இவன் இந்தப் பிரசாரத்தை மேற்கொண்டான.; அதில் அவன் வெற்றியும் கண்டான். உஸ்மான் (ரழி) அவர்கள் இயல்பிலேயே மென்மை சுபாவமுடையவர் என்பதாலும் இஸ்லாமிய ஆட்சி பரந்துவிரிந்திருந்ததாலும் இந்;த நிலைமைகளைப் பயன்படுத்தி இவன்தனது விஷக்கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றான். ஆயிஷா (ரழி), அலீ (ரழி), ஸுபைர் (ரழி), தல்ஹா (ரழி) போன்றோர் உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்கnதிரகவுள்ளதாக அவர்கள் எழுதுவதைப் போன்றே கடிதங்ககளை எழுதி தூரப்பிரதேசங்களுக்கெல்லாம் அனுப்புகின்றான். விவரமறியாத தூரதேச மக்கள் இவற்றை நம்புகின்றார்கள். நபித்தோழர்களெல்லாம் உஸ்மான் (ரழி) அவர்கள் மீது வெறுப்போடுதான்; உள்ளார்கள் என்றும் தவறாக விளங்குகின்றார்கள். எனவே ஆட்சி அலிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே இதன் மூலம் இந்த யூதன் வளர்க்கின்றான். உஸ்மான் (ரழி) அவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்கள் எதிர்க்கின்றார்கள். அப்போது மஸ்ரூக் அவர்கள் ‘நீங்கள் என்ன இதை எதிர்க்கின்றீர்கள்? நீங்கள்தானே இது விடயமாகக்; கடிதமெழுதினீர்கள்’ என்று கேட்கின்றார். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் ‘எவனை முஃமின்கள் நம்பிக்கை கொண்டு காபிர்கள் நிராகித்தார்களோ அவன் மீது ஆணையாக நான் இவ்விடம் வரும்வரை அப்படியொன்றை எழுதவில்லை’ என்று சொல்கிறார்கள். எந்தளவுக்கு இவ்வாறான கள்ளக் கடிதங்கள் புழங்கியதென்றால் உஸ்மான் (ரழி) அவர்கள் எழுதியது போன்று அவருக்குத் தெரியாமலேயே கடிதங்கள் எழுதப்பட்டன. இவ்வாறான சூழ்ச்சிகள் மூலம் உஸ்மான் (ரழி) அவர்களுக் கெதிராக மக்களைத்திரளவைத்து, அதே மக்களையே அவர்களை கொலை செய்ய வைத்து, பின்னர் அலீ (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் அவருக்குப் பக்கபலமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி…… ஓர் அசிங்கமான அத்தியாயத்தை இந்த யூதனும், அவனது கூலிப்படையினரும் வரலாற்றில் பதிய வைத்தனர். இவர்களின் இந்த அத்துமீறல்களைச் சகிக்க முடியாமல் அலீ (ரழி) அவர்கள் இவர்களை கொன்றொழிக்கவும் செய்தார்கள். இத்தகைய கயவர்களே இந்த வழிகெட்ட ஷீஆப்பிரிவினராகும். அன்று முதல் இன்று வரை இந்த அநியாயங்களை அவர்கள் செய்து கொண்டேயிருக்கின்றனர். முஸ்லிம்களைக் கேவலப்படுத்த வேண்டும், அழிக்க வேண்டும் என்பதே யூதர்களின் இலக்காகும். அதற்காகத்தான் ஆஷூரா பத்தாம் நாள் விழா போன்ற வழிகேடுளையெல்லாம் அறிமுகம் செய்தனர்.
2.ஷீயாக்களின் இமாமியாக் கோட்பாடு
இந்த ஷீஆக்களிடத்தில் காணப்படும் இன்னொரு கொள்கைதான் இமாமியாக் கோட்பாடு எனப்படுகின்ற பனிரெண்டு இமாம்கள் பற்றிய கொள்கையாகும். பதினொறு இமாம்கள் மரணித்து விட்டதாகவும் இன்னும் ஒரேயொருவர் வரவிருப்பதாகவும் அவர்தான் அல் காயிம் பில்லா எனப்படுகின்ற மஹ்தியென்றும் அவரை அல்லாஹ் ஹீப்ரு மொழியில்தான் அழைப்பான். அவர்தான் தாவூதின் குடும்பத்தாரின் சட்டங்களையே நடைமுறைப்படுத்துவார். புதிய வேதத்தையும், புதிய சட்டத்தையும் இவ்வுலகில் நடைமுறைப்படுத்துவார். மக்காவையும் மதீனாவையும் உடைப்பார். 90 வீதமான அரபிகளைக் கொலை செய்வார். அவரைப் பார்த்து மக்கள் ‘இவர் முஹம்மதின் குலத்தவரல்ல. அப்படியிருந்தால் இவர் இந்த அரபிகளுக்கு இரக்கம் காட்டியிருப்பார்’ எனக் கூறுவர்….’ என்றல்லாம் இவர்கள் எழுதி வைத்துள்ளனர்.
அண்மையில் ஈராக்கின் நஜ்ப் பகுதியில் ‘அதிகமாகக் கொல்லையடியுங்கள் விபச்சாரம் செய்யுங்கள் ஏனென்றால் பித்னாக்கள் அதிகரிக்கும் போதுதான் மஹ்தி வருவார்’ என்று அறிக்கை விட்டார்கள். ஸிர்தாப் ஸாமுர்ரா எனும் இடத்தில் மஹ்தி வரவிருப்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய படுமோசமானவர்களே நம்பிக்கைகளை ஷீயாக்களின்; நூல்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
3.முஸ்லிம்களின் படுகொலைக்குக் காரணமான ஷீயாக்கள்
இவர்களால் விளைந்த மற்றொரு இரத்தக்கரை படிந்த வரலாறொன்றுள்ளது. ஹி 600 களில் அப்பாஸிய ஆட்சி நிலவிய போது முஸ்தன்ஸிர் என்பவருக்குப்பின்னால் முஸ்தஃஸிம் என்பவர் ஆட்சிக்கு வந்து ஆளும் போது அவருக்கு இப்னுல் அல்கமீ, அபூ நுஸைர் அத்தூஸி என்ற இரு அமைச்சர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஷீஆக்களாவர். தாத்தாரியர்களுடன் கடுமையான யுத்தம் மூண்டிருந்த அக்காலப் பகுததியில் இப்னுல் அல்கமீ தாத்தாரிய மன்னன் ஹோலாகூவுக்கு ‘நீ பக்தாதுக்கு வா நானுனக்குதவுகின்றேன்’ என்று கடிதம் அனுப்புகின்றார். அதற்கு தாத்தாரிய மன்னன் ஹோலாகூ ‘எவ்வாறு நான் உன்னை நம்புவது, உன்னை நான் நம்ப வேண்டுமானால் ஒரு லட்சம் பேர்கொண்ட படையை குறைத்து விடு?’ என்று பதில் எழுதுகின்றான். இதைக்கேட்டு படையைக் குறைப்பதற்கு இப்னுல் அல்கமீ கலீபாவுக்கு ஆலோசனை கூறுகின்றான். அதற்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் படை குறைக்கப்படுகின்றது. இறுதியாகப் பத்தாயிரம் படை மட்டுமே எஞ்சியிருக்கும் போது இப்னுல் அல்கமீ ஹோலாகூவுக்கு தகவல் அனுப்புகின்றான் அதற்கேற்ப தாத்தாரியப் படை வந்தது அப்போது கலீபாவிடம் இந்த இப்னுல் அல்கமீ ‘தாத்தாரியப் படை வந்து விட்டது நாம் ஒரேயடியாக அவர்களோடு யுத்தம் செய்யாமல் சமாதனம் செய்து பார்ப்போம்’ என்று கூறி தாத்தாரியப் படையிடம் சென்று பேரம் பேசவிட்டுத்திரும்பி வருகின்றான். கலீபாவிடம் வந்து ‘தாத்தாரிய மன்னர் ஹோலாகூ தனது மகளை உங்கள் மகன் அபூபக்கருக்கு மனம் முடித்துத் தர விரும்புகின்றாh’; என்று கூறுகின்றான் கலீபாவும் இதை நம்பி 600 நீதிபதிகள், அறிஞர்கள் மற்றும் தனது குடும்பத்தாருடன் அவ்விடத்துக்குப் போனதும் மன்னரின் குடும்பம் உற்பட அனைவரும் இந்த சதியின் மூலம் படுகொலை செய்யப்படுகின்றனர். மன்னரை மட்டும் விட்டுவிடலாம் என்று ஹோலாகூ நினைத்த போது அவரைக்கொல்லத்தான் வேண்டும் என்று இப்னுல் அல்கமீ பிடியாய் நிற்கின்றான். அதன்படி மன்னர் கொல்லப்பட்டார். அதன்பின் பக்தாதிலிருந்த அஹ்ல{ஸ்ஸுன்னாவினர் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட இரத்த வராலாற்றுக்குக்காரணமானவர்களே இந்த ஷீஆக்கள்தான் என்பதை நாம் விளங்க வேண்டும்.இப்னுல் அல்கமீ, அபூ நுஸைர் அத்தூஸி போன்றோரை நாம் இழந்து விட்டோம் என்று கொமைனீ தனது ஹுகூமத்துல் இஸ்லாமியா என்ற நூலில் 127ம் பக்கத்தில் பாராட்டி எழுதியுள்ளான்
4.இன்றைய ஈரானில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு எதிரான ஷீயாக்களின் அடக்குமுறைகள்
இதே கொலைவெறியாட்டம் இன்றும் ஈரானில் நடைபெற்றுக்கொண்டுதானிருக்கின்றன. அவ்வாறு கொல்லப் பட்டவர்களின் விவரங்களைத் தருகின்றோம்.
1- 1986ல் கப்ருகளை இழிவுபடுத்தினார் என்ற பேரில் பஹ்மன் ஸுகூர் எனும் அறிஞர் கொல்லப்பட்டார்.
2- 1990ல் அப்துல் வஹாப் அல் ஹவாபி என்பவர் கொல்லப்பட்டார். இதேயாண்டில் குராஸானைச் சேர்ந்த குத்ரதுல்லா ஜஃபரீ என்பவர் கொல்லப்பட்டார்.
3- குர்திஸ்தானில் தனியாக ஓர் இஸ்லாமிய அமைப்பை வழிநடாத்திவந்த அஷ்ஷேக்; நாஸிர் அஸ்ஸுப்ஹானி என்பவர் கொல்லப்பட்டார்.
4- வைத்தியத்தில் தேர்ந்திருந்த அலீ முழபப்பரியான் என்பவர் 1992ல் கொல்லப்பட்டார்.
5- ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கென மத்ரஸாவொன்றை நடாத்தி வந்த முஹம்மத் ஸாலிஹ் அழ்ழியாஈ என்பவரிடம் வஹாபிஸத்தைப் பரப்புவதாக குறித்த மத்ரஸாவை மூடுமாறு வேண்டப்படுகிறது அவர் ‘நீங்கள் வேண்டுமானால் அதை மூடுங்கள் நானோ மூடமாட்டேன்’ என்று மறுக்கின்றார். பின்னர் உடன்பட்டு மத்ரஸாவை மூடுகின்றார். அவரை கண்டம் துண்டமாக வெட்டிச் சாய்த்து விட்டு வீதிவிபத்தொன்றில் இறந்து போனதாய் அறிவித்தார்கள்.
6- பைர்ஜன்த் எனும் இடத்தில் பள்ளியில் இமாமாகவிருந்த மௌலவீ அப்துல் அஸீஸ் அல்லுவியானீ 1994ல் கொல்லப்பட்டார்.
7- மௌலவீ அப்துல் மிக் முல்லா தாதா என்பவர் கொல்லப்பட்டார்.
8- அப்துந்நாஸிர் ஜெம்ஸீத் என்பவர் கொல்லப்பட்டார்.
9- ஷேக்; முல்லா என்பவர் கொல்லப்பட்டார்.
10- உஸ்தாத் பாரூக் புருஸாத் என்பவர் கொல்லப்பட்டார்.
11- கலாநிதி அப்துல் அஸீஸ் அல் காலிமி என்பவர் கொல்லப்பட்டார்.
12- மௌலவீ யார் முஹம்மத் அல் கஹ்ஸாஈ, மௌலவீ அப்துஸ்ஸத்தார், ஷேக்; நூருத்தீன் அல் குறைபீ, அப்துல் ஜப்பார் நூர் முஹம்மத், ஸலாஹ் ஸகீ பின் ஹுஸைன், அன்வர் அல் முபாரகீ, மூஸா அல் கர்மீ, ஷம்ஸுத்தீன் அல் கியானீ போன்றோர் கொடூராமாகக் கொல்லப்பட்டோருள் சிலராகும். இவைகளில் பல அஹ்மத் நஜாதீ ஆட்சிக்காலத்;தில் நடந்தவை.
இத்தகைய வெறியாட்டமாடும் ஈரானைப்பார்த்து அஹ்மத் நஜாதீ இஸ்லாமியப் புரட்சி செய்வதாகக் கூறுகிறார்கள். இந்த ஷீஆக்களுக்கு மக்கா புனிதத்தளமல்ல. கர்பலாவே புனிதத்தளமாகும். இதனால்தான் ஹஜ் காலங்களைப் பார்த்து பெரும் கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்கள். புலூஸிஸ்தானிலுள்ள மிகப்பிரபலமான மஸ்ஜிதுல் பைழுல் கபீர், மக்கீ ஆகிய 200 வருடப்பழைமை வாய்ந்த இரு பள்ளிகளில் ஒன்றை மூடச்சொல்லி அரச உத்தரவு மூன்று முறை வரவே அதற்கு அங்குள்ள அறிஞர்கள் மறுத்த போது புல்டோஸர்கள் மூலம் பள்ளி தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சம்பவம் முழு ஈரானையும் கவலையில் ஆழ்த்தியது. இத்தகைய படுபாதகங்களையெல்லாம் புரியும் இந்த நாட்டைப் பார்த்து ‘முஸ்லிம்நாடு இஸ்லாமிய ஆட்சியென்று சொல்லலாமா?????
5.முத்ஆ எனும் உத்தியோகபூர்வ விபச்சாரம்
ஷீஆக்களிடம் காணப்படும் மற்றொரு கொள்கையே முத்ஆத் திருமணமுறையகும். இது ஒரு சட்டபூர்வ விபச்சாரமாகும். ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்துக்கு வைத்துக் கொள்வதே இதுவாகும். இதனால் உருவாகும் வாரிசுக்கு சொத்துப் பங்கோ, எதுவும் கிடையாது. இந்த விபச்சார முறை ஈரானில் மலிந்து காணப்படுகின்றது. இதை அவர்களின் நூல்களிலேயே எழுதியுள்ளார்கள்.
ஸதூக் என்பவர் ‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| என்ற நுலில் 3ம் பாகம் 366ம் பக்கத்தில் ‘யார் ஒரு முஃமினான பெண்ணுடன் முத்ஆ முறையில் உறவு வைக்கின்றாரோ அவர் கஃபாவை எழுபது முறை தவாப் செய்தவரைப் போன்றவராவார்’(இது கஃபாவை கண்ணியப்படு;த்துகிறதா!) எனக் கூறுகின்றார்.
‘முத்ஆ என்பது எனது முன்னோரினதும், எனதும் மார்க்கமாகும். யார் அதைச் செய்தாரோ அவர் நம் மார்க்கத்தையே செய்தார். யாhர் அதை மறுத்தாரோ அவர் நமது மார்க்கத்தையே மறுத்தார்’ என்று ஜ.பர் அஸ்ஸாதிக் சொன்னதாக எழுதி வைத்துள்ளார்கள்.
‘அபூ அப்துல்லா (அலை) என்பவர் அவர்களிடம் ஜஃபர் அஸ்ஸாதிகிடம் வந்து ‘முத்ஆவுக்கு அல்லாஹ்விடம் கூலியுண்டா என்று கேட்டார் அதற்கவர் ‘அதன் மூலம் (முத்ஆவின் மூலம்) அல்லாஹ்வின் முகத்தை அவர் நாடியிருந்தால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுவான். அப்பெண்ணுக்கு அருகில் அவர் சென்றால் ஒரு பாவத்தை அல்லாஹ் மன்னிப்பான். அப்பெண்ணோடு சேர்ந்து விட்டு அவர் குளித்தால் அவரின் முடியிலிருந்து வடியும் ஒவ்வொரு துளிக்கும் அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னிப்பான்..’ இவையனைத்தும் ஸதூக் என்பவரின் ‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| என்ற நுலில் 3ம் பாகம் 366ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.
‘முத்ஆ செய்பவர் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தப்புவார். யார் இரு தடவை முத்ஆ செய்தாரோ அவர் நல்லவர்களோடு எழுப்பப்படுவார். யார் மூன்று முறை முத்ஆ செய்தாரோ அவர் என்னோடு நெருக்கமாயிருப்பார்’ (‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| 3ம் பாகம் 366ம் பக்கம்) என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்கள்.
‘உங்களுக்கு முன் சென்றவர்கள் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்காமல் இலகுவாக சுவனம் நுழையாலாமென்று நீங்கள் நினைக்கின்றீர்களா’ என்று அல்லாஹ் கேட்கின்றான் ஆனால் இவர்களோ முத்ஆ செய்துவிட்டால் இலகுவாகச் சுவனம் சென்றிடலாம் என்கின்றார்கள்.
ஷாஹுடைய ஆட்சியை ஒழிக்க வந்த தற்போதைய ஆட்சி பிரகடனப்படுத்திய இந்த முத்ஆ முறையால் தந்தையைத் தெரியாத ஐந்து இலட்சம் சிறார்கள் ஈரானிலிருப்பதாக அண்மையில் வெளியான அறிக்கையொன்று கூறுகிறது. லெபனானிலிருந்து வெளியாகும் ஷீஆக்களின் சஞ்சிகையான ஷிராஃ என்ற சஞ்சிகையின் 684வது இதழில் இவ்வறிக்கை வெளியாகியது.
எந்தளவுக்கு முத்ஆவை இவர்கள் ஆதரிக்கின்றார்கள் என்றால் கொமைனீ தனது கஷ்புல் அஸ்ரார் 2-292 என்ற நூலில் ‘முத்ஆ செய்வது குழந்தையுடனாக இருந்தால் அதனோடு உறவு வைத்துக் கொள்ளாமல் உறவுக்கு முந்திய ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.
6-ஷீயாக்களின் அவதூறுகள்
‘உமர் (ரழி) அவர்களுக்கு பிற்பகுதியில் ஒரு நோய் இருந்ததாம் ஆண்களின் நீரால்தான் அது குணமாகுமாம்’ என்றெல்லாம் அவதூறுகளை நபித்தோழர்களின் பேரால் கட்டவிழ்த்து விட்ட யூத அடிவருடிகளே இந்த ஷீஆக்களாகும்.
‘நபியவர்கள் ஸெயினப்(ரழி) அவர்களின் வீட்டுக்குப் போனார்களாம் அவர் குளிப்பதைப் பார்த்து உன்னைப் படைத்தவன் தூய்மையானவனாகி விட்டான் என்று சொன்னார்களாம்.
நபியவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களும் இருந்து கொண்டிருந்த போது அலீ;(ரழி) அவர்கள் வந்தார்களாம். ‘பின்னால் போய் அமரு’ என அலீயைப் பார்த்து நபியவர்கள் சொன்னார்களாம். அலீ அவர்கள் பின்னால் போய் அமர்ந்தார்களாம். அது ஆயிஷாவின் மடியாக இருந்ததாம். உடனே ஆயிஷா அலீயைப் பார்த்து ‘எனது மடிதானா உனக்குக் கிடைத்தது?’ என்றார்களாம் அதற்கு நபியவர்கள் ஆயிஷாவைப் பார்த்து ‘சும்மா இரு’ என்றார்களாம் என்று நபியவர்கள் மீதே பொய்யுரைத்த பொய்யர்களே இவர்கள்.
‘ஒரு கல்லைப் பார்த்து கடவுள் என்று வணங்குவதே தவறாகும். அவ்வாறல்லாமல் கடவுளிடம் துணை தேடும் என வணங்கினால் அதில் தவறில்லை’ என்று தஹ்ரீருல் வஸீலா என்ற நூலில் கொமைனீ கூறுகின்றான். உமர் (ரழி) அவர்களைக் கொலை செய்த ஈரானைச்சேர்ந்த இப்னுல் முல்ஜிமுக்கு கப்ர் கட்டி வணங்குகின்றார்கள். கொமைனீயின் கல்லறை தங்கத்தால் பூசப்பட்டு அதைச் சுற்றித் தவாப் செய்கின்றார்கள். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் தெஹ்ரானில் வணக்கத்தளமுள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்கு ஒரேயொரு பள்ளியேனும் இல்லை. இத்தகையவர்களையா இவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்கள்? என்கின்றார்கள்??????????
அமெரிக்காவின் பின்னணியில் ஈராக்கில் வன்முறை ஏற்படுத்தப்பட்டு சதாம் தூக்கிலப்பட்ட போது முழு உலகும் சோகத்திலிருந்து போது அதைக் கொண்டாடிய வஞ்சகர்கள் யார்? இந்த ஷீஆக்களே! இதை, இஸ்லாமி ஆட்சி பற்றிப் பேசும் எந்த பத்திரிகையும் கண்டிக்க வில்லை. அமெரிக்காவுக்கு இடம் கொடுத்ததற்காக சவுதியை வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கும் இவர்களுக்கு இது தெரியவில்லையோ????????????????
வழிகேடுகளின் தொகுப்புக்களாகவுள்ள ஷீஆக்களின் புத்தகங்கள் இவர்களிடமில்லையா??? இருக்கின்றனவென்றால் ஷீஆக்கள் வழிகெட்டவர்கள்தான் என்பதை ஆதாரத்துடன் இவர்கள் எழுதுவார்களா??? எழுதமாட்டார்கள். ஏனென்றால் ஈரானிலிருந்து வெளியாகும் சீடிக்களையெல்லாம் இவர்கள்தானே சந்தைப்படுத்துபவர்;கள்? அதனால் ஈரானுக்கு எதிராக எழுதவும், பேசவும் இவர்களால் முடியாது. அதற்காக நாம் இவர்களை ஷீஆக்கள் என்று கூறவில்லை அவர்களுக்கு ஆதாரவானவர்கள் என்றுதான் சொல்கின்றோம். ஷீஆக்கள் பற்றியும் ஈரானில் நடைபெறுவன பற்றியும் நாம் எழுதியுள்ள இவையனைத்தும் ஆதாரபூர்வமானவையாகும் எவ்விடத்திலும் இதை நிரூபிக்க தயாராகவே நாம் உள்ளோம். யார் ஆட்சிபீடமேறினாலும் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்த இஹ்வான்கள் இன்றைக்கு அரசியலரங்கில் கால் வைத்து கிளர்ச்சியைக் கைவிட்டதற்குக் காரணமென்னவென்றால் கிளர்ச்சி செய்த காரணத்துக்காக ஸைய்யித் குத்ப் போன்ற தம் தலைமைகள் தூக்குமேடைக்குச் சென்றமைதான். எனவேதான் கிளர்ச்சி செய்தால் நமக்கும் இதே கதிதான் என்று தற்போது அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இவர்களின் கொள்கை தெளிவானதல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். போராட்டமே தீர்வென்று ஆயுதமேந்தியவர்கள் தமது அரசியல் போக்கில் ஒரு கிறிஸ்தவரையும் சேர்க்கின்ற அளவுக்கு இறங்கிவிட்டார்கள். இது பற்றிய அறிக்கையை அண்மையில் ஜோர்தானில் வெளியிட்டார்கள். இவர்களின் இஸ்லாமிய ஆட்சியானது கிறிஸ்தவத்தையும் சேர்த்து நடை முறைப்படுத்துமளவுக்குச் சென்று விட்டது. இஸ்லாமிய ஆட்சிதான் தமது இலக்கு என்பதால் பித்அத், ஸுன்னத் எதையும் இவர்கள் பார்ப்பதில்லை. இதனால்தான் ஹஸனுல் பன்னாவின் 100வது பிறந்த நாளை சர்வதேச ரீதியாக அண்மையில் கொண்டாடினார்கள் இதைக் கொண்டாடுமுகமாக இலங்கையிலுள்ள சிலர் இருட்டில் அழுததாகவும் அறியக்கிடைத்தது. பிறந்த நாள் கொண்டாட்டம் இஸ்லாம் அனுமதித்த ஒன்றாயிருந்தால் முதலில் இவர்கள் நபியவர்களுக்கும், அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ போன்ற நபித்தோழர்களுக்குமல்லவா பிறந்த நாள் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஹஸனுல் பன்னாவை இவர்கள் முற்படுத்தக் காரணம் என்ன?????
ஹஸனுல் பன்னாவை மனிதர் என்பதற்கு மேலால் தூக்கி அவரை ஒரு புனிதராக இவர்கள் பார்க்கின்றார்கள் அதன் வெளிப்பாடுதான் இந்தக் கொண்டாட்டங்களாகும். ஆகவே இஸ்லாமிய ஆட்சியென்பது இஸ்லாம் சொல்லும் விதத்தில் இருக்க வேண்டும். ஷிர்க் கொடிகட்டிப் பறக்கும் போது ஆட்சிபற்றியும் சமூக அமைப்புப்பற்றியும் பேசுவதில் அர்த்தமில்லை. அல்லாஹ்வைப்பற்றிய சரியான நம்பிக்கை
யில்லாமல் உருவாகும் அனைத்தும் தோன்றிய மறுகனமே தடைப்பட்டுப் போகும். ஆகவே கொள்கையில் சீர்திருத்தம் வராமல் வேறு என்னதான் திட்டங்களை வகுத்தாலும் அதில் விளையப் போவது நஷ்டமே.