Tuesday, November 24, 2015

சடலத்துடன் உறவு கொள்ளும் அகோரிகள்.... இன்னும் அவர்களைப் பற்றிய விந்தையான உண்மைகள்!...

சடலத்துடன் உறவு கொள்ளும் அகோரிகள்.... இன்னும் அவர்களைப் பற்றிய விந்தையான உண்மைகள்!...

மனித வரலாற்றில் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டுச் சடங்குகள் எதுவும் குழப்பங்கள், வெறுப்பு, பயம், அருவெறுப்பு போன்றவைகள் சரிசமமான அளவில் நமக்கு ஏற்படுத்தியிருக்காது.
அப்படி ஏற்படுத்தும் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் தான் இந்தியாவில் உள்ள நரமாமிசம் உண்ணும் அகோரிகள் (அகோரி சாதுக்கள்) ஆவார்கள்.
நர மாமிசம் உண்ணுவது மட்டுமல்லாது, இறந்த பிணங்களுடன் உடல் உறவு கொள்வதற்காகவும் அகோரிகள் அறியப்படுபவர்கள்.
அதேப்போல் பல வித சடங்குகளுக்கு மனித மண்டை ஓடுகளையும் பயன்படுத்துபவர்கள் அவர்கள். ஆனால் அகோரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இதோடு நின்று விட முடியாது.
அவர்களைப் பற்றி பேச இன்னும் ஏராளமான விஷயம் உள்ளது. அவற்றைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.
உண்மை: 1
மனித நீர்மம் மற்றும் அழுகும் நிலையில் உள்ள மனித சவம் ஆகியவைகளையும் கூட அவர்கள் உண்ணுவார்கள். இப்படிச் செய்வதால் விஷயங்களில் உள்ள ஒருமையை (புனித மற்றும் புனிதமற்ற) தன்மயமாக்க முயற்சி செய்வார்கள். இதன் மூலம் அழகின் உண்மையான புலனுணர்வை வரையறுப்பார்கள்.
உண்மை: 2
அகோரிகளின் மிகவும் நெறி தவறிய வழக்கமாக கருதப்படுவது பிணத்தைப் புணருவது. அவர்களை பொறுத்த வரையில், காளி தேவி உடலுறவில் திருப்தியை எதிர்ப்பார்க்கிறார். அதனால் தகுந்த பிணம் ஒன்றினை கண்டுப்பிடித்து, அதனுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள்.
புகழ் பெற்ற புகைப்படக்காரரான டேவர் ரோஸ்டுஹர் ஒரு அகோரியை பேட்டி எடுக்கையில், அந்த அகோரி கூறியதாவது, "வெளி உலகத்திற்கு மூர்க்கத்தனமான தெரியும் காரியங்களை நாங்கள் செய்வதற்கான காரணம் மிகவும் சாதாரணமானது.
அருவெறுப்பான விஷயத்தில் புனிதத்தைக் கண்டுபிடிப்பதே அதற்கான காரணம்! ஒரு பிணத்துடன் உடலுறவு கொள்ளும் போதோ அல்லது மனித மூளையை உண்ணும் போதோ ஒரு அகோரி கடவுள் மீது தன் கவனத்தை வைத்திருந்தால், அவன் சரியான பாதையில் செல்கிறான் என அர்த்தமாகும்."
உண்மை: 3
பில்லி சூனியம் மற்றும் இயற்கையை மீறிய சக்திகளில் அகோரிகள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பிணத்தைப் புணரும் போது, அவர்கள் அதிர்ச்சி ஊட்டும் சடங்குகளில் ஈடுபடுவார்கள். இறந்த சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் போது, இயற்கையை மீறிய சக்திகள் தங்களுக்கு அதிகரிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
அதனால் அகோரிகளின் கூட்டம் இந்த சடங்கினை செய்திட இரவு நேரத்தில் கல்லறையில் ஒன்று கூடுவார்கள். எரிக்கப்பட்ட சவத்தின் சாம்பலை தன் உடலின் மீது அகோரி பெண்கள் பூசிக் கொள்வார்கள். கொட்டு அடிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு, கன்னியிழப்பு நடைபெறும். இந்த செயல் நடைபெறும் போது, அந்த பெண் மாதவிடாய் காலத்தில் இருப்பது அவசியமாகும்.
உண்மை: 4
அகோரிகள் தங்கள் மனதில் பகையையோ அல்லது வெறுப்பையோ வைத்திருக்க மாட்டார்கள். வெறுப்பை கொண்டிருந்தால் தியானத்தில் ஈடுபட முடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.
அதேப்போல் தங்கள் உணவை தாங்கள் உண்ணும் கிண்ணத்திலேயே நாய்களுக்கும் மாடுகளுக்கும் பகிர்ந்து உண்ணுவது அவர்களை மகிழ்விக்கும். இவ்வகையான எதிர்மறையான எண்ணங்களை (மிருகங்கள் தங்கள் உணவை அசுத்தம் செய்வது) நீக்கினால் தான், சிவபெருமானுடன் ஐக்கியமாகும் தங்களின் ஒரே குறிக்கோளின் மீது கவனத்தை செலுத்த முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
உண்மை: 5
மிகச்சிறய சணல் கோவணத்தை தவிர அவர்கள் உடலில் எந்த துணியும் அணியாமல் தான் அலைவார்கள். சில நேரங்களில் இறந்த மனித உடலின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு நிர்வாணமாகவும் கூட சுற்றுவார்கள்.
சாம்பல் என்பது வாழ்க்கையின் 5 அதிமுக்கிய பொருட்களை கொண்டு செய்யப்படுவது. அதனால் நோய்கள் மற்றும் கொசுக்களிடம் இருந்து அது அகோரிகளை பாதுகாக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். பொதுவாக சிவபெருமானின் தோற்றத்தைப் போல நடந்து கொள்ளவே அவர்கள் இப்படி செய்கிறார்கள்.
உண்மை: 6
கபாலம் என்றழைக்கப்படும் மனித தலையை உடைமையாக வைத்திருப்பதே அகோரியின் உண்மையான சின்னமாகும். அதற்காக கங்கை நீரில் மிதந்து செல்லும் பிணங்களை அவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள். அதன் பின் அந்த மண்டை ஓட்டை கொண்டு மதுபானம் குடிக்கவோ அல்லது உணவருந்தவோ அல்லது பிச்சை பாத்திரமாகவோ பயன்படுத்துவார்கள்.
உண்மை: 7
தூய்மை மற்றும் தூய்மையற்ற, புனிதம் மற்றும் புனிதமற்ற, சுத்தம் மற்றும் அசுத்தத்திற்கு இடையே உள்ள விதிமுறைகளை உடைப்பதன் மூலம் குணப்படுத்தும் அதிசய சக்தியை தாங்கள் பெறுவதாக அகோரிகள் நம்புகின்றனர். இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பிறகு, சுடுகாட்டில் அவர்கள் அமைதியான முறையில் தியானம் செய்வார்கள்.
உண்மை: 8
சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காததன் மூலம் நிர்வாணம் மற்றும் ஆத்மாவின் மோட்சத்திற்கு பாதை கிடைக்கும் என இந்த இனம் நம்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காமல், காரணமே இல்லாமல் மிக சத்தமாக சபிப்பார்கள். இந்த ஒரே வழியில் தான் அகோரிகளால் அறிவொளியை அடைய முடியும்.
உண்மை: 9
மனித மண்டை ஓடுகளை ஓரி அணிகலனாக தங்கள் கழுத்தில் மாலையாக அணிவித்திருப்பதை நாம் காண நேரிட்டிருக்கலாம். மனித மண்டை ஓடுகளை கொண்டு செய்த இந்த ஒரே அணிகலனை தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர்.
எரிக்கப்பட்ட பிணங்களின் தொடை எலும்பையும் கூட நடை குச்சியாக சில அகோரிகள் பயன்படுத்துவார்கள். இது அகோரியின் சின்னமாகும். அவர்கள் தங்களது தலை முடியை வெட்டவோ அல்லது குளிக்கவோ மாட்டார்கள். அதனால் தான் இயற்கையான ஜடாமுனி அவர்களுக்கு ஒரு அடையாளமாகவே விளங்குகிறது.
உண்மை: 10
அகோரிகள் கஞ்சாவை புகைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள். அதற்கு காரணம், அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கும், விடாமுயற்சியுள்ள தியானத்தில் மனதை ஒருநிலைப்படுத்த அது உதவும் என நம்புகின்றனர்.
சொல்லப்போனால், எப்போதுமே அவர்கள் கஞ்சாவின் தாக்கத்திலேயே தான் இருப்பார்கள். இருப்பினும் பார்ப்பதற்கு அமைதியாகவே காணப்படுவார்கள். இந்த போதை வஸ்து கொடுக்கும் பிரமை, மிக உயரிய ஆன்மீக அனுபவங்களாக கருதப்படுகிறது.

http://llatha458.blogspot.com/2015/07/blog-post_15.html

பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்! ஏன்? - See more at: http://chittarkottai.com/wp/2012/03/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-bermuda-triangle-%e0%ae%8e%e0%ae%a4/#sthash.KsV7GyFB.dpuf






இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!
வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது!, இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது!, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது……………
கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,… கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!
சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.
1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்லவது அவர்களது இலக்காக இருந்தது, கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுபாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின!, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது!, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்!
சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,…. புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!
எவ்வாறு இது சாத்தியமானது?
கப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்!
வார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன்!, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது, அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து! எளிமையாக கீழிருக்கும் படம் சொல்லும்!
இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம்!, பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம்! ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!
விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!
நன்றி :  வால்பையன் வலை
- See more at: http://chittarkottai.com/wp/2012/03/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-bermuda-triangle-%e0%ae%8e%e0%ae%a4/#sthash.KsV7GyFB.dpuf

பாம்புகள் பல விதம்







ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் பாம்பு தைப்பான் (inland taipan) ஆகும். நச்சுப்பாம்புகளுள் மிகக் கொடியது இது. இந்தப் பாம்பின் நச்சுச் சுரப்பியில் எப்போதும் மிகக் குறைந்த அளவு நஞ்சுதான் (0.1 g) இருக்கும். ஆனால் இந்தக் குறைந்த அளவு நஞ்சு மனிதர்கள் ஐம்பது பேரைக் கொல்லப் போதுமானது ஆகும். (இரண்டு நூறாயிரம் எலிகளைக் கொல்ல வல்லது இந்த அளவு நஞ்சு.)
ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் வாழும் கறுப்பு மம்பா (black mamba) உலகின் மிக விரைவான பாம்பு. இந்தப் பாம்பின் விரைவு மணிக்குப் பன்னிரண்டு கல் (12 mph; 19 km/h) ஆகும். இது 11 அடி நீளம் வளரும்.
மலைப்பாம்புதான் (Asian reticulated python) உலகின் மிக நீளமான பாம்பு. இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மலைப்பாம்பின் நீளம் முப்பத்து மூன்று அடி (10 m) ஆகும்.
அமேசன் ஆற்றுப்பகுதியில் உள்ள சதுப்புநிலத்தில் உயிர்வாழும் பாம்பு அனாகொண்டா (anaconda). பாம்புகளுள் மிகுந்த எடைகொண்டது இது. பிடிபட்ட 27 அடி 9 அங்குலம் நீளமுள்ள ஓர் அனாகொண்டாவின் எடை ஏறத்தாழ 227 கிலோகிராம் (500 பவுண்டு) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நச்சுப் பாம்புகளுள் மிகச் சிறியது தெற்கு ஆப்பிரிக்காவில் நமிபியா நாட்டில் காணப்படும் நமாகுவா குறும்பாம்பு (Namaqua dwarf adder) ஆகும். முழு வளர்ச்சி அடைந்த பாம்பு எட்டு அங்குல (20 cm) நீளம் மட்டுமே இருக்கும்.
மூன்று கரீபியன் தீவுகளில் மட்டும் காணப்படும் இந்தப் பாம்பு நூல் பாம்பு (thread snake) எனப்படுகிறது. பாம்புகளுள் மிகச் சிறியது இது. இந்தப் பாம்பினத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறிய பாம்பின் நீளம் நாலேகால் அங்குலம் (10.8 cm) ஆகும்.
மேலும் ஒரு செய்தி:
மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவகை விரியன் பாம்புதான் ( Gaboon viper) பாம்புகளுள் மிக நீளமான நச்சுப் பற்களைக் கொண்டது. இதன் நச்சுப் பற்களின் நீளம் இரண்டு அங்குலம் (5 cm) ஆகும்.
நன்றி:  அ. நம்பி – நனவுகள்
- See more at: http://chittarkottai.com/wp/2011/02/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#sthash.pcvY3IIk.dpuf