Saturday, July 25, 2015

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்

அன்பு சகோதர சகோதரிகளுக்கு, 

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...ஆமீன்.

இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.

இஸ்லாம் என்றால் என்ன? 

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலுமாக அடிபணிவது/அர்ப்பணிப்பது என்று அர்த்தம். எவர் ஒருவர் அப்படி செய்கின்றாரோ அவர் முஸ்லிம் என அழைக்கப்படுகின்றார். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடங்கி, மூசா (Moses) (அலை), ஈசா (Jesus) (அலை), முஹம்மது (ஸல்) என்று இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டதும், அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதும் இஸ்லாம் தான். 

இஸ்லாம் கூறும் செய்தி: 

இஸ்லாம் கூறும் செய்தி மிக எளிமையானது. இறைவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை, அவனை மட்டுமே வழிபடுங்கள் என்பது தான் அது. 

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை --- குரான் (112:1-4)

இந்த பிரபஞ்சத்தை, அதனுள் உள்ள நம்மை என்று அனைத்தையும் படைத்த இறைவனை மட்டுமே வழிபடுமாறும், அவனால் படைக்கப்பட்ட சக உயிரினங்களையோ அல்லது உயிரற்றவையையோ வழிபடுவதை விட்டொழிக்குமாறும் அறிவுறுத்துகின்றது இஸ்லாம்.

குர் ஆன்: 

இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தூதரும் அற்புதங்களோடு அனுப்பப்பட்டார்கள். இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதம் குரான். 

குரான் இருபத்தி மூன்று ஆண்டு கால இடைவெளியில் சிறுகச் சிறுக இறைவனால் இறுதித் தூதருக்கு அருளப்பட்டது. 

எப்படிப்பட்ட வேதம் குர்ஆன்?

இன்னும், நம் அடியாருக்கு அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

இது மனித குலத்திற்கு இறைவனால் விடப்பட்ட சவால். அன்றிலிருந்து இன்று வரை இந்த சவாலுக்கு நெருக்கத்தில் கூட யாராலும் வரமுடியவில்லை. அதன் விளைவாக, இது மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட வேதமென்று கோடானு கோடி மக்கள் தொடர்ந்து நம்பி வருகின்றார்கள். 

இந்த வேதம் அன்று இருந்த சிந்தனையாளர்களுக்கும் சரி, இன்று இருக்க கூடிய சிந்தனையாளர்களுக்கும் சரி தொடர்ந்து ஆச்சர்யத்தை தந்து வருகின்றது. 

மருத்துவ துறையில் மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ள டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore), தன்னுடைய "The Developing Human" புத்தகத்தில் குரானின் அறிவியல் உண்மைகள் குறித்து ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கின்றார். 

பிரான்சின் மதிப்புமிக்க மருத்துவரான டாக்டர் மவ்ரீஸ் புகேய்ல் (Dr.Maurice Bucaille) அவர்கள் தன்னுடைய "The Bible, the Qur'an and Science" புத்தகத்தில்,

    "ஒரு பிழையை கூட குர்ஆனில் நான் காணவில்லை. இந்த புத்தகம் ஒரு மனிதனால் எழுதப்பட்டிருந்தால், எப்படி நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்க கூடிய உண்மைகளை அன்றே சொல்லி இருக்க முடியும்?"

அறிஞர்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான மற்ற முஸ்லிம்கள் கூட, குர்ஆனில் குறிப்பிடத்தக்க ஞானம் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களது குரான் அறிவை கண்டு நீங்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம், குரான் உங்களது நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதே ஆகும். சில நாட்களிலேயே கூட உங்களால் முழு குரானையும் படித்து விட முடியும்.

மேலும், குரான் என்னும் இறைவேதம், உலக மக்கள் அனைவருக்குமானது. நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டவர்கள்.  
(நபியே) உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை - குரான் 21:107.

நம் அனைவருக்கும் சொந்தமான, படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத குரானை ஏன் ஒரே ஒரு முறை படித்து பார்க்க நீங்கள் முன்வரக்கூடாது?   

தன்னை படிப்பவர்களை உரையாடலுக்கு உட்படுத்தி அவர்களுடன் ஒரு அறிவார்ந்த விவாதத்தை ஏற்படுத்தும் குரான் என்னும் அற்புதத்தின் தமிழ் அர்த்தங்களை படிக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் என்னுடைய மெயில் முகவரிக்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். இறைவன் நாடினால், அனுப்பி வைக்கின்றேன். 

சகோதரத்துவம்: 

ஆதாம், ஏவாள் (இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவுவதாக) ஆகிய இருவரிலிருந்தே நாம் அனைவரும் வந்ததால் இவ்வுலகில் உள்ள அனைவருமே சகோதர/சகோதரிகள் என்று கூறுகின்றது இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறிய விசயங்களில் சகோதரத்துவமும் ஒன்று. தன்னுடைய இறுதி பேருரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள் இறுதி தூதர் (ஸல்) அவர்கள், 

    "எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல"

இஸ்லாமை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை. எவர் ஒருவர் இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கின்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது.

    "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13

புரட்சி: 

நாம் பல புரட்சிகளை பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், அவையெல்லாம் விட இஸ்லாம் செய்த புரட்சி மகத்தானது. மற்ற புரட்சிகளில் மக்களின் புறம் சார்ந்த சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய புரட்சியில் மக்களின் அகம், புறம் என இரண்டுமே மாற்றம் கண்டன. அவர்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடையிலிருந்து, மற்றவரை அணுகும் முறையிலிருந்து, சகோதரத்துவத்தின் அருமையை உணர்ந்து கொண்டதிலிருந்து என்று மாபெரும் எழுச்சியை இருபத்தி மூன்றே ஆண்டுகளில் செய்து காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

நல்ல விஷயங்களை நோக்கி பயணிக்க ஆசைப்படும் தங்களுக்குள்ளும் (இறைவன் நாடினால்) அந்த புரட்சி ஏற்படலாம். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதோடு முழுமையாக படிக்க முன்வருவது தான். ஆம், குரானுடன் நீங்கள் புரியப்போகும் விவாதம் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டலாம்.

உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. விரைவில் உண்மையை கண்டறிய இறைவன் உங்களுக்கு உதவுவானாக...ஆமீன். 

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ    


------------------------------------------------------------------


Dear Brother/Sister,

              We kindly request you to spend a few moments of your time reading this letter because it just might be possible that this letter will open before you a new dimension of your role as a human being in this universe. We hope that you are a free thinking, broadminded, and prejudice-free human being whose goal is to find the truth. Before we continue, let us state to you the purpose of this letter- that this is an introduction and invitation to the way of life known as Islam.

1. WHAT IS ISLAM

Islam, unlike most other religions, is not named after any man. Instead Islam means the submission of one's will to the only true god worthy of worship "Allah" and anyone who does so is termed a "Muslim". The word also implies "peace" which is the natural consequence of total submission to the will of Allah. Islam is the religion that was given to Adam, the first man and the first prophet of Allah, and it was the religion of all the prophets sent by Allah to mankind like Jesus and Moses.

2. THE MESSAGE OF ISLAM

The most important message of Islam is the absolute Unity of God-that there is only One Supreme Being who has no partners and is not dependent on anyone or anything. He is the creator of everything and the whole universe is under His control. Since the total submission of one's will to Allah represents the essence of worship, Islam is the worship of Allah alone and the avoidance of worship directed to any person, place or thing other than Allah. In essence, Islam calls man away from the worship of creation and invites him to worship only its Creator. Allah is the only one deserving man's worship as it is only by His will that prayers are answered. Hence prayers to the non-living such as the sun, fire, and to humans whether they be Jesus, Moses or even Muhammad (pbut) are rejected, as Allah informs us in the opening chapter of the Qur'an, known as Soorah Al-Faatihah, verse 4:

"You alone do we worship and from you alone do we seek help."

A Muslim believes that Allah and His creation are distinctly different entities. Neither is Allah His creation or a part of it, nor is His creation Him or a part of Him. Ultimately, it is the belief that the essence of Allah is everywhere in His creation or that His divine being is or was present in some aspects of His creation, which has provided justification for the worship of creation. Islam, hence, is a clear call to the worship of the Creator and the rejection of creation-worship in any form.

3. THE MIRACLE OF QUR'AN

"And if you are in doubt as to what We [Allah] have revealed…then produce a Soorah (chapter) like thereunto"(Soorah Baqarah 2:23)

This was the challenge put forth by Allah in the Qur'an 1400 years ago. As of yet, none has or will ever come close to meeting this challenge. Hence, as a result, multitudes throughout the centuries have believed and continue to believe in the Qur'an as a revelation beyond any human capacity. Modern scientists, for instance, have been amazed by the accuracy of scientific information presented in the Qur'an. Here are just a few examples:

In his book of embryology-'The Developing Human' [W.B. Saunders Publishing, 1982], Dr. Keith Moore added a whole chapter to discuss the scientific accuracy of the Quranic discussion of this science. Another eminent scientist, Dr. Maurice Bucaille wrote in his book-'The Bible, the Qur'an and Science":

"I could not find a single error in the Qur'an…if a man was the author of the Qur'an how could he have written facts in the 7th century A.D. that today are shown to be in keeping with modern scientific knowledge"

Facts about astronomy, the animal world and other natural phenomenon, that were alien to modern science not long ago, are scattered among the messages of Allah's Unity and His Attributes throughout the miracle that is known as al-Qur'an.

I thank you for your time. May Allah guide all of us to the truth. 

(This letter from thedeenshow.com was edited and posted)

நன்றி  http://www.ethirkkural.com/

Monday, July 13, 2015

அமெரிக்க இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?



இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விடஅதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.

அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள்.

இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூண்.
(பார்க்க படம் : 2)

ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடி குண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார். இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

விமானம் வளைந்த விதத்தை பற்றிய புகைப்படம்.
(பார்க்க படம் : 3)

விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)

அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன்.

பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா, நான்தான் மார்க் பீகம். அம்மா, நான் பேசுவது கேட்கிறதா? அம்மா.. அம்மா.. (mom I am mark Beckham. Can you hear me. Mao...!! Mom) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சிபெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

கருப்புப்பெட்டி (பார்க்க படம் : 6)

விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன்கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்பு பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.

ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.

ஒசாமாநல்லவரா? கெட்டவரா? என்கின்ற விவாதத்திற்கு நான் வரவில்லை , அதனை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் கூறுவது நியாயமா?????????

இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்...?

உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அலன் ஸப்ரொஸ்கி

அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில் "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன்.

அதன் விளைவாக 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தான் இதுபற்றிய தேடலில் இறங்கியபோது தற்போதும் இராணுவப் படையணிகளில் உள்ள தன்னுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம்கொண்டதாகவும் பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து தான் விரிவாக விளக்கியதும் தன்மீதான அந்த சந்தேகம் மாறி கடுஞ்சீற்றம் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே நான் அவர்களுக்கு டென்மார்க் நாட்டு கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ 9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்தான் இருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமலாக்கிவிட எள்ளளவும் தயக்கம் காட்டமாட்டார்கள்" என்று ஸப்ரொஸ்கி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும் அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படு காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கைதாவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் ஈராக்
ஆப்கானிஸ்தான் முதலான நாடுகள் மீது படையெடுப்புக்களை மேற்கொண்டு அந்த நாடுகளை நிர்மூலமாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டது. அன்றுமுதல் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறுவகையான ஒடுக்கு
முறைகளையும் அவமானகளையும் எதிர்கொள்ள நேர்ந்து வருகிறது. இந்நிலையில்இ அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முன்னாள் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில், இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, 9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது. அரபு முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர். இத்தாக்குதல் நடத்த நீண்ட காலமாக திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம்.

இரட்டை கோபுரங்கள் இடிந்த பகுதி மற்ற கட்டிடங்கள் சேதம் இல்லை செம காமெடி. (பார்க்க படம் : 4 & 5)

மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் பொழுது அது அருகாமையில் உள்ள மற்றகட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன் ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது என்றும் மேலும் மூன்றாவது கட்டிடமும் இதே போன்று விழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் பெண்டகனை தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பெண்டகனை தாக்கிய பகுதி.. (பார்க்க படம் : 7 & 8)

மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும்
விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை விமானம் தாக்குதலில் என்ன முழுவதுமாக ஆவியாகிவிட்டதா? என வினவியுள்ளார். கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறியுள்ளனர் அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் என்ன மாயமாக மறைந்து விட்டனவா? எனக் கேட்டுள்ளார். அமெரிக்க ஊடகங்கள் ஏன் இத்தாக்குதலை குறித்து மௌனம் சாதிக்கின்றன என்றும். புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக்கையும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுப்பதே. இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபருக்கு மனிதர்களை உயிர் மதிப்புடையது அல்ல என்று மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

ஜச்சகல்லஹ் கைர் Dr.ஜாகிர் நயிக் & சுவனப்ரியன்

Thanks to puthiya thedal !!!

இமாம் மாலிக் இப்னு தீனார் ஒரு குடிகாரராக இருந்தவரா?

யார் இந்த மாலிக் இப்னு தீனார்??
+++++++++++++++++++++++++++++++

இமாம்களின் பெயரில் கட்டுக்கதைகள் நமது சமூகத்தில் பரவியிருப்பதைப் போன்று அவர்களைப் பற்றி தவறான செய்திகளும் பரவியிருக்கின்றன. அப்படியான சம்பவங்களில் ஒன்று தான் இமாம் மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் திருந்திய சம்பவம்.

சம்பவத்தின் சுருக்கம் 

ஊர் காவல்கார்ராக இருந்த அவர் எப்போதும் மது மயக்கத்திலே மூழ்கியிருந்தார். அவருடைய அடிமைப் பெண் மூலம் பிறந்த பெண் குழந்தையை மிகவும் நேசித்தார். அவருடைய கையில் இருக்கும் மதுக் கோப்பையை பறித்து அவருடைய மடியலேயே கொட்டிவிடுவாள். அவளுக்கு இரண்டு வயதாகும் போது மரணித்து விட்டாள். 

ஷஅபான் மாதம் பராஅத்துடைய இரவு அதுவும் வெள்ளி இரவு இஷாவும் தொழாமல் மது மயக்கத்திலேயே தூங்கிவிட்ட அவர் ஒரு கனவு கண்டார். கியாமத் நாள் உண்டாகி , கருநிறப் பாம்பொன்று தன்னை துரத்தி வரவதைக் கண்டு விரண்டோடுகின்றார். இடையில் எதிர்ப்பட்ட வெண்ணிற ஆடையணிந்தவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட அவரோ கையை விரித்து விடுகின்றார். கடைசியாக தனது மகளை ஓரிடத்தில் சந்திக்கின்றார்.

அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்து, அஞ்சி நடுங்கும் நேரம் ஈமான் கொண்டவர்களுக்கு வரவில்லையா? 57—16
என்ற வசனத்தை அவள் ஓதி உபதேசித்ததாகவும் கண்டெழுந்த அவர் அன்றிலிருந்து திருந்தி வாழ்ந்தார் என்று சம்பவம் நீள்கிறது.
நீங்கள் எப்படி திருந்தினீர்கள் என்ற கேட்டப்பட்ட போதே இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

இந்த சம்பவம் இமாம் மாலிக் இப்னு தீனாருக்கு மட்டுமல்லாமல் அப்துல்லாஹிப்னுல் முபாரக் போன்ற நல்லறிஞர்கள் பெயராலும் மிம்பர் மேடைகளில் உலாவருவதே இது இட்டுக்கட்டபட்டதென்பதற்கு மேலதிக சான்றாகும்.

இவர் யார் ?
இமாம் தஹபீ தனது ஸியரு அ/லாமின் நுபலா என்ற கிதாபில் பின்வருமாறு எழுதுகின்றார் -

 இவர் முக்கியமான நல்ல உலமாக்களில் ஒருவர். நம்பகமான தாபிஈன்களில் உள்ளவர். அல் குர்ஆனைப் பிரதி செய்து விற்பதே அவரது தொழிலாக இருந்தது. இப்னு அப்பாஸ் ரழி காலத்தில் பிறந்தார். அனஸ் இப்னு மாலிக் , அஹ்னப் இப்னு கைஸ் , ஸஈதுப்னு ஜுபைர் , ஹஸன் பஸ்ரி , முஹம்மதுப்னு ஸீரீன் , காஸிம் இப்னு முஹம்மத் மேலும் இன்னும் பலரிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்திருக்கின்றார்......... இமாம் நஸாஈயும் இன்னும் பலரும் அவரை நம்பகமானவர் என உறுதிப்படுத்தியுள்ளனர். ...இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஹஸனுடைய தரத்தைச் சார்ந்தது.

இவருடைய ஹதீஸ்கள் நான்கு ஸுனன்களிலும், புகாரியில் முஅல்லகாகவும் இடம்பெற்றுள்ளது. ஹிஜ்ரி 127 அல்லது 130 களில் மரணித்தார் .

இந்த சம்பவம் எந்த கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது ?

இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் ராவீ என்ற வகையில், அறிவிப்பாளர்கள் பற்றி எழுதப்பட்ட எந்த கிதாப்களிலும் இப்படியொரு சம்பவத்தை காண முடியவில்லை. ஹிஜ்ரி 620 இல் மரணித்த இமாம் இப்னு குதாமா தன்னுடைய அத்தவ்வாபீன் (திருந்தியவர்கள் ) என்ற கிதாபில் பதிவு செய்திருக்கறார்.

 சுமார் 5 நூற்றாண்டுகளின் பின் பதிவு செய்த இந்த அறிஞர் தனக்கும் இமாம் மாலிக் இப்னு தீனாருக்கும் மத்தியிலுள்ள அறிவிப்பாளர் வரிசையைக் கூறவில்லை. மாலிக் இப்னு தீனாரைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிடுகிறார். ஒரு செய்திக்கு முன்னால் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் பிரயோகப்படுத்துவது அந்த செய்தி பலவீனம் என்பதை உணர்த்தும் என்பது ஹதீஸ் துறையில் அறியப்பட்ட விடயமாகும். 

இவரிடமிருந்து தான் இப்னுல் ஜஸரீ , அஜலூனீ  போன்றவர்கள் தங்களது கிதாப்களில் பதிவு செய்திருக்கின்றனர். தவ்பா செய்து நல்லறம் புரியுமாறு மக்களை தூண்டுவதற்காக பிரபல்யமடைந்திருந்த இந்த சம்பவத்தை அவர் பதிவு செய்தருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இவர் ஊர் காவல்கார்ராக இருந்ததாகவோ, எப்போதும் மது மயக்கத்தில் மூழ்கியிருந்த்தாகவோ அல்லது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததாகவோ எந்தவிதமான குறிப்புகளும் கிடையாது.
இமாம் மாலிக் இப்னு தீனார் அவர்கள் இயல்பிலேயேநல்லவராகவும், அல் குர்ஆனைப் பிரதி செய்து விற்பதே அவரது தொழிலாக இருந்துள்ளது.

உண்மையலேயே மோசமானவராயிருந்து திருந்தியிருந்தால், அறிவிப்பாளர்கள் பற்றி எழுதிய இமாம்கள் இப்படிக் கூறியிருப்பார்கள். 
இவர் மோசமானவராகவும் மது அருந்தும் பழக்கம் உள்ளவராகவும் இருந்து, பின்னர் திருந்தி வணக்கவாளியாகவும் உலகப்பற்றில்லாதவராகவும் மாறிவிட்டார். 



துணை நின்றவை
سير أعلام النبلاء
تقريب التهذيب
ملتقى أهل الحيث

ஆக்கம் : ஷுஐப் உமரி

Sunday, July 12, 2015

இமாம் மாலிக் இப்னு தீனார் சுவனம் செல்வதற்கான டிக்கெட் வழங்கினாரா?


நமது முன்னோர்களான மதிப்பிற்குரிய இமாம்களை எல்லை மீறிப் புகழ்ந்து அவர்களைப் புனிதப்படுத்த முயற்சிக்கும் பித்அத்வாதிகள் அந்த இமாம்களின் பெயரால் அவர்களே வெறுக்கக்கூடிய மார்க்கத்திற்கு முரணா நச்சுக்கருத்துக்கள் பொதிந்த பல சம்பவங்களை தங்களது உபந்நியாசங்களில் சொல்லியும் புத்தகங்களில் எழுதியும் உள்ளனர். தங்களது வழிகெட்ட கொள்கைகளுக்கு குர்ஆனும் ஸுன்னாவும் இடமளிக்காததால் இமாம்களிடம் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது......

 அதிலும் குறிப்பாக இமாம் மாலிக் இப்னு தீனார் அவர்களின் பெயரால் பல பொய்யான சம்பவங்கள் சமூகத்தில் பரவிக் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றை நாம் சற்று ஆராய்வோம். இது போன்ற சம்பவங்களில் மார்க்கத்திற்கு நேரடியாகவே முரண்படும் பல விடயங்கள் இருந்தாலும், அவற்றின் அறிவிப்பாளர் வரிசைகளை ஆராயும் போது அவற்றை ஏற்க முடியாதென்ற நிலை வந்து விடுவதால் உள்ளடக்கத்தில் உள்ள முரண்பாடுகளை ஒவ்வொன்றாக விளக்க வேண்டிய அவசியம் இல்லையென்றே கருதுகின்றேன்.

சம்பவத்தின் சுருக்கம் :

ஜஃபர் இப்னு ஸுலைமான் என்பவருடன் இமாம் மாலிக் இப்னு தீனார் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது அழகான ஒரு வாலிபர் தனக்காகக் கட்டப்படுகின்ற ஒரு மாளிகையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். உலக மோகத்தில் இவர் மூழ்கிவிட்டாரே என்று கவலைப்பட்ட இமாமவர்கள், அக்கட்டடத்திற்கு செலவாகக்கூடிய ஒரு லட்சம் திர்ஹம்களையும் தனக்கு வழங்கினால் சுவனத்தில் ஒரு மாளிகையைப் பெற்றுத்தருவதற்கு தாம் பொறுப்பேற்பதாக வாக்களிக்கிறார். 

சிறிது அவகாசம் கேட்ட அவ்வாலிபர் மறுநாள் காலையில் அதற்கு சம்மதிக்கிறார். அதன்படி இமாம் மாலிக் இப்னு தீனார் அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகையைப் பெற்றுத்தருவதாக தாம் பொறுப்பேற்பதற்கான உறுதிப்பத்திரத்தை எழுதி அவரிடம் கையளித்ததோடு, தான் பெற்ற அப்பணத்தை அன்று மாலையே தர்மம் செய்து விடுகிறார்.

இச்சம்பவம் நடந்து நாற்பது நாள் கூட முடிவடையாத நிலையில், ஒரு நாள் ஸுப்ஹு தொழுது முடித்த இமாம் மாலிக் இப்னு தீனார் அவ்வாலிபருக்கு தாம் கொடுத்த அதே பத்திரம் மிஹ்ராபில் விழுந்திருப்பதைக் கண்டார். அதில் மையின்றி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது

" இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து மாலிக் இப்னு தீனார் ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து விடுதலை அளிக்கப்படுகிறது. நீர் அவ்வாலிபருக்காக பொறுப்பேற்றதை அவருக்கு பூரணமாக வழங்குவதோடு இன்னும் எழுபது மடங்கு அதிகப்படுத்திக் கொடுத்து விட்டோம்."

அவ்வாலிபரின் வீட்டுக்குச் சென்ற போது அவர் இறந்து விட்டதை அறிந்தார். அவரைக் குளிப்பாட்டியவரிடம் விசாரித்தார். அவ்வாலிபர் தம்மிடம் ஒரு காகிதத்தைத் தந்து அதை கபனுக்குள் வைத்துவிடுமாறு கூறினார் என்ற அவர் கூறிய போது இமாம்  மாலிக் இப்னு தீனார் தம் கையிலிருந்த அக்காகிதத்தைக் காட்டியபோது இதைத்தானே நான் கபனில் வைத்தேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு வாலிபர் " நான் இரண்டு லட்சம் தருகிறேன். எனக்கும் ஒரு பத்திரம் தாருங்கள் " என்று கேட்டதற்கு " அது நடந்து முடிந்த விடயம். இனி அது நடக்காது அல்லாஹ் தான் நாடியதை செய்வான் " என்று கூறி விடுகிறார்.

(இது سبقك بها عكاشة  வை ஞாபகப்படுத்துகிறது.)


இச்சம்பவத்தை இமாம் இப்னு குதாமா தனது ( அத்தவ்வாபீன் திருந்தியவர்கள் ) என்ற கிதாபில் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவுசெய்திருக்கிறார்.

இச்சம்பவத்தை ஜஃபர் இப்னு ஸுலைமான் அறிவிக்கிறார் 

அவரிடமிருந்து முறையே

அல்ஹஸன் இப்னு அபீமர்யம் அல்அஸ்கரீ

அல்அப்பாஸ் இப்னு முஹம்மத் அல்முதஹ்ஹரீ

யூஸுப் இப்னு அஹ்மத் அல் வாஇள்

இப்ராஹீம் இப்னு முஹம்மத் அல் பகீஹ் அல் மாலிகீ

அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் அல் பாகுவைஹீ

அலீ இப்னு அப்தில்லாஹ்

அபூபக்ர் அஸ்ஸூபி

அபுல் பரஜ்

இமாம் இப்னு குதாமா என அறிவிப்பாளர் வரிசை தொடர்கிறது.


இனி ஒவ்வொருத்தராக ஆராய்வோம்.

( 1 ) ஜஃபர் இப்னு ஸுலைமான் جعفر بن سليمان الضبعي

ஹிஜ்ரி 178 ரஜப் மாதம் மரணித்த, ஷீயாக் கொள்கையுடைய, வணக்கவாளியான இவரை இமாம்களான யஹ்யா இப்னு மஈன், இப்னு ஸஅத், இப்னுல் மதீனீ, இப்னு ஹிப்பான், ஆகியோர் நம்பகமானவர் என கூறியுள்ளனர். யஹ்யப்னு ஸஈத் பலவீனமானவரென்று கருதுகிறார். அவரது பிழையான ஷீயா கொள்கைக்காகத் தான் அவரை குறை கூறப்பட்டுள்ளது. இவர் ஷீயாக்காரராக இருந்தாலும் தனது கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கவில்லை என்பதோடு, அபூபக்ர் மற்றும் உமர் (ரழி) அவர்களுடைய சிறப்பு பற்றிய ஹதீஸ்களையும் அறிவித்திருக்கிறார். நம்பகமான ஒரு அறிவிப்பாளர் பித்அத்தான கொள்கையில் இருந்தும் தனது கொள்கையின் பக்கம் மக்களை அழைக்காதவராக இருந்தால் அவரது அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளலாம் என்பதில் ஹதீஸ்கலை அறிஞர்களிடம் மாற்றுக் கருத்து இல்லை. 

எனவே இமாம் இப்னு அதீ கூறுவது போன்று இவர் அறிவிப்பவற்றை கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் (1) இவர் முஸ்லிமுடைய அறிவிப்பாளர்களில் ஒருவராவார்.


( 2 ) அல்ஹஸன் இப்னு அபீ மர்யம் அல் அஸ்கரீ
الحسن بن أبي مريم العسكري

நான் ஆராய்ந்தமட்டில் ஜஃபர் இப்னு ஸுலைமானிடமிருந்து அறிவிக்கக்கூடியவர்களில் இந்தப் பெயருள்ள ஒருவர் இருப்பதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல அறிவிப்பாளர்களைப் பற்றி கூறப்படும் எந்தக் கிதாபுகளிலும் இந்தப் பெயருள்ள ஒரு அறிவிப்பாளரை காணமுடியவில்லை.الله أعلم
 இவரது அறிவிப்புகள் இமாம் இப்னு குதாமாவுடைய ( التوابين திருந்தியவர்கள் ) என்ற கிதாபிலும் இமாம் இப்னு அபித்துன்யாவுடைய ( هواتف الجنان ) என்ற கிதாபிலும் பதிவாகியுள்ளது. ஆனாலும் இமாம் இப்னு அபித்துன்யாவுடைய ஆசிரியர்களுடைய பெயர் வரிசையிலும் இந்த ராவியுடைய பெயர் இல்லை. எனவே இவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.


( 3 ) அல்அப்பாஸ் இப்னு முஹம்மத் அல் முதஹ்ஹரீ
العباس بن محمد المطهري

இவரும் முன்னையவரைப் போன்றவர் தான். இந்தப் பெயருள்ள ஒரு அறிவிப்பாளரை, அறிவிப்பாளர்களைப் பற்றி கூறப்படும் எந்தக் கிதாபுகளிலும் கண்டுகொள்ள முடியவில்லை. இமாம் இப்னு குதாமாவுடைய التوابين திருந்தியவர்கள் என்ற கிதாபில் இந்தச் சம்பவத்தில் மாத்திரமே இவரது பெயர் கூறப்பட்டுள்ளது. அதுவும் ஒரேயொரு முறைதான். இவரும் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.


  ( 4 ) யூஸுப் இப்னு அஹ்மத் அல்வாஇள்
يوسف بن أحمد الواعظ

முன்னைய இருவரும் யாரென்று அறியப்படாதவர்களாக இருப்பதால் இவரை துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் இமாம் இப்னு அஸாகிருடைய تاريخ دمشق  இமாம்  இப்னுல் ஜவ்ஸிக்குரிய مثير العزم الساكن إلى أشرف الأماكن  போன்ற கிதாபுகளில் இதே راوي களைக் கொண்ட அறிவிப்பாளர் வரிசைகளிலும் , இமாம் பஃதாதியுடைய تاريخ بغداد இமாம் இப்னுல் ஜவ்ஸியுடைய المنتظم في تاريخ الأمم والملوك இமாம் அபூநுஐமுடைய حلية الأولياء وطبقات الأصفياء போன்ற கிதாபுகளில் வேறு அறிவிப்பாளர் தொடர்களிலும் யூஸுப் இப்னு அஹ்மத் என்பவர் அஹ்மத் இப்னு அபில்ஹவாரி என்பவரிடமிருந்து அறிவிக்கும் ரிவாயத்துகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அஹ்மத் இப்னு அபில்ஹவாரியிடமிருந்து அறிவிக்கும் யூஸுப் இப்னு அஹ்மத் குராஸானில் வசித்ததாக தான் கருதுவதாகவும் அவர் ஹிஜ்ரி 245 இல் மரணித்த துன்னூன் அல்மிஸ்ரியுடன் சேர்ந்திருந்ததாகவும் அவரிடமிருந்து இப்ராஹீம் இப்னு ஹம்மாத் அல்அப்ஹுரியும் இன்னும் பலரும் அறிவித்துள்ளனர் என்றும் கதீப் அல் பக்தாதி குறிப்பிடுகிறார். 
அவர் நம்பகமானவரா இல்லையா என்பது பற்றி கூறவில்லை. இவருடைய ஆசரியர்கள் வரிசையில்  அஹ்மத் இப்னு அபில்ஹவாரியை மாத்திரமே குறிப்பிட்டுள்ளார்.(2)


( 5 ) நான் அனுமானிப்பது சரியாக இருந்தால் الله أعلم  இவரிடமிருந்து அறிவித்திருக்கிறார் என்று  இமாம் அல்பக்தாதி கூறக்கூடிய இப்ராஹீம் இப்னு ஹம்மாத் அல்அப்ஹுரி என்பவர் தான் இந்த அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய இப்ராஹீம் இப்னு முஹம்மத் அல் பகீஹ் அல் மாலிகீயாக இருக்கலாம். 

ஏனென்றால் இவருடைய முழுப் பெயர் இப்ராஹீம் இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம் இப்னு அபீஹம்மாத் அல்அப்ஹுரி அல் மாலிகீ என்பதாகும். 387 இல் மரணித்த இவர் மிகுந்த செல்வாக்குள்ளவராகவும் வணக்கவாளியாகவும் ஒரு பகீஹாகவும் இருந்தார் என்று இமாம் தஹபீ குறிப்பிடுகிறார். (3) ஆனால் அவர் நம்பகமானவரா இல்லையா என்பது பற்றி கூறவில்லை. 
அத்தோடு இவருடைய ஆசிரியர் மற்றும் மாணவர் பட்டியலில் இந்த அறிவிப்பில் வரக்கூடியவர்களின் பெயர்கள் இடம் பெறவுமில்லை.


( 6 ) அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாகுவைஹீ أبو عبد الله محمد بن عبد الله بن عبيد الله بن أحمد بن باكويه

சுருக்கமாக இப்னு பாகுவைஹீ என்றும் அழைக்கப்படுகிறார். ஹிஜ்ரி 340 களில் பிறந்து ஹிஜ்ரி 428 இல் மரணித்த இவர் ஸூபிகளின் ஷைகாகவும் அவர்களது சம்பவங்களையும் வரலாறுகளையும் அறிந்திருந்தார். இவர் ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்திருந்தாலும் அவர் அறிவிப்பவற்றை நம்பகமானவர்கள் தவிர்த்திருந்ததோடு நல்ல சம்பவங்கள் அவர்  மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன  என்றும் கூறுகிறார்கள்.

அவருடைய அறிவிப்புகளை ஆராய்ந்த போது அவற்றை அவர் கேட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லையென்று அபூ ஸாலிஹ் அல்முஅத்தின் என்பவர் கூறுகிறார்.(4)
இந்த அறிவிப்பிலும் முன்னையவரிடம் கேட்டதற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை. இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் கூட இடையில் துண்டிக்கப்பட்டதாக அல்லது மிகவும் பலவீனமானவையாகத்தான் இருக்கின்றன.

( 7 ) அலீ இப்னு அப்தில்லாஹ் علي بن عبد الله بن حسن بن أبي صادق

இவரது முழுப் பெயர் அலீ இப்னு அப்தில்லாஹ் இப்னு ஹஸன் இப்னு அபீஸாதிக் என்பதாகும். சுருக்கமாக அலீ இப்னு அபீஸாதிக் என்றே அழைக்கப்படுகிறார். ஹிஜ்ரி 499 இல் மரணித்த இவர் இப்னு பாகுவைஹியிடமிருந்து அறிவித்திருக்கிறார் என்று கூறும் இமாம் தஹபீ அவர் நம்பகமானவரா இல்லையா என்பது பற்றி கூறவில்லை.(5)

 (08) அபூபக்ர் அஸ்ஸூபி محمد بن عبد الله بن أحمد بن حبيب أبو بكر العامريّ الصُّوفيّ الواعظ،

இவருடைய முழுப் பெயர் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு ஹபீப் அபூபக்ர் அஸ்ஸூபி என்பதாகும். ஹிஜ்ரி 469 இல் பிறந்து ஹிஜ்ரி 530 இல் மரணித்தார். அலீ இப்னு அபீஸாதிகிடம் இருந்து அறிவித்திருப்பதோடு இவரிடமிருந்து அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸீ அறிவித்திருக்கிறார் என்று கூறிய இமாம் தஹபீ  இவர் நம்பகமானவரா இல்லையா என்பது பற்றி கூறவில்லை.

 ஹதீஸ் மற்றும் பிக்ஹ் பற்றிய அறிவு அவருக்கிருந்ததாகவும் , மற்ற உபதேசிகளைப் போன்ற கடும் பிரயத்தனம் செய்யாமல் ஸூபித்துவத்தின் படி உபதேசம் செய்வார்.  நான் அவரிடம் அதிகம் தப்ஸீர் மற்றும் ஹதீஸ்களை படித்திருக்கிறேன் என்று  இவரது மாணவர் இமாம் இப்னுல் ஜவ்ஸீ சொன்னதை இமாம் தஹபீ  பதிவு செய்திருக்கிறார்.(6) என்றாலும் இவருடைய இன்னொரு மாணவரான இமாம் இப்னு அஸாகிர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத முறை பற்றி இவர் அறிவிக்கும் ஹதீஸை حسن صحيح என்று கூறியிருக்கிறார்.(7)

அபுல் பரஜ்
أبو الفرج عبد الرحمن بن أبي الحسن علي بن محمد بن علي بن عبيد الله بن عبد الله بن حمادى بن أحمد بن محمد بن جعفر الجوزي

இவர் தான் இப்னுல் ஜவ்ஸீ என்ற பிரபலமான இமாம். இவரது முழுப் பெயர் அப்துர்ரஹ்மான் இப்னு அலீ. இவரது எட்டாவது பாட்டனுக்கு ஜஃபருக்கு ஜவ்ஸீ என்று சொல்லப்பட்டது. ஹிஜ்ரி 509 களில் பிறந்து 597 இல் மரணித்தார்.
இமாம் தஹபீ இவரை الشيخ، الإمام، العلامة، الحافظ، المفسر، شيخ الإسلام، مفخر العراق، என்று வர்ணிக்கிறார். இமாம் இப்னு குதாமா தனது மாமாவின் மகன் அப்துல்கனீ அல்மக்தஸியுடன் இவரிடம் சில நாட்கள் பக்தாதில் தங்கியிருந்தார்.

தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், உலகப்பற்றின்மை, உபதேசம், வரலாறு மருத்துவம் போன்ற பல துறைகளிலும் பல கிதாபுகளை எழுதியுள்ளார். (8) இவரை விட பல துறைகளிலும் அதிகமான கிதாபுகளை எழுதிய யாரும் இருப்பதாக தான் அறியவில்லையெனவும் அவற்றையே பல ஏடுகளில் எழுதப்பட்டிருந்ததை தான் கண்டதாகவும் கதீப் அல் பக்தாதீ கூறுகிறார். (9)

தான் எழுதிய கிதாபுகளை மீள்பரிசீலனை செய்யாததால் அதிகமான தவறுகளை விட்டிருக்கிறார். ஹதீஸ்களை தரம் பிரிப்பதில் ஏனைய முஹத்திஸ்களுக்கு இருந்த தேட்டம் அவரிடம் இருக்கவில்லை மாறாக الموضوعات இட்டுக்கட்டப்பட்டவை என்ற தனது கிதாபில் பதிவு செய்தவற்றையும் வேறு கிதாபுகளில் ஆதாரமாக எடுத்திருக்கிறார். தனது சிறிய கிதாபான مشيخة ابن الجوزي  இல் கூட பல இடங்களில் தவறிழைத்துள்ளார். 

அவருடைய பிழைகளை ஒவ்வொன்றாக அவருக்கு தெரியப்படுத்தினால் என்ன? என்று அபூ முஹம்மத் இப்னுல் அஹ்ழரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் கூறிய பதில் : தவறுகள் கொஞ்சமாக இருந்தால் ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டலாம் இவருடைய தவறுகள் அதிகம் இருக்கின்றனவே. என்பது தான்.(10)
இவர் நல்லவராக இருந்தாலும் தான் பதிவு செய்தவற்றை மீள்பரிசீலனை செய்யவில்லை என்பதால் அவர் அறிவிப்பவற்றில் மிகக் கவனமாகவே இருக்க வேண்டும்


இமாம் இப்னு குதாமா

ஹிஜ்ரி 541 இல் பிறந்து 620 இல் மரணித்த இவருடைய முழுப் பெயர் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் என்பதாகும். இவருடைய التوابين  திருந்தியவர்கள் என்ற கிதாபு பற்றி இமாம் ஸகாவீ கூறும் போது : இப்னு குதாமாவுடைய التوابين  இல் அவர் இவற்றை பதிவு செய்யாதிருந்திருக்கலாம் என்று நான் கருதும் விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவற்றின் அறிவிப்பாளர் வரிசை சீரானதாக இல்லை. என்று கூறுகிறார்.(11)


இவ்வாறு இடையில் துண்டிக்கப்பட்டும் யாரென்று அறியப்படாதவர்களையும் கொண்டு பதிவு செய்யப்பட்ட இது போன்ற சம்பவங்களை வைத்து இமாம்களை கொச்சைப்படுத்தவோ மக்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கவோ வேண்டியதில்லை. குர்ஆனிலும் ஸுன்னாவிலும் மாத்திரம் நிறைவு காண்போம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்

துணை நின்றவை
1)     تهذيب الكمال بتحقيق د. بشار عواد معروف / سير أعلام النبلاء / تاريخ الإسلام  / تهذيب التهذيب / ميزان الاعتدال / لسان الميزان
2)   تاريخ بغداد
3)   تاريخ الإسلام / الإرشاد في معرفة علماء الحديث لأبي يعلى الخليلي
4)  سير أعلام النبلاء / تاريخ الإسلام / لسان الميزان / المنتخب من كتاب السياق لتاريخ نيسابور
5)   تاريخ الإسلام
6)   تاريخ الإسلام
7)   معجم ابن عساكر
8)   تاريخ الإسلام / سير أعلام النبلاء
9)   تاريخ بغداد وذيوله
10)                      تاريخ الإسلام / سير أعلام النبلاء
11)                        الإعلان بالتوبيخ لمن ذم التاريخ

 ஆக்கம்  : ஷுஐப் (உமரீ)