தொடர் 🌎 20
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 பலவீனமான சம்பவம் 📔
🍅அனஸ் ( ரழி ) காலத்தில் ஒரு நாள் (பகல் நேரத்தில்) இருள் பரவியது. நான் அனஸ் (ரழி ) அவர்களிடம் சென்று
🌻" அபூ ஹம்ஸாவே! நபி (ஸல் ) அவர்களுடைய காலத்திலும் இவ்வாறு நடந்ததுண்டா?" என்று கேட்டதற்கு🌼,
🌸 " அல்லாஹ் பாதுகாப்பானாக! காற்று சற்று வேகமாக வீச ஆரம்பித்தாலும் கூட, மறுமை நாள் வந்து விட்டதோ என்று அஞ்சி பள்ளிக்கு விரைந்து செல்வோம்." என்றார்கள்.🍅
👇👇👇👇👇
💡இந்த சம்பவத்தை நழ்ர் என்பவரிடமிருந்து அவரது மகன் உபைதுல்லாஹ் கூறியதாக இமாம்களான🔍🔭
🌽அபூதாவூத் தனது ஸுனனிலும் 1196,
🌽இவர் வழியாக الضياء ழியாஉ தனது الاحاديث المختارة அல் முக்தாரா 2705 இலும்,
🌽ஹாகிம் 1241 இலும்,
🌽இவர் வழியாக பைஹகீ தனது السنن الكبرى அல் குப்ரா 6378 இலும்,
பதிந்துள்ளனர்.💡
🚫❌🔴❌🚫
💡🔍இதை அறிவிக்கும் நழ்ர் இப்னு உபைதுல்லாஹ் அல்லது அப்துல்லாஹ் النضر بن عبيد الله என்பவரின் நம்பகத்தன்மை பற்றி அறிஞர்கள் குறிப்பிடாததால் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ இவரை مستور மஸ்தூர் நிலை அறியப்படாதவர் என்று கூறுகின்றார். 🔍
📖 تقريب التهذيب 📖
💡🔍குறிப்பாக இமாம்களான புகாரி தனது التاريخ الكبير இலோ, இப்னு அபீஹாதம் தனது الجرح والتعديل இலோ இவருடைய நம்பகத்தன்மை பற்றி எதுவுமே கூறவில்லை.🔍
🔍💡💡💡💡🔍
🎓✒இந்த அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் நழ்ர் என்பவர் அனஸ் (ரழி ) உடைய மகன் நழ்ர் இப்னு அனஸ் தானென்றும், மேற்கூறப்பட்ட நழ்ர் இப்னு உபைதுல்லாஹ் அல்ல என்றும் கருதி,
🚥இமாம் ஹாகிம் இதை ஸஹீஹானது என்று கூற, இமாம் இப்னு ஹஜரும் தனது إتحاف المهرة இத்ஹாபில் ஸஹீஹானது என்று கூறியுள்ளார்.🎓👓
🔦🔮இமாம் தஹபீ அவர்கள் இதை அங்கீகரிக்காமல் அனஸ் (ரழி ) இன் மகனாக இருந்தால் "தந்தையே" என்று அழைக்காமல் "அபூஹம்ஸாவே !" என்று விழிப்பதற்கு என்ன அவசியம்? என்றவாறு சூசகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.🔮🔦
🚈ஒரு வாதத்திற்கு அனஸ் (ரழி ) இன் மகன் தான் என்று வைத்துக்கொண்டாலும் அவரிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ் அல்லது அப்துல்லாஹ் என்பவர் யார் என்ற கேள்வி எழும்.🚈
🚫ஏனென்றால் நழ்ர் இப்னு அனஸ் என்பவருக்கு உபைதுல்லாஹ் அல்லது அப்துல்லாஹ் என்று ஒரு பிள்ளையோ, அறிவிப்பாளரோ இல்லை. 🚫
📖 இவ்விமர்சனத்தை இமாம் அல்பானி அவர்கள் தனது ضعيف ابي داود இல் பதிந்துள்ளார்.📖
📖 இமாம் ழியாஉ அவர்களும் இதை பதிவு செய்து விட்டு பலவீனம் என்று கூறியுள்ளார். 📖
🚥🚥🚥🚥🚥
சோதனைகளின் போது தொழுகயை நாட வேண்டும் என்று வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைப்போம்.
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
27/04/2016