Saturday, April 09, 2016

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌎 04

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 04

📔பலவீனமான ஹதீஸ்📔

அபூதர் ( ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி  ( ஸல்) அவர்கள் மழைக்காலத்தில் ஒருநாள் வெளியே சென்றார்கள். மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.  நபியவர்கள் ஒரு கிளையை அசைத்த போது இன்னும் இலைகள் உதிர்ந்தன.

" அபூதர்ரே! " என்று என்னை அழைத்தார்கள். " லப்பைக்  (இதோ இருக்கிறேன்) யாரஸூலல்லாஹ்" என்றேன்.
அப்போது அவர்கள்  " ஒரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்வுக்காக தொழுதால் இம்மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவரது பாவங்கள் உதிர்ந்து விடுகின்றன என்று கூறினார்கள் "

👇👇👇👇👇👇

முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் முஸாஹிம் இப்னு முஆவியா என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இவர் யார் என்று அறியப்படாதவர்களில் ஒருவர்.

எனவே இந்த செய்தி பலவீனமாகும்.

📌📌📌📌📌📌📌📌
என்றாலும் கூறப்படும் விடயம் வேறு ஹதீஸ்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளதால் இதை தவிர்த்து ஏனையவற்றை ஆதாரமாகக் கொள்ளலாம்.

அல்லாஹு அஃலம்

சுஐப் உமரி

No comments: